



Kacou 153 (Kc.153) : வில்லியம் சீமோர், லவோதிக்கேயாவின் முதல் செய்தியாளன்
அக்டோபர் 9, 2022 அன்று, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு கொடுத்த வெளிப்பாடு
1 அக்டோபர் 9, 2022 அன்று, நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, வில்லியம் பிரன்ஹாமின் செய்தியின் விசுவாசிகளுக்கும் பரிசுத்தவான்களுக்கும் கடவுளின் சார்பாக வழங்கிய வெளிப்பாடு.
2 நல்லது. நான் இரண்டாவது வகை உபவாசத்தை நிறுவ விரும்புகிறேன்: அநேக நாட்கள் உபவாசம் இருக்கும்போது, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை உபவாசத்தை கைவிடலாம். ஆனால் முதல் நாளில், இரவு 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு உபவாசத்தை முடிப்பவர் போல, அதற்கு முந்தைய நாள் மாலை 3 மணிக்கு முன் தொடங்குவீர்கள். உபவாச காலங்களில், இணையப் பயன்பாட்டைக் குறைக்கவும்.
3 "நான் என்னுடைய அனைத்து பாவங்களை அறிக்கை செய்துவிட்டேன், ஆனால் நான் துன்பப்படுகிறேன், என் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை" என்று நீங்கள் சொல்கிறீர்கள். சரி, ஆனால் நீங்கள் உங்கள் எல்லா பாவங்களையும் அறிக்கையிட்டு அவற்றுக்காக உபவாசம் இருந்தாலும் கூட, உங்கள் சுய மனசாட்சியுடன் செய்த ஒவ்வொரு பாவத்திற்க்கும் நீங்களும் உங்கள் வீட்டாரும் அதற்க்கான கிரயத்தை செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் கிரயத்தை செலுத்தாமல் மரித்தால், உங்களுடைய வீட்டார் அதை செலுத்துவார்கள். ஒவ்வொரு பாவத்திற்கும் கிரயம் செலுத்தப்படுகிறது. மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தினால் அனைத்து மனித இனமும் துன்பப்படுகையில், ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மனைவியும் பாவத்தைத் தவிர்க்க வேண்டும், ஆகையால் அவர்களுடைய பிள்ளைகளும் அவர்களின் சந்ததியினரும் பூமியில் துன்பப்பட மாட்டார்கள்.
4 மேலும், நான் மாய்மாலத்தை பற்றி நிறைய பேசினேன் ஆனால் தூதனானவர் மீண்டும் மாய்மாலத்திற்கு எதிராக திரும்பியுள்ளார். ஒருவன் தவறு செய்கிறான் என்று தெரிந்ததும், "நான் பேசினால், நான் பிரச்சனைக்குள்ளாவேன்,..." என்று மனதிற்குள் மௌனமாக இருந்தால், தேவன் உங்களுக்கு பரலோகத்தின் கதவை மூடிவிடுவார். நீங்கள் அவருடைய பாவத்திற்கு எதிராகப் பேசியதால் ஒருவர் உங்களை வெறுத்தால் அல்லது உங்களைத் தள்ளிவிட்டால் அல்லது உங்களை தவறாக நடத்தினால், மகிழ்ச்சியாக இருங்கள்!
5 யாரேனும் தவறு செய்வதைக் கண்டால் உடனே அவரிடம் பேசுங்கள். ஒவ்வொரு பாவிக்கும் எதிராக பயப்படாமல் பேசுங்கள், அவர் அப்போஸ்தலராக இருந்தாலும் சரி, போதகராக இருந்தாலும் சரி, உங்களுக்கு என்ன விலை கொடுத்தாலும் சரி. பரிசுத்தத்தை விரும்புகிறவர்கள் உங்களை நேசிப்பார்கள்.
6 மேலும், அநேக காரியங்களை தேவனிடம் விட்டுவிடுங்கள். கடந்த மாதம், ஒரு சகோதரி தனது வயலில் வாழைப்பழங்களைத் திருடிய ஒரு அந்நியரை சபித்தார். நீங்கள் அதை அவதூறாக உணர்ந்தீர்கள். இன்னும் ஒரு சகோதரர் தனக்கு தவறு செய்த ஒருவரை காவல்துறைக்கு அழைத்துச் செல்லலாம், அது உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றும். ஆனால் இரண்டு செயல்களும் ஒரே மாதிரியானவை. காவல்துறையானது சபிக்கும் செயல்களுக்கு மாற்றப்பட்டது. உங்கள் வயல்களில் உண்ணும் விலங்குகளை நீங்கள் சபிக்கவில்லை என்றால், மனிதர்களுக்கு வரும்போது அவர்களை சபித்து காவல்துறைக்கு அனுப்ப வேண்டாம். இப்படியாக "தேவனே எனக்கு போதுமான பலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுங்கள், அதனால் நான் எப்போதும் எனக்காகவும் திருடர்களுக்காகவும் விவசாயம் செய்ய முடியும்" என்று கூறுங்கள்.
7 என் கிராமத்தில் ஒரு வயதான பெண்மணிக்கு என் வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய வயல் இருந்தது. அவள் எப்போதும் திருடர்களை சபிப்பாள். ஒரு நாள் காலையில், "என்னுடைய கத்தரிக்காய் திருடனைக் கண்டுபிடிக்க அவன் காரில் அடிப்பட வேண்டுகிறேன்" என்று அவள் சொல்வதைக் கேட்டேன். தன் திருடனை போலீசில் ஒப்படைப்பவனும் இந்த மூதாட்டியும் ஒன்று தான். காவல்துறை இந்த கார்கள் போன்றது. காவல்துறையினரால் கைது செய்யப்படுவது தான் விபத்து. மேலும் சிறை என்பது மருத்துவமனை அல்லது மரணம். ஒரு பாரம்பரிய வைத்தியரின் வீட்டில் குளிப்பது மற்றும் என்னை நிராகரிக்கும் அந்த சபைகளின் ஞானஸ்நானம் போன்று அவை இரண்டும் ஒத்த விஷயங்களாகும் . யாரையாவது காவல்துறைக்கு அழைத்துச் சென்றால் அது அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் என்று நீங்கள் நினைத்தால், அதைச் செய்ய வேண்டாம்.
8 நல்லது. ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 31, 2022 அன்று, 12 லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள எனது சீடர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசினேன். ஆகஸ்ட் 7, 2022 அன்று எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அந்த தரிசனத்தில், ஒருவர் பின் ஒருவராக, பலிபீடத்தில் மனிதர்கள் தோன்றி, ஒவ்வொருவராக ஒரு புத்தகம் அல்லது சுருளில் இருந்து வாசித்தனர். அதுவும், அவர் என் தாய்மொழியில் வாசிப்பதைக் கேட்டேன். அவர் சகரியா 14:7-ஐ வாசித்துக் கொண்டிருந்தார். பலிபீடத்திலிருந்து பிரெஞ்சு மொழியில் ஒரு சத்தம் வந்து, "படிப்பதை நிறுத்துங்கள்! காக்குவ் பிலிப்பு, மீதமுள்ள வசனங்களை 9 வரை படியுங்கள் என்றது. சகரியா 14:9." மேலும் தரிசனமானது மறைந்தது.
9 வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, சகரியா 14:8-ல் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன்: “அந்நாளிலே ஜீவத்தண்ணீர் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குக் கடலுக்கும், பாதி மேற்கு கடலுக்கும் போய். கோடையிலும் குளிர்காலத்திலும் அது இருக்கும்" வசனம் 9: "அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்." மேலும் என்னுடைய ஊழியம் சகரியா 14:8 முதல் 9 ஐ நிறைவேற்றுவதாகவும் அறிந்திருக்கிறேன்.
10 நான் ஏன் இதைச் சொல்கிறேன் அல்லது அதைச் சொல்கிறேன் என்ற தரிசனங்களை சொல்வதை தூதனானவர் விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது தீர்க்கதரிசன விசுவாசத்திற்கு பொருந்தாது. நான் சொல்வது என்னிடமிருந்து வரவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த நான் உதவ விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசு, "பிதா முதலில் செய்வதைப் பார்க்காமல் நான் எதையும் செய்வதில்லை" என்று கூறினார், ஆனால் அவர் ஏன் இதைச் சொன்னார் அல்லது அதைச் செய்தார் என்ற தரிசனங்களைக் கூறவில்லை.
11 நல்லது. ஜெர்மனியில் ஈவால்டு ஃபிராங்கிற்கு, காக்குவ் 152 ஐ கொடுக்க நான் அப்போஸ்தலன் பாஸ்கல் விச்சி மற்றும் போதகர் அன்டோனியோ சவாங்குவேனை அனுப்பினேன். ஆகஸ்ட் 2, 2022 அன்று செவ்வாய்கிழமை ஈவால்டு ஃபிராங்க்கு அவற்றைப் பெற்றார். என்னுடைய கையிலிருந்து எழுதப்பட்ட கடிதத்துடன் இரண்டு அப்போஸ்தலர்களை அவருக்கு அனுப்புவதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
12 மேலும் எனது செய்தியைப் பற்றி பேசுகையில், ஈவால்டு ஃபிராங்க்கிற்கு இது பற்றி ஏற்கனவே தெரியும். ஆனால் அவர் அப்போஸ்தலர் பாஸ்கல் விச்சியிடம் எனது செய்தியை விளக்குமாறு கேட்டார். அப்போஸ்தலன் பாஸ்கல் விச்சி ஈவால்டு ஃபிராங்க்கிற்கு எனது செய்தியை விளக்கினார். இறுதியில், அவர் சிறு புத்தகத்தை பெற்றுக்கொண்டு, இரண்டு அப்போஸ்தலர்கள் மூலமாக நான் அனுப்பிய கையால் எழுதப்பட்ட கடிதத்தைப் பெறத் தயாராக இருப்பதாகக் கூறினார். எனக்கான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அவர்களுடன் சென்றார்.
13 ஆனால் காக்குவ் 152 இன் சிறு புத்தகத்தைப் படித்த பிறகு, அவர் கோபமடைந்து, மேலும் ஒரு மின்னஞ்சல் மூலம், ஈவால்டு ஃபிராங்க்கு எனது செய்தியாளர்களையும் எனது கடிதத்தையும் பெற மறுத்துவிட்டார், ஏனெனில் காக்குவ் 152 இல் அவர், ஈவால்டு ஃபிராங்க்கு தான் மத்தேயு 24:48 என்றும் கூறப்பட்டுள்ளது. சகோதரர் சோத்மன் மற்றும் சகோதரர் வூட்ஸ் முன்னிலையில் வில்லியம் பிரன்ஹாம் மத்தேயு 24:45-ன் ஊழியத்தை உறுதிப்படுத்தியதைப் பற்றி அவர் மின்னஞ்சல் மூலம் என்னிடம் கூறினார்.
14 ஆனாலும், அவர், ஈவால்டு ஃபிராங்க்கு, மத்தேயு 24:45 அல்ல என்று நான் சொல்லவில்லை, ஆனால் மத்தேயு 24:45-ன் ஊழியத்திற்கு கூடுதலாக, அவர் மத்தேயு 24:48 முதல் 51 வரை உள்ளவர் என்றும் கூறினேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வசனம் 45 இல் உண்மையுள்ள ஊழியக்காரனைப் பற்றி பேசிய பிறகு, அவர் வசனம் 48 இல் மற்றொரு நபரைப் பற்றி பேசவில்லை. "ஒரு ஊழியக்காரன்" என்று அவர் கூறவில்லை, ஆனால் அந்த உழியக்காரன் என்று அவர் கூறுகிறார், அதே ஊழியக்காரன். மத்தேயு 24:48-ன் அடிமையைப் பற்றி பேசினால், "அது" என்ற பிரதிபெயர் பயன்படுத்தப்பட்டால், அது மத்தேயு 24:45 இன் அதே ஊழியக்காரனைச் சுட்டிக்காட்டுகிறதல்லவா?
15 அன்புள்ள ஈவால்டு ஃபிராங்க்கு, பொல்லாத ஊழியக்காரராக நீர் இல்லையென்றால், அப்பொல்லோ பவுலுடன் இருந்ததைப் போல நீர் ஏன் என் சீடனாக இருக்கவில்லை? வில்லியம் பிரன்ஹாமிற்குப் பிறகு, எஜமானர் இயேசு கிறிஸ்து யார் மூலம் திரும்பி வந்தார் , அப்பொல்லோ என்று நீங்கள் அடையாளம் கண்டுகொண்டவர் யார்? வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் இருளைக் கொண்டு வந்து, நடுராத்திரி சத்தம் வருமாறு பிரன்ஹாமிஸ்டுகளை தூங்கச் செய்த அந்த பொல்லாத மனிதன் யார்? உண்மையுள்ள ஊழியக்காரன் பொல்லாதவனாக மாறிய பிறகு பத்து கன்னிகைகளைப் பற்றிய உவமை வருகிறது அல்லவா?
16 மேலும் அவர் எனக்கு எழுதினார்: "இது முற்றிலும் தவறானது, இந்தக் அறிக்கை ஒரு தேவதூஷனமாகும், ஏனென்றால் மத்தேயு 24-வது அதிகாரத்தையும் 45 முதல் 47 வரையிலான வசனங்களையும் கர்த்தர் தாமே மிகத் துல்லியமாகவும் மிகத் தெளிவாகவும் பேசினார். 48 முதல் 51 வரையிலான வசனங்கள் பொருந்தக்கூடிய நபராக ஒருவேளை நீங்களாக இருக்கலாம்" என்றார். ஆனால் அவர் ஏற்கனவே கோபமாக இருப்பதைக் கண்டதால், இந்த மின்னஞ்சலுக்குப் பதிலளிக்காமல் இருக்க விரும்பினேன்.
17 அன்புள்ள ஈவால்டு ஃபிராங்க்கு, எனது கடிதத்தைப் பெற மறுப்பது உங்கள் வயதின் விளைவா அல்லது உங்களைச் சுற்றியுள்ள மோசமான ஊழியக்காரர்களின் விளைவா? எனக்கு தெரியாது. ஆனால், உங்கள் அறுபது வருட ஊழியத்திலும், உங்கள் பலவீனத்திலும், முதுமையிலும், 2 இராஜாக்கள் 5-ல் உள்ள நாகமானிடம் உங்களுக்குச் சொல்லக்கூடிய வேலைக்காரர்கள் உங்களைச் சுற்றி இல்லாமல் எப்படி இருக்க முடியும்: "எஜமானரே, அவர் தனது ஊழியர்களை உங்களிடம் அனுப்பட்டும்! அவரது கையால் எழுதப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் எதுவும் சொல்ல வேண்டாம். எஜமானரே, ஏற்றுக்கொள்ளும்!
18 அன்புள்ள ஈவால்டு ஃபிராங்க்கு, வில்லியம் பிரன்ஹாம் இன்று எழுந்து, உண்மையுள்ள ஊழியக்காரனோடு, நீங்கள் பொல்லாத அடிமையையும் நிறைவேற்றுகிறீர்கள் என்று சொன்னால், நீங்கள் அவருடைய காலில் விழமாட்டீர்களா? அவர்தான் மத்தேயு 24:48 என்று சொல்லுவீர்களா? மத்தேயு 24:45 தவிர, நீங்கள் மத்தேயு 24:48 ஐயும் நிறைவேற்றுகிறீர்கள் என்று ஒரு தேவதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து உங்களிடம் சொன்னால், அவர்தான் மத்தேயு 24:48 என்று அவரிடம் சொல்வீர்களா?
19 ஈவால்டு ஃபிராங்க்கு, என் தந்தையே, தேவன் உங்களிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினால், நீங்கள் கேட்க விரும்பும் இனிமையான விஷயங்களை அவர் உங்களுக்குக் கட்டாயமாகச் சொல்ல வேண்டுமா? மல்கியா 4:6 ஐப் படியுங்கள், ஒரே எலியாவின் இரண்டு ஊழியங்கள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஏசாயா 61:2-ஐ வாசியுங்கள், ஒரே கர்த்தராகிய இயேசுவின் இரண்டு ஊழியங்கள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். மத்தேயு 24:45 முதல் 51 வரை படிக்கவும், நீங்கள் இருக்கும் அதே அடிமையின் இரண்டு ஊழியங்கள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இது பத்து கன்னிகைகளின் உவமை மற்றும் மத்தேயு 25:6-ன் செய்திக்கு சற்று முன் வருகிறது.
20 மேலும் அவர் என்னிடம், "என்னைப் போல் செயல்படாத அனைத்து பாஸ்டர்களும் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு செல்ல மாட்டார்கள், ஏனென்றால் மணவாட்டி தூய வார்த்தையின் மணவாட்டியாக இருக்கிறாள்." இன்னும் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் உள்ள அனைத்து பாஸ்டர்களும் ஈவால்டு ஃபிராங்க்கின் சீடர்கள் மற்றும் அவருக்கு எதிராக போராடுபவர்கள் அனைவர் உட்பட ஈவால்டு பிராங்கைப் போலவே செயல்படுகிறார்கள்.
21 எடுத்துக்காட்டாக, கிரெஃபெல்டில் உள்ள "ஃப்ரீ பீப்பிள்ஸ் மிஷன்" வில்லியம் பிரன்ஹாமின் சிறு புத்தகங்களை வெளியிடுகிறது மற்றும் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் கிரகணம் ஏற்பட ஈவால்டு ஃபிராங்க்கின் சுற்றறிக்கை கடிதங்களை வெளியிடுகிறது. அமெரிக்காவில் உள்ள "தி வாய்ஸ் ஆஃப் காட்" வில்லியம் பிரன்ஹாமின் சிறு புத்தகங்களை வெளியிடுகிறது மற்றும் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் கிரகணம் ஏற்பட ஜோசப் பிரன்ஹாமின் கடிதங்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியிடுகிறது.
22 சூரியன் தீர்க்கதரிசி. சந்திரன் ஆசாரியத்துவம். மேலும் பூமி என்பது மக்கள். சந்திரன் அதன் இடத்தில் இருக்க வேண்டும் மற்றும் சூரியனின் ஒளியை மட்டுமே பூமிக்கு பிரதிபலிக்க வேண்டும். ஆனால் பூமியை ஒளிரச் செய்வதற்காக சூரியனின் இடத்தை சந்திரன் எடுக்கும்போது, அது பூமியின் கிரகணமாகும். வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை முழு கிரகணத்தில் மூழ்கடித்தவர் ஈவால்டு ஃபிராங்க்கு. அதனால்தான் தேவன் மத்தேயு 25:6-ன் ஒளியை அனுப்பினார்.
23 நல்லது. ஆகஸ்ட் 18, 2022 அன்று, மிஷனரிகளை லைபீரியாவுக்கு அனுப்பினேன். அடிமை வர்த்தகத்தின் 400வது ஆண்டு விழாவில், கறுப்பின அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அனைத்து கறுப்பர்களிடமும் நான் பேசிய பிறகு, தேவன் லைபீரியாவையும் நினைவுகூர வேண்டியிருந்தது. மேலும், ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 15, 2022 வரை, நான் அப்போஸ்தலர்களான மார்ட்டின் மற்றும் யானிக் ஆகியோரை ஐரோப்பாவிற்கு அனுப்பினேன். ஐரோப்பாவில், எல்லா இடங்களிலும், சுரங்கப்பாதைகளில், தெருக்களில், எல்லா இடங்களிலும் பாவம் எப்படி இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
24 அவர்கள் பெல்ஜியம், போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், ஜெர்மனி, இத்தாலி மற்றும் எல்லா இடங்களுக்கும் சென்றனர், அது அப்படியே இருந்தது. மற்ற எல்லா இடங்களையும் போலவே, ஐரோப்பாவின் கடவுள் பணம், நான் காக்குவ் 145 இல் காட்டியது போல. பணத்துடன் தொடர்பில்லாத எதுவும் ஐரோப்பியர்களுக்கு ஆர்வமில்லை. மேலும் முஸ்லீம்களைப் போல் மதத்தை மேலுறையாக பயன்படுத்துகிறார்கள்.
25 ஒரு இஸ்லாமியன் ஒரு நேர்மையற்ற நபராக, மதத்தை மேலுறையாக பயன்படுத்துகிறார். ஒரு இஸ்லாமியன் சிகரெட் புகைக்கிறான், டிவியில் கால்பந்து விளையாட்டை பார்க்கிறான், அஞ்ஞான இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறான், பின்னர் இயேசுவின் தெய்வீகத்தைப் பற்றி விவாதிக்க முயற்சிக்கிறான் அதனால்தான் முஸ்லிம்களுடன் நீங்கள் விவாதிப்பதை நான் தடை செய்துள்ளேன். யார் செய்தாலும் பாவ அறிக்கை செய்ய வேண்டும்.
26 நல்லது. நாம் பூமிக்கு வருவதற்குக் காரணம் இரட்சிப்பு. அஞ்ஞானிகளைப் போல உங்கள் பிள்ளைகளுக்குச் செல்வத்தைக் குவிப்பதற்கோ அல்லது வீடுகளைக் கட்டுவதற்கோ நீங்கள் போராடினால், உங்களை அறியாமலேயே நீங்கள் பாவ மலைகளைக் கட்டிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இறந்த பிறகு, உங்கள் வீடுகளில் அஞ்ஞான இசை கேட்கப்படும் மற்றும் விபச்சாரிகள் அங்கு அணிவகுத்துச் செல்வார்கள். உங்களிடம் உள்ள அனைத்தையும் தேவனுக்கு பயன்படுத்துங்கள்.
27 உங்களிடம் குறைவாக இருந்தால், புலம்ப வேண்டாம். அஞ்ஞானிகள் செய்வது போல் யாருடனும் போட்டி போடாதீர்கள். நீங்கள் கொண்டிருப்பதை வைத்து திருப்தியாக இருங்கள். நீங்கள் விரும்பினால் அதே ஆடைகள் மற்றும் காலணிகளை ஆராதனைக்கு அணியலாம். மனித மகத்துவம் உங்களை செய்தியில் நன்றாக ஜீவிப்பதை தடுக்காமல் இருந்தால், உங்களைத் தாழ்த்திக் கொள்வதிலிருந்து எதுவும் உங்களைத் தடுக்காது.
28 மேலும் சகோதரிகளே, ஸ்திரீயை படைத்தபோது தேவன் உங்களுக்கு வழங்கிய பணியின்படி உங்கள் கணவர்களுக்கு உதவுங்கள். சகோதரி ரோசினுக்கும் எனக்கும் ஒருபோதும் வாக்குவாதம் ஏற்பட்டதில்லை. மேலும் இது அனைத்து இல்லங்களுக்கும் ஒரு பாடமாக உள்ளது. மற்றவர்களின் வீட்டைப் பார்த்து பொறாமைப்படுகிற அல்லது தன் கணவனின் கெட்ட செயல்களைக் கண்டிக்க முடியாத ஒரு சகோதரி, பரலோகத்திற்கு நம்முடன் வரும் ஒரு அஞ்ஞானியாக இருக்கிறாள். அவள் பரதீசியில் நுழைய மாட்டாள்.
29 ஒரு சகோதரர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: "சகோதரர் பிலிப்பு, ஒரு தீர்க்கதரிசியானவர் எப்பொழுதும் தனக்கு முன் இருந்த தீர்க்கதரிசி விட்டுச் சென்ற வெளிச்சபந்தத்தை எடுத்துச் செல்கிறார் என்று நான் முழுமையாக விசுவாசிக்கிறேன். இது கருத்து திருடர்கள் மற்றும் பாவனை செய்பவர்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடு. நான் இந்த உண்மையை வேதாகாமத்திலும் சபைகளின் வரலாற்றிலும் மெதடிஸ்ட் அல்லாத வில்லியம் பிரன்ஹாமை தவிர இதை பார்க்கிறேன். இது ஒரு விதிவிலக்கா?"
30 இப்போது இந்த வெளிப்பாட்டைக் கேளுங்கள். ஜான் வெஸ்லியின் காலத்திற்க்குப் பிறகு, அங்கு ஒரு இரகசியம் இருந்தது. அந்த இரகசியம் பெந்தகோஸ்தலிசமாக இருக்கிறது, அது பெந்தேகோஸ்தே காலம். பெந்தேகோஸ்தலிசம் லவோதேக்கியா காலத்தைச் சேர்ந்தது மற்றும் இது லவோதேக்கியா காலத்தின் துவக்கமாக வில்லியம் ஜோசப் சீமோர் என்ற பெயர் கொண்ட கருப்பு தீர்க்கதரிசியுடன் இருக்கிறது. அவர் 1870 ஆம் ஆண்டு மே 2 இல் பிறந்தார். அவர் தாடியுடன் ஒரு கண் குருடராக இருந்தார்.
31 வில்லியம் சீமோருக்கு சிறு வயதிலிருந்தே தரிசனங்கள் இருந்தன, மேலும் வில்லியம் சீமோர், அவர் தாமே. வேல்ஸ் நாட்டிலிருந்து மெதடிஸ்ட் எழுப்புதலுடன் ஜான் வெஸ்லியிடம் இருந்து வெளிச்சபந்தத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றவர். அவர் பாப்டிஸ்ட் சபையில் தொடங்கினார், பின்னர் மெதடிஸ்ட் சபையில், பின்னர் இந்தியானாவில் "தி ஈவினிங் லைட் செயிண்ட்ஸ்" உடன் இருந்தார். வில்லியம் சீமோர் அழைப்பு மற்றும் பணி ஆனையை பெற்றிருந்தார். ஒரு செய்தியை கொண்டு வரும் படிக்கு அவர் தன்னுடைய தரிசனங்களின் படி செயல்பட்டார் அவை 1906 ஆம் ஆண்டில் அசூசா தெருவில் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலுக்கும், லவோதேக்கியாவின் முதல் ஆவிக்குரிய யாத்திரைக்கும் வழி நடத்தியது.
32 தேவன் இதை ஒரு கருப்பு மனிதன் மூலம் செய்தார் ஏனெனில் அமெரிக்க மண்ணிலுள்ள கருப்பின அடிமைகளும் சந்திக்கப்பட வேண்டும். மேலும் அந்த நேரத்தில், இனப் பிரிவினை காரணமாக ஒரு வெள்ளை மனிதனால் அது சாத்தியமில்லை. மேலும் வில்லியம் சீமோர் என்ற பெயர் கொண்ட இந்த கருப்பு மனிதனை தேவன் எழுப்பினார்.
33 இந்த வில்லியம் சீமோர் 1906 இல் லைபீரியாவிற்கு எவ்வாறு மிஷனரிகளை முதன்முதலில் அனுப்பினார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இவ்வாறு, கருப்பு அமெரிக்கா மற்றும் பல அடிமை மாநிலங்கள் மற்றும் லைபீரியா அறுவடை செய்யப்பட்டன. மேலும் வில்லியம் சீமோருக்குப் பிறகுதான் வெளிச்சபந்தம் வில்லியம் பிரன்ஹாமுடன் வெள்ளையர்களிடம் சென்றது. வில்லியம் பிரன்ஹாமுடன் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது.
34 வில்லியம் சீமோர் பெரிய அப்போஸ்தலர்களைக் கொண்டிருந்தார், அவர்கள் பெரும்பாலும் அவரை விட வயதானவர்களாக இருந்தனர். இந்த அப்போஸ்தலர்கள் ஏற்கனவே ஃபிராங்க்கு பார்ட்ல்மேன், தாமஸ் பால் பாரட் மற்றும் ஜான் லேக் போன்ற தங்கள் ஊழியங்களையும் சபைகளையும் கொண்டிருந்தனர். ஏறக்குறைய எல்லாருமே வெள்ளை பேராயர்கள். அங்கே இரண்டு பெரிய கருப்பு பேராயர்கள் இருந்தனர்: சார்லஸ் பிரைஸ் ஜோன்ஸ் மற்றும் சார்லஸ் ஹாரிசன் மேசன். சார்லஸ் பிரைஸ் அசூசா தெருவுக்கு வந்தபோது, "எருசலேமுக்கு நாங்கள் வந்தோம்", என்று பாடினார். ஆனால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான கறுப்பின ஆயர்கள் வில்லியம் சீமோரை இகழ்ந்தனர்.
35 1909 க்கு முன், ஏற்கனவே அசூசா தெருவில் கறுப்பர்களை விட அதிகமாக வெள்ளையர்கள் எண்ணிக்கையில் இருந்தனர். வில்லியம் சீமோரின் விசுவாசமான மற்றும் விவேகமான ஊழியக்காரராக ஃப்ரெட் பிரான்சிஸ் போஸ்வொர்த் என்று அழைக்கப்படும் எஃப். எஃப். போஸ்வொர்த் இருந்தார், ஒரு வெள்ளை மனிதர். வில்லியம் சீமோரின் செயலாளராக இருந்தவர் கிளாரா லும், ஒரு வெள்ளைப் பெண்மணி. ஆனால் வில்லியம் பிரன்ஹாமைச் சுற்றி, கருப்பின பாஸ்டர்கள் ஒரு போதும் இல்லை, ஏனென்றால் வெள்ளை அமெரிக்காவின் காணாமல் போன ஆடுகளுக்கு தேவன் அவரை அனுப்பினார். மேலும் அவர், "வெள்ளைப் பெண் கறுப்பின மனிதனை மணக்க முடியாது" என்றார். மேலும் வில்லியம் பிரன்ஹாம் எந்த மிஷனரிகளையும் கருப்பின ஆப்பிரிக்காவுக்கு அனுப்பவில்லை. இவை அனைத்தும் சரியாக இருந்தது ஏனெனில் கருப்பர்களுக்கு வில்லியம் பிரன்ஹாம் அனுப்பப்படவில்லை .
36 எனவே வில்லியம் பிரன்ஹாமிற்கு முன்பே, கறுப்பின அமெரிக்கர்கள், வில்லியம் சீமோர் மூலம், அமெரிக்காவில் தங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்ததை, ஆப்பிரிக்காவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளனர். வில்லியம் சீமோருக்கு நன்றி, நற்செய்தி ஆப்பிரிக்கா மற்றும் சீனா மற்றும் உலகம் முழுவதும் சென்றடைந்தது.
37 வில்லியம் சீமோரால் லைபீரியாவிற்கு அனுப்பப்பட்ட ஆறு ஊழியக்கார்களில் மூவர் அங்கேயே இறந்தனர், மேலும் மூவர்களில் லூசி ஃபாரோ மற்றும் ஜூலியா ஹட்சின்ஸ் என்ற பெண் பாஸ்டர், ஒரு முறை வில்லியம் சீமோரை தன்னுடைய சபையிலிருந்து வெளியேற்றியவர், பணியை முடித்து அமெரிக்கா திரும்பினார்கள். ஜூலியா ஹட்சின்ஸ் மற்றும் லூசி ஃபாரோ போன்ற பல பெண்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் பாஸ்டர்கள். மேலும் பெரும்பான்மையான இந்த வெள்ளை பெண்மணிகள் வில்லியம் சீமோரிடம் வந்தனர், அவர்களில் சிலரை உலகம் முழுவதும் ஊழியங்களுக்கு அனுப்பினார்.
38 அநேக வெள்ளை ஆயர்கள் வில்லியம் சீமோரின் அப்போஸ்தலர்களாக ஆனார்கள். வில்லியம் சீமோர் அவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டவர்களை உலகம் முழுவதும் அசூசா செய்தியைப் பிரசங்கிக்க அனுப்பினார். அவர்களில், ஏ.ஜி.கார் என்று அழைக்கப்படும் ஆயர் ஆல்ஃபிரட் குட்ரிச் கார், சீனா மற்றும் இந்தியாவிற்கு மிஷனரிகளின் குழுவை வழிநடத்தினார். நார்வேயின் மெதடிஸ்ட் ஆயர் தாமஸ் பால் பாராட் ஐரோப்பாவில் வில்லியம் சீமோரின் மிகப்பெரிய அப்போஸ்தலன் ஆனார். பேராயர் காஸ்டன் பி. கேஷ்வெல், ஒரு காலத்தில் இனவெறி கொண்ட வெள்ளையர், தென் அமெரிக்காவிற்கான வில்லியம் சீமோரின் அப்போஸ்தலராக இருந்தார். மற்றும் ஃபிராங்க்கு பார்டில்மேன், எஃப்.எஃப். போஸ்வொர்த் மற்றும் பல வெள்ளையர்கள் அவருடைய அப்போஸ்தலர்களாக இருந்தனர்.
39 ஆனால் இந்த வெள்ளையர்கள் ஏன் யோர்தானில் உள்ள யோவான் ஸ்நானகனிடமோ அல்லது அசூசாவில் உள்ள வில்லியம் சீமோரிடமோ போனார்கள்? அவர்களுடைய காலத்தின் வட நட்சத்திரங்கள் அவர்கள் தான் என்பதால் தேவன் இதைச் செய்தார். அப்போஸ்தலர்களில், வில்லியம் டர்ஹாம் என்ற பெயர் கொண்ட ஒருவர் தேவர்களின் கூட்டு சபைகளின் தந்தை ஆவார். 1911 இல் வில்லியம் சீமோர் பயணம் செய்தபோது அவரிடம் அசூசாவில் உள்ள சபையை ஒப்படைத்தார், அப்போது அவர் வில்லியம் சீமோருக்கு எதிராக தவறான பாத்திரத்தை வகித்தார். வில்லியம் டர்ஹாம் 1912 இல் இறந்தார்.
40 வில்லியம் சீமோர் உடனான புகைப்படத்தில் கறுப்பின ஆயரை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. "வில்லியம் சீமோரை உங்களுக்குத் தெரியுமா?" என்று ஒரு கறுப்பின ஆயரிடம் கேட்கப்பட்டபோது, அந்தக் கறுப்பின ஆயர், "வில்லியம் சீமோரா? அந்த ஒற்றைக் கண்ணனா?" என்று பதிலளிப்பார். இன்றும் கூட, புகைப்படங்களில், வில்லியம் சீமோரின் குருட்டுக் கண்ணை மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும்படி திருத்துகிறார்கள். ஆயினும்கூட, விவாகரத்து செய்யப்பட்ட மற்றும் கொலைகார மோசேயின் புத்தகங்கள் அவர்களின் வேதாகமங்களில் உள்ளன.
41 ஒரு புகைப்படத்தில், வில்லியம் சீமோர் அவருடைய நான்கு அப்போஸ்தலர்களுடன் இருந்தார். அவர்கள் அனைவரும் வெள்ளையர்கள். மேலும் அவர்களை நீங்கள் இடமிருந்து வலமாக நிற்பதைக் காணலாம்: ஜான் ஆடம்ஸ், F. F. போஸ்வொர்த் மற்றும் தாமஸ் ஹெஸ்மல் ஹல்க். மற்றும் அமர்ந்து இருப்பவர்கள் , வில்லியம் சீமோர் மற்றும் ஜான் கிரஹாம் லேக். வில்லியம் சீமோர் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பிய மிஷனரிகளின் குழுவை டாம் ஹெஸ்மல்ஹால்ச்சுடன் வழிநடத்திய அப்போஸ்தலன் ஜான் லேக் ஆவார்.
42 வில்லியம் சீமோரின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய அப்போஸ்தலர்களான F. F. போஸ்வொர்த் போன்ற பலர் வில்லியம் பிரான்ஹாமுடன் இணைந்தனர். வில்லியம் பிரன்ஹாம் பிறப்பதற்கு முன்பே F.F. போஸ்வொர்த் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். 1958 இல் அவர் இறக்கும் வரை, போஸ்வொர்த் தனது முழு பலத்துடன் வில்லியம் பிரன்ஹாமிற்கு ஊழியம் செய்தார். யோவான் ஸ்நானகனின் ஊழியக்காரனான அப்பல்லோ, யோவான் ஸ்நானகன் இறந்த பிறகு பவுலுக்கு ஊழியம் செய்ததைப் போல போஸ்வொர்த் வில்லியம் பிரான்ஹாமுக்கு ஊழியம் செய்தார்.
43 1950 இல் ஹூஸ்டன் விவாதத்தில் வில்லியம் பிரன்ஹாமின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் F. F. போஸ்வொர்த். அங்கு தான் அக்கினி ஸ்தம்பத்தின் படம் எடுக்கப்பட்டது. 1951 இல் வில்லியம் பிரான்ஹாமுடன் தென்னாப்பிரிக்காவிற்கு சென்றவர் F.F. போஸ்வொர்த்தும் ஆவார். அது நம்முடைய காலத்தில் தான் அந்த ஈவால்டு ஃபிராங்க்கு இந்த சோதனையில் தோல்வியடைந்தார். ஏனெனில் அவர் மத்தேயு 24:48 முதல் 51 வரை உள்ள பொல்லாத ஊழியக்காரனின் பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டியிருந்தது. மேலும் வில்லியம் பிரன்ஹாம் போஸ்வொர்த்தை : "என் தந்தை " என்று அழைத்ததை போல நான் ஈவால்டு ஃபிராங்க்கை "என் தந்தை" என்று அழைத்தேன்.
44 எனவே லவோதிக்கேயா காலத்தின் முதல் தீர்க்கதரிசி செய்தியாளன் வில்லியம் சீமோர் ஆவார். நீங்கள் வில்லியம் பிரன்ஹாமை ஒரு செய்தியாளனாக ஏற்றுக்கொண்டால், வில்லியம் சீமோரையும் செய்தியாளனாக ஏற்க வேண்டும். இது வில்லியம் சீமோரின் அஸ்திபாரத்தின் மேல் வில்லியம் பிரன்ஹாம் தனது ஊழியத்தை கட்டியதாக உள்ளது.
45 லவோதிக்கேயாவிற்கு ஏற்கனவே இரண்டு செய்தியாளர்கள் இருந்திருக்கிறார்கள், நான் மூன்றாவது மற்றும் நாம் இன்னும் லவோதிக்கேயா காலத்தின் நடுவில் இல்லை என்பதை மூன்று சிகரங்கள் அல்லது சின்னங்களின் தரிசனத்தின் மூலம் தேவதூதன் உண்மையில் எனக்கு வெளிப்படுத்தினார். தரிசனத்தில் முதல் இரண்டு சின்னங்கள் மூன்றாவது சின்னத்தின் முத்திரைகள் ஆகும். வில்லியம் சீமோர் மல்கியா 4ன் எலியாவாக இருந்தார் வில்லியம் பிரன்ஹாம் மல்கியா 4 ன் எலியாவாக இருந்தார். நானும் மல்கியா 4-ன் எலியாவே. மேலும் எலியாவின் ஆவி மீண்டும் மீண்டும் இருக்கும்.
46 யோவேல் 2:28 ஐ நிறைவேற்றியது பவுல் அல்ல. சபை தொடங்கிய பேதுருவின் அஸ்திவாரத்தின் மீது பவுல் கட்டினார். அதேபோல், வில்லியம் பிரன்ஹாம் வில்லியம் சீமோரின் மூலம் லவோதிக்கேயா தொடங்கப்பட்டவரின் அஸ்திவாரத்தின் மீது கட்ட வேண்டியிருந்தது. மேலும் யோவேல் 2:28-ஐ பேதுரு நிறைவேற்றிய போது அது ஒரு தீர்க்கதரிசியாக இருந்தது. தேவன் மனித சரீரத்தில் இருந்தபோது தேவன் அழைத்த ஒரு தீர்க்கதரிசியாக பேதுரு இருந்தார். பேதுரு பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்களைப் பிடித்து, கொர்நேலியுவின் இடத்தில் தேசங்களுக்கு பரலோகத்தின் கதவைத் திறக்க ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். எபேசிய சபை காலத்தையும் இரட்சிப்பையும் தேசங்களுக்குத் திறந்த தீர்க்கதரிசி தான் பேதுரு. பேதுரு எபேசிய காலத்தின் தந்தையாவார்.
47 ஆகவே தேவன் முதன் முதலில் கறுப்பின அமெரிக்கர்களை வில்லியம் சீமோர் மூலம் அசூசாதெரு எழுப்புதலுடன் சந்தித்தார், இது உலகம் முழுவதும் பரவியது. மேலும் பரிசுத்த ஆவியையும் நித்திய ஜீவனையும் பெற, முழு பூமியும் வில்லியம் சீமோரிடம் வந்தது.
48 ஒவ்வொரு மெதடிஸ்ட் சபையும் ஜான் வெஸ்லியிடம் இருந்து வந்தது போல், உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து பெந்தேகோஸ்தே, சுவிசேஷ மற்றும் தேவர்களின் கூட்டு சபைகள் மற்றும் எழுப்புதல் சபைகள் வில்லியம் சீமோரிடமிருந்து வந்தன. எனவே லவோதேக்கேயா காலத்தின் முதல் செய்தியாளர் மற்றும் அமெரிக்க தேசத்தின் முதல் தீர்க்கதரிசி வில்லியம் சீமோர் ஆவார்.
49 லவோதிக்கேயா மரத்தின் வேர் அசூசா தெரு. வில்லியம் பிரன்ஹாம் வந்தபோது, வில்லியம் சீமோர் அவருக்கு முன்பே லவோதிக்கேயாவின் முதல் தீர்க்கதரிசியாக இருந்தார், மேலும் அவர் வில்லியம் சீமோர் அந்த வெளிச்சப்பந்தத்தை விட்டு வெளியேறிய பெந்தேகோஸ்தலிசத்தில் தீர்க்கதரிசிகளின் வெளிச்சப்பந்தத்தை பெற வேண்டியிருந்தது.
50 அதற்காகவே தேவன் வில்லியம் பிரன்ஹாமிடம், "முதலில் பெந்தேகோஸ்தேக்களிடம் செல்!" என்றார் , நீங்கள் பார்க்கிறீர்களா? "முதலில் மெதடிஸ்ட்களிடம் செல்!" என்று இல்லை ஆனால் "முதலில் பெந்தகோஸ்தேக்களிடம் செல்!" என்றார். மேலும் அவர் அங்கு செல்ல விரும்பவில்லை. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் ஆரம்ப அடையாளமாக அந்நியபாஷைகளில் பேசுவதைப் பிரசங்கித்து ஸ்திரீகளை பிரசங்கிக்க அனுமதிக்க ஒரு மனிதரான வில்லியம் சீமோரின் அஸ்திவாரத்தின் மீது அவர் தனது ஊழியத்தை உருவாக்க விரும்பவில்லை. அதனால் தேவன் வில்லியம் பிரன்ஹாமை தாக்கினார். மேலும் அவரது மனைவி ஹோப் மற்றும் அவரது மகள் இறந்தனர். இதற்குப் பிறகுதான் வில்லியம் பிரன்ஹாம் வில்லியம் சீமோரின் வாரிசை உறுதி செய்வதற்காக அவர் சென்று பெந்தேகோஸ்திடம் சேர்ந்தார்.
51 ஒவ்வொரு தலைமுறைக்கும் குறிப்பிட்ட இரட்சிப்பின் சான்றுகள் உள்ளன. வில்லியம் சீமோரின் காலத்தில், அந்நிய பாஷைகளில் பேசுவது இரட்சிப்பின் ஆதாரமாக இருந்தது. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்கள் என்பதற்கான ஆதாரமாக அவை இருந்தது. மேலும் பரிசுத்த ஆவியானவர் தம்மைத் தேடாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டார். அசூசா தெருவில், தெருவில் நடந்து செல்லும் ஒருவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று அந்நிய பாஷைகளில் பேசக்கூடும். அது அவரது வாழ்க்கையை மாற்றியது.
52 இன்று, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் செய்திக்கு வந்த பிறகு, நீங்கள் இனி ஒரு போதும் உங்கள் கனவில் துரத்தப்படுவதில்லை அல்லது உங்கள் தூக்கத்தில் அமுக்கப்படுவதில்லை, உங்கள் கனவில் நீங்கள் ஒரு போதும் உடலுறவு கொள்வதில்லை, அதுவே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்கள் என்பதற்கும் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதற்கும் அதுவே சான்றாகும். உங்களைத் துன்புறுத்திய பாலியல் மற்றும் பிற பிசாசுகள் உங்களை விட்டு வெளியேறுகின்றன. இதை, ஒரு சாதாரன அஞ்ஞானி கூட செய்தியோடு தொடர்பு கொள்ளும் போது பெற்றுக் கொள்ளலாம். இது இங்கே தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் செய்தியைத் தவிர வேறு எங்கும் இல்லை.
53 அந்நிய பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் அடையாளமாகவும், இரட்சிப்பின் ஆதாரமாகவும் வில்லியம் சீமோரின் காலத்தில் இருந்தது. வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கிறது. ஒரு காலத்தில் சரியாக இருந்த ஒன்று இன்று கண்டனம் செய்யப்படலாம்.
54 வில்லியம் பிரன்ஹாம் பெந்தேகோஸ்தே கொள்கை மற்றும் அசூசா எழுப்புதல் பற்றி பலமுறை பேசினார், மேலும் அசூசா தெருவில் நடந்த பரிசுத்த ஆவியானவரின் வம்சாவளியை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசவும் செய்தார். அவர் வருவதற்கு முந்தைய மூன்று காலகட்டங்களைப் பற்றி அவர் பலமுறை பேசினார்: இனப் பிரிவினையின் காரணமாக வில்லியம் சீமோரின் பெயரைக் குறிப்பிடாமல் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாகப்படுதல் மற்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பற்றி பேசினார்.
55 வில்லியம் பிரன்ஹாம் 1906 இல் அசூசா எழுப்புதல் லவோதிக்கேயாவின் ஆரம்பம் என்பதை அறிவார். 1956 ஆம் ஆண்டில், வில்லியம் பிரான்ஹாம் அசூசா தெருவில் பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவிற்கு ஆதரவாளராக இருந்தார்.
56 டாமி ஹிக்ஸ், ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் அசூசா எழுப்புதலை நேரில் கண்ட சாட்சிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், வில்லியம் பிரன்ஹாம் வில்லியம் சீமோரின் இடத்தில் நின்று, வில்லியம் சீமோரின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்காமல் "அசுசா ஜூபிலி" என்ற தலைப்பில் பிரசங்கம் செய்தார். இந்த செயல் அது யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, யூதர்கள் முன்னிலையில், யோசுவா உடன்படிக்கைப் பேழையின் முன் நின்று, "யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய யூபிலி" என்ற தலைப்பில் மோசேயின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்காமல், ஒரு பிரசங்கம் செய்ததை போன்று உள்ளது.
57 ஆகஸ்ட் 29, 1965 இல் பிரசங்கிக்கப்பட்ட "சாத்தானின் ஏதேன்" என்ற சிறு புத்தகத்தில், வில்லியம் பிரன்ஹாம் குறிப்பு 19 இல் இவ்வாறு கூறுகிறார்: "லவோதேக்கேயா சபைக்காலம் பெந்தேகோஸ்தே சபைக் காலம், ஏனெனில் இது கடைசி சபைக் காலம். லூதர் தனது செய்தியைக் கொண்டிருந்தார் ; வெஸ்லி தனது செய்தியைக் கொண்டிருந்தார். மற்றும் பெந்தெகொஸ்து அவர்களுடைய செய்தியை கொண்டிருந்தது." நீங்கள் பார்க்கிறீர்களா? வில்லியம் சீமோர் தனது செய்தியைக் கொண்டிருந்தார் என்று கூறுவதற்குப் பதிலாக, "பெந்தகோஸ்தேயர்கள் தங்கள் செய்தியைக் கொண்டிருந்தனர்" என்று கூறினார்.
58 ஒவ்வொரு முறையும் வில்லியம் பிரன்ஹாம்: லூதர், பிறகு வெஸ்லி என்று கூறும் போது, அவர்: வில்லியம் சீமோர் என்று சொல்வதற்குப் பதிலாக பெந்தெகொஸ்தே என்று கூறுகிறார். வில்லியம் பிரன்ஹாமின் சிறுபுத்தகங்களைப் படிக்கும்போது அது எப்போதும் என்னை சங்கடப்படச் செய்தது. வில்லியம் பிரன்ஹாம் ஒரு இனவாதி என்றோ அல்லது தவறு செய்தவர் என்றோ நான் கூறவில்லை மற்றும் நான் அதை ஒருபோதும் சொல்ல மாட்டேன். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது தேவனுக்குத் தெரியும். வில்லியம் பிரன்ஹாம் பற்றி நான் கூறியவை அனைத்தும் அவர் மீது எனக்குள்ள ஆழ்ந்த மரியாதையோடு தான் நான் கூறினேன். எனது ஊழியத்தின் போது மற்றும் என் வாழ்நாள் முழுவதும் வில்லியம் பிரன்ஹாமைப் பற்றி நான் கூறிய அனைத்து வார்த்தைகளையும் நினைவில் கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
59 பெந்தேகோஸ்தே காலம், வில்லியம் சீமோர் அதன் செய்தியாளராக இருந்த லவோதேக்கேயா காலத்திற்கு ஒத்ததாக இருந்தது. வில்லியம் பிரன்ஹாம், பெந்தேகோஸ்தலிசம் என்பது லவோதேக்கேயா காலத்தின் ஆரம்பம் என்பதையும், வில்லியம் சீமோர் லவோதிக்கியாவின் முதல் தீர்க்கதரிசி செய்தியாளர் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். வில்லியம் பிரன்ஹாம் இதை தனது இதயத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அவர் தனது மக்களுக்காகவும், அசூசா தெருவின் பரிசுத்தத் தன்மையையும், வல்லமையையும் விரும்பினார்.
60 ஆனால் அப்போஸ்தலருடைய காலத்தில் பேதுருவைப் போல இராஜ்யத்தின் திறவுகோல்களுடன் ஒரு தீர்க்கதரிசி இல்லாமல் 1906 இல் பரிசுத்த ஆவியானவர் இறங்குவது சாத்தியமாகுமா? மல்கியா 4-ல் உள்ள வாக்குத்தத்தத்தின்படி அந்தக் காலத்தை வரவழைத்து, பிள்ளைகளின் விசுவாசத்தை பெந்தெகொஸ்தே பிதாக்களிடம் திரும்பக் கொண்டு வர ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் இல்லாமல் ஒரு பெந்தேகோஸ்தே காலம் இருக்க முடியுமா?
61 வில்லியம் சீமோர் அப்போஸ்தலர் 2:4 இல் தனது ஆணித்தரமான உரையை ஆற்றிய போது, 1906 இல் பரிசுத்த ஆவியின் பொழிதலுடன் லவோதேக்கேயா காலம் தொடங்கியது. இன்னும் பிறக்காத வில்லியம் பிரன்ஹாம் அதன் முதல் செய்தியாளர் என்று கூறுவது இயற்கைக்கு முரணானது. தேசங்கள் அதினுடைய விடுதலை அல்லது சுதந்திரத்தை கொண்டுள்ளது. மேலும் அந்த நாள் வரும்போது, நாட்டின் சுதந்திரம் அல்லது விடுதலைக்கான உரையை அறிவிப்பவர் அல்லது உச்சரிப்பவர் தான் முதல் ஜனாதிபதி. எந்த நாடும் சுதந்திரம் பெற்ற நாளில், அந்த நாட்டின் முதல் ஜனாதிபதி இன்னும் எங்காவது பிறக்காமல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
62 ஒவ்வொரு சபைக் காலத்திற்கும் ஒரு நட்சத்திரத்திற்கு உரிமை உண்டு, அவை பல பூமிக்குரிய செய்தியாளர்களை எழுப்பும் பரலோக தூதர் ஆவார். லவோதிக்கேயாவைப் பொறுத்தவரை, மல்கியா 4 இன் படி எலியாவின் ஆவி தங்கியிருந்த முதல் மனிதர், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மற்றும் அப்போஸ்தலர் 2 இல் உள்ளதைப் போல அந்நிய பாஷைகளில் பேசுவதன் மூலம் அப்போஸ்தல பிதாக்களின் விசுவாசத்திற்கு குழந்தைகளின் விசுவாசத்தை மீண்டும் கொண்டு வந்தவர், அவர் வில்லியம் சீமோர் ஆவார்.
63 அந்த நேரத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் எருசலேமாக இருந்தது. இஸ்ரேவேல், லாஸ் ஏஞ்சல்ஸைப் போலவே, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மெதடிஸ்ட் மிஷனரிகளின் பன்னிரண்டு குடும்பங்களால் நிறுவப்பட்டது என்பதைக் கவனியுங்கள், அவர்கள் அங்கு வாழ்ந்த பூர்வீக அமெரிக்கர்களை விரட்டினர். இந்த தேவதூதர்களின் நகரம் தான், தேவனின் முதல் செய்தியை லவோதேக்கேயா காலத்திற்கு பரப்புவதற்காக உலகம் முழுவதும் தேவதூத செய்தியாளர்களை அனுப்பியது.
64 லாஸ் ஏஞ்சல்ஸில் பூமியின் ஒவ்வொரு இனமும் மதப்பிரமாணங்களும் இருந்தன. ஏப்ரல் 9, 1906 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அசூசா தெருவுக்கு அருகில், பத்து நாள் உண்ணாவிரதத்தின் மூன்றாவது நாளில், வில்லியம் சீமோர் அப்போ 2:4 இல் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, மேல் அறையில் அப்போஸ்தலர்களுடன் இருந்ததைப் போன்ற ஒரு வேகமான காற்றின் சத்தம் பரலோகத்திலிருந்து வந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷைகளில் பேச ஆரம்பித்தார்கள். அது மீண்டுமாக யோவேல் 2:28 ஆக இருக்கிறது.
65 அங்கிருந்த ஒருவர் இப்படி சாட்சியளித்தார், "என் முதுகுத்தண்டில் ஒரு குளிர் இறங்கியது. வானத்திலிருந்து ஒரு காற்றின் சத்தம் வந்தது. மேலும் அறையில் இருந்த பரிசுத்த ஆவியானவர் அலை அலையாக அசையும் கடலின் அலைகளைப் போல இருந்தார். ஒரு பார்வையற்ற பெண் கத்தினார், "ஓ நான் பார்க்கிறேன்! என் இனிய இயேசுவே, நான் பார்க்கிறேன்! பரிசுத்த ஆவியானவர் சோள வயலின் மேல் தென்றல் வீசுவது போல் மண்டபத்தினுடாக சென்றார். மேலும் அக்கினி நாவுகள் தலைகளின் மேல் தோன்றி அறை முழுவதும் நகர்ந்தன."
66 வில்லியம் சீமோர் 1908 இல் திருமணம் செய்து கொள்ளவிருந்த சகோதரி ஜென்னி மூர், எழுந்து நின்று, முன் வந்து, பியானோவை அற்புதமாக வாசிக்கத் தொடங்கினார், மேலும் அவர் பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அதினுடைய வியாக்கியானத்துடன் ஆறு வெவ்வேறு மொழிகளில் பாடத் தொடங்கினாள். அதற்கடுத்த நாட்களில், அது அசுசாவிற்கான யாத்திரையாக இருந்தது.
67 வெள்ளை எஜமானர்கள் மற்றும் கறுப்பின அடிமைகள், ஆசிரியர்கள் மற்றும் படிக்காதவர்கள் அனைவரும் சமமாக இருந்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் அப்போஸ்தலர்களின் நாட்களைப் போல ஓடிக்கொண்டிருந்தது. அனைத்து தேவாலயங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் விசுவாசித்தனர். அந்த இடம் மிகவும் சிறியதாக மாறியது, எனவே அவர்கள் அசூசா தெருவில் உள்ள ஒரு வகையான கைவிடப்பட்ட மேல் அறைக்கு நகர்ந்தார்கள். மத அமைப்புகள் மற்றும் தடைகளிலிருந்து வெகு தொலைவில் தேவன் இப்படித்தான் செயல்படுகிறார். அப்போஸ்தலர்களின் காலத்தில் இருந்த யூதர்களைப் போல இனவெறி வெள்ளையர்களும் ஆச்சரியப்பட்டு அவதூறுக்குள்ளானார்கள்.
68 அசூசா தெரு எழுப்புதலின் சாட்சியாக இருந்த டோபேகாவைச் சேர்ந்த இனவெறியர் பாஸ்டர் சார்லஸ் ஃபாக்ஸ் பர்ஹாம், "ஆண்களும் பெண்களும், வெள்ளையர்களும் கறுப்பர்களும் ஒன்றாக மண்டியிட்டனர் அல்லது ஒருவருக்கு ஒருவர் குறுக்கே விழுந்தனர்; அடிக்கடி ஒரு வெள்ளைப் பெண், செல்வம் மற்றும் கலாச்சாரம் இருந்த போதிலும், ஒரு 'நீக்ரோ' கைகளில் மீண்டும் தூக்கி எறியப்பட்டதைக் காண முடிந்தது, மேலும் அவள் நடுங்கியும், பெந்தெகொஸ்தேவைப் போல் வினோதமான போலிதனத்தினால் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். இது ஒரு பயங்கரமான, மோசமான அவமானம்" என்றார். சார்லஸ் ஃபாக்ஸ் பர்ஹாம் ஏதேனில் உள்ள சர்ப்பத்தை போல இருந்தார், அடுத்த முறை அவர் அசூசா தெரு சபைக்கு திரும்பியபோது, வில்லியம் சீமோர் அவரை வெளியேற்றினார்.
69 லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தலைப்புச் செய்தியை வெளியிட்டது: "அசூசா தெருவில் பாபிலோனின் விசித்திரமான பாஷைகள்". மற்றொரு செய்தித்தாள் எழுதியது: "இது இனங்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று இழிவுபடுத்தும் செயலாகும். இந்த மக்கள் பைத்தியகாரர்களாக, மனச்சோர்வு அல்லது மயக்கத்திற்கு உட்பட்டவர்கள் போல தோன்றுகிறது, ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் ஒரு ஒற்றைக் கண்ணுடைய, படிப்பறிவற்ற நீக்ரோவை அவர்களின் போதகராகக் கொண்டுள்ளனர். அவர் அதிகம் பேசுவதில்லை ஆனால் சில சமயங்களில், "மனந்திரும்புங்கள்! என்று சத்தமிடுவது கேட்கும். அவர்கள் மீண்டும் மீண்டும் அதே பாடலான 'தேற்றரவாளன் வந்திருக்கிறார்" என்ற பாடலைப் பாடுகிறார்கள். அனைத்து முக்கிய அமெரிக்க செய்தித்தாள்களும் வில்லியம் சீமோரை இவ்வாறு குறிப்பிடுகின்றன: "தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட நீக்ரோ தீர்க்கதரிசி ".
70 இன்னும், இந்த அதிகப்படியான அனைத்தும் சரியாக இருந்தன. யாத்திராகமம் 19 இல், புனித சீனாய் மலை குலுங்கி அதிருமானால், ஏழை பாவிகளான நம்மைப் பற்றி என்ன? ஏப்ரல் 1906 இல் அசூசா தெருவில் பரிசுத்த ஊற்றப்பட்ட ஆவியானது அப்போஸ்தலர்களின் நாட்களில் மேல் அறையில் நடந்தவற்றின் சரியான பிரதிபலிப்பாகும். குருடர்கள் பார்வை அடைந்தார்கள், செவிடர்கள் கேட்டனர், கால்களும் கைகளும் வளர்ந்தன, படிப்பறிவில்லாதவர்கள் ஜெர்மன், ஹீப்ரு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளைப் பேசினர். அவர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியில் பேசுவதை கேட்டனர். கல்வியறிவு இல்லாத கறுப்பர்கள் அனைத்து மொழிகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறனால் விளக்கினர்.
71 அசூசா தெருவானது பரிபூரண அன்பாக இருந்தது, கறுப்பின அடிமைகள் மற்றும் வெள்ளை எஜமானர்களுக்கு இடையே பணிவுடன் பரிபூரண ஒற்றுமை இருந்தது. ஒரு கண் பார்வையற்ற ஒரு நீக்ரோவைச் சுற்றி பல்வேறு மதப் பிரிவுகளின் மக்கள் இப்போது ஒரே ஆவியில் ஒன்றுபட்டுள்ளனர். ஒரு தொழுவத்தில் பணக்காரர் மற்றும் ஏழை இருந்தனர். வாசனையும் ஈக்களும் அவர்களைத் தொந்தரவு செய்தது வில்லியம் சீமோர் அவர்களிடம், "மக்கள் மலைகள், பெரிய தேவாலயங்கள், கல் மற்றும் சட்ட கட்டிடங்களில் வழிபடுகிறார்கள். ஆனால் இரட்சிப்பு மலைகளில் இல்லை என்று இயேசு சமாரிய ஸ்திரீயிடம் கூறினார்."
72 அமெரிக்கா முழுவதிலுமிருந்து, போதகர்கள் மற்றும் சபை தூதுவர்கள் அசூசாவின் எழுச்சியைக் காண லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றனர். அவர்களில் பலர் வில்லியம் சீமோரின் பிரதிஷ்டையைப் பெற்று, தங்கள் சபைகளில் வில்லியம் சீமோரின் செய்தியைப் பிரசங்கிக்கத் திரும்பினர்.
73 மேலும் அசூசாவின் எழுச்சி 1906 முதல் 1909 வரை அதே வல்லமையை வைத்திருந்தது. பின்னர் அசூசா எழுச்சியின் நாயகர்கள், அவர்களில் பெரும்பாலோர் வெள்ளையர், மற்ற கொள்கைகளைக் கண்டுபிடிக்க சென்றனர். கறுப்பர்கள் தங்கள் வருகையை மறுத்ததால், 1911 ஆம் ஆண்டில் அசூசா எழுச்சி முற்றிலும் வெள்ளையர்களின் கைகளுக்குச் சென்றது.
74 மேலும் 1916 ஆம் ஆண்டில், ஒரு மாலை கூட்டத்தின் முடிவில், கறுப்பின ஆயர் சார்லஸ் பிரைஸ் இந்த யுகத்தில் தேவனின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஒரு தீர்க்கதரிசனத்தை வழங்கினார். வெளிப்படுத்துதலின் ஏழு முத்திரைகளை திறப்பதே தேவன் வில்லியம் பிரன்ஹாமை பூமிக்கு அனுப்பிய முக்கியமான பணி. வில்லியம் சீமோர் 1922 இல் இறந்தார். மேலும் சார்லஸ் பிரைஸ் 1949 இல் இறந்தார், அவர் அறிவித்த வில்லியம் பிரன்ஹாம் ஏற்கனவே மேடையில் இருந்தார்.
75 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு, சபையின் மிகப்பெரிய ஆவிக்குரிய நடவடிக்கையானது மேல் அறையில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலாகும். மேலும் 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவிக்குரிய நடவடிக்கை அசூசா தெருவின் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடாகும். அசூசா தெரு எழுச்சியானது உலகெங்கிலும் உள்ள இன சமத்துவத்திற்கு பெரிதும் பங்களித்தது, யூதர்களுக்கும் புறஜாதியார்களான நமக்கும் அப்போஸ்தலர்களின் நாட்களில் பரிசுத்த ஆவியின் ஊற்று.
76 வில்லியம் சீமோர் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையில் சமத்துவத்தைப் போதிக்கவில்லை, மேலும் 1908 இல் கூட, கிளாரா லம் வெள்ளையாக இருந்ததால் அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதன் காரணமாக கிளாரா லும் அவரது சபையை விட்டு வெளியேறினார். அசூசா தெரு தோலின் நிறத்தின் மீது இரத்தத்தின் நிறத்தின் வெற்றியாக இருந்தது. யாரையும் கொல்லாமல், மார்ட்டின் லூதர் கிங் செய்ததை விட அசூசா தெரு வெள்ளையர்களையும் கறுப்பர்களையும் நெருக்கமாகக் கொண்டு வந்தது.
77 வில்லியம் சீமோரின் செய்தி "அப்போஸ்தல விசுவாசத்திற்குத் திரும்புதல்" என்பதாகும். மேலும் அவர் இந்த செய்தியை அவருடைய அப்போஸ்தல விசுவாசம் என்ற செய்தித்தாள் மூலம் பரப்பினார், அதன் முதல் பதிப்பின் தலைப்பு செப்டம்பர் 1906 இல் வெளிவந்தது: "பெந்தெகொஸ்தே வந்துவிட்டது". மேலும் இந்த செய்தித்தாளை பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் அனுப்பினார். மேலும் வெளிப்பாட்டின் மூலம், அவர் கட்டிடத்தின் மீது "அப்போஸ்தல விசுவாசம்” [ஆசிரியர் குறிப்பு: பிரஞ்சு அசலில் இருந்தபடி] என்று எழுதினார்.
78 உண்மையில், வில்லியம் சீமோர் லவோதிக்கேயா காலத்தின் தந்தை ஆவார், ஆனால் வில்லியம் பிரன்ஹாம் அல்ல. நான் அளிக்கும் இந்த வெளிப்பாடு வில்லியம் பிரன்ஹாமின் செய்திக்கு முரணானது அல்ல. வில்லியம் பிரன்ஹாம் தாமே வில்லியம் சீமோர் லவோதிக்கேயாவின் செய்தியாளன் என்பதை அங்கீகரிக்கிறார். பல சிறு புத்தகங்களில், வில்லியம் பிரன்ஹாம் வில்லியம் சீமோரை லவோதிக்கேயாவின் செய்தியாளராக அங்கீகரிக்கிறார்.
79 எடுத்துக்காட்டாக, குறிப்பு 91 இல் "ஆராதனைக்காக தேவன் அருளிய ஒரே ஸ்தலம்" என்ற சிறு புத்தகத்தில் வில்லியம் சீமோரைப் பற்றி வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார்: "அவரது கண்களில் ஒன்று வெளியே இருந்ததாக நான் நம்புகிறேன், பழைய அசூசா தெருவில் பெந்தேகோஸ்தே செய்தியை உண்மையில் ஆரம்பித்த ஒரு கருப்பு சகோதரர். அவர் அங்கே நகைக்கப்பட்டார் மற்றும் அவர் ஒரு நீக்ரோ என்பதால் அவர் கேலி செய்யப்பட்டார், ஆனால் அவர் அந்த காலத்திற்க்கு ஒரு செய்தியைக் கொண்டு வந்தார்.
80 ஆகவே, வில்லியம் பிரன்ஹாம் மட்டுமே லவோதிக்கேயாவின் ஒரே தூதுவர் என்று யாராவது சொன்னால், அவர் அறியாமையால் பேசும் தேவனுடைய குமாரன் அல்லது அவர் தனது நேர்மையின்மையை வெளிப்படுத்தும் பிசாசின் புத்திரன். கத்தோலிக்கர்கள், லூத்தரன்கள் மற்றும் மெதடிஸ்டுகள் தவிர, பெந்தகோஸ்துக்காரர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களை இயேசு கிறிஸ்துவின் பெயரில் மூழ்கி அதே ஞானஸ்நானம் செய்வதைப் பார்க்கும்போது, அவர்கள் வில்லியம் பிரன்ஹாமைப் பற்றி பேசாவிட்டாலும், இது நம் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
81 கறுப்பினத்தவர்களை முதன்முறையாகப் பார்க்கும் வெள்ளைக்காரர்களைப் போலவும், அந்தக் கறுப்பினத்தவர்கள் பேசுவதைப் போலவும் இருக்கிறார்கள். அந்த கறுப்பர்களுக்கு அவர்களைப் போல் வெள்ளை தோல் இல்லையென்றாலும் அந்த அழைப்பு அந்த வெள்ளையர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டாமா? வெள்ளையர்களும் கறுப்பர்களும் ஒரே ஆதாமிடமிருந்து வந்தவர்கள், ஆனால் ஹாமின் சாபமே கறுப்பர்களின் தோலின் நிறத்தை மாற்றியது. அதே போல், பெந்தேகோஸ்துகளும் பிரான்ஹாமிஸ்டுகளும் ஒரே வில்லியம் சீமோரிலிருந்து வந்தவர்கள் ஆனால் வில்லியம் பிரன்ஹாமின் செய்திதான் பிரான்ஹாமிஸ்டுகளின் நம்பிக்கையையும் மொழியையும் மாற்றியது. அசூசா தெரு என்பது லவோதிக்கேயாவின் ஏதேன் தோட்டம், அது எபேசுவுக்கு மேல் அறையாக இருந்தது.
82 இப்போது, பிரான்ஹாமிஸ்டுகளே, லவோதிக்கேயாவின் தூதரின் பெயருக்கு வில்லியம் பிரன்ஹாம் தனது சொந்தப் பெயரை வைப்பதற்குப் பதிலாக எலியா என்று ஏன் வைத்தார் என்று உங்களுக்கு தெரியுமா? மேலும் செய்தியாளர்களை கணக்கீடு செய்பவர்களே, வில்லியம் பிரன்ஹாம் அவர்களே சொல்வது போல், இந்த லவோதிக்கேயாவின் யுகத்திற்கு வில்லியம் சீமோர் ஒரு செய்தியைக் கொண்டுவந்தார் என்றால், வில்லியம் பிரன்ஹாம் எந்த சபையின் காலத்தின் செய்தியாளன்? வில்லியம் பிரன்ஹாம் எட்டாவது செய்தியாளன் இல்லையா?
83 ஜான் வெஸ்லி லூத்தரின் செய்தியுடன் வர முடியாது என்றும், பெந்தெகொஸ்தே வெஸ்லியின் செய்தியுடன் வர முடியாது என்றும், வில்லியம் பிரன்ஹாம் பெந்தெகொஸ்தே செய்தியைக் கொண்டு வர முடியாது என்றும் வில்லியம் பிரன்ஹாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அதை எப்படி உங்களால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்?
84 இன்று, உலகில் சுமார் 800 மில்லியன் கிறிஸ்தவர்கள் அசூசா தெருவில் தங்களுடைய பூர்வத்தை கொண்டுள்ளனர், அதே சமயம் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் ஜோசப் கோல்மன் மற்றும் பருட்டி கசோங்கோ போன்ற பல தூய பெந்தேகோஸ்துகள் உட்பட சுமார் ஐந்து மில்லியன் விசுவாசிகள் மட்டுமே உள்ளனர். வெள்ளை ஆயர்களின் பணிவுடன், அதற்கு வில்லியம் சீமோருக்கு தான் நன்றிகள், அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பெந்தகோஸ்தே மற்றும் சுவிசேஷ நாடாக மாறியுள்ளது.
85 மேலும் லவோதிக்கேயாவைப் பொறுத்தவரை, பொய்யான பரிசுத்த ஆவியானது உண்மையான பரிசுத்த ஆவியுடன் பக்கபலமாக உலகைக் கைப்பற்றுவதற்காக அசூசா தெருவிலிருந்து புறப்பட்டது. அனைத்து பெந்தேகோஸ்தே சபைகள், தேவர்களின் கூட்டு சபைகள், நாற்சதுர சபைகள் மற்றும் இந்த எழுப்புதல் மற்றும் கவர்ச்சியான மற்றும் அபிஷேகம் மற்றும் அதிசய சபைகள் போன்ற பூமி முழுவதிலும் நீங்கள் காணும் அனைத்திற்க்கும் அசூசா தெருவே அதற்க்கு தோற்றமாக உள்ளது. மேலும் பூமியில் உள்ள ஒவ்வொரு சபையிலும் வில்லியம் சீமோரின் முத்திரை உள்ளது, கத்தோலிக்க சபையில் கூட கவர்ச்சியான புதுப்பித்தல் உள்ளது. வில்லியம் சீமோர் 20 ஆம் நூற்றாண்டிற்க்கு முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க தீர்க்கதரிசி ஆவார்.
86 வில்லியம் பிரன்ஹாமின் செய்தி எனக்குக் குறிப்பாக இருந்ததைப் போலவே, வில்லியம் சீமோரின் செய்தியும் வில்லியம் பிரான்ஹாமுக்கு ஒரு குறிப்பாக இருந்தது. மேலும் நான் அநேகரால் பிரான்ஹாமிஸ்டாகக் கருதப்படுவதைப் போலவே வில்லியம் பிரன்ஹாம் பலரால் பெந்தேகோஸ்தேவாதியாகக் கருதப்பட்டார், .
87 ஒரு செய்தியாளன் எப்போதும் அவனுடைய காலத்தை மேல் ஆதிக்கம் செலுத்துகிறான். அதனால்தான், கருத்து திருடர்கள் மற்றும் பாவனை செய்கிறவர்கள் மற்றும் எனக்குப் பின் வரும் தேவனின் உண்மையான தீர்க்கதரிசிகள் தவிர்க்க முடியாமல் எனது சில கோட்பாடுகளை மீண்டும் கூறுவதை நீங்கள் காண்பீர்கள். இன்று, நான் பிறப்பதற்கு முன்பு இருந்த பல பழைய சபைகள் என் செய்தியின் காரணமாக தங்கள் ஞானஸ்நானத்தை கைவிட்டு, நீரோடைகளில் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
88 இப்போது, வருங்கால சந்ததியினருக்கு தேவன் என்ன சோதனையை அனுப்புவார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குப் பிறகு, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லும் ஒரு விசித்திரமான மனிதர் இருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டால், அவரைப் பற்றி மக்கள் என்ன சொன்னாலும், அவருக்கு நீங்கள் செவி கொடுங்கள்.
89 நாம் எலியாவின் ஆவியான மல்கியா 4 காலத்தில் இருக்கிறோம். ஆனால் தேவன் இறையாண்மை கொண்டவர், மாலை நேரத்தில் ஒரு கறுப்பின மனிதரான வில்லியம் சீமோருடன் செய்தது போல் அவர் மற்றொரு ஆவியுடன் எந்த மீறலைத் திறக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. யாரை அனுப்ப வேண்டும், ஏன் அனுப்ப வேண்டும் என்பதை தேவன் தான் தீர்மானிக்கிறார். மேலும் வில்லியம் சீமோரின் சரீர நிலை தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவரை அங்கீகரிப்பதைத் தடுக்கவில்லை என்றால், எனக்குப் பின் வரும் தீர்க்கதரிசியை நீங்கள் அடையாளம் காண்பீர்கள்.
90 ஆனால் வரப்போகும் தீர்க்கதரிசியை அடையாளம் காண, தேவன் ஏற்கனவே அனுப்பியவர்களையும் நீங்கள் அடையாளம் காண வேண்டும். தேவன் இஸ்ரேலுக்கும் கடந்த காலங்களில் அனுப்பியவர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டால், வில்லியம் பிரான்ஹாமுக்கு முன் லவோதிக்கிய சபையின் செய்தியாளராக வில்லியம் சீமோரையும் தேவன் அனுப்பினார் என்பதை நீங்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் "ஆமென்" சொல்ல வேண்டும்.