மார்ச் 06, 2010, ஞாயிற்றுக்கிழமை காலை அபிட்ஜான்-ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அட்ஜமேவில் பிரசங்கிக்கப்பட்டது
1தொலைபேசியின் மூலமாகவும் நம்மிடம் பல சாட்சியங்கள் உள்ளன. உதாரணமாக, காங்கோவின் புனியாவில் உள்ள ஒரு சகோதரரின் சாட்சி நம்மிடம் இருக்கின்றது, அவருக்கு தொலைபேசியின் மூலமாக ஜெபித்த பிறகு நீரிழிவு நோயிலிருந்து அற்புதமாக குணமடைந்தார், இப்போது இதை பிரன்ஹாமிஸ்டுகளும் அறிவார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சகோதரர் மிகவும் சத்தமாக அழுததாகவும், அது அண்டை வீட்டாரின் கவனத்தை ஈர்த்ததாகவும் என்னிடம் சொன்னார்கள்! அதை சரிபார்த்த மருத்துவரை பற்றி சகோதரர் சொன்ன போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் ஒரு பெண் மருத்துவர், அது எப்படி நடந்தது என்று அவள் கேட்டாள், சகோதரர் நடுராத்திரி சத்தத்தை அவளுக்கு பிரசங்கித்தார், ஐவரி கோஸ்ட்டில் இருக்கும் ஒரு தீர்க்கதரிசி அவருக்காக ஜெபித்தார் என்று அவளிடம் சொன்னார். நீங்கள் பார்க்கிறீர்களா?
2விஞ்ஞானத்தால் அதை விளக்க முடியாது! அவள் அவனிடம், "ஆனால் அது எப்படி நடந்தது? அவர் எப்படி செய்தார்?" என்று கேட்டாள். அதற்கு அவர்: " எனக்காக அவர் ஜெபித்தார்!" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த சகோதரர் எனக்கு சுவாஹிலி மொழியில் ஒரு செய்தியை எழுதியிருந்தார், அது நான் புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழி, அதற்கு நான் பிரெஞ்சு மொழியில் பதிலளித்தேன், அவர் சகோதரர் கிறிஸ்பினிடம் அவர் எனக்கு ஒரு செய்தியை அனுப்பியதாகவும் அதற்கு நான் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார், சகோதரர் கிறிஸ்பின் அவரிடம், "இல்லை, தீர்க்கதரிசி சுவாஹிலியில் ஒரு வார்த்தையும் பேசமாட்டார்!" என்று சொன்னார். அதற்கு அவர்: "அவர் செய்கிறார்! அவர் எனக்கு பதிலளித்தார்!" என்றார். ஆனால் அது எப்படி நடந்தது? எனக்கு தெரியாது. ஆனால் அவர் எனக்கு எழுதியபோது, நான் அதை பிரெஞ்சு மொழியில் பெற்றேன், நான் பதிலளித்தபோது, அவர் அதை சுவாஹிலியிலும் பெற்றார். அதே வேளையில் தொலைபேசிகளால் அதை செய்ய முடியாது. தொழில்நுட்பம் அதை செய்வதில்லை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கின்றனர்].
3அவருடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலம் வேதாகமம் தேவனுடைய தவறிழைக்காத வார்த்தையாக இருப்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ அதே விதமாகத்தான் வில்லியம் மரியன் பிரன்ஹாமின் தேவனும் இங்கே இருக்கிறார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. நாம் பண்டைய முறை சுகமளிக்கும் கூட்டங்களை ஒழுங்கு செய்ய முடியும் மேலும் அதே விதமான அற்புதங்களும் குணப்படுத்துதல்களும் இங்கே நிகழும். ஆனால் அது தேவனுடைய சித்தத்திற்கு புறம்பானது! மேலும் ஜனங்களும் பாவமும் நம்மை ஆக்கிரமிப்பதை நீங்கள் காண்பீர்கள் மற்றும் மக்கள் இவ்விதமாக : "அவருடைய சுவிசேஷ பிரச்சாரங்களில் கூடிவருகின்ற பெரிய கூட்டத்தைப் பாருங்கள், அவர் ஒரு மகத்தான தீர்க்கதரிசி!" என்று சொல்வார்கள்.
4மேலும் ஜனங்கள் இங்கு வருவார்கள், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்ட் சபைக்கு செல்வார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? வில்லியம் பிரன்ஹாம் கடைபிடித்த ஒரு சுவிசேஷ நடைமுறையை நான் இங்கே நடுராத்திரியில் கண்டனம் செய்கிறேன்! சில யேசேபேல் அங்கே அமர்ந்திருக்கிறது, அற்புதங்கள், உறக்கம் அல்லது சாப்பிட்டதின் நிமித்தம், ஆராதனையின் நடுவிலே சிலர் பசைகளை (Chewing Gum) மெல்லுகிறார்கள், நமக்கு அது தேவையில்லை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
5மற்றொரு காரியம்: இரண்டு வாரங்களுக்கு முன்பு, காபோனின் லாஸ்டோர்வில்லில் உள்ள சகோதரி ஹென்றி ஃப்ளோருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவள், "ஓ தீர்க்கதரிசி, நான் தீர்க்கதரிசியின் வெகுமதி பிரசங்கத்தை மீண்டும் படித்தேன், ஜெபத்திற்கு பதிலாக பணத்தை தேர்வு செய்யும் பெண்ணின் நிலையில் நான் இருந்தால், நான் ஜெபத்தைத் தேர்ந்தெடுப்பேன்" என்று கூறினாள். அதற்கு நான்: சகோதரி, அப்படி சொல்ல வேண்டாம் என்றேன்! நான் அவளுடன் உடன்படவில்லை. அதன்பிறகு அவள் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி, "... நான் ஜெபத்தைக் கோருவேன் என்பதற்கான சான்று, நான் உம்மை விசுவாசிக்கிறேன் என்பதே." என்றும் சொன்னாள். அதற்கு நான், "சரி, நல்லது" நான் அவளுக்காக அஞ்சினேன் ... அவள் வெற்றி பெறட்டும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
6இப்போது, இணையத்திற்கு செல்லும் சகோதரர்களுக்காக நான் சில காரியத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தச் செய்தியை நீங்கள் உண்மையாக விசுவாசிப்பதாக நம்பினால், இணையதளத்தில் விசுவாசிக்காத ஒருவரை நீங்கள் சந்தித்தால், நீங்கள் எல்லாவற்றையும் செய்வீர்கள், செய்தியை புரிந்துகொள்ள அவருக்கு நன்றாக விளக்க முயற்சிப்பீர்கள். நீங்கள் அதை பொறுமையுடனும் சாந்தத்துடனும் செய்வீர்கள். ஆனால், அனைவரையும் பிசாசின் புத்திரன் என்று அழைப்பது, அது நான் கற்பித்ததல்ல, மேலும் பிசாசின் புத்திரன் என்றால் அது நீங்கள்தான். அந்த வார்த்தைகளில் நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை! நான் அதை கற்பிக்கவில்லை! நீங்கள் பார்க்கிறீர்களா?
7பொறுப்புடனும் கண்ணியத்துடனும் பேசுங்கள்! நடுராத்திரி சத்தம் என்பது சில கொள்ளை மற்றும் பணிவின்மை அல்ல! எல்லோரும் ஒரே அளவிலான புரிந்துகொள்ளுதலை கொண்டிருப்பதில்லை,. இன்று நீங்கள் பொய் என்று நம்புகிற காரியத்தில் யாரோ ஒருவர் சில முழு வருடங்களையும் அதில் கழித்திருக்கும்போது, நீங்கள் பார்க்கிற விதமாக உடனடியாக அவர் அவசியம் பார்க்க வேண்டும் என்று அவரை கேட்க வேண்டாம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
8நல்லது, இப்போது கடந்த ஜனவரி 28-ஆம் தேதி, எனது தந்தையின் கிராமப்புற வீடு இருந்த காட்டுக்குச் சென்றேன். அந்த இடத்தில் தான் நான் எனது குழந்தைப்பருவத்தை முழுவதுமாக கழித்தேன். பரம்பரை சொத்தாக எங்களுடைய தகப்பன் விட்டுச் சென்றது அவ்வளவுதான், ஆனால் அவர் இறந்தவுடன், அவரது முதல் மகன், அவருக்கு அவை தேவையுமில்லை மற்றும் அதன் மதிப்பையும் அறியாதவர், அதை அவர் பெசிடியில் உள்ள டிக்கிபீ நுகுசன் பாஸ்கலின் குடும்பத்திற்கு விற்றார். அனாதைகளாக இருந்த எங்களுக்கு ஒரு இதய மற்ற குடும்பம். நான் அதை உறுதியாக எதிர்த்தாலும், என் குடும்பத்துடன் இணக்கமாக இருந்தனர். என்ன ஒரு துன்மார்க்கம்! அவர்கள் எனது பெயரை பத்திரத்தில் வைத்து என் பெயருக்கு முன் கையெழுத்திட்டு, அவர்கள் எல்லாவற்றையும் விற்றார்கள். நான் அங்கு சென்றேன், அதே பெரிய பாறைகளையும் அதே சிறிய நதியையும் கண்டேன். பறவைகள் பாடிக்கொண்டிருந்தன, காற்று மெதுவாக வீசியது. பறவைகள், பாறைகள், மரங்கள் மற்றும் சிறிய நதி, காற்று மற்றும் முழு இயற்கையும் என்னைப் போலவே ஏக்கம் கொண்டதை உணர்ந்தேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
9நல்லது, இப்பொழுது கடாட்ஜியின் வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. ஒரு வறண்ட காலத்திற்குப் பிறகு ஒரு மழைக்காலம் பின்னர் மீண்டும் வறண்ட காலம், அங்கே சுவர்களில் விரிசல் ஏதும் இல்லை. கட்டுமானத்தின் போது, நாங்கள் மழைக்காலத்தின் நடுவே ஆரம்பித்தோம், ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் செங்கற்களை கொண்டு கட்டும் போது, செங்கற்கள் காய்ந்து போகும் வரை மழை பெய்யவில்லை, பெரிய கொடிக்கல் நாளில், காலை முதல் மாலை வரை, வானிலை மிகவும் மழையாகவோ அல்லது வெயிலாகவோ இல்லை, அதனால் நாங்கள் சோர்வாக உணரவில்லை. இது மர்மமாக இருந்தது! வானிலை மிகவும் நன்றாக இருந்தது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
10இப்போது வேதாகமம் தீர்க்கதரிசனங்களுடன் தொடர்புடைய தற்போதைய நிகழ்வுகளைப் பற்றி பேச விரும்புகிறேன். தற்போதைய நிகழ்வுகள் தேவனுடைய வார்த்தையின் நிறைவேறுதல் ஆகும். மக்கள் பத்திரிகையாளர்களையும் அரசியல்வாதிகளையும் கேட்கவும் நம்பவும் விரும்புகிறார்கள்! ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் எப்போதும் அவருடைய தீர்க்கதரிசிகளின் வாயில் இருக்கும் தேவனுடைய வார்த்தையைக் கேட்பார்கள், ஏனெனில் கிறிஸ்தவ விசுவாசம் தீர்க்கதரிசன வெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா?
11இரட்சிப்பு நல்ல பிரசங்கத்திலோ, அற்புதங்களிலோ, அசாதாரணமான துதி பாடல்களிலோ இல்லை! உங்களுடைய சபைகளில் உங்களுடைய தூதர்களை போன்ற குரல்கள் மனிதர்களுக்கு இனிமையான வாசனையாக இருக்கும், ஆனால் தேவனுக்கு விரும்பத்தகாதவை. ஏதேனில், வித்தியாசத்தை ஏற்படுத்தியது ஆபேலின் பாடற்குழு அல்ல, ஆனால் தீர்க்கதரிசன வெளிப்பாடு.
12பூமியில் ஒரு காரியம் நடக்கும்போது, உண்மையான வியாக்கியானத்தை வைத்திருப்பது தேவன் தான். ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு நவீன நிகழ்வுக்கும் வெளிப்பாடு கொடுக்கும் அர்த்தத்தில் தான் தெளிவுபடுத்தப்படுகிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கின்றனர்]. நீங்கள் பார்க்கிறீர்களா? தற்போதைய நிகழ்வுகள் தீர்க்கதரிசனங்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
132000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மனிதன், “வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, *நீ* பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்....” என்று சொல்லலாம் .... மத்தேயு 11:23. ஹைட்டியே நீ இதுபோன்ற தீமையை கொண்டிருப்பாய்!, கப்பர்நகூமே, லாஸ் ஏஞ்சல்சே, உங்களுக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! கப்பர்நகூம் போலவே, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் காலத்தில், நியாத்தீர்ப்பு மீண்டும் மீண்டும் ஹைட்டியை தாக்கும் ஏனெனில் இது தேவனின் பார்வையில் ஆப்பிரிக்கனாக இருக்கிறது மேலும் அதன் சந்திப்பு இப்போது பூமியில் நடைபெறுகிறது. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்கள் காலத்திலுள்ள மற்ற தீர்க்கதரிசிகளை கொண்டு சொல்லலாம், "நல்லது, ஐயா, நீங்கள் தீர்க்கதரிசி இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே பூமியில் ஒரே ஒரு தீர்க்கதரிசி அல்ல! என்று சொல்லுகிறோம்" ஆனால் தேவன் தனித்துவமானவர், அவருக்கு பூமியில் ஒரே ஒரு வாய் மட்டுமே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் தான் அந்த வாய். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
14இப்போது, தேவன் ஒரு தேசத்தைத் தண்டிக்கும்போது, அந்த தேசத்தின் ஜெப வாழ்க்கை கூர்மையாகவும் புத்தியுமின்றி உயருகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? பூமியில் நடக்கும் எல்லாவற்றையும் பற்றி கவலைப்படாத ஒரே மக்கள் நாம் தான்! ஏனெனில் நாம் நம்மிடத்தில் ஒரு தீர்க்கதரிசியை கொண்டிருக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. அது நம்மை திசை திருப்பாது!
15இன்னும் தற்போதைய நிகழ்வுகளின் அர்த்தத்தில், உலகின் மிக முக்கியமான செய்திகளைப் பற்றி உங்கள் அனைவருக்கும் அறிவிக்கப்படுகிறது. மாக்ரெப்பில் வீசும் இந்த தீர்க்கதரிசன காற்று. நீங்கள் பார்க்கிறீர்களா? அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை, ஏனென்றால் அந்த நாடுகள் அனைத்திற்கும் அதே விதமான பிரச்சினைகள் இல்லை. அவர்கள் அதை "ஜனநாயகத்தின் காற்று!" என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? முழு உலகமும் அதை அறியாது! இஸ்லாம், யூத மதம் உள்ளிட்ட கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளுக்கும் இது தெரியாது. ஆப்பிரிக்காவின் இந்த பகுதி எப்போதும் மிகவும் நிலையானது, மிகவும் நாகரிகமானது என்று கருதப்படுகிறது! ஆனால் அங்கு திடீரென்று என்ன நடக்கிறது? இது உண்மையில் கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் செய்ய இஸ்லாத்திற்கு எதிராக இயக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனக் காற்று என்று தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி கூறுகிறார் மற்றும் அவர்கள் அதை அறியாது இருக்கிறார்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. இது மாற்கு 13:35-ன் வழியை ஆயத்தம் செய்யும். சேவல் கூவும் வேளைக்கான வழி! இந்த காற்றிலிருந்து, இஸ்லாத்தின் தீவிரவாதம் என்றென்றும் மரித்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
16"ஓ சகோதரர் பிலிப்பு, உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை, முகமது பெளசிஸி (Bouazizi) என்ற ஒரு குறிப்பிடத்தக்க ஒருவர் தான் அதை செய்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ..." இல்லை ஐயா! மாற்கு 13: 35-ன் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்திற்காக இந்த விதமாக காரியங்கள் நடக்க வேண்டும்! நீங்கள் பார்க்கிறீர்களா? எவ்வாறு? அதே நேரத்தில், ஆப்பிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து அரபு நாடுகளும் திடீரென்று பயத்தினால் கைப்பற்றப்படுத்தப்பட்டது! எதிர்கால நோக்கத்திற்காக தேவன் இதைச் செய்கிறார்.
17இந்த பாதையைத் தடுக்க மக்ரெப்பில் எப்பொழுதெல்லாம் மக்கள் வருகிறார்களோ, இந்த காற்று வீசும்படியாக எழும்பும். ஆமென்! அதே காற்றால் அவர்கள் ஒரே நேரத்தில் எப்படி அசைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? அது மக்ரெப்பைத் தாண்டி ஆசியாவில் உள்ள அரபு நாடுகள் வரை முடிந்தவரை செல்லும்.
18இந்த அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இஸ்லாமிய தலைமுறை அதன் தலைவர்களுடன் கடந்து செல்லும், பின்னர் மற்றொரு தலைமுறை வரும், பின்னர் மற்றொரு தலைமுறை வரும், பின்னர் மற்றொரு தலைமுறை வரும் வரை தேவன் தாமே தரிசனத்தை நிறைவேற்ற ஆயத்தம் செய்துள்ளார். இன்று நாம் காணும் படி அரசு இனி இஸ்லாம் மதத்தை அதன் குடிமக்கள் மீது திணிக்காது! கிறிஸ்தவரின் தேவன் மக்ரெப்பின் குமாரனை எழுப்புவார், அவர் ஏற்கனவே அறிவித்தபடி தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவார்! இன்று நீங்கள் காண்பவைகள் காட்டு கழுதைகள், அவை நாளை மறைந்துவிடும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
19இன்று சாத்தியமில்லாத காரியங்கள் நாளை சாத்தியமாகும் என்ற நிலைக்கு காரியங்கள் மாறத் தொடங்கும்! பெர்லின் சுவரை "இனப் பிரித்தல்" என்றும் அழைத்த ஒரு காலம் இருந்தது காலத்தில் "நிறவெறி" என்றும் அழைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. இஸ்லாமான இந்த மற்றொரு சுவர், அவைகளை அவர்களுடைய சிந்தையில் எழுப்பியது அவர்கள் தான் மேலும் அவை விழும்!
20நாற்பத்திரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கடாபியின் சத்தம் கூட என்றென்றைக்குமாக அமைதியாகிவிடும்! ஆப்பிரிக்கா அறிந்த தலைவர்களில் அவர் மிகவும் விசித்திரமானவர்! உலகில் உள்ள யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பதவியேற்ற எதிரி. அத்தகைய மனிதர், ஒரு உன்னதமான காரணத்திற்காக கடவுளால் மட்டுமே அவரை அசைக்க முடியும்! வளர்ச்சி அல்லது ஜனநாயகத்திற்காக அல்ல, ஆனால் மாற்கு 13:35-ன் நிறைவேறுதலுக்காக. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
21மாக்ரெப்பில் நடக்கும் அனைத்து காரியங்களும், இவை தீர்க்கதரிசனத்தால் தெளிவுபடுத்தப்பட்ட நவீன நிகழ்வுகள். இஸ்லாம் முழு தேசங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தபோது ... அது கிறிஸ்தவனின் தேவன் வல்லமை இல்லாததால் அல்ல. நேபுகாத்நேச்சார் தனது மக்களை அழைத்துச் செல்ல அவர் அனுமத்தித்து அதை அவர் பலத்த கரத்தினாலும் ஓங்கிய புயத்திலும் திரும்ப அழைத்துச் செல்கிறார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறுவதற்கு முன்பு, எகிப்தின் தெருக்களில் தேவனுடைய வார்த்தை மீண்டும் ஒலிக்கும்! இந்த காரியங்கள் தேவனின் சரியான வெளிப்பாடு. அவ்வாறு தான் காரியங்கள் இருக்கும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
22வேதாகமம் ஏற்கனவே கூறியதை மீண்டும் சொல்ல தேவன் ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசியை பூமியில் அனுப்ப முடியாது. மோசேக்குப் பிறகு எதுவும் இல்லையென்றால் ஏசாயாவின் புத்தகம், எரேமியாவின் புத்தகம், ஆமோஸின் புத்தகம், எசேக்கியேலின் புத்தகம், ஆபகூக்கின் புத்தகம் ஆகியவை இருக்காது. நீங்கள் பார்க்கிறீர்களா? மனுக்குலம் அறியாத ஒன்றை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்த இன்று தேவன் ஒரு தீர்க்கதரிசியை பூமியில் அனுப்பியுள்ளார். கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகளில் கிரியை செய்கிற பரிசுத்த ஆவி அது பிசாசுகள், என்பதை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. இந்த தீர்க்கதரிசி தான் அதை வெளிப்படுத்தினார்.
23கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹமிஸ்ட் சபைகள் சாத்தானின் வலைகள் என்பதை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. இந்த தீர்க்கதரிசி தான் அதை வெளிப்படுத்தினார். தேவன் உண்டாக்கிய, ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் கொண்டிருக்கிற, ஒரு ஸ்திரீக்கு பிரசங்க பீடத்தை அணுக உரிமை இல்லை என்பதை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. இந்த தீர்க்கதரிசி தான் அதை வெளிப்படுத்தினார். இறையியல் மற்றும் ஆயர் பள்ளிகளிலிருந்து வரும் அனைத்தும் கொடிய விஷம் போன்றவை என்பதை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. இந்த தீர்க்கதரிசி தான் அதை வெளிப்படுத்தினார். லூயிஸ் செகண்ட், ஜேம்ஸ் மன்னன் பதிப்பகம், ஸ்கோஃபீல்ட் வேதாகமங்கள் மற்றும் மற்றவைகள் மாந்திரீக புத்தகங்கள் போன்றவை என்பது மனிதகுலத்திற்குத் தெரியாது. இந்த தீர்க்கதரிசி தான் அதை வெளிப்படுத்தினார்.
24தனது தலைமுறையின் தீர்க்கதரிசி செய்தியாளரின் கரத்தினால் அல்லாமல், தன்னை பாஸ்டர், அப்போஸ்தலன், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லது போதகராக நிலைநிறுத்த எவருக்கும் உரிமை இல்லை என்பதை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. அதை ஒரு தீர்க்கதரிசி தான் வெளிப்படுத்தினார். வேதாகமம் கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தின் ஒரு வரலாற்று புத்தகமே தவிர வேறில்லை என்று மனுக்குலம் அறியாது. மேலும் அதை, ஒரு தீர்க்கதரிசி தான் வெளிப்படுத்தினார். ஒருபுறம், ஒரு ரோசிக்ரூசியன் விடுதியும் மறுபுறம் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹமிஸ்ட் சபை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது என்பதை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. இது ஒரு காரியமும் அதனுடைய நிழலும் அதே காரியமாக இருக்கிறது. மேலும் இதை, இந்த தலைமுறையின் தீர்க்கதரிசி தான் இதை வெளிப்படுத்தினார்.
25கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் ஏதேனிலிருந்த சர்பத்தின் சந்ததியினர் என்பதை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. அது ஆதியாகமம் 3: 14-ன் பிரகாரமாக சர்ப்பம் தனது கைகளையும் கால்களையும் இழப்பதற்கு முன்பு இருந்தது. தேவன் சர்ப்பத்தை நோக்கி, இதன் நிமித்தம், நீ உன் வயிற்றில் நகருவாய். ஆனால் இந்த சாபம் நிகழுமுன், சர்ப்பம் ஏற்கனவே கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளின் மூதாதையரான காயீனைப் பெற்றெடுத்தது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. நான் கூறின யாவும், ஏப்ரல் 24, 1993 அன்று நான் பெற்ற தரிசனத்தின் ஆணையின் பிரகாரமாக இதை கூறினேன். அது பூமியிலோ, பரலோகத்திலோ ஒருபோதும் தோல்வியடைய முடியாது. மேலும் உணர்ந்து கொள்ளக்கூடியவன் எவனோ அவன் உணர்ந்து கொள்ளட்டும்!