( உலகெங்கிலும் உள்ள அனைத்து பரிசுத்தவான்களுக்கும் அக்டோபர் 8, 2018 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு எழுதிய கடிதம்.)
1 ஏப்ரல் 24, 1993 அன்று என்னை அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவனின் கையால் எழுதப்பட்ட காக்குவ் 111:11-ன் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து பரிசுத்தவான்களின் சபைகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், இந்த அக்டோபர் 8, 2018 அன்று எழுதிய கடிதம். மேலும் இந்த நேரத்தில் நான் இஸ்லாம், இந்து மதம், பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதம் பற்றிப் பேசுகிறேன்.
2 நான் பிறந்ததிலிருந்து, வில்லியம் பிரான்ஹாமுக்கு ஏழு வயதாக இருந்தபோது தேவன் கொடுத்த கட்டளையின்படியே நானும் ஒருபோதும் மது அருந்தியதில்லை, புகைபிடித்ததில்லை மற்றும் ஒருபோதும் பெண்களால் என்னைத் தீட்டுப்படுத்தியதில்லை. மேலும் நான் சந்தித்த முதல் பெண், பின் வரும் பெண்களைப் போலவே, நான் அவள் அருகில் வருவதற்கு முன்பே அவளுடைய பெற்றோருக்கு பரிசம் கொடுத்தேன். ஆனால் செப்டம்பர் 8, 2018 முதல், எனக்கு மீண்டும் ஒரு மனைவி இருக்கிறாள், அஃபோ ரோசின்.
3 நான் ஒரு தீர்க்கதரிசி, என் வாழ்க்கை என் காலத்தில் வாழும் தலைமுறையினருக்கு அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும். மேலும் நான் எனது அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசலாம் அல்லது கடவுளுக்காக அனைவருக்கும் எதிராகவும் நிற்க முடியும், ஏனென்றால் எனக்கு மனிதர்களின் அங்கீகாரம் தேவையில்லை. என்னுடைய முழு ஊழியத்திலிருந்தும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைத்தான் சாத்தான் பிரசங்கிப்பான், ஆனால் ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில் என்னுடன் இருந்தவர்கள் யாரும் இழக்கப்பட மாட்டார்கள்.
4 இன்று, அக்டோபர் 8, 2018, எங்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்குவ் 111 இன் படி அவள் கறுப்பு கன்னி என்று நான் முழு பூமிக்கும் சொல்கிறேன், இது உண்மை இல்லை என்றால், நான் பொய் சொன்னேன் என்று முழு பூமிக்கும் எனது குற்றத்தை ஒத்துக்கொள்வேன் . ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தில் எனது தலைமுறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் என்னிடம் வருவதை நான் கண்டேன், அவர்களில் யாரும் இழக்கப்பட மாட்டார்கள். மேலும் பெரிய அரங்கத்தின் தரிசனம் வரை எனது ஊழியம் இன்னும் அதிகமாகச் செல்லும்.
5 நான் முதல் முறையாக சகோதரி ரோசினைப் பார்த்தது, அது ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28, 2018. எந்த சகோதரரும் அவளிடம் முன்மொழியவில்லை, திருமணம் செய்ய விரும்புபவர்களின் பட்டியலில் அவள் தன்னுடைய பெயரைப் போடவில்லை. அதற்கு முன், நான் எந்த ஒரு சகோதரியையும் கறுப்பு கன்னி என்று சொன்னது கிடையாது . ஆனால் நான் அவளைப் பார்த்ததும், அவள் நெற்றியில் இருந்த திலகத்தைப் பார்த்ததும், "இவள்தான் கறுப்பு கன்னி" என்றேன்.
6 மேலும் அந்த நாட்களில், நான் நட்சத்திரங்களையும் அவற்றின் விண்மீன்களையும் கவனிக்கும்படி வழிநடத்தப்பட்டேன். எனது கைபேசியில் ராசிகளுக்கான சில செயலிகளை பதிவிறக்கி நிறுவியிருந்தேன். நான் இந்த சகோதரியைப் பார்த்தபோது, நான் இவ்வாறு சொன்னேன்: என் தந்தையின் மகளைப் போன்ற இவள் யார்? செய்தியில் அவளுக்கு ஒரு வயது நான்கு மாதங்கள். அதற்கு முன், அவள் வாழ்நாள் முழுவதும் ஒரு பிரான்ஹமிஸ்டாக இருந்தாள், மேலும் அவளது பாஸ்டர், அவளுடைய மாமா எம்ரா பர்பைட் என்றும், அவர் வில்லியம் பிரான்ஹாமிற்குப் பிறகு வருபவர் என்றும் அலெக்சிஸ் பாரிலியரின் ஆதரவைப் பெற்றவர் என்றும் கூறுகிறார்.
7 மார்ச் 2018-இல் ஒரு நாள் இரவு நான் அவளுடன் தொலைபேசியில் முதன்முதலில் பேசினேன். அவள் வெளியில் இருந்தாள், அவள் என்னிடம் சொன்னாள், பல்கலைக்கழகத்திற்குப் பிறகு, அவளுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையின் காரணமாக அவள் தனது வணிகத்திற்காக நள்ளிரவு வரை வெளியில் இருக்க முடியும் என்று. ஒரு இளம் பெண்ணுக்கு இது பாதுகாப்பானது அல்ல என்று நான் அவளிடம் சொன்னேன். ஏழு நாட்களுக்குப் பிறகு, நான் அவளை வாழ்த்தினேன், அவள் வீட்டில் இருந்தாள். அவள் சொன்னாள், நீங்கள் என்னிடம் பேசிய நாளிலிருந்து, நான் எப்போதும் இருட்டுவதற்கு முன்பே வீட்டிற்கு வந்திடுவேன். நான் சொன்னேன்: இல்லை, சகோதரி, நான் ஒரு கருத்தைச் சொன்னேன். அதற்கு அவள், "தீர்க்கதரிசியே, உமது விருப்பம் என் கட்டளைகள்" என்றாள். நான் அதை விரும்பினேன்.
8 ஏப்ரல் 24, 2018 அன்று நான் அவளை இரண்டாவது முறையாகப் பார்த்தேன். மே மாதத்தில், நான் அவளிடம் பழகத்தொடங்க ஆரம்பித்தேன். ஆனால் ஜூலையில் அவள் என்னை ஏற்றுக்கொண்டாள்: "நீங்கள் என் தீர்க்கதரிசி, நீங்கள் எனக்காக முடிவு செய்யலாம். என் பெற்றோர் உட்பட எல்லாவற்றையும் விட நான் உங்களை எப்போதும் அதிகமாக நேசித்தேன், ஆனால், ஒரு எளிய மனுஷியாக நான், உங்களைப் போன்ற ஒரு பெரிய தீர்க்கதரிசியின் மனைவியாக இருப்பதற்கான குணங்கள் என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க இவ்வளவு நேரம் பிடித்தது." இந்த சகோதரி ஒரு சிறந்த மாணவி, ஞானமுள்ள மற்றும் புத்திசாலி, உதவித்தொகை பெறுபவள் மற்றும் தனது பள்ளித் தேர்வுகளில் ஒரு வருடத்தைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் நல்ல மதிப்பெண்களைப் பெற்றவள். அவள் சொன்னாள்: “கடவுள் எனக்குக் கொடுத்த வாழ்க்கையையும் எல்லாவற்றையும் அவருடைய தீர்க்கதரிசியாகிய உங்கள் மூலமாக அவருக்குத் திருப்பிக் கொடுக்கிறேன். இது என் வாழ்க்கை. இது எனது முடிவு, இந்த உறுதிப்பாட்டை கைவிட யாரும் என்னைக் கட்டாயப்படுத்த முடியாது. பின்விளைவுகளை நான் ஏற்றுக்கொள்வேன்." அவள் நேர்மையானவள், அவளுக்குள் எந்த தந்திரமும் மோசடியும் இல்லை.
9 ஆகஸ்ட் மாதத்தில், அவள் என்னிடம் : "எனக்கு என் பெற்றோர் மீதுள்ள அன்பிலிருந்து வேறுபட்ட உணர்வு உங்கள் மீது இருக்கிறது, அதைத்தான் காதல் என்று சொல்வார்களா எனக்கு தெரியவில்லை" என்று சொன்னாள். அவள் என்னை என்னவென்று அழைக்க வேண்டும் என்று கேட்டாள். நான் முன்மொழிந்தேன்: "செல்லம், அப்பா, ஐயா, தீர்க்கதரிசி, சகோதரர், ..." ஆனால் அவள், "நான் உம்மை 'ஆண்டவரே' என்று அழைப்பேன்" என்றாள் . நான் எல்லாவற்றிலும் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். பூமியில் என் வாழ்க்கையில் ஒரே மனிதனாக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். என்ன நடந்தாலும் கடவுளுக்கு நான் செய்யும் என் அர்ப்பணிப்பு இதுதான் . மேலும் நீங்கள், நான் உங்களைக் கெஞ்சுகிறேன், நீங்கள் என்னை ஒருபோதும் கைவிடக்கூடாது, நீங்கள் என்னை ஒருபோதும் வழியில் விடக்கூடாது, நீங்கள் என்னை காயப்படுத்தாமல் இருங்கள்."
10 ஆகஸ்ட் 10, 2018 வியாழக்கிழமை, அவளுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நாங்கள் பேசி எங்கள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். அன்றைய தினம், அவள் எனக்கு உதவியாளராக இருக்க ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தாள். அவளுக்கு ஸ்பானிஷ் மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாது. இந்த திருமணத்தை நாங்கள் பகிரங்கப்படுத்த முடிவு செய்தோம். இது செப்டம்பர் 8, 2018 அன்று செய்யப்பட்டது, மேலும் அவள் ஸ்பானிஷ் மொழியில் பேசினாள் மற்றும் பாடினாள். மேலும் என் மகிழ்ச்சி பெரியதாக இருந்தது மற்றும் நான் நெகிழ்ச்சி அடைந்தேன். நான் இயேசு கிறிஸ்து அல்ல, ஆனால் ஜனவரி 28 முதல், இது கிறிஸ்துவின் மணவாட்டியின் தரிசனம்.
11 என்னிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியில் குறிப்பிடத்தக்க இரண்டு பெண்கள் உள்ளனர்: தரிசனத்தில் ஒரு கலப்பு இனப் பெண் மற்றும் காக்குவ்.111 இல் ஒரு கறுப்பு கன்னிகை. நான் ஒரு கலப்பு இனப் பெண்ணுடன் வளர்ந்தேன், இப்போது நான் கறுப்பு கன்னிகையுடன் வாழ்கிறேன் மற்றும் அவர்களின் பிறப்பு முதல் அவர்களின் வாழ்க்கை இரண்டு இரட்டை சகோதரிகளின் வாழ்க்கையைப் போன்றது.
12 இரண்டு உயிர்கள் இந்த விதத்தில் ஒரே மாதிரியாக இருப்பதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஏப்ரல்24, 1993-ன் தரிசனத்தில் கலப்பு இனப் பெண்ணின் பெயர் அஃபு ரோஸ்லைன், அதாவது இரண்டு நிற ரோஜா, வெண்மையான இளஞ்சிவப்பு மற்றும் காக்குவ்.111-ன் கன்னிகை ஒரு கலப்பு இனப் பெண்ணின் தலைமுடியுடன் கூடிய சிவப்பு தலை மற்றும் அவளது பெயர் அஃபு ரோசின் , அதாவது சிறிய ரோஜா. கலப்பு இனப் பெண்ணும் கறுப்புக் கன்னிகையும் அகான் பழங்குடியினரின் ஒரே இடத்தில் பிறந்து ஒரே பாவ்லே வட்டார மொழியைப் பேசினார்கள்.
13 தரிசனத்தில் வரும் கலப்பு இனப் பெண்ணுக்கு இரண்டு தேசிய இனங்கள் இல்லையா? கறுப்பு கன்னிகைக்கும் இரண்டு தேசிய இனங்கள் இல்லையா? மூன்று வயதில், கலப்பு இனம் சென்று தனது உண்மையான பெற்றோர் அல்லாத ஒரு தந்தை மற்றும் தாயுடன் வாழவில்லையா? மூன்று வயதில், கறுப்பு கன்னிகையும் சென்று தனது உண்மையான பெற்றோர் அல்லாத ஒரு தந்தை மற்றும் தாயுடன் வாழவில்லையா? கலப்பு இனப் பெண் ஒரு சிறந்த பாடகி இல்லையா? கறுப்பு கன்னிகையும் நன்றாகப் பாடவில்லையா?
14 அவர்கள் இருவருக்கும் அவர்களின் உயிரியல் தந்தையர் தெரியாது, ஆனால் கறுப்பு கன்னிகையின் தந்தை தனது தாயைப் பெற்றிருந்தார், மேலும் நான் என் தந்தைக்கும் என் தாய்க்கும் இருப்பதுபோல் கறுப்பு கன்னிகையும் அவர்களின் நான்காவது குழந்தை, . தரிசனத்தில் கலப்பு இனப்பெண் பிரான்ஹாமிசத்தின் சரியான வகை, கறுப்பு கன்னிகை நடுராத்திரியில் பிரான்ஹாமிசத்திலிருந்து வெளியே வரும் மணவாட்டியின் சரியான வகை. மேலும் அது அவளுடைய மாமா எம்'ப்ரா பர்ஃபைட், அவர் குழந்தை பருவத்திலிருந்தே அவளுடைய போதகராக இருந்தார்.
15 மேலும் நீங்கள், எம்ப்ரா பர்ஃபைட் , கடவுள் உங்கள் வீட்டிலும் உங்கள் சபையிலும் நுழைந்து உங்கள் மகளை எனக்கு மணமுடித்துத் தந்தார், ஒரு தீர்க்கதரிசியாகிய நான், உங்களுக்கு முன்பாகவும், கடவுளைப் பற்றி எந்தக் கவனமும் இல்லாத உங்கள் புறஜாதி பெற்றோருக்கு முன்பாகவும் என்னைத் தாழ்த்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் மத்தேயு 21: 2-3 ஐ நிறைவேற்ற வேண்டும், அதற்கு "ஆமென்" என்று கூறுவதற்குப் பதிலாக, "இந்த திருமணம் கடவுளின் நியாயத்தீர்ப்பில் முடிவடையும் என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். கடவுள் செயல்பட கடமைப்பட்டிருக்கிறார்".
16 மேலும் என் நிமித்தம், செப்டம்பர் 20 அன்று, அவள் தாக்கப்பட்டாள், அவளது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது, உணவு பறிக்கப்பட்டது மற்றும் காக்குவ் பிலிப்புவின் ஆவியிலிருந்து அவளை விடுவிக்க சாத்தானிய ஜெபங்களுக்குப் பிறகு அவளுடைய பெற்றோரின் அறையில் சிறையில் அடைக்கப்பட்டாள். மேலும் அந்த காவல் படையால் அவளை அவர்களின் கைகளில் இருந்து விடுவிக்க முடியவில்லை. உண்மையான திருச்சபையைப் போலவே, அவள் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டாள், ஆனால் அவள் வெற்றி பெற்றாள். மேலும் அவளது விரலில் நான் போட்டிருந்த மோதிரத்தை கழற்ற அவளின் பெற்றோர் வீண் முயற்சி செய்தனர். எவால்ட் ஃபிராங்க், ஜோசப் பிரான்ஹாம் மற்றும் பூமியின் மற்ற மதத் தலைவர்களைப் போலவே அவளுடைய பெற்றோருக்கும் அதே நடத்தை உள்ளது.
17 மேலும் அவளுடைய பெற்றோர்கள் சொன்ன அனைத்தையும், என் மீதான அவர்களின் தீய எண்ணம் உட்பட அவள் விரிவாக என்னிடம் தெரிவித்தாள். அவள் என்னிடம், "மாஸ்டர், நீங்கள் என் பெற்றோரிடமிருந்து விலகி இருங்கள், அவர்கள் என்னை ஆயிரம் முறை சபித்தார்கள், அவர்கள் என் துரதிர்ஷ்டத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் இருபது அல்லது முப்பது வருடங்கள் ஆனாலும் கூட இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் அனைவரும் உங்களுக்கு தீமையை விரும்புகிறார்கள். என் தந்தை உங்களிடம் கனிவாகவும் அன்பாகவும் இருந்தாலும், தயவுசெய்து அவரைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்." நான் அவளிடம் சொன்னேன்: அன்பே, என் வாழ்க்கையில் கடவுளின் அன்பிற்கு நீ ஒரு சான்று.
18 அவளுடைய பெற்றோரைப் பொறுத்தவரையில் , அவர்கள் பிரன்ஹாமிசத்தின் துன்மார்க்கம் ஆவார்கள் . அவளை உங்கள் அடிமையாக்குவதற்காக நீங்கள் அவளை ஒரு கழுதையைப் போல வளர்த்தீர்கள். நீங்கள் அவளை ஜமால் மற்றும் வெள்ளையர்கள் மற்றும் பணக்கார சர்ப்பங்களின் கைகளில் தள்ளினீர்கள், அவளுடைய சகோதரிகள் விபச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள் ஆனால் கடவுள் அவளுடைய கன்னித்தன்மையை 23 வயது வரை பசி, துன்பம் மற்றும் துயரத்தில் வைத்திருந்தார். உங்களுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் நான் அவளை உங்கள் பிரன்ஹாமிஸ்ட் நகங்களிலிருந்து எடுத்தேன், மீட்டளிப்பின் தேவனுடைய பெயரால், அவள் அவளுடைய உண்மையான பெற்றோரின் அன்பைக் காணும்படி செய்வேன். அவள் யாருடைய துயரத்திற்கும் பொறுப்பல்ல, அடிமைத்தனத்தின் காலம் கடந்துவிட்டது.
19 நீங்கள் பிரான்ஹாமிஸ்டுகளே , பணமே உங்கள் தேவன். நீங்கள் விலங்குகளைப் போல உங்கள் வயிற்றுக்காக வாழ்கிறீர்கள், இரட்சிப்பு உங்களுக்கு ஒன்றுமில்லை. இது என்ன அன்பு இது உங்கள் மகளை துன்புறுத்தி அவமானப்படுத்தி அவளை கிராமத் தலைமைக்கு இழுத்து வந்து, மேலும் கிராமத் தலைவரின் ஆலோசகர் தான் அவளை உங்கள் கைகளில் இருந்து விடுவித்தார்? இது நடுராத்திரியில் கிறிஸ்துவின் மணவாட்டியின் தரிசனம் என்பதாலும், பொல்லாத மதத் தலைவர்களைப் போன்ற இதயமற்ற பொல்லாத வளர்ப்புப் பெற்றோரின் பிடியிலிருந்து மணவாட்டியை விடுவிப்பதே எனது பணி என்பதாலும், நீங்கள் அதை அறியாமல் வார்த்தையை நிறைவேற்றியுள்ளீர்கள்.
20 அவள் பலவீனமாகவும் கண்ணீருடன் என்னிடம் வந்தாள், நான் அவளை ஆறுதல்படுத்தி, அவளுடைய கண்ணீரைத் துடைத்தேன், அவள் நடந்த அனைத்தையும் என்னிடம் சொன்னாள், நான் அவளிடம் சொன்னேன்: கடவுளுக்கும் எனக்கும் உண்மையுள்ள உன் உறுதிபாட்டைக் கடைப்பிடித்ததால் அழாதே! பள்ளத்தாக்கின் லில்லி போலவும், காக்குவ்.131:63 இன் படி, நீ வெற்றி பெற்றாய், அது என்றென்றும் உள்ளது.மேலும் நான் அவளிடம் சொன்னேன்: நீ, என் சிறிய ரோஜா, உன் நல்லொழுக்கம் என்பவை கடவுளிடமிருந்து வெளிப்படும் நற்பண்புகள். நீ தூபங்களின் பிசின் மற்றும் நார்டுகளின் வாசனை திரவியங்களின் நறுமனமும் ஆவாய் .
21 நான் ஒரு தீர்க்கதரிசி, ஆனால் நான் ஒரு யூதன் அல்ல; நீ சாரோன் மற்றும் கார்மேல் சமவெளிகளில் முட்கள் இல்லாத ரோஜாவைப் போன்றவள் , ஆனாலும் நீ இஸ்ரவேலில் வளரவில்லை. மேலும் என் இருதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது, நான் சர்வவல்லமையுள்ள கடவுளை துதித்தேன், கடவுளுக்கு ஒரு பாடலைப் பாடினேன்: ஓ கடவுளே, நான் காக்குவ் பிலிப்பு , நான் ஒரு தீர்க்கதரிசி, ஆனால் நான் ஒரு மனிதனைப் போல இறப்பேன். நான் ஒரு மனிதன், ஆதாம் ஏவாளின் சாபம் என்னைப் பற்றிக்கொள்ளும், மேலும் என்னைப் படைத்தவருக்கும் எனக்கும் இடையில் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி எனக்கு எப்போதும் தேவை.
22 நான் ஒரு தீர்க்கதரிசி, ஆனால் பாபேலின் சாபம் என்மீது தங்கியிருக்கும், மேலும் மனிதர்களைப் போல மற்ற மொழிகளில் நான் பேசுவேன். காமின் சாபம் என் மீது தங்கியிருக்கும், என் மரணம் வரை, இந்த கறுப்புத் தோல் ஒரு தொழுநோயைப் போல என்னுடன் இணைந்திருக்கும். வெள்ளைக்காரன் குப்பை கொட்டும் இடத்திலிருந்து, என் காரைத் தேர்ந்தெடுத்தேன். மேலும் ஒரு வெள்ளைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதைப் பற்றி, நான் என் இதயத்தில் சொன்னேன்: நான் ஒரு கறுப்பின மனிதன் என்பதால் அதற்கு நான் தகுதியானவன் அல்ல.மேலும் இப்போது தீர்க்கதரிசியின் மனைவியாகத் தன் கண்ணியத்தை அங்கீகரிக்கும் நற்பண்புகள் நிறைந்த அழகிய மனைவியை எனக்குத் தந்தீர்.
23 ஓ தேவனே , பூமியின் மண்ணிலிருந்து, நீங்கள் ஆதாமுக்கு ஒரு மனைவியை உருவாக்கினீர், அவள் அவனைப் போன்றவள் அல்ல, பிறகு நீங்கள் ஒரு பெண்ணை வார்த்தையால் உருவாக்கினீர்கள், அவளும் அவனைப் போன்றவள் அல்ல, பிறகு அவனுக்கு வேறொரு மனைவியை எழும்பப்பண்ணினீர், பிறகு ஏவாள் தோன்றும் வரையில் வேறொருவள் அவனைப் போல் இல்லை, ஆதாம் ஏவாளைப் பார்த்தவுடன், அவர் ஆதியாகமம் 2:23 இல்: "இந்தமுறை, இவள் என் சதையின் சதையும் மற்றும் என் எலும்புகளின் எலும்பும்"என்று கூறினார். எனவே, ஆதாம் முதல் மனிதன் ஆனால் ஏவாள் முதல் பெண் அல்ல.
24 24 பவுலின் காலத்திலிருந்தே, மணவாட்டிகள் கிறிஸ்துவுக்குள் எழுப்பப்பட்டனர், மணவாட்டி தோன்றும் வரை அவர்களில் யாரும் அவருக்கு ஏற்றவர்களாக இருக்கவில்லை. ஓ கடவுளே, நான் பெருமூச்சு விட்டேன், இதோ, என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனவாட்டியை நீர் எனக்குத் தந்திருக்கிறீர். இவை என் வாழ்க்கையின் சிறந்த தருணங்கள். நீ, என் சிறிய ரோஜா, என் சூலமித்தி , நான் உன்னை நேசிக்கிறேன், என்னை நேசிக்கும் அனைவரும் உன்னையும் நேசிக்கிறார்கள்.
25 எஸ்தரைப் போலவே நீயும் உன் தந்தை மற்றும் தாயின் வீட்டில் பிறந்தாய், ஆனால் மூன்று வயதில், 1993 ஆம் ஆண்டின் முதல் தரிசனத்தை நான் பார்த்த இடத்தில், உங்கள் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தாமல் செப்டம்பர் 8 ஆம் தேதி நீங்கள் அரியணைக்கு வரும் வரை மற்றொரு ஆணுடனும் மற்றொரு பெண்ணுடனும் கிழக்கில் வசிக்கச் சென்றாய் . அந்த செப்டம்பர் 8 அன்று, சிறிய நைஜீரியப் பெண் குனிந்து, "மாஸ்டர், நீங்கள் பேசலாம், உங்கள் பணிப்பெண் உங்கள் பேச்சைக் கேட்கிறார்" என்று சொன்னாள், அது யாருக்கும் புரியவில்லை.
26 இன்று காலை, இந்தக் கடிதத்தை அவள் முன் வைத்தேன், அதனால் அவள் மாற்றங்களுக்கான பரிந்துரைகளைச் செய்யலாம். அவள் அதைப் படித்துவிட்டு, "மாஸ்டர், இந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் நான் "ஆமென்" என்று சொல்கிறேன் என்றாள். ஒரு எழுத்து கூட மாற்ற முடியாது." மற்றும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். மேலும் நான் சொன்னேன்: ஓ தேவனே, என் ஆத்துமா உம்மில் மகிழ்ச்சியடைகிறது, ஏனென்றால் நீங்கள் என் சிருஷ்டிகர், உமது கரம் தேசங்களின் மனிதனாகிய என்மீது உள்ளது. என்னை எப்போதும் உமது சித்தத்தை செய்யும்படி உருவாக்குங்கள் , மேலும் நான் எப்போதும் மனிதர்கள் மத்தியில் ஒரு கறுப்பின ஆப்பிரிக்கனாக என் நிலையை வைத்திருக்கிறேன்.
27 ஆம், நான் கறுப்பானவன், கறுப்பினன் ஒருபோதும் வெள்ளைக்காரனை அடையமாட்டான். இந்த கறுப்பு தோல் ஒருபோதும் வெண்மையாக மாறாது. இந்த கறுப்பு மனப்பான்மை ஒருபோதும் மாறாது. எனது பலமும் எனது நம்பிக்கையும் எப்போதும் ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தை நோக்கியே இருந்தது. நான் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்டதைக் காணாதபோது, நான் பயத்தால் நிரப்பப்படுகிறேன்.
28 ஓ தேவனே , இந்த மாபெரும் தரிசனத்தை நான் உண்மையில் ஏப்ரல் 24, 1993 அன்று பார்த்தேன், மேலும் அதை நான் ஓர் உத்வேகத்துடன் பிரசங்கித்தேன்! ஆனால் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் தோன்றினர். எங்காவது உண்மையான தீர்க்கதரிசி இருக்கிறாரா அல்லது நாம் பின்பற்ற வேண்டிய மற்றொரு தீர்க்கதரிசி இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியானால், என்னை சிமியோனைப் போல பார்க்கச் செய்யும். இந்நாளில் உமது தீர்க்கதரிசியை எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஒருவேளை நான் இழக்கப்படலாம், எனக்குத் தெரியாது. என்னை இழிவாகப் பார்ப்பவர்கள் எல்லாம் சரியென்றால், நான் பூமியில் உயிருடன் இருக்கும்போதே அதைக் காணச் செய்யுங்கள். நான் என் மக்களுடன் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்.
29 ஓ தேவனே, இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆசை என்னைத் துன்புறுத்துகிறது, என்னை ஆட்கொள்கிறது! நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன். நான் அறியாத தீர்க்கதரிசி என் காலத்தில் உண்டா? நான் மண்ணில் கிடந்தேன். உமது இரகசியங்களை நான் புரிந்து கொள்வதற்காக எல்லாவிதமான பாவத்தின் மீதும் எனக்கு வெற்றியைத் தந்தருளும். உமது மகிமையை நான் சிந்தித்துப் பார்க்க என் கண்களைத் திறந்தருளும்.
30 ஓ மோசே நாற்பது வருடங்களில் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்தார்! அவர் எந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரசன்னமும் இல்லாமல் பல வருடங்கள் கழித்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆனால், பவுலின் கண்கள் தமஸ்குவுக்கு போகும் வழியில் இருந்த தரிசனத்தை நோக்கித் திரும்பியது போல, அவருடைய கண்கள் எப்போதும் எரியும் முட்புதரின் அனுபவத்தை நோக்கியே இருந்தன. இதோ, இன்று நீங்கள் காக்குவ் 111:11-ன் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிறைவேற்றத்தின் மூலம் என் வலிமையைப் புதுப்பித்தீர். ஓ தேவனே , காற்றும் மணல் புயல்களும் இருந்தாலும், பாலைவனத்தின் ஒவ்வொரு பாதையும் எனக்குத் தெரியும்! ஓ தேவனே , என் ஆத்துமா உம்மில் மகிழ்ச்சி அடைகிறது, ஏனென்றால் ஒரு நாள் நான் உங்கள் முகத்தைப் பார்ப்பேன்!
31 தாவீதுக்கு ஐந்நூறு அழகான மனைவிகள் இருந்தார்கள், ஆனால் அவர்கள் தந்திரசாலிகளாகவும், விபச்சாரம் நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள், தாவீதின் மேன்மையையோ அல்லது ராணிகளாக தங்கள் மேன்மையையோ பொருட்படுத்தவில்லை. ஆனால் தனது வாழ்க்கையின் முடிவில், தாவீது பத்சேபாளுக்கு ஒரு சங்கீதத்தைப் பாடினார், அது அவனுடைய இதயத்தை மகிழ்வித்தது. அதேபோல், சாலமோனுக்கு ஆயிரம் அழகான மனைவிகள் இருந்தனர், ஆனால் அவர்கள் புறமதத்தவர்களும் சில மேடா பிரான்ஹாம்களுமாக இருந்தார்கள் . மேலும் 1 இராஜாக்கள் 11:4, சிலர் அவரை வேறு தெய்வங்களிடம் அழைத்துச் சென்றதாகக் கூறுகிறது, ஆனால் அவரது வாழ்க்கையின் முடிவில், இந்த அழகான சூலமித்தியப் பெண் தோன்றி அவரது இதயத்தை ஆறுதல்படுத்தி மகிழ்வித்தாள்.
32 நான், காக்குவ் பிலிப்பு , என் பலம் புதுப்பிக்கப்பட்டது, நான் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவேன். நான் பூமிக்கு வந்தேன், நான் ஒருபோதும் பிசாசுக்கு அடிபணியவில்லை, என் மரணம் வரை, எதுவும் என்னை பிசாசுக்கு அடிபணியச் செய்யாது. இஸ்லாம், இந்து, பௌத்தம், கிறிஸ்தவம் அல்லது யூத மதங்களின் தலைவர்களை நான் ஒருபோதும் நண்பராகக் கொண்டதில்லை. நான் ஒரு அரசியல்வாதியின் மேஜையில் சாப்பிட்டதில்லை, ஒரு அரசியல்வாதியும் கூட எனக்கு ஒருபோதும் நண்பனாக இருந்ததில்லை. எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள், நான் இறந்து போகவேண்டும் என்று விரும்புகிறார்கள். அறியாத மொழியை வெளிப்படுத்த நான் பூமிக்கு அனுப்பப்பட்டேன். இதுதான் நான் பூமிக்கு வந்ததன் நோக்கம். மனிதர்களுக்கு முன்பாகவும், உமக்கு முன்பாகவும் எனக்கு இரண்டு அடையாளங்கள் இல்லை. பணம் மற்றும் மதங்களின் ஆட்சியை எதிர்கொண்டதால், எனக்கு இரண்டு அடையாளங்கள் இல்லை.
33 ஓ தேவனே , உமது பயம் எப்போதும் என்னுள் குடிகொண்டிருக்கிறது, நான் என் சொந்த ஞானத்திலும் என் பகுத்தறிவு உணர்விலும் ஒருபோதும் நம்பிக்கை வைத்ததில்லை! இஸ்லாம், இந்து, புத்த மதம், கிறிஸ்தவம் அல்லது யூத மதத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மிகுந்த ஞானத்தையும் பகுத்தறிவையும் கொண்டுள்ளனர். கிறிஸ்தவ நம்பிக்கையை அதன் தோற்றத்திலிருந்து ஆராய்ந்தேன். மேலும் நான்கு நிலைகள் இருந்தன. கத்தோலிக்கம், புராட்டஸ்டன்டிசம், சுவிசேஷ இயக்கங்கள் மற்றும் பிரான்ஹாமிசம். மேலும் கத்தோலிக்க மதம் மற்ற மூன்றை விட அதிக ஒழுக்கத்தையும் ஆன்மீகத்தையும் கொண்டிருந்தது, அவைகள் பால்மர்-புழு, வெட்டுக்கிளி, புற்றுப்புழு மற்றும் கம்பளிப்பூச்சி போன்ற கத்தோலிக்கத்தின் உருமாற்றங்கள் மட்டுமே .
34 மேலும் கத்தோலிக்க விசுவாசத்தைக் கருத்தில் கொண்டால், உதாரணமாக, ஐரோப்பாவில், ஒவ்வொரு அப்போஸ்தலர்களின் உடலின் பாகங்கள் இருப்பதைக் கண்டேன். உதாரணமாக, அப்போஸ்தலன் பேதுருவின் மண்டை ஓடு ரோமில் உள்ளது, பிரான்சில் போய்ட்டியர்ஸில் ஒரு மண்டை ஓடு உள்ளது. ஸ்பெயினில், பவுலின் தோள்பட்டை எலும்பு ஒரு குதிரையின் எலும்பாக உள்ளது , ஆனால் நீங்கள் அதை விசுவாசத்தால் நம்ப வேண்டும். என்னை விட ஞானிகளும் புத்திசாலிகளுமான ஜனாதிபதிகள் மற்றும் ஊழியர்கள் கத்தோலிக்கர்களாக இருக்கிறார்கள்.
35 இயேசு சிலுவையில் அறையப்பட்ட சிலுவையின் குறைந்தது பதினான்கு சிலுவைகள் பிரான்சின் ரோம், பெத்லகேமில் உள்ள நேட்டிவிட்டி தேவாலயம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. தண்ணீரில் கலந்த இயேசுவின் இரத்தம் இப்போது ரோமில் உள்ள புனித ஜான் லேட்டரன் தேவாலயத்தில் காணப்படுகிறது. இயேசு தனது சீடர்களின் கால்களைத் துடைத்த துண்டு ரோமில் காணப்படுகிறது, அதே துண்டு ஜெர்மனியில் யூதாஸின் காலின் ஒரு கறையுடன் காணப்படுகிறது. இது கத்தோலிக்க நம்பிக்கை, என்னை விட ஞானிகளும் புத்திசாலிகளுமான ஜனாதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர்கள் மற்றும் தூதர்கள் கத்தோலிக்கர்களாக இருக்கிறார்கள்.
36 மதங்கள், வேதாகமம் , குர்ஆன், தோரா மற்றும் இறந்த தீர்க்கதரிசிகள் மூலம் முழு பூமியும் சாத்தானை நம்புகிறது, ஆனால் அவர்கள் உயிருள்ள தீர்க்கதரிசிகள் மூலமாக கடவுளை விரும்பவில்லை. அவர்களின் தீர்க்கதரிசியான எனக்கு யாரும் செவிசாய்க்க விரும்பவில்லை, ஆனாலும் முழு பூமியும் ஒரு தீர்க்கதரிசிக்காகக் காத்திருக்கிறது. ஒரு தீர்க்கதரிசிக்காகக் காத்திருக்காத எந்த ஒரு மதமும் இல்லை.
37 யூத மதம் இஸ்ரவேலை வந்து விடுவிக்கப்போகும் ஒரு தீர்க்கதரிசியாகிய மேசியாவுக்காகக் காத்திருக்கிறது. புத்தர் போன்ற ஒரு தீர்க்கதரிசிக்காக புத்த மதம் காத்திருக்கிறது, அவர் பூமியில் தோன்றி மனிதகுலத்தை முழுமையான ஞானத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு சிறந்த மைத்திரேயர். பூமியில் விஷ்ணுவின் பத்தாவது மற்றும் கடைசி அவதாரமாகத் தோன்றும் ஒரு சிறந்த தீர்க்கதரிசிக்காக இந்து மதம் காத்திருக்கிறது. உலகை விடுவித்து, மனிதகுலத்தை இஸ்லாத்தின் தூய போதனைக்கு மீண்டும் கொண்டு வரும் மஹ்தி என்ற ஒரு சிறந்த தீர்க்கதரிசிக்காக இஸ்லாம் காத்திருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒரு தீர்க்கதரிசிக்காகக் காத்திருக்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் என்னை நிராகரிக்கிறீர்கள்.
38 எனக்கு ஒரு விஷயத்தில் உறுதியான நம்பிக்கை உள்ளது: இரட்சிப்பு என்பது ஒரு மதம், புனித நூல் அல்லது இறந்த தீர்க்கதரிசி மூலம் அல்ல, ஆனால் அது பூமியில் நடக்கும் ஓர் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளர் மூலம் மட்டுமே. அது நானா? அது வேறொரு மனிதனா? எனக்குத் தெரியாது, ஆனால் பூமியில் ஓர் உயிர் வாழும் மனிதன் இருக்க வேண்டும், அவர் மூலமாகவே நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் இஸ்லாம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவம் மற்றும் யூத மத உறுப்பினர்களை விட சிறந்தவன் அல்ல, அது ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தால் இல்லாவிட்டால், நான் ஒரு கிறிஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ அல்லது பௌத்தனாகவோ இருப்பேன், அதே நேரத்தில் இரட்சிப்பு உங்கள் காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளர் மூலம் மட்டுமே.
39 நரகத்தில் பிரசங்கிக்க ஒரு பணிக்காக நான் அனுப்பப்பட்டேன், அங்கு இஸ்லாம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தைக் கண்டேன். மேலும் நான் பாசாங்குத்தனத்தின் கடவுளைக் கண்டேன், அவர் ஒரு அரபி. ஆம், யூதர்கள் அரேபியர்களை விட நேர்மையானவர்கள். அரேபியர்கள் கறுப்பின மக்களை முஸ்லிம்களாகப் பார்ப்பதில்லை, ஆனாலும் அவர்கள் இந்த கறுப்பின மக்களை மெக்காவிற்கு வர அனுமதித்தனர். யூதர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.
40 ஒரு அரேபியர் என்னிடம், "உன் நாய் உன் மதத்திற்கு மாறினால் அது மோசமானதா? அது உனக்கு சிறப்பாக சேவை செய்யும்!" என்று கூறினார். நான் இந்த அரேபியரிடம், அவனுடைய நாய் அவனுடைய இமாமாகவோ அல்லது அவனுடைய ஆயத்துல்லாவாகவோ இருக்க முடியுமா என்று கேட்டேன். அவன், "ஈரானில் இங்கே பிரசங்கம் செய்" என்றான். நான் அவனிடம் சொன்னேன்: நீங்களும் கிறிஸ்தவர்களும், இந்துக்களும், புத்த மதத்தினரும், யூதர்களும் மதத்திலும் புனித நூல்களிலும் நம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் நீங்கள் கடவுளை நம்பவில்லை, ஏனென்றால் கடவுள் உயிர் வாழும் தீர்க்கதரிசிகள் மூலம் மட்டுமே பேசுகிறார். நான், காக்குவ் பிலிப்பு , உங்களிடம் பேசுகிறேன், நான் உங்களிடம் அனுப்பப்பட்டிருப்பது மதவாதியான உங்களுக்காக அல்ல , என் செய்தி பரிசுத்த ஆகாரம் , அது மதத்திற்கான உணவு அல்ல. இந்த பரிசுத்த ஆகாரத்தை ஈரானுக்குக் கொடுக்காத அளவுக்கு நான் புத்திசாலி ஆவேன் , ஏனென்றால் அது ஆகாரத்தையும் என் விரல்களையும் கடிக்கும் ஒரு மிருகம் ஆகும் .