(நவம்பர் 17, 2013 ஞாயிற்றுக்கிழமை காலை அபிட்ஜான் ஐவரிகோஸ்ட் (கடற்கரைப் ) பகுதியில் உள்ள சிகென்சியில் பிரசங்கிக்கப்பட்டது)
1சரி. நான் ஒரு கேள்வியுடன் தொடங்குகிறேன்: சகோதரர்பிலிப்பு, இது நடந்தது அப்போது நான் தூங்கவில்லை, ஒரு சக்தி என் மீது வருகிறது, என்னால் கத்தவோ, என்உடலின் சிறிய பகுதியை அசைக்கவோ முடியவில்லை.அது என்ன? பதில் என்னவென்றால், அது நரகத்திலிருந்துவரும் ஒரு பிசாசு அதைச் செய்கிறது மற்றும் நீங்கள்தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் இடத்தில் இல்லைஎன்பதற்கு இதுவே தெளிவான சான்று, ஆனால் உங்கள்ஆத்துமா நரகத்திற்கு முந்தைய கனவுகள் மற்றும்வேதனைகளின் பகுதியான ஐந்தாவது பரிமாணத்தில்உள்ளது.
21993 ஆம் ஆண்டு, நான் படுத்திருந்த ஒரு அறையில்அந்த பிசாசு ஜன்னல் வழியாக நுழைவதை என் சரீரகண்களால் பார்த்தேன். அது ஒரு சவப்பெட்டியின் நிழல்மற்றும் நீண்ட நொடிகள், அது இங்கேயும் அங்கேயும்சென்று, என்னை அசைக்க முயற்சிக்கும், நான் திரும்பிஅதைப் பார்ப்பேன், அது நகரும், நான் திரும்புவேன், அதைநான் உங்களைப் பார்ப்பது போல் தெளிவாகப் பார்த்தேன். அது ஜன்னல் வழியாக வெளியே செல்லும் வரை அதுஅப்படியே இருந்தது.
3நான் அதை தோற்கடித்தேன், இதனால், என்னைநம்பியவர்களில் மிகச்சிறியவர்களைக் கூட அது அசைக்கமுடியாது. நீங்கள் போதுமான அளவு ஜெபம்செய்யாவிட்டாலும், நீங்கள் என்னை நம்புவதால் அதுஅதைச் செய்ய முடியாது. யாரும், அல்லது ஒரு மிருகம்கூட, ஒரு கனவில் உங்கள் பின்னால் ஓட முடியாது, நீங்கள்என்னை நம்புவதால் நீங்கள் ஒரு கனவில் பறக்க முடியாது.
4என் இடத்தில், மஹோமத் மற்றும் இன்றைய அனைத்துமதத் தலைவர்களும் அசையாமல் இருப்பார்கள். மரணத்தின் மீது அவர்களுக்கு அதிகாரம் இல்லை. நீங்கள்பார்க்கிறீர்களா? கிறிஸ்து மரணத்தை தோற்கடித்தார்,அதனால்தான் நான் கிறிஸ்தவன். இந்த அடையாளத்தின் மூலம், கிறிஸ்துவுடன்உயிர்த்தெழுதல் வரை, நான் நித்திரை செய்வேன்,நீங்களும் என்னுடன் நித்திரை செய்வீர்கள், இரண்டாவதுமரணம் நம்மீது எந்த வல்லமையையும் கொண்டிருக்காது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5வெளிப்படையான பாவ அறிக்கைகளைப் பற்றிய, ஒருகுறிப்பு: அறிக்கைகளுக்குப் பிறகு மற்றும் அறிக்கைகளில்சபையின் தலையீடுகளின் போது, நீங்கள் எழுந்து நின்று,அறிக்கை செய்ய வேண்டிய ஒருவர் ஆனால் அதைச்செய்யாததினால் அவரைக் கண்டிக்கலாம். உதாரணமாக, நீங்கள் எழுந்து நின்று கூறலாம்: "சகோதர சகோதரிகளே, நான் அப்படிப்பட்ட ஒருவரை அல்லது என் கணவர் இதைச்செய்வதைப் பார்த்தேன், அவர் அதை ஒப்புக்கொள்ளாமல்அறிக்கை செய்யாதது எனக்கு மிகுந்த ஆச்சரியமாகஇருக்கிறது". மேலும் அவருக்கு உடனே இடம்வழங்கப்படும். அத்தகைய வழக்கில், அவர் குற்றவாளியாகஇருந்தால், அவர் ஒரு தண்டனை அனுமதியைப் பெறவேண்டும், அதாவது சொல்ல வேண்டுமானால் சிறிது காலம்அந்த சகோதரன் அல்லது சகோதரி சபைக்கு வெளியேதனது வீட்டில் இருக்க வேண்டும். அவர் திரும்பிவரும்போது, அவர் அனுமதி தண்டனையின் போது நன்றாகநடந்து கொண்டால், சபை அவருக்காக பிரார்த்தனைசெய்யும். ஆனால் அனுமதியிலிருந்து திரும்பி வரும்ஒருவரை நீங்கள் மீண்டும் அனுப்ப முடியாது.
6ஆராதனைக்குப் பிறகு அல்லது வீட்டில் அதற்காக அவர்உங்களைக் கண்டிக்கக்கூடாது. மேலும், உங்கள்மனைவியின் நிர்வாணத்தைப் பார்த்ததாக நீங்கள்ஒப்புக்கொண்டு அறிக்கை செய்தால், நீங்கள் அதில்மகிழ்ச்சி அடைந்தது தான் பாவம் ஆகும்.
7இப்போது இன்னொரு கேள்வி: தீர்க்கதரிசியே, நீங்கள்பெண்கள் கால்சட்டை அணிவதைத் தடை செய்தீர்கள். ஆனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், குளிர்காரணமாக அவர்கள் தங்கள் கவசங்கள் அல்லதுபாவாடைகள் அல்லது ஆடைகளின் கீழ் சில வகையானபொருட்களை அணிவார்களே. ஆமாம், குளிர் காரணமாகஅது ஒழுங்கில் உள்ளது. அவர்கள் அந்த கால்சட்டைபுறம்தோன்ற அனுமதிக்காத வரை, அது சரியானது ஆகும்.
8மேலும், அப்போஸ்தலர்களான பெர்னார்ட் சிகோவாமற்றும் மூன்று சகோதரிகள் இங்கு ஒரு வாரம் கழித்த பிறகுதிரும்பினர். அவர்கள் சொன்னார்கள்: ஓ சகோதரர்பிலிப்புவே, நாங்கள் இனி திரும்ப விரும்பவில்லை. மேலும்அவர்களுக்கு முன் வந்த சகோதரிகள் மிரேலீ பம்பா,மிஜோலா, ஹுக்ட்டே பேகாலே போன்றவர்கள், அவர்கள்ஜிம்பாப்வேக்கு திரும்புவதற்கு முன்பு, அப்போஸ்தலன்சிகோவாவின் மணமகள் சகோதரி மிரிரோ, அப்போஸ்தலன் சிபாண்டாவின் மணமகள் சகோதரிரேச்சல் மற்றும் சகோதரி ரேச்சல் நுண்டு ஆகியோர் தங்கள்காலத்தின் தீர்க்கதரிசிக்காக சமைத்தனர். நீங்கள்பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
9ஒரு நாள், சாரிபாத்தின் விதவை அருகில் அணுகி வந்து,சொல்லுவாள் : “ஓ என் அருமை சகோதரிகளே, நமதுதேவனாகிய கர்த்தர் மகிமைப்படுவாராக. நான் பூமியில்இருந்தபோது, நானும் எங்கள் காலத்தில் தீர்க்கதரிசியாகஇருந்த திஸ்பியனாகிய எலியாவுக்கு சமைத்தேன்.
10மேலும் மறுபுறம், மகதலாவின் மரியாள், மார்த்தாள்,எலிசபெத் மற்றும் சூசன்னா அவர்களிடம் கூறுவார்கள்: "நாங்கள் பூமியில் இருந்தபோது, நாசரேத்தின்இயேசு-கிறிஸ்து என்று நீங்கள் அழைக்கும் மற்றும் எங்கள்காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்த எங்கள் ரபீக்காகநாங்கள் சமைத்ததை நினைவில் கொள்கிறோம்."
11சூனேமின் பெண்மணி அருகில் அணுகி வந்துசொன்னாள்: "ஓ என் அருமை சகோதரிகளே, நமதுதேவனாகிய கர்த்தர் மகிமைப்படுவாராக. நானும் பூமியில்இருந்தபோது, எங்கள் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தசாப்பாத்தின் மகன் எலிசாவுக்கு சமைத்தேன். சகோதரிஹாட்டி ரைட் அன்புடன் அணுகி, கூறினார்: "ஓ என்அருமை சகோதரிகளே, பூமியில், நானும் வில்லியம்பிரான்ஹாமுக்காக சமைத்தேன். அவர் எங்களதுகாலத்தின் தீர்க்கதரிசி".
12மேலும் பல பெண்கள் அங்கு தங்களைக்கட்டிப்பிடித்துக் கொள்வார்கள், அவர்கள்மகிழ்ச்சியடைவார்கள். "ஓ, நான் எரேமியாவுக்காகசமைத்தேன்" என்று அவர் கூறுவார். இன்னொருவர்சொல்வார்: "நான் ஏசாயாவுக்கு சமைத்தேன்". மற்றொருவர்கூறுவார் : "நான் ஆபகூக், ஆமோஸ் மற்றும் பலருக்காகசமைத்தேன் என்று... " அவர்கள் ஒருவரையொருவர்கட்டிப்பிடித்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் சொல்லுவது: ஆமென் என் அருமை சகோதரிகளே! ஆமென் என் அருமைசகோதரிகளே! நமது தேவனுக்கு மகிமை! நமதுதேவனுக்கு மகிமை உண்டாவதாக!”என்று சொல்லிகடந்து போவார்கள். அவர்கள் அனைவரும் அழகாகவும், அவர்களின் காலத்தின் முதன்மையானவர்களாகவும்இருந்தனர்! இப்போது, ஒரு பிசாசின் மகள் நரகவேதனையிலிருந்து பார்த்து கூறுவார், மேலும் நாங்கள்எல்லா வேதாகமங்களையும் பின்பற்றி பூமியில் நன்றாகவாழ்ந்தோம், இரட்சிப்பு இன்னும் மிகவும் எளிமையானது. நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
13மேலும் இங்கு வந்திருந்த ஜிம்பாப்வேயின் சகோதரிகள்மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், அவர்கள் ஷோனாவில்பாடிக்கொண்டிருந்து சொன்னார்கள்: "ஓ தேவனின்அற்புதமான கிருபையே! பூமியில் உயிர் வாழும்தீர்க்கதரிசியைக் கண்டுபிடிக்க இந்த கிருபை எங்கேகிடைத்தது? நீர் மிகவும் அற்புதமான இயேசு கிறிஸ்துவே. பழைய காலத்து பரிசுத்தவான்களைப் போல உயிருள்ளதீர்க்கதரிசியுடன் கைகுலுக்க எங்களுக்கு கிருபை எங்கேகிடைக்கும்?”
14முன்பு, அவர்கள் ஜிம்பாப்வேயில் தங்களுக்குள்சொன்னார்கள்: “ஓ தேவனே, நாங்கள் உண்மையிலேயேஉங்கள் பிள்ளைகள் என்றால், எங்கள் காலத்தின்தீர்க்கதரிசி எங்கே? எலியா எங்கே? எலிசா எங்கே? மோசே எங்கே? நாங்கள் மகதலேனா மரியாள், சூசன்னா,எலிசபெத் போன்ற உங்கள் மகள்கள் என்றால், கர்த்தராகிய இயேசு-கிறிஸ்து எங்கள் காலத்தில் எங்கேஇருக்கிறார்? மத்தேயு 23:34 முதல் 35ன் படி நீர வாக்குறுதிஅளித்த தீர்க்கதரிசிகள் எங்கே? தேவன் இந்த ஜெபத்திற்குபதிலளித்தார், ஏனெனில் இரட்சிப்பு நிகழ்காலத்தில்உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!"என்கிறார்கள்]. தலைமுறை தலைமுறையாக, தேவன்எப்போதும் அதைச் செய்திருக்கிறார்! நீங்கள்விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நமதுதலைமுறையினருக்கு, உங்கள் வேதாகமங்களில் உள்ளஎந்த தீர்க்கதரிசிகளின் புத்தகங்களையும் விட தீர்க்கதரிசிகாக்குவ் பிலிப்பின் புத்தகம் மிகவும் மதிப்பு வாய்ந்தது.
15நீங்கள் என்னை நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை,ஆனால் உங்களைக் இரட்சிக்க தேவன்கடமைப்பட்டிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படவேண்டுமானால், அது உங்கள் காலத்தின் உயிர் வாழும்தீர்க்கதரிசியுடன் இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
16சரி, நான் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியைஅழிக்கும் நோக்கில் ஐந்து மணிநேரத்திற்கும் அதிகமானவீடியோவைப் பார்த்தேன். வில்லியம் பிரான்ஹாம் தனதுபிறந்த தேதி, திருமணச் சான்றிதழ்கள் மற்றும் பலவிஷயங்களை வில்லியம் பிரான்ஹாம் மீது கறைபடுத்தும்ஒரே குறிக்கோளுடன் பலமுறை மாற்றியமைத்ததை அந்தவீடியோ காட்டுகிறது. ஆனால் அது வீண்! வில்லியம்பிரான்ஹாம் மோசே மற்றும் காக்குவ் பிலிப்பு போன்றதேவனின் தவறிப்போக முடியாத தீர்க்கதரிசியாகஇருக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் பிசாசின்மகன்கள், அவர்கள் எப்போதும் தேவன் என்ன செய்கிறார்என்பதைத் தடுக்க அல்லது அழிக்க முயன்றனர்.
17வில்லியம் பிரான்ஹாம் குணப்படுத்துதல் மற்றும் அற்புதபிரச்சாரங்களைத் தொடங்கியபோது, அவர்கள்அனைவரும் எல்லா இடங்களிலும் சிலகுணப்படுத்துதல்கள் மற்றும் அற்புதங்கள் பிரச்சாரங்களைஆரம்பித்தனர், இதனால் மொத்த குழப்பம் ஏற்பட்டது.
18மேலும், தேவனுடைய வார்த்தை 1993 இல்வெளிவந்ததிலிருந்து நான் பொய்யான அனைத்தையும்கண்டிக்க ஆரம்பித்தேன். அவர்கள் அனைவரும்பொய்யான அனைத்தையும் மிகவும் கண்டிக்கத்தொடங்கினர், எனவே இப்போது, அவர்கள் வானொலிநிலையங்கள், தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள்மற்றும் இணையத் தளங்கள் மூலம் பொய்யானதீர்க்கதரிசிகளைக் கண்டிக்கும் ஊழியத்தை தங்களுக்குத்தாங்களே கொடுத்துள்ளனர். நாம் பழையஉடன்படிக்கையில் இருந்திருந்தால், 2 நாளாகமம் 26-ல்உள்ள உசியா ராஜாவைப் போல் அவர்களுக்கும்தொழுநோய் தோன்றும். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி தொகுப்பாளர்அத்தகைய மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகளின்பெயர்களை மேற்கோள் காட்டத் தொடங்கும் போது, அவர்முகத்தில் தொழுநோய் தோன்றும்! ஆனால் இப்போது, அதுதொழுநோய் அல்ல, ஆனால் அவர்கள் காயீன் போன்றபேய்களைப் பெறுகிறார்கள், அது அவர்களுக்குத்தெரியாது! அவர்கள் பிசாசின் வேலையைச் செய்கிறார்கள்,மேலும் அது அவர்களுக்குத் தெரியாது! நீங்கள்பார்க்கிறீர்களா?
20இயேசு கிறிஸ்து தனது சபையை நிறுவினார், ஆனால்பிசாசு ஆயிரக்கணக்கான கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ, பிரான்ஹாமிஸ்ட் சபைகள், இயக்கங்கள் மற்றும்ஊழியங்களை எழுப்பினான்.
21கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியை பூமியில்அனுப்பியபோது, எல்லா பிசாசுகளும் ஆயிரக்கணக்கானபரிசுத்த ஆவிகளாக மாற சபைகளுக்குள் நுழைந்தன. அதுகூடுமானால், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களைவஞ்சிப்பதற்காக மொத்த குழப்பம் ஆகும். எனக்குப் பிறகு,நீங்கள் சில காஃபி அத்தியாயம் 17, எலியா அத்தியாயம் 21, டெபோரா அத்தியாயம் 23, மௌசா அத்தியாயம் 32, சிம்பாஅத்தியாயம் 42 ஆகியவற்றைக் கேட்பீர்கள்… ஆனால்தெரிந்துக்கொள்ளப்பட்ட நீங்கள் அமைதியாக இருங்கள். ஆதியில் வார்த்தையாக இருந்தால், இறுதியில் ஒருதீர்க்கதரிசி செய்தியாளர் மூலம் பரலோகத்திலிருந்து சிலதூய்மையான வார்த்தைகள் வரும், மேலும் இவ்விதம்செய்பவர்களான, மந்திரவாதிகள், வசனங்களைமனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் ஆகியோரின்நினைவுகள் அழிக்கப்படும். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
22ஆதியில் வார்த்தையாக இருந்தால், இறுதியில் அங்கேஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் மூலம் சில வார்த்தைகள்வரும். மற்றும் அந்த டேவிட் ஓவூர், இம்மானுவேல்மகண்டிவா, யூபெர்ட் ஏஞ்சல் மற்றும் அந்த மந்திரவாதிகள்,வசனங்களை மனப்பாடம் செய்து ஓதுபவர்கள் மற்றும்நாடுகளில் உள்ள அவர்களின் அனைத்து விருப்பங்களும்அழிக்கப்படும். அந்த வானொலி நிலையங்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையம்மற்றும் தாவீதின் புதிய வண்டிகள் மற்றும் அவற்றைஉயிர்ப்பிக்கும் ஊசாக்களின் நினைவுகள் அழிக்கப்படும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23அவைகள் அனைத்திற்கும் முற்றிலுமானது ஒருஉயிருள்ள தீர்க்கதரிசி மூலமாக தேவன் அல்ல, ஆனால்ஒரு வரலாற்று புத்தகமான வேதாகமத்தைத் தவிரவேறில்லை. பூமியில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர்இல்லாமல், வேதாகமத்திற்கு எந்த முக்கியத்துவமும்இல்லை. பூமியில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர்இல்லாமல், வேதாகமம் உங்கள் கைகளில் ஒரு தங்கக்கன்றுக்குட்டி மட்டுமே. மேலும் எல்லா இடங்களிலும்தங்கக் கன்றுக்குட்டிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள்உள்ளன.
24ஒரு நாள் பில்லி பால் மற்றும் ஜோசப் பிரன்ஹாம்நள்ளிரவு சத்தத்தை நம்பினால், அவர்களுக்குஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன், பிரன்ஹாம்கூடாரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள தொப்பி, துப்பாக்கிமற்றும் பிற நினைவுச்சின்னங்களை எரிக்கச் சொல்வேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25அதுதான் சரியாக! வேதாகமத்தைச் சுற்றி சபைகள்செய்யும் அனைத்தையும் நான் பார்க்கும்போது, அதுஎன்னை ஆச்சரியப்படுத்துகிறது, ஏனென்றால் வேதாகமம்ஒரு தங்கக் கன்று ஆகிவிட்டது. புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிசத்தவர்கள் வேதாகமத்தைதங்கள் இதயத்தில் அழுத்துவது, ஒரு துறவி அல்லதுபக்தியுள்ள கத்தோலிக்கர் மேரியின் சிலையை அவள்இதயத்தில் அழுத்துவது போன்றது.
26இன்று பிசாசின் கருவி வேதாகமம் என்றுஅழைக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீர்க்கதரிசிகள்மற்றும் பரலோகத்தின் கதவை என்றென்றும்வேதாகமத்துடன் மூடி முத்திரையிட்டு உள்ளனர். இன்று, வேதாகமத்தையோ அல்லது நாசரேத்தின் இயேசு மூலமாகஇரட்சிக்கப்பட வேண்டும் என்று நம்புவது நோவாவின்காலத்தில் இருந்ததைப் போன்றது, ஆபேல் காயீனைஎதிர்கொண்டபோது நீங்கள் ஆபேலின் பலியை மட்டும்ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, மேலும் நீங்கள்வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டீர்கள். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27மேலும் நோவாவின் காலத்தில், நோவாவின் குமாரர்கள்தங்கள் தந்தையிடம் சொன்னார்கள்: " தந்தையே, பரிசுத்தவேதாகமம், ஏனோக்கின் புத்தகம் மற்றும் கடவுளின்பரிசுத்த தீர்க்கதரிசிகள் பற்றி என்ன? அவைகளையும்நாங்கள் பேழைக்குள் கொண்டு வர வேண்டும் என்றுநீங்கள் விரும்புகிறீர்களா?”. அவர்கள் தங்கள் தந்தையிடம்சொன்னார்கள்: நாங்கள் பேழைக்குள் எடுக்க வேண்டியபதிப்புகள் என்ன?" நோவா அவர்களிடம் கூறினார்: "இல்லை, என் பிள்ளைகளே, இது நமக்கு முக்கியமல்ல. தீர்க்கதரிசன பக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவைவெறும் வரலாற்றுப் புத்தகங்கள் மட்டுமே.
28உங்களுடன் பேசும் நான் காக்குவ் பிலிப்பு, நான் ஒருதீர்க்கதரிசி, மேலும் வேதாகமம் மற்றும் தீர்க்கதரிசி, அதுகனி மற்றும் மரம் போன்றது. நீங்கள் கட்டாயம் மரத்தைப்பார்க்க வேண்டும்". நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29நோவாவின் குமாரர்கள் : "ஆமாம் தகப்பனே, ஆனால்ஆபேல் அழிக்கப்பட்டதிலிருந்து தலைமுறைதலைமுறையாக பல தீர்க்கதரிசன புத்தகங்களை நாங்கள்அனுமதிக்கப் போகிறோம், மேலும் இந்த நினைவுகள்அனைத்தும் அழிக்கப்பட வேண்டுமா? நீதிமான் ஆபேலின்புத்தகத்தில் இருந்து, அக்கினி ரதங்களில் நேரடியாகதேவனால் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டஏனோக்கின் பிரசுரங்கள் வரையிலுமா?" இது எதிர்காலசந்ததியினருக்கான இரட்சிப்பை மேம்படுத்தவும்பங்களிக்கவும் முடியாதா"?
30மேலும் நோவா கூறினார்: "இல்லை, என் பிள்ளைகளே, மாறாக, எதிர்கால சந்ததியினர், அவரைத் தேடுவதற்குப்பதிலாக, இந்தத் தலைமுறைக்கு அவர் என்னைஅனுப்பியது போல் அவர்களின் இரட்சிப்புக்காக தேவன்அனுப்புவார், அந்த தலைமுறையினர் நீங்கள் பேசும்வரலாற்றுப் புத்தகங்களில் நம்பிக்கை வைப்பார்கள்,தேவன் மோசே என்ற தீர்க்கதரிசியை எகிப்துக்குஅனுப்பும்போது எகிப்திலிருந்து வெளியேறவும்மாட்டார்கள்!" நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு:சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31வேதாகமம், இந்த அருங்காட்சியக புத்தகம் மனிதஇனத்தை தேவனிடமிருந்து விரைவாக எவ்வாறுவிலக்கிவிடும் என்பதை நோவாவால் பார்க்க முடிந்தது.வேதாகமம் வெள்ளத்தைக் கடந்திருந்தால், பிசாசின்பிள்ளைகள் இன்று சொல்வார்கள்: "அது வேதாகமம் மூலம்இல்லையென்றால், நோவா இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டார்". என்று. நோவா வேதாகமத்தினால்இரட்சிக்கப்பட்டார் என்று கூட சொல்வார்கள்.
32இதனால், எந்தப் புனித புத்தகமும வெள்ளத்தைக்கடந்து செல்லவில்லை. புனித வேதாகமம் வெள்ளத்திற்குப்பிறகு பிசாசின் பிள்ளைகளினநிமித்தமம் எந்ததடயத்தையும் விடவில்லை. வேதாகமம் முக்கியமானதுஎன்றால், ஆபேலில் இருந்து இரட்சிப்பின் இரண்டாயிரம்ஆண்டுகால வரலாற்றில் ஏன் எந்த தடயமும் ஏற்கனவேஅதை எழுதுகின்ற பொழுது இருந்ததில்லை? உங்கள்காலத்தில் தேவன் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் மூலம்என்ன செய்கிறார் என்பதுதான் உங்களை இரட்சிக்கிறதுஎன்று நான் சொன்னேன்.
33இன்று, 2013 இல், வில்லியம் பிரன்ஹாம், ஜான் வெஸ்லி, அப்போஸ்தலன் பவுல், நாசரேத்தின் இயேசு, ஏசாயாஅல்லது எரேமியா ஆகியோரின் வார்த்தைகள் உங்களைஇரட்சிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள்தேவனின் குழந்தை இல்லை என்பதால் மாத்திரமே.
34சாத்தானின் அதே திட்டம்தான், கர்த்தராகிய இயேசுலூக்கா 17:30 மீண்டும் பூமிக்கு வரும் என்று கூறும்போது, சபைகளுக்கு உடைக்கப்பட்ட வஞ்சகத்தின் பெரிய அந்தமுத்திரை கூறுவதாவது: நீங்கள் இயேசுவையும்சிலுவையில் அவருடைய தியாகத்தையும் நம்பினால், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள், மேலும் சில தீர்க்கதரிசிகாக்குவ் பிலிப்புவின் செய்தி உங்களுக்குத்தேவையில்லை. உலகம் தோன்றியதிலிருந்து பிசாசின்பிள்ளைகளின் அதே கொடூரமான செய்தி இதுவாகும்.
35பிசாசின் பிள்ளைகள் சொன்னார்கள்: நீங்கள்ஆபேலையும் அவருடைய பாவநிவிர்த்தியையும் நம்பினால், நீங்கள் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்! மேலும்சில பிசாசின் பிள்ளைகள் நோவாவிடம், “நோவா, நீங்கள்பிரசங்கிப்பதை நாங்கள் அனைவரும் நம்புகிறோம்ஆனால், நீங்கள் பிரசங்கிப்பதெல்லாம் வேதாகமத்திற்குஉட்பட்டது என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?” என்றுகேட்டார்கள். நோவா அவர்களிடம்: "நான் ஒரு தீர்க்கதரிசிஎன்பதால் என் பிரசங்கம் வேதாகமத்தில் இருக்க வேண்டியஅவசியமில்லை என்று கூறினார்.” [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
36மேலும் லூக்கா 17:30-ல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தின்படி, இப்போது பூமியில்நோவாவின் காலம் மீண்டும் வந்துவிட்டது. ஆபேல் முதல்ஏனோக்கு வரை, அது ஏழு காலங்களை உருவாக்குகிறதுமற்றும் நோவா வரும்போது, மனிதர்களுக்கு இனிஒருபோதும் இரட்சிப்பு தேவையில்லை. அவர்களின்வேதாகமத்தின் அறுபத்தாறு புத்தகங்களே அவர்களுக்குப்போதுமானது. இன்றைய உலகத்தின் நிலையும் அதுதான். அவர்கள் ஏற்கனவே ஒரு போப், கார்டினல்கள், கத்தோலிக்க பிஷப்கள், போதகர்கள், பாதிரியார்கள், தீர்க்கதரிசிகள், ஆயர்கள், ரெவரண்டுகள்... நீங்கள்பார்க்கிறீர்களா? அவர்களுக்கு எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு நோவா தேவைப்படவில்லை. அவர்களுக்கு காக்குவ் பிலிப்புதேவையில்லை.
37சாமுவேலின் காலத்தைப் போலவே, அவர்கள்தங்களுக்குத் தாங்களே மனிதர்களை நிலைநிறுத்திஏற்படுத்திக் கொண்டார்கள், அவர்கள் உயிர் வாழும்தீர்க்கதரிசி செய்தியாளரை விரும்பவில்லை.வெள்ளைக்காரர் முதல் கறுப்பர் வரை, குழந்தை முதல்முதியவர் வரை, பணக்காரர் முதல் ஏழை வரை, அவர்கள்மிருகங்கள் தான். ஒருவர் எழுந்து, " தேவன் வேதாகமம்மூலம் என்னிடம் பேசுகிறார்" என்று கூறும்போது, அவர் ஒருமிருகம். நான் சொல்வதெல்லாம் வேதாகமத்தில் இருக்கவேண்டும் என்று யாராவது என்னிடம் சொன்னால், அவர்ஒரு மிருகம். ஒருவர் எழுந்து, "வேதாகமம் அவருடையமுற்றிலுமானது" என்று கூறும்போது, அவர் ஒரு மிருகம். ஒருவர் எழுந்து, "தேவன் வேதாகமம் மூலம் என்னிடம்பேசுகிறார்" என்று கூறும்போது, அவர் ஒரு மிருகம். அவர்கள் எல்லாரும் மிருகங்கள், அதனால்தான் அவர்கள்இவ்வாறு சொல்கிறார்கள்: "நான் ஒரு சுவிசேஷககிறிஸ்தவன், நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன், நான்ஒரு புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவன், நான் ஒரு மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், அனாபாப்டிஸ்ட், லூத்தரன் மற்றும் பல…"நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
38இஸ்ரவேல் தேசத்தில் இருக்கும் யூதர்கள்ஆவிக்குரியவர்களாக இருந்தால், அவர்கள் இஸ்ரவேலுக்குபுனித யாத்திரைக்கு வருபவர்களை விரட்டுவார்கள், மற்றும்அவர்கள் சொல்வார்கள்: "நான் ஒரு அமெரிக்க யூதர்". ஒன்று நீங்கள் யூதர் மற்றும் நீங்கள் இஸ்ரவேல் தேசத்தில்வாழ்கிறீர்கள் அல்லது நீங்கள் தேசங்களின் மனிதராகஇருக்கிறீர்கள் மற்றும் நீங்கள் இஸ்ரவேலுக்கு வெளியேவாழ்கிறீர்கள். நோவாவின் காலத்தில் நீங்கள் தேவனின்பிள்ளையாக இருந்திருந்தால், நீங்கள் நோவாவின்பேழையில் இருந்திருப்பீர்கள். இன்று, நீங்கள் தேவனின்பிள்ளையாக இருந்தால், நீங்கள் இங்கே தீர்க்கதரிசிகாக்குவ் பிலிப்புவின் கூட்டத்தில் இருப்பீர்கள். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39உயிர் வாழும் தீர்க்கதரிசி இல்லாமல், அது ஒரு காடுமட்டுமே. அந்த பிரான்ஹாமிஸ்ட் ஓரினச்சேர்க்கைபோதகரைப் பாருங்கள், அவருடைய மனைவி இங்கேநடுராத்திரி சத்தத்தில் இருக்கிறார். அவர் தனது ஆறு வயதுமகளை மிகுந்த பாலியல் பலாத்க்காரம் செய்ததால், அவளுக்கு காயங்கள் மற்றும் தொற்றுகள் இருந்தன. மேலும் அவர் இன்னும் ஒரு போதகர். அவரை பதவி நீக்கம்செய்ய யாரும் இல்லை. அவர்கள் பிரான்ஹாமிஸ்டுகள்என்று புண்படுத்த இது முடியும், மேலும் அவர்களுக்குமேலே அங்கே யாரும் இல்லை. மேலும் மருத்துவபரிசோதனைகள் மூலம், நீதிமன்றத்தின் முதல்விசாரணையில் இருந்து, நீதிபதி இந்த சிறுமிக்கு அவனதுகாவல் பாதுகாப்பை ஒரேயடியாக நீக்கினார்! மேலும்வில்லியம் பிரன்ஹாம் இறந்துவிட்ட நிலையில், அந்தஅரக்கனிடம் யார் சொல்லக் கூடும்: "நீ இனி ஒரு பாஸ்டர்அல்ல என்று!”? யாரும் இல்லை! நீங்கள் பார்க்கிறீர்களா? அவனுடைய மனைவி அவனிடமிருந்து பிரிந்துவிட்டாள்,நான் அவளுக்கு மறுஞானஸ்நானம் கொடுத்தேன், அவள்ஒருபோதும் அவன் வீட்டிற்குத் திரும்பமாட்டாள், திருமணம்ஒரு தெய்வீக நிறுவனம் என்றும் அதைச் செய்ய எனக்குஉரிமை இல்லை என்றும் சொல்லும் பிசாசுக்காக நான்காத்திருக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
40நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, பூமியில்இருக்கும்போது, இந்த பிரான்ஹாமிஸ்ட் போதகரைப்போல, ஒரு பிரசங்கி, போதகர் அல்லது அப்போஸ்தலன்அதைச் செய்ய முடியுமா? இல்லை ஐயா! உயிருள்ளதீர்க்கதரிசி இல்லாத சபை, அவளுடைய பரிசுத்தம்எதுவாக இருந்தாலும், அது பன்றிகளின் கூட்டம் என்றுநான் உங்களுக்குச் சொல்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
41நீங்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷகர், பிரான்ஹாமிஸ்ட் ஆசாரியர்கள் மற்றும் பாஸ்டர்கள் மேலும்மற்றவர்களே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனின்மேஜையிலும், சீசரின் மேஜையிலும் சாப்பிடவிரும்பியபோது, அதிலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? அரசியலும் வேதாகமமும் ஒன்றல்லஎன்பதையாவது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? தேவன்இப்போது உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது, வேதாகமவசனங்களைச் சொல்லி வருவதல்ல, ஆனால், போர் ஆயுதங்களை நல்ல விலைக்கு அல்லது கடனுக்காக எங்கே, எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைச் சொல்ல வேண்டும். நீங்கள் செய்யக்கூடியது அவ்வளவுதான். மேலும்இரத்தம் தோய்ந்த கையோடு இருக்கும் பாஸ்டர்கள் மற்றும்ஆசாரியர்களே நான் உங்களுக்குச் சொல்கிறேன், வேதாகமமும் துப்பாக்கியும் ஒரு போதும் துணையாகஇருக்க முடியாது.
42மேலும் வார்த்தையின் தண்ணீர் எல்லைகளை மட்டுமேஅறிந்த நான், உங்களிடம் கேட்க ஆர்வமாக உள்ளேன்: நண்டுகளாகிய நீங்கள், என்னுடன் நீரிலும், நீருக்குவெளியே அந்த அரசியல்வாதிகளுடனும் ஒரே நேரத்தில்மூச்சு விடுவது எப்படி? சபையில் தேவனின் மேஜையிலும், அரச அரண்மனைகளில் சீசரின் மேஜையிலும் ஒரேநேரத்தில் எப்படி நிர்வகித்து இருக்க முடிகிறது? சபையைஅரசிற்கு உட்படுத்த நீங்கள் ஏன் முற்றிலும்விரும்புகிறீர்கள்?
43நான் தேவனின் மனிதனாக இருந்தால், இன்றுஇருந்தும், நாளை காணாமல் போகும் ஒரு புறமதஅரசியல்வாதியின் மேஜையில் நான் எதைத் தேடுவேன்? நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் கிறிஸ்துவைச்சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் அவரைப் போலவேஇருப்பீர்கள், மேலும் எந்தக் கண்ணும் அதைப் பார்க்கும், ஏனென்றால் பழம் மரத்திலிருந்து வெகு தொலைவில்விழாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!"என்கிறார்கள்].
441971 ஆம் ஆண்டில், காங்கோ-கின்ஷாசாவில், பேராயர்மாலுலா மற்றும் கத்தோலிக்க சபைகள் மற்றும் பிறசபைகள் மக்களுக்கு எதிராக ஜனாதிபதி மொபுட்டுவின்மோசமான நடத்தைகளை விமர்சித்தபோது, ஜனாதிபதிமொபுட்டு அவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறுகூறினார், இது அவர்களின் பிரச்சினை அல்ல என்றார். மொபுட்டு: “இல்லை, இது அனுமதித்துக் கொள்ளமுடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது! நீங்கள்இரண்டு விஷயங்களையும் கலக்க முடியாது என்றுகூறினார். கிறிஸ்துவானவர் கூட, "தேவனுக்குரியதை தேவனுக்கென்றும், சீசருக்குரியதை சீசருக்கென்றும்" இதில் திட்டவட்டமாக இருந்தார்! ஐவரியன்அரசியலமைப்பை எழுதும் போது, அங்கிருந்த மதவாதிகள்முன்னுரையில் "தேவன்" என்ற வார்த்தை இருக்க வேண்டும்என்று கோரியிருந்தனர், ஆனால் ஐவரி கோஸ்ட் ஒருமதச்சார்பற்ற நாடு என்ற அடிப்படையில் அதுமறுக்கப்பட்டது. ஆனால் ஐவரி கோஸ்ட் ஒரு மதச்சார்பற்றநாடாக இருந்தால், நீங்கள் அங்கு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
45மேலும் பணம் காரணமாக, அந்த பஸ்டர்கள், ஆசாரியர்கள் மற்றும் இமாம்கள் அந்த அறையை விட்டுவெளியேறாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர். அவர்கள்வரலாற்றின் அவமானம் ஆவார்கள். நீங்கள்பார்க்கிறீர்களா? மேலும் ஐவரி கோஸ்ட் ஒரு மதச்சார்பற்றநாடாக இருந்தால், என்ன சபை ஆவணத் தாள் என்னிடம்இருந்து அவளுக்கு தேவைப்படும்? ஆனால் நான்துதிக்கிறேன், ஏனென்றால் அது எழுதப்பட்டுள்ளது:"கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார், எகிப்தியர் கர்த்தரை அந்நாளில் அறிந்து, பலியுடனும் காணிக்கைகளுடனும் சேவிப்பார்கள்; அவர்கள்யெகோவாவுக்குப் பொருத்தனை செய்து, அதைநிறைவேற்றுவார்கள்!" ஆமென்!
46இப்போது முடிப்பதற்கு முன்பாக, நான் ஒன்றைச்சொல்லப் போகிறேன்… ஒரு தலைமுறையில்தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின் பட்டியல் போன்றுதலைமுறையின் நற்செய்தியை தேவன் தருகிறார். மேலும்அதைப் படிக்கும் வேளையின்போது, தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒருவர் இவ்வாறு சத்தமிடுகிறார்: "தேவனுக்கு மகிமை, அல்லேலூயா! இது முழு உண்மை என்று!” தேவன் பரலோகத்தில் கேட்கிறார்: "தேவனுக்குமகிமை, இது என் பெயர்! அல்லேலூயா! நான்இரட்சிக்கப்பட்டேன் என்று! ஒரு தீர்க்கதரிசியின் செய்திஅவரது தலைமுறையில் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின்பெயர்களின் பதிவேடு ஆகும். மேலும் தீர்க்கதரிசியின்மரணம், கடைசியாக தெரிந்துக்கொள்ளப்பட்டவர்அழைப்புக்குப் பதிலளித்த பிறகு வருகிறது. தெரிந்துக்கொள்ளப்பட்ட 144,000 ஆவது நபர்அழைப்பிற்கு பதிலளிக்கும் முன் எலியாவும் மோசேயும்மரிக்க மாட்டார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
47ஒரு தலைமுறையின் செய்தி என்பது அந்ததலைமுறையின் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின்பட்டியல் ஆகும். நாம் சில வார்த்தைகள், வாக்கியங்கள்பார்க்கிறோம் ஆனால் அவை இரகசியங்கள், தேவன்பரலோகத்திலிருந்து பெயர்களைப் பார்க்கிறார். மற்றும்இந்த தலைமுறையில் நித்திய ஜீவனுக்குநியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதைப் படித்து, தங்கள் பெயர்கள் அங்கே இருப்பதால்விசுவாசிக்கிறார்கள்.
48இப்போது, நான் சொல்லக் கூடாத ஒன்றைச் சொல்லப்போகிறேன், இதைச் சொல்வதில் நான் தவறாக இருந்தால், தேவன் என்னை மன்னிக்கட்டும். உண்மையில், நான்காக்குவ் 1 ஐ அகற்ற அல்லது மாற்றியமைக்கவிரும்பினேன் மற்றும் தேவன் கூறினார்: "அதை அப்படியேவிடு". மீண்டும், நான் அதை நகர்த்த விரும்பினேன், ஆனால்தேவன் கூறினார்: "அதை அங்கேயே விடு என்று”. நான்யோசித்துக் கொண்டிருந்தேன் ஒரு நாள் எனக்கு இதன் உத்வேகம் கிடைக்கப்பெற்று சொல்லப்பட்டது: "இது செங்கடல் என்று”. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
49அது எகிப்தியர்களுக்காக அங்கே வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சபைகளின் பெயர்களைப் பார்த்தவுடன், அவர்கள் செய்தியை விட்டுவிடுவார்கள். ஆனால் அவர்கள்தங்கள் சபைகளின் பெயர்களைப் பார்க்கும்போது அதைவிட்டு வெளியேறவில்லை என்றால், அவர்கள் தங்கள்பரிசுத்த ஆவிகள் பிசாசுகள் என்று பார்க்கும்போது அதைவிட்டுவிடுவார்கள். அவர்கள் தங்கள் பரிசுத்த ஆவிகள்பிசாசுகள் என்று பார்க்கும் போது அவர்கள் அதை விட்டுவெளியேறவில்லை என்றால், அவர்கள் தங்கள்வேதாகமங்களை எரிப்பதைப் பார்க்கும்போது அதைவிட்டுவிடுவார்கள். மேலும் அவர் என்னிடம் கூறினார்: "அவர்கள் அத்தகைய குறிப்பிட்டதைக் காணும்போதுஅதை விட்டு வெளியேறவில்லை என்றால், அவர்கள் வேறுகுறிப்பைக் காணும்போது அதை விட்டுவிடுவார்கள்.அவர்கள் அத்தகைய குறிப்பைக் காணும்போது அதைவிட்டு வெளியேறவில்லை என்றால், அவர்கள் அத்தகையவேறு குறிப்பைக் காணும்போது அதை விட்டுவிடுவார்கள்... ". அவைகள் எல்லாம் உலகத்திற்கும் பிசாசின்குமாரர்களுக்குமானது ஆனால் செங்கடலின் மறுபுறத்தில், மற்றொரு விஷயம் இருக்கிறது. தீர்க்கதரிசிசெய்தியாளரின் வாழ்க்கை புத்தி இல்லாதகன்னிகைகளுக்கும் கலப்பு மக்களுக்கும் அதைத்தான்செய்யும்.
50நிச்சயமாக, அவர்கள் புத்தியுள்ள கன்னிகைகளைப்போல நிற்பார்கள், ஆனால் அத்தகைய தீர்க்கதரிசனசெயலில், அவர்கள் போய்விடுவார்கள் அல்லது ஆவிக்குரியரீதியில் முழங்காலில் இருப்பார்கள், ஆனால் அவர்களின்ஆயுள் நீடிக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!"என்கிறார்கள்]. அத்தகைய பிற தீர்க்கதரிசனச் செயலில், அத்தகைய மற்ற புத்தி இல்லாத கன்னிகைகள் அல்லதுகலப்புக் கூட்டம் போய்விடும் அல்லது ஆவியில்முழங்காலிட்டு இருப்பார்கள் ஆனால் விளக்கங்களின்காரணமாக மாம்சீக ரீதியாக நிற்கும். ஓ! இந்தவிஷயங்களை நான் வெளிப்படுத்தக்கூடாது, ஆனால்அதுதான் இருக்கும். ஆமென்!
51எத்தனையோ பிரசங்கங்களுக்கும் விளக்கங்களுக்கும்பிறகும் உலகம் இன்னும் மாறவே இல்லை. ஓ தேவனே,இவ்வளவு தீர்க்கதரிசனங்களுக்குப் பிறகு, உலகம் ஒரே ஒரு படிகூட மாறவில்லை! மேலும் நான் என்முன்னோர்களான தீர்க்கதரிசிகளை விட சிறந்தவனாகஇல்லை என்பதை நான் அறிவேன்! நான்பிரபலமாகவில்லை! ஆனாலும் இயேசு கிறிஸ்துவே, என்னை அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவனே, நீர்எனக்கு அளித்த கிருபையின் மூலம், மன்னர்கள், ஜனாதிபதிகள், மந்திரிகள் மற்றும் பூமியின் அனைத்துபெரிய மனிதர்களின் கண்களைத் திறக்கும்படி நான் ஜெபமசெய்கிறேன்! எல்லா மனிதர்களின் கண்களையும்திறப்பீராக! உமக்குப் பதிலாக சபைகளைக் கொண்டுவந்தவர்கள் மற்றும் அதை அறியாத அனைவரின்கண்களைத் திறந்தருளும்! உமக்குப் பதிலாக ஒருபுத்தகத்தைக் கொண்டு வந்தவர்கள் அல்லது வேதாகமம்என்ற இந்தப் பழைய புத்தகத்தை நம்பியவர்கள் மற்றும்அதை அறியாத அனைவரின் கண்களைத் திறந்தருளும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
52ஜப்பான் கடற்கரையில் சுனாமி ஏற்பட்ட நேரத்தில், நீர்மூழ்கிக் கப்பல்கள் தண்ணீரில் எந்த மீன்களையும்பார்க்க முடியவில்லை, அது விசித்திரமானதாக இருந்தது.அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் ஒருசுவிசேஷக சபை வெளியில் ஓய்வுநேரத்தில் இருந்தபோது;சிறிது தொலைவில், மற்றொரு சுவிசேஷக சபை ஒருஞானஸ்நான ஆராதனையைக் கொண்டிருந்தது. ஆனால்சுனாமி அவற்றையெல்லாம் விழுங்கிவிட்டது! ஓ தேவனே, நான் இன்று காலை துக்கத்துடன் ஜெபம் செய்கிறேன். பத்து வருட பிரசங்கங்களில், நான் என் முன்னோர்களானதீர்க்கதரிசிகளை விட சிறந்தவனாக இல்லை, இங்கேமீண்டும் அந்த சபை உறுப்பினர்கள் தங்கள்வேதாகமத்துடன் இருந்து, அனைத்து ஊழிய பணிகள்மற்றும் இயக்கங்கள் உட்பட அவர்களின் பழையகத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும்பிரான்ஹாமிஸ்ட் ஜெப ஆலயங்களுக்குச் செல்கிறார்கள். இங்கே அவர்கள் இன்னும் தங்கள் இயேசு கிறிஸ்து மற்றும்அவர்களின் பரிசுத்த ஆவிகளை அழைக்கிறார்கள், இதுவேறு ஒன்றும் இல்லை, இது எனது கிராமத்தின் பாரம்பரியமாந்திரீக பூஜாரிகள், வூடூ பூஜாரிகள் மற்றும்ஆப்பிரிக்காவின் நங்காக்கள ஆகியோரைக்கிளர்ந்தெழுப்பியது! [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
53நோவாவின் காலத்தை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிந்தது! ஏராளமான பாதிரியார்கள்,தீர்க்கதரிசிகள், ஆயர்கள் நோவாவின் முன் சில அந்நியபாஷைகள் மற்றும் அறிவை உணர்த்தும் வரங்களுடன்பேசினார்கள், சிலர் ஏற்கனவே சில மரிததவர்களைஎழுப்பியிருந்தனர், மற்றவர்கள் பிறவி முடவர்களையும் பார்வையற்றவர்களையும் குணப்படுத்தியிருந்தனர், அவர்கள் அனைவரும் நோவாவிடம் இப்படியாககூச்சலிட்டனர்: "நோவாவே, வார்த்தைக்குத் திரும்பு! வேதாகமத்திற்குத் திரும்பு! வேதாகமம் மட்டுமே தேவனின்வார்த்தை! தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார்! வேதாகமம் தேவனால் அச்சிடப்பட்டது! நம்முடையமுற்றிலுமானது வேதாகமம் மட்டுமே என்று”. அவர்கள்அனைவரும் வெவ்வேறு சபைகளிலிருந்து வந்தும்,வெவ்வேறு கோட்பாடுகளில் இருந்துக்கொண்டிருக்கிற வேளையிலும் அதை சொன்னார்கள்.
54நோவா அவர்களிடம் கூறினார்: "நான் ஒருஆப்பிரிக்கன், மாந்திரீக பூஜாரிகளும் நங்காவும் தங்கள்மாந்திரீகஙகளை தங்கள் பையில் எடுத்துச் செல்வதைநான் பார்த்தேன். வேதாகமம் எனது முற்றிலுமானதாகஇருந்தால், அதன் இடம் என் பையில் இருக்காது! எனதுமுழுமையை எடுத்துச் செல்வது எனக்கானது அல்ல.
55நோவா அவர்களிடம் கூறினார்: என் முழுமையானவர், அவர் உயிர் வாழ்கின்ற தேவன், அவர் உயிருடன்இருக்கிறார், பூமியில் உயிர் வாழும் தீர்க்கதரிசிகளால்எப்போதும் பேசுகிறார். மேலும் உங்களிடம் பேசும் நான், தேவன் தனிப்பட்ட முறையில் ஏப்ரல் 24, 1993 அன்றுமத்தேயு 25:6 இன் படி நான் செய்ய வேண்டியதை நான்கட்டாயம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார்!இந்தத் தலைமுறைக்கு பரலோகத்திலிருந்து வந்திருக்கும்இரட்சகர் நான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!"என்கிறார்கள்].
56நீங்கள் என்னை நிராகரித்தால், விதிவிலக்கு இல்லாமல்நீங்கள் அனைவரும் வெள்ளத்தில் அழிந்து போவீர்கள். நீங்கள் அனைவரும், பணக்காரர் முதல் ஏழை வரை, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பரிசுத்தமான கிறிஸ்தவர்முதல் ஹாலிவுட்டின் விபச்சாரி வரை நீங்கள் அனைவரும்அந்த வெள்ளத்தில் அழிந்து போவீர்கள். கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள், பிரான்ஹாமிஸர்கள், நீங்கள் அனைவரும் அந்தவெள்ளத்தில் அழிந்து போவீர்கள். நோவா அவர்களைக்கண்டனம் செய்தார், அவர்கள் அனைவரும் தங்கள் குரலைஉயர்த்தி நோவாவிடம்: "நீ நோவா, நீ ஒரு பொய்யன், ஏனென்றால் நீதிமான் ஆபேலின் பரிகாரத்தின்ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் எங்களுடயபாவங்களையும் உன்னுடைய பாவங்களையும் மூடினதேவன் மட்டுமே இரட்சகர் ஆவார் என்று கூக்குரலிட்டனர்”.
57நாற்பது நாட்கள் முடிவடையும் வரை பிசாசின் புத்திரர்நோவாவை ஏளனம் செய்தும் பேசிக் கொண்டேயும்இருந்தார்கள் மற்றும் தேவனின் கட்டளையின்படி பேழைதயாராக இருந்தது. அதற்குப் பிறகு, காலையில், பூமியின்மேற்பரப்பு முழுவதும் பயமுறுத்தும் மின்னலும் இடியும்இருந்தன. பூமி நடுங்கியது; புயல் பூமியை உலுக்கியது. தூசி உயர்த்தப்பட்டது மற்றும் மரங்கள் மிகவும் கடினமாகநடுங்கின, நோவா முன்னோக்கி நகர்ந்து தேவனுடன்பேசினார் மற்றும் தேவன் அவருடைய தீர்க்கதரிசிநோவாவுடன் பேசினார். ஆமென்!
58மேலும கர்த்தராகிய இயேசு. கிறிஸ்துவானவர் கூறினார்: நோவாவின் நாட்களில் நடந்தது போலவே, காலத்தின்முடிவிலும நடக்கும் என்று. நாம் காலத்தின் முடிவில்இருக்கிறோமா? மனிதர்கள் வீடு கட்டுகிறார்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்வதையெல்லாம்மனிதர்கள் திருமணம் செய்துகொண்டு செய்கிறார்களா? அப்படியானால், நோவா எங்கே? அதற்கு நீங்கள்நியாயத்தீர்ப்பு நாளில் பதில் சொல்வீர்கள்.