(மார்ச் 18, 2012 ஞாயிற்றுக்கிழமை காலை அட்ஜாம், அபிட்ஜன்- ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 சரி, நான் கேள்விகளின் வெள்ளத்தைப் பெற்றுள்ளேன் அதற்கு நான் பதிலளிக்க முயற்சிக்கிறேன். பரிசுத்தமாகுதலுக்காகவே நீங்கள் அவைகளை கேட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் ... சரி, சில பாவங்கள் எல்லை நிர்ணயிக்கும் கோட்டின் மேலும், மற்றவை எல்லை நிர்ணயிக்கும் கோட்டின் பின்னாலும் உள்ளன. இந்த அர்த்தத்தில்தான், எல்லை நிர்ணயம் செய்யும் பாவங்களுக்காக, ஒரு சகோதரர் தனது மனைவியின் அருகே வரும்போது வாயிலிருந்து வாய் அல்லது வெளிச்சம் போன்றவற்றை நான் பேசினேன்.
2 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! இப்போது, தீர்க்கதரிசன விசுவாசத்தைப் பற்றி நான் மீண்டும் பேச விரும்புகிறேன். அங்கே பல பரிமாணங்கள் இருந்தன. ஆனால் நாம் இருக்கும் காலம் கழுகின் காலம், மற்றும் இது தீர்க்கதரிசன விசுவாசம். ஆனால் ஒரு காரியத்தை நீங்கள் கவனிக்கும் படியாக நான் விரும்புகிறேன்: தீர்க்கதரிசன விசுவாசம் மற்றும் தீர்க்கதரிசன விசுவாசத்தை ஜீவிப்பது. எனவே, நீங்கள் தீர்க்கதரிசன விசுவாசத்தை ஜீவிக்காமல் ஒரு பக்தியுள்ள பிரன்ஹாமிஸ்ட்டைப் போன்ற தீர்க்கதரிசன விசுவாசத்தின் போதனையையும் அறிவையும் பெறலாம்.
3 இந்த தீர்க்கதரிசன விசுவாசத்தைப் பற்றிய அறிவைக் கொண்டிருந்தாலே நித்திய ஜீவனைக் கொடுக்கும் ஒரு காலம் இருந்தது, ஏனெனில் அறிவு பெருகும் என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால் இன்று, அது தீர்க்கதரிசன விசுவாசத்தை ஜீவிப்பதற்க்கான கேள்வியாக இருக்கிறது. இது மூன்றாவது இழுப்பைப் போன்றது, இது மூன்றாவது இழுப்பின் பிரத்தியட்சத்திலிருந்து வேறுபட்டது. நாம் மூன்றாம் இழுப்பைப் பிரசங்கிக்கிறோம், ஆனால் மூன்றாவது இழுப்பின் பிரத்தியட்சம் வருகிறது.
4 சாயங்கால வேளையில், அவர்கள் அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அதை ஜீவிக்கவில்லை. இதனால்தான் இன்று லீ வேல் இரு-ஒற்றுமை விசுவாசத்துடன், ஜோசப் கோல்மன் இடி முழக்கத்துடன், ஜூனியர் ஜாக்சன் அவரது பக்கத்தில் இருப்பதை காணலாம். மற்றொரு பக்கத்தில் எவால்ட் ஃபிராங்க் மற்றும் பல…
5 தீர்க்கதரிசன விசுவாசத்தில், இந்த விஷயத்தை வெறுமனே காண்பிப்பது குறித்த கேள்விதான், உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் "ஆமென்!" என்பார்கள். இதுதான் அசலான விசுவாசம்! இந்த விசுவாசத்தை தான் தேவன் காலத்தின் முடிவில் பூமியில் திரும்பக் கொண்டுவருவார், ஏனென்றால் அவர் மீட்டளிப்பின் தேவன். நீங்கள் பார்க்கிறீர்களா? அசலான விசுவாசம் தீர்க்கதரிசன விசுவாசமாக இருக்கும் மாத்திரத்தில், நான்கு ஜீவன்களில் தீர்க்கதரிசனத்தின் அச்சுமுத்திரை உள்ளது.
6 மார்ட்டின் லூதரின் காலத்தில், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் மார்ட்டின் லூதர் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தபோது, யாராவது ஒருவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் இருப்பதைக் காண்பிக்க வந்தால். அவன் ஒரு பிசாசின் புத்திரன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7 மத்தேயு 25:6-ன் காலத்தில், நாம் அப்போஸ்தல, பிரன்ஹாமிஸ்ட் அல்லது பெந்தேகோஸ்தே விசுவாசத்தை பெறவில்லை, ஆனால் தீர்க்கதரிசன விசுவாசத்தை பெற்றுள்ளோம். நீங்கள் பார்க்கிறீர்களா? இப்போது, ஒரு சகோதரர் இருக்கிறார், இங்கே ஒரு குறுக்கீடட்டின் போது நான் சொன்னது போல் பிரதான தூதன் மிகாவேல் உண்மையில் கடவுளா என்று தெரிந்து கொள்ள விரும்பினார்…
8 பிரதான தூதன் மிகாவேலின் பிரசன்னம் தானியேலின் ஆவியுடனும் நடுராத்திரி சத்தத்துடனும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். வெளிப்படுத்துதல் புத்தகத்தில், வெளிப்படுத்துதல் 12:14-ல் நடுராத்திரி சத்தத்தைக் காண்கிறோம். ஆனால் அதற்கு முன், பிரதான தூதன் மிகாவேல் வெளிப்படுத்துதல் 12:7-ல் தோன்றுகிறான். வேதாகமம் கூறுகிறது, "வானத்திலே சத்தம் உண்டாயிற்று: மிகாவேலும் அவனுடைய தேவதூதர்களும் வலுசர்ப்பத்தோடு யுத்தத்திற்கு சென்றார்கள்..."
9 தானியேல் 12:1 இன் மிகாவேல் (Michael) மற்றும் வெளிப்படுத்துதல் 12:7 இன் (Michel) மிகாவேல். [ஆசிரியர் குறிப்பு: (Michael) மிகாவேலும் மிகாவேலும் (Michel) முறையே டார்பி பிரெஞ்சு பதிப்பின் தானியேல் 12:1 மற்றும் வெளிப்படுத்துதல் 12:7 இல் உள்ளது] யூதர்களின் (Yeshua ha'Mashiah) யேசுவா ஹா மஷியாவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் ஒரே பெயர் மற்றும் ஒரே நபர்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நாம் தானியேல் புத்தகத்தில் செல்லும்போது, நடுராத்திரி சத்தம் தானியேல் 12:8 முதல் 10-ல் ஒலிக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
10 ஆனால் அதற்கு முன், பிரதான தூதன் மிகாவேல் தானியேல் 12-ஆம் வசனத்தில் 1-ஆம் வசனத்தில் தோன்றுகிறான். இப்படியாக எழுதப்பட்டிருக்கிறது : "உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்..." மேலும் இறுதியாக நாம் யோசுவாவின் புத்தகத்தில் மீண்டும் செல்லும்போது நடுராத்திரி சத்தம் யோசுவா 6 ஆம் அத்தியாயத்தில் ஒலிக்கிறது. ஆனால் அதற்கு முன், பிரதான தூதன் மிகாவேல் 5:13 முதல் 15 ஆம் வசனத்தில் தோன்றுகிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? பிரதான தூதன் மிகாவேல் தான் இயேசு கிறிஸ்து என்று தீர்க்கதரிசி கூறும்போது, அது யாருக்கும் ஒரு சோதனையாக இருக்கக்கூடாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11 தீர்க்கதரிசன விசுவாசத்தின்படி, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் காரியங்களைக் கண்டு, தீர்க்கதரிசி உங்களுக்கு இன்னொரு காரியத்தை சொல்ல வந்தால், தேவன் தாமே உங்களுக்கு அறிவூட்ட ஒரு தேவதூதனை அனுப்பி இருக்கிறார் என்று கருதுங்கள். நீங்கள் முதலில் உங்கள் அழைப்பையும் பணி நியமயத்தையும் வழங்காமல் அதற்கு எதிராக நீங்கள் செல்ல முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 மேலும் ஒருவேளை, ஒரு பாப்டிஸ்ட்டுடன் கலந்துரையாடும்போது, நீங்கள் மிகாவேல் தேவன் இல்லை என்று கூறுகிறீர்கள். அந்த பாப்டிஸ்ட் உங்களிடத்தில்: "இருப்பினும், மிகாவேல் தேவனென்று உங்களுடைய தீர்க்கதரிசி கூறுகிறார்" என்று சொன்னால், நீங்கள் சொல்கிறீர்கள் : "இல்லை, தீர்க்கதரிசி அதைச் சொல்ல முடியாது மிகாவேல் தேவன் அல்ல!" ஆனால் அந்த பாப்டிஸ்ட் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு புத்தகத்தில் மிகாவேல் தேவன் என்று உங்களுக்குக் காட்டினால், உங்கள் கடந்தகால நம்பிக்கை எதுவாக இருந்தாலும், "தேவனுக்கு மகிமை! அல்லேலுயா! இது தான் முழுமையான சத்தியம்! மிகாவேல் தேவன்!" என்று சத்தமிடுவீர்கள். அதுதான், தீர்க்கதரிசன விசுவாசம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13 இப்போது, நான் யோசுவா 5:13 முதல் 15-ஐ படிக்கப் போகிறேன். அதை மிக நெருக்கமாக பின்பற்றுங்கள். யோசுவா 5:13 முதல் 15: பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: ...", இப்போது நன்றாகக் கேளுங்கள். அந்த மனிதர் இப்போது பேசுகிறார். அந்த மனிதர் மிகாவேல். நீங்கள் பார்க்கிறீர்களா?
14 யெகோவாவின் தூதன் தான் இயேசு கிறிஸ்து, அது தேவன் தாமே. சேனைகளின் யெகோவா, அது மிகாவேல், அது இயேசு கிறிஸ்து, அது தேவன் தாமே. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மிகாவேலை பற்றி அறிய நல்ல நிலையில் யார் இருக்கிறார்கள்? அது மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி அல்லது வில்லியம் பிரன்ஹாம் அல்ல, ஆனால் அது தானியேலின் ஆவி தான் மற்றும் நடுராத்திரி சத்தத்தை பிரசங்கிப்பவரும் தானியேலின் அவி தான்.
15 14 வது வசனத்தில் தூதன் என்ன சொல்லப்போகிறார் என்பதை இப்போது கேளுங்கள். தேவதூதன் சொல்கிறார், "… இல்லை நான் எதிரி அல்ல., அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; ஆமென்! நான் யெகோவாவின் தூதராக வந்திருக்கிறேன், ஆனால் இப்போது நான் யெகோவாவின் படையின் அதிபதியாக வந்துள்ளேன் என்று கூறுகிறார். மேலும் மீதமுள்ள வசனம் கூறுகிறது, “… அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்." இது என்ன? ஆமென்! தேவதூதர் யோசுவாவிடம், "இல்லை, எழுந்திரு, நான் ஒரு தூதன், நான் உங்களுடைய சக அடிமை!" என்று கூறவில்லை ஏன்? ஏனெனில் தேவன் தாமே இந்த தூதனாக இருக்கிறார். சேனைகளின் யெகோவா, அது தேவனே, அது மிகாவேல். அவர் தேவன் என்பதால் யோசுவா அவரை தொழுது கொண்டான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16 வெளிப்படுத்துதல் 19 ல், அது ஒரு நபர். அவர் யோவானை நோக்கி, "யோவானே இல்லை, என்னை தொழுது கொள்ள வேண்டாம்!" ஆனால் இங்கே யோசுவா 5-ஆம் அதிகாரத்தில், அது மிகாவேல், சேனைகளின் யெகோவா, அது இயேசு கிறிஸ்துவே. யோசுவா அவரை ஆராதித்தான், அவர் யோசுவாவை நோக்கி, "யோசுவா, உன்னுடைய பாதரட்சைகளைக் கழற்றிப்போடு! நீ தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறாய்" என்றார். ஒரு சகோதரர் என்னிடம், "சகோதரர் பிலிப்பு, மிகாவேல் என்றால்: கடவுளைப் போன்றவர்" என்று கூறினார். மிகாவேல் இயேசு கிறிஸ்து என்று நான் சொன்னபோது, நான் சொன்னேன் என்று எனக்குத் தெரியவில்லை… ஆமென்! அதை வெளிப்படுத்த ஒரு தீர்க்கதரிசி தேவை. பரிசுத்தவான்களின் விசுவாசம், அது தீர்க்கதரிசன விசுவாசம், உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனை சுற்றியுள்ள விசுவாசம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
17 இயேசு கிறிஸ்து பூமியில் வரும்போது, பூமியில் ஒரு தீர்க்கதரிசி இருப்பார், ஏனென்றால் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை சுற்றி அல்லாமல் விசுவாசத்தின் ஒற்றுமையை உருவாக்க முடியாது. பூமியில் ஆயிரம் பிரன்ஹாமிஸ்ட் சபைகள் அல்லது போக்குகள் இருக்கிறது, அது ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசன விசுவாசத்தை கைவிட்டதால் தான். இந்த ஆயிரக்கணக்கான போக்குகள் ஒவ்வொன்றும் அதன் வழியைக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் அதன் சத்தியமும் மற்றும் அதன் வழியாக காரியங்களைப் பார்க்கும்.
18 இது இதுதான் என்று ஒவ்வொன்றும் விசுவாசிக்கும். மற்றொன்று இது தான் அது என்று விசுவாசிக்கும். அதனால் மற்றும் முன்னும் பின்னுமாக உள்ளது. ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு, ஒரு தீர்க்கதரிசி பூமியிலுள்ள தேவனுடைய எல்லா பிள்ளைகளுக்கும் விசுவாசத்தின் ஒற்றுமையைக் கொண்டு வருவார். தீர்க்கதரிசி வரும்போது, ஒவ்வொருவரும் தனது நிலையை விட்டுக்கொடுக்க வேண்டிய தியாகம் அல்ல, ஆனால் அவர்கள் வெறுமனே தங்கள் விலைமதிப்பற்ற விளக்குகளை தூக்கி எறிந்துவிட்டு, தீர்க்கதரிசியின் பின்னால் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 சபைகள் சில சத்தியங்களை கொண்டுள்ளன. "நாங்கள் சத்தியத்தில் இருக்கிறோம்..." என்று நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் தெரிந்துகொள்ள பட்டவர்களும் தேவனுடைய பிள்ளைகளும் பூமியில் எப்போதும் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை கொண்டிருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு தீர்க்கதரிசியைத் தேடுகிறார்கள், பிசாசின் புத்திரர்கள் சத்தியங்களைத் தேடுகிறார்கள். நாங்கள் ஒரு சத்தியத்தை தேடவில்லை, ஏனெனில் பிசாசின் சத்தியம் அது ஒரு பொய். நீங்கள் கத்தோலிக்கராக இருந்தாலும், மற்றவர்களிடம் இல்லாத ஒரு உண்மை அவரிடம் உள்ளது என்று உங்கள் கத்தோலிக்க சபையை விட்டு வெளியேறி யாரையாவது பின்பற்றக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு அதிகாரபூர்வமான செய்தியோடு அழைப்பு மற்றும் பணிநியமனத்தை கொண்ட ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனை பின்பற்ற வேண்டும். அது தான் 2 நாளாகமம் 20:20 மற்றும் ஓசியா 12:13 இருக்கக்கூடிய ஒரே வழி, என்று கூறுகின்றன.
20 தேவன் ஒரு சபையை அல்லது ஒரு சத்தியத்தை அல்லது ஒரு ஊழியத்தை பூமியில் அனுப்புவதில்லை, ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை தான், தீர்க்கதரிசி செய்தியாளனிடம் இருந்து தான் இவை அனைத்தும் புறப்படுகின்றன. எனவே, தேவன் எப்போதும் தனது தீர்க்கதரிசியை சத்தியத்தில் வைத்திருப்பார். நீங்கள் பார்க்கிறீர்களா? இப்போது, நான் இங்கே ஒரு குறிப்பை எடுத்து வருகிறேன்!
21 பெர்ரி கிரீன் வில்லியம் பிரன்ஹாமுடன் இருந்தபோது அந்த மூன்று இடிமுழக்கங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவை தூதனால் உச்சரிக்கப்பட்ட மூன்று வார்த்தைகள், " மேற்கு கடற்கரையின் நியாயத்தீர்ப்பு " மற்றும் ஒரு பூகம்பம் அலாஸ்காவைத் தாக்கியது. நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த பக்கத்தில், வடிவம், மொழி மற்றும் பலவற்றில் ஒரே மாதிரியான இரண்டு மதப் போக்குகள்... அது என்ன? ஏப்ரல் 11, 1966 அன்று டாமி ஆஸ்போர்ன் ஆசீர்வதித்த பிரான்ஹாமிஸ்ட்களின் தாய் இறந்து, இரண்டு இரட்டை சகோதரிகள், ஒத்த தோற்றமுடைய இரண்டு கொம்புகளைப் போல, அவளுடைய இடத்தில் எழுந்தனர்.
22 அந்த இரண்டு கழுகுகளும் இரண்டு இரட்டை சகோதரிகளாக இருந்தன, பெருங் கழுகு அவர்களை வானத்தில் தாக்கியபோது, நியாயத்தீர்ப்பு பூமியைத் தாக்கியது மேலும் உலகம் முழுவதும் பயந்துபோனது, உலக வர்த்தக மையத்தின் இதயமும் உலக பணத்தின் மூலதனமுமான இரண்டு இரட்டை கோபுரங்கள், தாக்கப்பட்டு உடைக்கப்பட்டன! அது வேறு எங்கும் இருக்க முடியாது ஆனால் அங்கே மாத்திரம் தான், அந்த அமெரிக்கர்களுக்கு தான் வில்லியம் பிரன்ஹாம் அனுப்பப்பட்டார், மேலும் அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்கக்கூடிய பணத்தை அவர்கள் விரும்பியதால், தேவன் ஆப்பிரிக்காவுக்கு திரும்பிவிட்டார்! நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் கண்டுபிடிக்காத வழிகளைப் பின்பற்றுவதற்காக மக்கள் உயிருள்ள தீர்க்கதரிசியை கைவிட்டனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 சமீபத்தில், ஒரு குறிப்பிடதக்க மைக்கேல் மோரின் என்பவர் , கனடாவிலிருந்து எனக்கு எழுதினார், இதினால் அவர் கண்ட மூன்று சொப்பனங்கள் தேவனிடமிருந்து வந்ததா என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டும். அவர் எழுதினார், "சகோதரர் பிரன்ஹாம் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் என்ன கற்பித்திருப்பார் என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தியுள்ளார், கிறிஸ்துவின் ஆவியில் 100% நடந்து செல்லும் முதல் வரிசையின் இரண்டு ஆளுமைகளின் உறுதிப்படுத்தல் எனக்குத் தேவை, தேடலுக்குப் பிறகு, உங்களுடைய உறுதிப்படுத்தல் எனக்குத் தேவை என்று முடிவு செய்தேன் அதே போல் எவால்ட் ஃபிராங்கினுடையதும். தரிசனங்களின் நுண்ணறிவு உங்களிடம் இருப்பதாக தெரிகிறது" என்றார். நான் அவரிடம்: "ரோம் இன் பத்து அருவருப்புகள்" புத்தகத்தின் ஆசிரியர் ஆண்ட்ரே மோரின் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன்? அவர்: "அவர் என் இளைய சகோதரர்" என்றார். நான் சொன்னேன், உங்களிடம் இருந்த தரிசனங்களை குறித்து, நான் ஒரு காரியத்தை அறிய ஆர்வமாக உள்ளேன்: எவால்ட் ஃபிராங்க் ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஆகவே, உங்களுடைய தரிசனங்கள் தேவனிடமிருந்து வந்ததா இல்லையா என்பதை அவர் எப்படி அறிந்து கொள்வார்? மனித மகத்துவத்தால் ஒரு தரிசனத்தை வியாக்கியானிக்கவோ அல்லது விளக்கவோ முடியும் என்றால், அமெரிக்காவில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஏன் கேட்கக்கூடாது? என்றேன். மேலும் அவர்: "நான் கொண்டுள்ள வெளிப்பாடுகள் தேவனிடமிருந்து வந்தது என்று www.williambranham.org என்ற தளம் கூறுகிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். நான் அவரிடம், "மிஸ்டர் மோரின், ஒரு இணைய வலைத்தளம் ஒரு தீர்க்கதரிசி அல்ல!" அந்த வெளிப்பாடுகளைப் பொறுத்தவரை,… நான் வெறுமனே ஒரு தரிசனத்தை படித்தேன், அதை விட்டுவிட்டேன். அது குறிசொல்லுதல். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].