(அக்டோபர் 2, 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று, அபிட்ஜான் - ஐவரி கோஸ்ட் பிராந்தியத்தில் உள்ள சிகென்சியில் பிரசங்கிக்கப்பட்டது)
1வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரர்கள் ஞானஸ்நானத்திற்காக இங்கு வர வேண்டும் என்று நான் சொன்னேன், அதை நான் லேவியராகமம் 8-ன் பிரகாரமாக கூறினேன். அவர்களுக்கு இங்கு நான்கு கட்டங்கள் காத்திருக்கின்றன. லேவியராகமம் 8: 6 முதல் 7 வரையின் படி முதல் கட்டம் , லேவியராகமம் 8: 10 முதல் 12 வரையின் படி இரண்டாம் கட்டம் , லேவியராகமம் 8:31-ன் படி மூன்றாம் கட்டம் மற்றும் இறுதியாக லேவியராகமம் 9: 7-ன் படி என்று சொன்னேன். இந்த வசனங்கள் அனைத்தும் அதை சரியாகக் காட்டுகின்றன...
2நான் பிரசங்கிக்க ஆரம்பித்த போது, அவர்கள் என்னிடம், "கனவு காண வேண்டாம், உலகம் மிகப் பெரியது! நீ பூமியின் முனைகளை எவ்வாறு அடையப் போகிறாய்?" என்றார்கள். ஒரு பள்ளி ஆசிரியரின் மனைவி என்னிடம், "நீங்கள் தகுதியற்றவன்" என்று சொன்னார்கள், ஏனென்றால் நான் சிரமத்துடன் பேசுவது உண்டு, நான் தடுமாறினேன், ஆனால் இன்று நான் சரியாக பேசுகிறேன், என் பெற்றோர், "நீ தடுமாறுவது இல்லையே, இது எப்படி வந்தது ?" என்றார்கள். எனக்கே இது தெரியாது…
3மேலும் இந்த செய்தி பூமியின் முனைகளை சென்று அடைகிறது, இந்த செய்தி ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், சுவாஹிலி மொழிகளில் உள்ளது மற்றும் நேற்று மாலை நான் மலகாசி மொழியில் இரட்சிப்பின் திட்டத்தை நடத்தினேன். அவர்கள் எல்லா தேசங்களிலிருந்தும், எல்லா இனங்களிலிருந்தும், பூமியின் எல்லா மொழிகளிலிருந்தும் வருவார்கள் என்று வேதாகமம் சொல்கிறது. பத்து வருடங்களுக்கு குறைவாக, அனைத்தும் நிறைவேறியது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. ஒரு தலைமுறையின் உயிருள்ள தீர்க்கதரிசிக்குள் இல்லாமல் இரட்சிப்பு இல்லை.
4இப்போது எபேசியர் 2: 20-ன் இந்த பகுதிக்கு திரும்ப வருவோம். பவுல் என்ன கூறுகிறான்? "எனக்கு முன், நீங்கள் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கிறீர்கள் ..." என்று பவுல் கூறுகிறானா? இல்லை, இது நீங்கள் கட்டப்பட்டதல்ல, ஆனால் நீங்கள் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் அஸ்திவாரத்தில் கட்டப்படுகிறீர்கள். ஒரு காலத்திற்கு அவனும் கூட, பவுலும், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் அஸ்திவாரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்தான், அவன் அரேபியாவின் பாலைவனத்திலிருந்து திரும்பி வந்தபோது, எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களிடம் சென்று தனது போதனையை அப்போஸ்தலர்களின் போதனையுடன் ஒப்பிட்டான் . ஆனால், அந்த நாளில், தமஸ்குவுக்கு செல்லும் வழியில், இராஜ்யத்தின் திறவுகோல்கள் இன்னொரு கையில் இருந்தன என்பதையும், ஆகவே, அவன், பவுல் தான் அதை கொண்டிருந்தான், என்பதையும் அவன் புரிந்துகொண்டபோது, "எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன்... " [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. " அவன், "ஒரு புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல, நான் அடித்தளம் அமைத்துள்ளேன் ...". நீங்கள் பார்க்கிறீர்களா?
5அப்போஸ்தலர்களும் அவர்களுடைய சீஷர்களும் இன்ன இன்ன காரியத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, பவுல் எழுந்து, “பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரோ அல்லது கர்த்தரிடத்தில் நடந்த எழுபது சீடர்களில் ஒருவரோ அல்லது ஒரு தேவதூதனோ வந்து தற்போது பூமியில் பவுலாகிய நான் பிரசங்கிப்பதைத் தவிர, மற்றொரு காரியத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" என்றான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
6திருச்சபையின் வரலாற்றை விவரிப்பவர்கள் இதைக் காண முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அது இனி "மோசேயும் தீர்க்கதரிசிகளும்" அல்ல, ஆனால் "பவுலும் தீர்க்கதரிசிகளும்". கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களை விட்டுவிட்டு இப்போது பவுலுடன் நடந்து கொண்டிருந்தார். மத்தேயு 16: 18-ன் படியாக தெரிந்து கொள்ளப்பட்ட அனைவரும் இதன் வெளிப்பாட்டை கொண்டிருந்தனர் ஆகையால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகனின் சில சீஷர்களுக்கும் கூட அவன் ஞானஸ்நானம் கொடுத்தான்.
7பவுல் அவர்களிடம் என்ன சொன்னாலும் அவர்கள் அதை செய்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அது உயிருள்ள தீர்க்கதரிசியான பவுல் மற்றும் ஏற்கனவே மரித்த தீர்க்கதரிசிகள், உயிருள்ள தீர்க்கதரிசி மற்றும் மரித்த தீர்க்கதரிசிகள். பவுலின் காலத்தில், நீங்கள் பவுலையும் தீர்க்கதரிசிகளையும் பிரசங்கிக்க வேண்டியிருந்தது, இல்லையெனில் நீங்கள் கலாத்தியர் 1: 8-ன் சாபத்தின் கீழ் இருந்தீர்கள்! பவுலையும் தீர்க்கதரிசிகளையும் அறிவித்தாலன்றி நீங்கள் நற்செய்தியை அறிவிக்க முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா?
8அதற்குப் பிறகு, அது ஐரேனியஸ் மற்றும் தீர்க்கதரிசிகள். பின்னர் டூர்ஸின் செயிண்ட் மார்ட்டின் மற்றும் தீர்க்கதரிசிகள். பின்னர் கொலம்பனும் தீர்க்கதரிசிகளும். பின்னர் மார்ட்டின் லூதரும் தீர்க்கதரிசிகளும். பின்னர் ஜான் வெஸ்லியும் தீர்க்கதரிசிகளும். பின்னர் வில்லியம் பிரன்ஹாம் மற்றும் தீர்க்கதரிசிகளும். மேலும் இப்போது உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்பு மற்றும் மரித்த தீர்க்கதரிசிகள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
9இப்போது, மனிதகுலத்தின் பிரச்சினை என்ன? கவனத்துடன் இருங்கள்! … சிங்கம் வெளியே வந்ததும் மத்தேயுவும் அவருடைய மக்களும் முகங்குப்புற விழுந்தார்கள். கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளில் மாற்க்கும் அவருடைய மக்களும் முகங்குப்புற விழுந்தார்கள். மனிதனின் முகத்தில் இருந்த விலங்கு வெளியே வந்தபோது லூக்காவும் அவருடைய மக்களும் முகங்குப்புற விழுந்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு அற்புதங்களை செய்த போது லூக்கா முகங்குப்புற விழுந்தான். அற்புதங்களின் நிமித்தம், தீர்க்கதரிசிகள் கூறின மேசியா இவராக இருக்க வேண்டும் என்று லூக்கா கண்டான், ஆனால் மற்ற அனைத்திற்கும் அவன் கவனம் செலுத்தவில்லை, அதேசமயம் அப்போஸ்தலன் யோவான் அற்புதங்களுக்கு கவனம் செலுத்தவில்லை, ஆனால் வார்த்தைக்கு கவனம் செலுத்தினான்.
10இந்த பக்கத்தில், வார்த்தைக்கு முன்பாக சிரம் தாழ்த்தி பணிந்து கொள்ள விரும்பிய ஒரு சந்ததியினர் இருக்கிறார்கள், ஆனால் தேவதூதன் அவர்களை நோக்கி, "இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். தீர்க்கதரிசனத்தின் ஆவி இயேசுவின் சாட்சியாக இருக்கிறது என்றான்." [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. பிரன்ஹாமிஸ்டுகளைப் பாருங்கள், ஒரு பிரன்ஹாமிஸ்ட்டால் அதை ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள்.
11யோவானின் சுவிசேஷத்தை எடுத்துக்கொண்டு, யோவான் சுவிசேஷத்தை முழுவதுமாக வாசியுங்கள், வெளிப்படுத்துதல் 19-ல் தன்னை முகங்குப்புற விழ செய்தது எந்த ஒரு உறுதிப்படுத்துதலோ அல்லது அக்கினி ஸ்தம்பமோ அல்ல என்பதை நீங்கள் காண்பீர்கள். இல்லை ஐயா! 9-வது வசனம் கூறுகிறது, "தேவனுடைய சத்தியமான வசனங்கள் " என்று கூறுகிறது. இன்று காலை நீங்கள் கேட்கும் இதே வார்த்தைகளை யோவான் கேட்டபோது, அவன் முகங்குப்புற விழுந்தான்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. ஏன்? ஏனென்றால், யோவான் ஒரு கழுகு - வார்த்தையின் வெளிப்பாடு, மற்றும் வார்த்தையால் மட்டுமே இதைச் செய்ய அவனை வழிநடத்த முடியும்.
12துவங்கும் போது, யோவான் : "ஆதியிலே வார்த்தை இருந்தது" என்றான். பிரன்ஹாமிஸ்டுகளால் அதைச் செய்ய முடியாது ஏனெனில் அவர்கள் பெந்தேகோஸ்தேக்கள் . அசுசா வீதியிலிருந்து இன்றுவரை, அவர்கள் அங்கே பெந்தகோஸ்தேக்களாக பிறக்கிறார்கள், அவர்களுக்கு நீங்கள் ஒளி மற்றும் உணர்வுகளின் புகைப்படத்தை உற்பத்தி செய்யாவிட்டால் நீங்கள் தேவனின் ஊழியக்காரானாக இருக்க முடியாது.
13வில்லியம் பிரன்ஹாம் சில காரியங்களை முயற்சி செய்தார்: பெந்தேகோஸ்தேயினரை வார்த்தைக்கு கொண்டு வந்தார். வில்லியம் பிரன்ஹாம் சில பெந்தேகோஸ்தே வித்துக்களை வார்த்தையின்-வித்துக்களாக மாற்ற விரும்பினார், அது வேலை செய்யவில்லை, ஏனெனில் உலகத் தோற்றத்திற்கு முன்பே, பெந்தேகோஸ்தேக்கள் வார்த்தையால் சிருஷ்டிக்க படவில்லை, அவர்கள் தேவனின் அசல் உயிரினங்கள் அல்ல. அவை தானியத்தை மூடியிருக்கும் உமி. அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் நிமித்தம் அவர்கள் வில்லியம் பிரன்ஹாமிடம் வந்தார்கள், தோமாவை போன்ற ஒரு அப்போஸ்தல விசுவாசத்தை கொண்டிருந்தார்களே தவிற வேறு ஏதும் இல்லை. நடுராத்திரி சத்தத்தின் முகத்தில் அவர்கள் இங்கே மிக கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்கள்.
14அரசர்களின் அரண்மனைகளில் பிறக்கும் அனைத்து நாய்களும் தங்கள் ஆத்துமாவில் எலும்புகள் மீது அன்பைக் கொண்டுள்ளன; அதனால்தான் டிசம்பர் 18, 1965 அன்று, வில்லியம் பிரான்ஹாம் விபத்துக்குள்ளானபோது, அவரது மகன்கள் முதலில் அழைத்தவர் பெந்தேகோஸ்தே டாமி ஆஸ்போர்ன், அவரது மனைவி ஒரு பிரசங்கம் செய்பவர், மேலும் அது மீண்டும் எவால்ட் ஃபிராங்க், ஓர்மன் நெவில், ஜோசப் கோல்மன் மற்றும் பெர்ரி கிரீன் முன்னிலையில் வில்லியம் பிரான்ஹாமின் இறுதிச் சடங்கை வழிநடத்த வந்தவர் டாமி ஆஸ்போர்ன் ஆவார் .
15டாமி ஆஸ்போர்ன் அவர்களிடம் : "எழுந்து நில்லுங்கள், அமர்ந்து கொள்ளுங்கள்! எழுந்து நில்லுங்கள், அமர்ந்து கொள்ளுங்கள்! எழுந்து நில்லுங்கள், அமர்ந்து கொள்ளுங்கள்!" என்று கூறியபோது. அவர்கள் அனைவரும் கீழ்ப்படிந்தனர். சில பெந்தேகோஸ்தே ஞானஸ்நானங்களுடன் வில்லியம் பிரன்ஹாமின் செய்திக்கு வந்த ஏராளமானோர் பெந்தேகோஸ்தேயினர், அவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவில்லை, ஏனென்றால் அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் முழுக்கில் இருந்தது.
16ஒரு பிரன்ஹாமிஸ்ட் மறுநாள் என்னிடம்: "நீர் உண்மையிலேயே தேவனிடமிருந்து வந்த தீர்க்கதரிசி என்றால், மத்தியதரைக் கடலை இரண்டாகப் பிரிக்கவும், இதனால் நாங்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு கால்நடையாகச் செல்வோம்" என்றார். அது என்ன? அவை பெந்தேகோஸ்தே வித்துக்கள். ஆனாலும், "எங்களிடம் வார்த்தை இருக்கிறது, எங்களிடம் வார்த்தை இருக்கிறது ..." என்று கூறி அவர் தொடங்கினார், ஆனால் அவர் வார்த்தை இல்லாமல் ஆனபோது, "நீர் உண்மையிலேயே தேவனிடமிருந்து வந்த தீர்க்கதரிசி என்றால், மத்தியதரைக் கடலை இரண்டாகப் பிரிக்கவும்" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா?
17இன்று, பிரன்ஹாமிஸ்டுகள், லூத்தரன்கள், வெஸ்லியன்கள் மற்றும் ஸ்விங்லிகள் ஆகியோரிடையே இருக்கும் தேவனுடைய புத்திரர்கள் அவர்கள் மீண்டுமாக வளரும் கோதுமை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. ஜான் வெஸ்லி, மார்ட்டின் லூதர் மற்றும் வில்லியம் பிரன்ஹாம் ஆகியோர் தேவனின் உண்மையான மனிதர்கள் என்பது உண்மைதான், மற்றும் அவர்களுடைய செய்திகள் முழுமையான உண்மை, ஆனால் பூமியில் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி இருக்கும்போது நீங்கள் அங்கே அமர்ந்து, உங்கள் இதயத்தில் அமைதியை உணர முடியும் என்றால், நீங்கள் பிசாசின் புத்திரர் என்று அர்த்தம்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
18கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டுமாக, சகோதரர் ஒபாம் அர்சேன் இரண்டு பாஸ்டர்கள் காபோனில் ஞானஸ்நானம் பெற்றதாக எனக்குத் தகவல் கொடுத்தார். அவர்களில் ஒருவர் சாயங்கால வேளையில் இருந்து வருகிறவர் மற்றொருவர் பெத்தானி என்ற இயக்கத்தில் இருந்து வருகிறார். நான் சகோதரர் ம்பூயியிடம், "சகோதரரே, ஐவரி கோஸ்டில் நீங்கள் இங்கே காணும் காரியங்களை காபோனில் பார்க்கத் தொடங்குவதற்கு மூன்று ஆண்டுகள் கடக்காது" என்று கூறியிருந்தேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
19வில்லியம் பிரன்ஹாம், "பெந்தேகோஸ்தேக்கள் சத்தியத்தை இனங்கண்டு கொண்டதால் நான் அவர்களுடன் தரித்திருக்கிறேன்" என்று சொன்னபோது, அவர் பிரசங்கம் செய்கிற வார்த்தை நிமித்தமாக தான் அந்த பெந்தேகோஸ்தேயினர் அவரை பின்பற்றுகிறார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் ஏழாவது முத்திரையின் திறப்பில், அறியாத மொழி, மூன்றாவது இழுப்பு மற்றும் பிறவற்றைப் பற்றி பேசும்போது, அவர்: ஒரு சத்தம் உண்டாகி “பெந்தெகொஸ்தே குழந்தைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட பரம காரியங்களைக் கற்பிக்க உன்னால் இயலாது அவர்களைத் தனியே விட்டு விடு.” என்று சொன்னதாக கூறினார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. வில்லியம் பிரன்ஹாம் அவர்களை வார்த்தை-வித்துக்களாக கருதினார், ஆனால் தேவன் அவரிடம், "அவர்கள் பெந்தேகோஸ்தே குழந்தைகள்" என்றார்!
20ஆனாலும், பிசாசு எதைப் பாவனை செய்ய முடியாது? வார்த்தையா அல்லது அடையாளங்களையா? நீங்கள் பார்க்கிறீர்களா? வில்லியம் பிரன்ஹாம் செய்ததைப் போலவே, இருதயங்களின் எண்ணங்களை காக்கு செவெரின் சரியாக பகுத்தறிந்தான், ஒரு வல்லமையான சுகமளிக்கும் வரத்தைக் கொண்டு உங்களுடைய பெயர், உங்களுடைய மனைவியின் பெயர், உங்களுடைய பெற்றோரின் பெயர், நீங்கள் பிறந்த இடம் மற்றும் தேதி ஆகியவற்றை சொல்ல முடிந்தது மற்றும் அவனுக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான இளம் தீர்க்கதரிசிகள் அதே துல்லியத்துடன் அதையே செய்தார்கள், அதேவேளையில் அந்த மக்கள் அனைவரும் வில்லியம் பிரன்ஹாமை நிராகரிக்கிறார்கள். துல்லியத்துடன், அதைக் காட்டும் ஒரு காணொளி இங்கே கிடைத்துள்ளது… !
21பிரன்ஹாமிஸ்டுகள் அதைப் புரிந்து கொள்ளவில்லை, அது சில பிசாசின் புத்திரர்கள் மீது உள்ள உண்மையான பரிசுத்த ஆவி என்று சொன்னார்கள்! கடைசி காலத்தில் அபிஷேகிக்கபட்டவர்கள் பற்றி, அதாவது உண்மையான பரிசுத்த ஆவி, பிசாசின் புத்திரர்கள் மீது செயல்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது தவறானது என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். அவைகள் பிசாசின் புத்திரர்களின் மீது செயல்படும் பிசாசின் ஆவிகள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
221906-ஆம் ஆண்டில் அசுசா தெருவில் பரிசுத்த ஆவியின் பொழிதலோடு லவோதிக்கேயாவின் காலம் பெந்தேகோஸ்தேலிசத்தால் குறிக்கப்படுவதைக் கவனியுங்கள். மேலும் விசித்திரமான காரியம் என்னவென்றால், தேவன் தான் வில்லியம் பிரன்ஹாமிடம் அந்த பெந்தேகோஸ்தேக்களிடம் போக சொன்னார் மற்றும் அவர் தனது மகளை அங்கு அழைத்துச் செல்வதை அவருடைய மாமியார் விரும்பவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? கத்தோலிக்க பாதிரியார்கள், புராட்டஸ்டன்ட் மற்றும் சுவிசேஷ பாஸ்டர்களுடன் எவ்வாறு ஒரு தேவனுடைய மனுஷன் சகோதரத்துவம் செய்ய முடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் இது வேதாகமத்தில் கச்சிதமாக உள்ளது. தேவன் ஆபிரகாமிடம், "எகிப்திற்கு போக சொன்னார்!" இதை தான் கச்சிதமாக வில்லியம் பிரன்ஹாம் செய்தார். எகிப்தில் இறங்கி, சுவிசேஷ பாஸ்டர்கள், பிசாசின் புத்திரர்கள், பிசாசை ஆராதிப்பவர்களுடன் சகோதரத்துவம் செய்தார்.
23ஆனால், எனக்குச் செவிகொடுக்கிறவர்களே, நடுராத்திரி சத்தத்தைத் தவிர தேவனைப் பின்பற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. அது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது. முதலில், கொத்தனார்களின் தலைவர் தனது அனைத்து தொகுப்புகளுடன் வருகிறார். இது அதிக ஆற்றலும் வலிமையும் தேவைப்படுகிற பகுதியாகும். அது சிங்கத்தின் காலம். கொத்தனார்கள் முடித்துவிட்டு மறைந்து போகும்போது, தச்சர்களும் அவற்றின் தலைவரும் தோன்றுவார்கள் பிறகு அங்கு சூழல் மாறுகிறது, நீங்கள் அதிகமான சத்தத்தைக் கேட்கலாம், அவர்கள் தான் சுத்தியல், ஆணிகளை கொண்டிருப்பார்கள் மற்றும் ஆட்டுக்குட்டியை சிலுவையில் அறையத் தேவையான அனைத்தையும் கொண்டிருக்கிறார்கள்.
24மேலும் பிரேம்கள், கூரை, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தயார் செய்து அவர்கள் கடந்து போன பிறகு, "அது எனக்குப் போதுமானது, மீதமுள்ளவை எனக்குத் தேவையில்லை" என்று சொல்லாதீர்கள், ஏனெனில் மின்சார வல்லுநர்கள் வர வேண்டும். பரலோக ராஜ்யத்திற்கும் அது அப்படித்தான். மின்சார வல்லுநர்கள் வர வேண்டும். இது லூதரின் காலம், ஒளியின் காலம்; விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்பதை மனிதன் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான்.
25முதன்முறையாக, தேசங்கள், தாங்கள் விசுவாசித்து ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவம் வேறொன்றுமில்லை ஒரு மனித மதம் தான் என்பதை உணரத் தொடங்குகின்றன. பின்னர், அதன் பிறகு, குழாய் பணியாளர்களும் அவற்றின் தலைவர்களும் வருகிறார்கள்.
26கொத்தனார்கள் வந்து செல்கிறார்கள் மற்றும் மீண்டுமாக வருகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். சுவர்களை பூசிய பிறகு, மின்சார வல்லுநர்கள் மீண்டும் திரும்பி வருகிறார்கள் ... மீதமுள்ளவர்கள் அனைவரும் இந்த நான்கு பேரைப் பொறுத்தது. தரையை போடுபவர் ஒரு கொத்தானர். தச்சர்களும் கூரை அமைப்பவர்களும் இணைப்பவர்கள் போன்றவை ..... தச்சர்களின் வேலைக்குப் பிறகு, கதவுகள் போடப்பட்ட பிறகு, கொத்தனார்கள் மீண்டும் இரண்டாவது முறையாக வருவார்கள், அதன் பிறகு, சுவிட்சுகள் , பல்புகள், சர்க்யூட் பிரேக்கர்கள் மற்றும் பிறவற்றை வைக்க மின்சார வல்லுநர்கள் மீண்டும் வருகிறார்கள், ஆனால் வண்ணம் பூசுபவர்களும் அவற்றின் தலைவரும் வரும்போது, அது தான் முடிவு. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்].
27அந்த தருணத்திலிருந்து, ஒரு வண்ணம் பூசுபவராக அவர் வராவிட்டால் ஒரு கொத்தனாருக்கு இனி அங்கே ஒரு இடம் இல்லை. நீங்கள் இனி ஒரு போதும் கொத்தனார், தச்சர், குழாய்ப் பணியாளர் அல்லது மின்சார வல்லுனர்களின் உபகரணங்களோடும் ஆவியோடும் அங்கு வர முடியாது. வர்ணம் பூசுபவர்கள் மட்டுமே இருக்கிறார்கள், மேலும் அவர்கள்தான் முடிக்கப்பட்ட வேலையை முன்வைப்பார்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்! ” என்கிறார்கள்]. பரலோக ராஜ்யத்திற்க்கும் அது அப்படித்தான்.
28வண்ணம் பூசுபவர்களின் தலைவருடைய ஆவியில் வேலை செய்யாத எவன் ஒருவனும் ஒரு பிசாசாக இருக்கின்றான். நாம் சென்று கவுன்களும் மற்றும் பாதிரிகளின் முழு அங்கியும் அணிந்துகொண்டு மெதடிஸ்டுகளை போன்ற பாடல் குழுக்கள் மற்றும் இன்னும் பலவற்றை உருவாக்க வேண்டியதில்லை, ஆனால் மெத்தடிஸ்டுகளாகிய அவர்கள் தான் அந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கு வர வேண்டும். அக்னி ஸ்தம்பம் புகைப்படங்களை தயாரிக்க நாம் முயற்சிக்க வேண்டியதில்லை, ஆனால் பிரன்ஹாமிஸ்டுகளாகிய அவர்கள் தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கு வர வேண்டும் . இனி முதற்கொண்டு காக்குவ் பிலிப்புவும் தீர்க்கதரிசிகளும் தான், கேட்கிறதற்க்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.