en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 103 (Kc.103) : தீர்க்கதரிசன பரிமாணம்
ஏப்ரல் 17, 2011, ஞாயிற்றுக்கிழமை மாலை அபிட்ஜான்-ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள சிக்கேன்சியில் பிரசங்கிக்கப்பட்டது
1 நல்லது, தேவனுக்கு சித்தமானால், நான் ஒரு வசனத்தை வாசிக்க போகிறேன். அதனோடு கூட நான் முடிக்கின்றேன். இது நியாயாதிபதிகள் 3: 1 முதல் 2 வரை:… “கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டு வைத்த ஜாதிகள் யாரென்றால்". ஆமென்! நான் இந்த பொருளை பற்றி பேசப் போகிறேன்: ஒரு தீர்க்கதரிசியின் பரிமாணம். என்ன நடந்தாலும், நாம் ஒரு தீர்க்கதரிசன பரிமாணத்தில் இருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்… [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
2 மேலும், நீங்கள் ஏற்கனவே கொண்டுள்ள பிரசங்கங்களை கொண்டு தயார் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சில இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் மத்தேயு 25: 6-ன் செய்தி ஏற்கனவே கொடுக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது என்று நான் நம்புகிறேன். எஸ்தரைப் போலவே, உங்களிடம் உள்ளதைக் கொண்டு முன்னேறுங்கள்! தேவன் உங்களுக்கு கொடுக்க பிரியப்படுத்தாதவற்றிலிருந்து விலகியிருங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
3 நல்லது, சில முக்கியமான பதவிகளை வகிக்கும் பல சகோதரர்கள் உள்ளனர்; அவர்கள் பெரும்பாலும் சில விஷயங்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் அரசாங்கத்தின் சார்பாக மக்களுக்கு சில காரியங்களை சொல்வார்கள். அரவணைத்தல் மற்றும் அதற்கு ஒத்த விஷயங்களைத் தவிர, அவர்கள் மீதமுள்ள அனைத்தையும் சபையாரிடம் அறிக்கையிட வேண்டும், சகோதர சகோதரிகள் அவர்களுடன் மிகவும் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
4 நல்லது, ஐவோரியன் நெருக்கடியைப் பற்றி ஒரு தீர்க்கதரிசி தேர்தல்களுக்கு முன்பு என்ன சொன்னார் என்பதை நான் படிக்கப் போகிறேன்… நல்லது, நான் அதைப் படித்தேன், “… எப்படியாயினும், இந்த நாட்களில் ஒன்றில், உங்களை முற்றுகையிட்ட மக்கள் மற்றும் உங்கள் இருதயம் வெறுத்த உங்கள் அடிமையின் மகன் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவான், என் வார்த்தையின்படி நீங்கள் அதைக் காண்பீர்கள்! " இந்த வார்த்தை இந்த தேசத்தில் மிக சரியாக நிறைவேறியது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
5 ஜூலை 08, 2002 முதல், அனைத்திற்க்கும் எதிராக நான் தனியாக நிற்கிறேன். செப்டம்பர் 2008-ல், நான் பயணம் செய்ய விரும்பியபோது, "நீங்கள் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒப்பந்தப் பகுதிகளின் சர்வதேச உறவுகளுக்கு நீங்கள் ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறீர்கள்." என்று என்னிடம் கூறப்பட்டது! மேலும் எனக்கு ஒரு விசா மறுக்கப்பட்டது.
6 நான் ஒருபோதும் பயணம் செய்யவில்லை, ஆனால் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் அவர்கள் பேசிய அனைத்து காரியங்களும் சமரசம் செய்யப்பட்டுள்ளன! ஒரு தீர்க்கதரிசி ஒருபோதும் தனது நாட்டுக்கு ஒரு பிரச்சினையாக இருக்க முடியாது. ஒரு தீர்க்கதரிசி ஒருபோதும் தனது தேசத்திற்கு சவால் விட முடியாது, ஆனால் ஒரு தீர்க்கதரிசி மூலமாக அந்த தேசம் தான் தேவனுக்கு சவால் விடுகிறது.
7 குறைந்தபட்சம் தன்னுடைய வார்த்தைகள் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை போலவே உள்ளன என்று சொல்லமுடியாத ஒரு தீர்க்கதரிசியைப் பின்தொடரும்போது, அது ஏனென்றால் நீங்கள் தாமே பிசாசின் புத்தராக இருப்பதால், நீங்கள் அத்தகைய மனிதனைப் பின்பற்றுகிறீர்கள். எங்கே தவறு இழைக்காத தன்மை இல்லையோ அங்கு இரட்சிப்பு இல்லை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
8 இது நான் பிரசங்கிப்பது 103-வது முறையாகும் மேலும் நான் அறிவித்த மற்றும் நிறைவேறாத ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எனக்குக் காட்டுங்கள்? 2002 முதல் நான் அறிவித்ததில் நிறைவேறாத ஒரே ஒரு வார்த்தையும் இல்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? ஐவரி கோஸ்ட்டின் பாஸ்டர்களையும் தீர்க்கதரிசிகளையும் பட்டயமானது பரந்த பகலில் பின்தொடர்ந்தது, அவர்களில் பலர் சில மோசமான நாய்களைப் போல விழுந்தார்கள், அவர்கள் நேராக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்! அந்த காரியங்களை பார்த்தவர்களுக்கு இது ஒரு அடையாளமாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
9 ஒரு தீர்க்கதரிசி தோல்வியடைய முடியாது! வேதாகமம் என்பது தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் தொகுப்பாகும், மேலும் அதை எழுதிய ஒவ்வொரு தீர்க்கதரிசிகளும் தவறு இழைக்காத தன்மையை கொண்டிருக்காவிட்டால் வேதாகமம் தவறு இழைக்காமல் இருக்க முடியாது. நான் சொல்வதை சிலர் சந்தேகிக்கலாம், ஆனால் எப்போதும் ஒரு சந்ததியினர் இருப்பார்கள், "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; ஏனென்றால் தேவன் தந்தது எதுவோ அதை பிசாசு பறித்துக்கொண்டான், அவை இப்பொழுது உம்மிடத்தில் மீட்டளிக்கப்பட்டுள்ளது (restituted)" என பதிலளித்தனர்". [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
10 இவைகளை தூதன் கூறும்பொழுது அது தான் கருதப்பட வேண்டிய காரியமாக இருந்தது. "நீ பூமியில் ஒரு தலைவனாக அனுப்பப்பட்டாய் ... “நீ பூமியில் உயிரோடு இருக்கும்போது, நீ நேசித்த அனைவரையும், உன்னை நேசித்த அனைவரையும் தேவன் உனக்குக் கொடுத்திருக்கிறார்” என்றார்..." [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
11 என் ஊழியத்தின் முதல் தருணங்களில் லோகோட்ஜிரோவில் நிகழ்ந்த ஒரு உண்மையை இப்போது நான் விவரிக்கப் போகிறேன்: ஒரு சகோதரி எங்களுடன் இருந்தாள்… அவள் வேசித்தனத்தின் பாவத்தைச் செய்திருந்தாள், அன்றே நான் அவளிடம் அதைக் கேட்டேன், ஆனால் அவள் மறுத்துவிட்டாள். நான் அவளிடம், "நான் உங்களிடம் இதுபோன்ற கேள்வியைக் கேட்டிருக்கிறேனா?" என்றேன் ... மேலும் அவள் படிப்பதினால், வகுப்பிலும் எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததாள், அப்போது நான் : "இதன் நிமித்தம், அவள் ஓ-லெவல் தேர்வில் ( O - level exam) தேர்ச்சி பெற மாட்டாள்" என்றேன். ஆனால் முடிவுகளை அறிவித்த அந்நாளில், அவள் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு வீடு திரும்பினாள்.
12 என்னை ஒருபோதும் நம்பாத சிப்போரா, "ஐயா, அவள் அதில் தேர்ச்சி பெற்றாள்!" என்றாள். நான் அவளிடம், "நிறைவேறாத ஒன்றை நான் எப்போதாவது சொல்லியிருக்கிறேனா?" என்றேன். அடுத்த சில நாட்களில், அந்த பெண்ணின் தந்தை தனது மகளின் வெற்றிக்காக சில பரிசுகளை எங்களுக்கு கொடுக்க வந்தார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, பள்ளி ஆண்டின் தொடக்கத்தில், அவள் அதில் தேர்ச்சி அடையவில்லை என்பது தெரியவந்தது, ஆனால் அவள் தனது பள்ளித் தோழிகளுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டு பொய் சொன்னாள். மேலும், இரண்டு வருடங்கள் கழித்து, நான் அவளிடம் கேள்வி எழுப்பிய அன்றே தான் பாலியல் பாவம் செய்ததாக அவள் ஒப்புக்கொண்டாள். அவள் செய்தியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அது செய்யப்பட்டது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
13 யாரும் என் பேச்சைக் கேட்காதபடி எங்களை ஒரு மதபேதம் என்று அழைக்கிறீர்கள், ஆனால் இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? ஆழ்ந்த அவமானத்தில்! நாங்கள் கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதால் நாங்கள் ஒரு மதபேதமா? ஒவ்வொரு தீர்க்கதரிசன பரிமாணமும் அதைக் கொண்டுவருகிறது, நாம் ஒரு மதபேதம் என்று அழைக்கப்படுகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் ஒரு மதபேதம் என்று அழைக்கப்பட்டனர். ஆமாம் சரியாக!
14 ஒவ்வொரு தீர்க்கதரிசன பரிமாணமும் அதைக் கொண்டுவருகிறது. அப்போஸ்தலர்கள், மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி… தேவன் பூமியில் அனுப்பிய அனைவரையுமே ஒரு மதபேதம் என்று அழைக்கப்பட்டனர், நாம் ஒரு மதபேதம் என்று அழைக்கப்படுவதால், நீங்கள் அதன் நிமித்தம் திசைதிருப்பக்கூடாது. பவுல் : "உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறேன்" என்று சொன்னான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
15 நிஜதன்மையில் மத கூட்டுறவு சங்கங்களாக இருக்கின்ற அனேக சபை சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளில் நான் ஒன்றிணைக்க மறுத்தபோது 2002-ம் ஆண்டிலிருந்தே அவர்கள் நம்மை ஒரு மதபேதம் என்று அழைக்கத் தொடங்கினர்! ஆனால் இன்று, அவர்களிலிருந்து அநேகர் என்னிடம் பணம் கேட்டு கெஞ்சுகிறார்கள்! ஆயினும், என்னைப் பொறுத்தவரை, பாரம்பரிய ஆப்பிரிக்க மாந்திரீக பூசாரிகளின் வெள்ளை கோழியை நான் சாப்பிடாததை போலவே, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்ட் பாதிரியார் அல்லது பாஸ்டரிடம் நான் ஒருபோதும் கெஞ்சவோ அல்லது கையை நீட்டவோ இல்லை. நான் அதை செய்யவில்லை, நான் அதை செய்வதில்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்! நீங்கள் பார்க்கிறீர்களா?
16 நான் தேவனின் உண்மையான தீர்க்கதரிசியெனில், என் பிதாக்களின் வழியின்படி, நீங்கள் வணங்குவதாக பாசாங்கு செய்யும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் உங்களைக் கண்டனம் செய்வேன், மேலும் உங்கள் பிதாக்களின் வேலையை எப்போதும் நிலைத்திருக்க செய்யும்படியாக நீங்கள் என்னை ஒரு மதபேதம் என்றும் அழைப்பீர்கள், ஏனெனில் பரிசேயர்கள் மரித்துவிட்டார்கள், ஆனால் பரிசேயர்களின் அதே ஆவிகள் பூமியில் உள்ளன!
17 எகிப்தில் பாருங்கள், எபிரேயர்கள் பிசாசை சுதந்திரமாக வணங்குவார்கள், அவர்களுக்கு இருந்த பிரச்சினையைப் பொறுத்து, அவர்கள் சென்று இத்தகைய அல்லது அத்தகைய எகிப்திய பூஜாரியை பார்க்க முடியும்! கத்தோலிக்கர்கள் இங்கே செய்வது போல சபேக், பூட்டோவின் அல்லது ஒசிரிஸின் பூஜாரியாக இருந்தாலும் மற்றும் புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் இப்போது தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறவைகளுடைய சாட்சியை அவர்கள் கேள்விப்பட்டு இத்தகைய அல்லது அத்தகைய தீர்க்கதரிசியின் முழு இரவு ஜெப கூட்டத்திற்கு செல்லலாம் என்பதை போல் ஆகும்! அந்த தீர்க்கதரிசி எதை விசுவாசிக்கிறார் என்பது ஒரு பொருட்டல்ல, அவருடைய தேவன் அவரை வல்லமையாக பயன்படுத்தினால், அதுதான் முக்கியமான காரியம்… மேலும் பிரன்ஹாமிஸ்ட் பாஸ்டர் ஓவாசா டேவிட் ஒரு முறை ஒரு சுவிசேஷ பெண் தீர்க்கதரிசியை அழைத்தார், அவள் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையிடம் ஜெபிக்க அவர் வீட்டிற்கு வந்தாள்.
18 அவர்கள் தங்களுடைய ஆலய பிரதிஷ்டைக்கு ஒரு அரசியல்வாதியை, துர்நாற்றம் வீசும் குடிகாரனை தலைமை தாங்க வேண்டும் என அழைக்கலாம் … நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் இந்த அரசியல்வாதிகள், அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த அஞ்ஞானிகள், கிறிஸ்துவின் காரணமாக அனைத்து மரியாதைகளையும் பெற்றுக் கொண்டார்கள், அங்கு அமர்ந்திருக்கும் இந்த அரசியல்வாதி, அவர் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டேன் என்று நினைக்கும் நிலையும் தவறாக இருக்காது! உங்களைப் போல விசுவாசிக்காத ஒரு நபர், ஒரு அஞ்ஞானி துர்நாற்றம் வீசும் குடிகாரன், சபையின் பிரதிஷ்டையின் ரிப்பனை எவ்வாறு வெட்ட முடியும்?
19 பரலோகத்தில் ஒரே ஒரு தேவன் மட்டும்தான் இருக்கிறார், அவருக்கு பூமியில் ஒரே ஒரு வாய் தவிர வேறு இருக்க முடியாது! ஆகவே, "ஓ! இல்லை, காக்குவ் பிலிப்பு புதிய ஒரு மதபேதத்தின் நிறுவனர் என்பதை நான் காண முடியும்!" என்று யாராவது உங்களிடம் கூறும்போது, மோசே, எரேமியா, ஏசாயா போன்ற ஒரே உயிருள்ள சத்தியம் எங்கே என்று அந்த மனிதர் சொல்ல வேண்டும்… ஆகையால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள், இல்லையென்றால் உங்களுடன் பேசுகிற அந்த நபர் யாராக இருந்தாலும் அவர் ஒரு பிசாசு. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
20 நீங்கள், "ஓ! அந்த காக்குவ் பிலிப்பு ஒரு தவறான தீர்க்கதரிசி, அவருக்கு செவிசாய்க்காதீர்கள்!" என்று சொல்கிறீர்கள். இருப்பினும், இந்த தலைமுறைக்கு பூமியில் உண்மையான உயிருள்ள தீர்க்கதரிசி யார் என்பதை நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளே, நீங்கள் எப்போதும் சாத்தானின் அவதாரம் என்றும் உங்களுடைய அற்புதமான துதி பாடல்கள் அனைத்தும் சாத்தானுக்காக ஆராதனைகள் என்றும் நான் எப்போதும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
21 நீங்கள் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும், இயேசு என்ற நாமத்தில் நீங்கள் பிசாசை ஆராதிக்கிறீர்கள். பாஸ்டர் குழுக்களுடன் மத இறுதிச் சடங்குகளைச் செய்ய சபைக்கு செல்லுங்கள், ஆனால் உங்களுடைய கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் விசுவாசிகளிடம் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று கூறும்போது, அது தான் சாத்தானின் மோசடி; இது தங்கத்திற்கு பதிலாக குப்பைகளை விற்பது போன்றது. நீங்கள் ஒருபோதும் தேவனை அறிந்திருக்கவில்லை, நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லை மற்றும் நீங்கள் : "நான் பரிசுத்த ஆவியை கொண்டிருக்கிறேன்" என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிசாசுகளால் ஞானஸ்நானம் பெற்றீர்கள் மேலும் அது பரிசுத்த ஆவி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
22 உங்களிடம் பரிசுத்த ஆவி இருந்தால், இஸ்லாம் மற்றும் யூத மதம் உள்ளிட்ட கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகள் மந்திரவாதிகளின் சகோதரத்துவங்கள் என்றும், உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொண்ட இயேசு ஒரு பிசாசு என்பதையும் ஏன் நீங்கள் அறியவில்லை?
23 உங்கள் தாம்ப், லூயிஸ் செகாண்ட், ஸ்கோஃபீல்ட், தாம்சன் வேதாகமங்கள் மற்றும் பிறவற்றையும் மாந்திரீகம் என்று ஏன் நீங்கள் அறியவில்லை? நீங்கள் பரிசுத்த ஆவியையும் குறிசொல்லும் ஆவியையும் ஒன்றாக சேர்க்கிறீர்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒன்று நீங்கள் அனைவரும் சத்தியத்தில் இருந்து, நான் ஒரு கள்ள தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் , அல்லது நான் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருந்து, நீங்களும் உங்கள் சபைகளும் சாத்தானின் அவதாரமாக இருக்க வேண்டும் . [ஆசிரியர் குறிப்பு :சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
24 கிறிஸ்தவ பெரும்பான்மை கொண்ட ஒரு நாட்டில் 54% குடியரசின் ஒரு இஸ்லாமிய ஜனாதிபதி, உங்கள் தீர்க்கதரிசிகள், பாஸ்டர்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் யாரும் அதை கற்பனை செய்திருக்க மாட்டார்கள். அது மறைக்கப்பட்டிருந்தது! தானியேல் நேபுகாத்நேச்சாரை நோக்கி: தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ஒ ராஜாவே தாங்கள் கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது. இரகசியங்களையும் மறைபொருள்களையும் வெளிப்படுத்துகிற தேவன் பரலோகத்தில் இருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
25 இந்த மத பக்கத்தின் காரணமாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கூட அதை கவனிக்கவில்லை. ஆனால் அது அவ்விதமாக இருக்கும் என்று நான் சொன்னேன், சுவிசேஷ மற்றும் பிரன்ஹமிஸ்ட் சபைகள் அனைத்தும் நான் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று எல்லா இடங்களிலும் வெளியிடுவதற்காக அவை தோற்றுப் போகும்படியாக எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
26 ஏப்ரல் 24, 1993 அன்று என் தலைமுறையின் இரட்சிப்புக்கான நற்செய்தியுடன் என்னை அழைத்து நியமிக்கப்பட்டதால் நான் அறிவித்தவை தோல்வியடையவில்லை. நான் ஒரு கிறிஸ்தவனாக இல்லாதபோது, தேவதூதன் எனக்கு ஆணையிட்டு, "இதே விதமாகத்தான் மரியாள் எந்தவொரு மனிதனையும் அறியாமல் அதிசயமான விதத்தில் கர்ப்பம் தரித்தாள், இதே விதமாகத்தான் சிருஷ்டிப்பின்போது நிகழ்ந்தவைகளின் விபரங்களை மோசே பெற்றுக் கொண்டான், நீயும் நித்திய ஜீவ வார்த்தைகளை இந்த ஏப்ரல் 24, 1993-ல் பெற்றுக் கொண்டாய், இது தேவனால் நியமிக்கப்பட்டதாக இருக்கிறது. குறிக்கப்பட்ட நேரத்தில் நீ புரிந்து கொண்டு, முறைமையின்படி நீ கற்றரியாததை நீ போதிப்பாய், அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" என்று கூறப்பட்டது.'' இந்த தூதன் எப்போதும் இங்கே, என்னுடன் இருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
27 தேவன் இராஜாதியபத்தியமானவர். சபையின் ஆரம்பத்தில், தேவன் அப்போஸ்தலர்களையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சீஷர்களையும் விட்டுவிட்டு, முழு பூமிக்கும் பேசுவதற்காக கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய தர்சுவின் சவுலிடம் சென்றார். ஏப்ரல் 24, 1993 அன்று, இதே சர்வவல்லமையுள்ள தேவன் மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக அஞ்ஞானியகிய என்னை தேர்ந்தெடுத்தார். "ஒ தேவனே, உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக" என்று இல்லாமல் வேறு எதை நீங்கள் சொல்வீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. இது அந்த சபை பாஸ்டர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் அனைவரிடமிருந்தும் வேறுபட்டது. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!
--:--
--:--