



Kacou 160 (Kc.160) : எழுப்புதலுக்கான நம்முடைய மனநிலை
டிசம்பர் 24, 2023 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு வழங்கிய வெளிப்பாடு
1 இயேசு கிறிஸ்துவின் அடிமையான நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு , இந்த டிசம்பர் 24, 2023 அன்று பரிசுத்தவான்களுக்கு ஒரு நல்ல ஆவிக்குரிய மனப்பான்மைக்காக கட்டளைகளாகக் கொடுத்தேன்.
2 முதலில், தனிப்பட்ட ஜெபங்களின் தருணங்களைப் பொறுத்தவரை, ஜெபத்தின் தொடக்கத்தில் நீங்கள் ஒரு தியானப் பாடலைப் பாடலாம், பின்னர் நீங்கள் ஜெபிக்கலாம், கூடுமானால் முடிப்பதற்கு முன்பாக மற்றொரு பாடலை பாடலாம். தம்பதிகள் விரும்பினால் சேர்ந்து ஜெபம் செய்யலாம்.
3 கட்டாய ஜெபநேரம் என்பது கிடையாது. உங்களுக்கு ஏவுதல் இல்லை என்றால், உங்களை நீங்கள் வலுக்கட்டாயப்படுத்த வேண்டாம். ஏவப்பட்ட ஜெபங்கள் மட்டுமே கடவுளிடம் செல்கின்றன. ஏவப்பட்ட ஜெபங்கள் முயற்சி இல்லாமல் இருக்கும், மேலும் அதை நிறுத்த நீங்கள் விரும்புவதில்லை. இது கடவுளால் ஏவப்பட்ட உபவாசம் போன்றது. மேலும் ஏவுதலின் கீழ், சபை ஜெபிப்பதை அல்லது பாடுவதை நிறுத்தினாலும் யாராவது தொடர்ந்து ஜெபிப்பது நிகழலாம்.
4 பின்னர், பாடல்களைப் பொறுத்தவரை, கூட்டுப் பாடல்கள் தியானம் அல்லது ஆராதனை பாடல்களுடன் முடிப்பது நல்லது. மேலும் ஆராதனையில், துதிப்பாடல்களின் இரண்டாம் பகுதியில், சகோதரியின் தனிப்பட்ட பாடலுக்குப் பிறகு, தியானப் பாடல்களால் உருவாக்கப்படலாம். ஆனால் இரண்டு பகுதிகளும் தியானம் அல்லது ஆராதிக்கும் பாடல்களால் உருவானவைகளாக இருக்கலாம்.
5 மேலும் பரிசுத்தத்தின் பொருட்டு, திருமணமான ஒருவர் உடலுறவிற்கு விலகுவது, அது ஒரு தெய்வீக உரிமையாகும். மேலும் பரிசுத்தம் தேடும் ஒரு துணைவியாரிடம் தனது பாலியல் ஆசைகளுக்கு அடிபணியச் சொல்லும் மற்ற துணை ஒரு பிசாசு. பரிசுத்தத்தைத் தேர்ந்தெடுங்கள். இதன் நிமித்தமாக உங்களுடைய துணை உங்களை ஏமாற்றினால், எதுவும் சொல்லாதீர்கள், மேலும் பழிவாங்காதீர்கள்.
6 அர்ப்பணிப்பைக் குறித்து, 40 நாள் உபவாசத்திற்குப் பின்பு, நீங்கள் உபவாசம் இருந்தபோது செய்ததைப் போலவே ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைத் தொடர்ந்து சாப்பிடலாம் மற்றும் அந்த நாளின் எஞ்சியுள்ள வேளைகளில் மிதமாக சாப்பிடலாம். அர்ப்பணிப்பின் போது உண்ணும் உணவு மற்றும் உபவாசம் முடிக்கும் போது ஒரு ஏழை மனிதனின் உணவைப் போல எளிமையாக இருக்க வேண்டும். இன்பத்திற்காக தேனீர், காபி அருந்த வேண்டாம். தயிர், சோடா அல்லது ருசியான மற்றும் சுவையான எந்த உணவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
7 மேலும் மேஜையில், "எல்லாவற்றிலும் எனக்கு கொஞ்சம் பரிமாறவும்" என்று நீங்கள் சொல்லக்கூடாது. மீதமுள்ள நாள் முழுவதும், வயிறு நிறைய உண்ணாமல் நீங்கள் தண்ணீர் குடிக்கலாம் அல்லது சில பழங்கள் அல்லது லேசான உணவை சாப்பிடலாம். நீங்கள் உபவாசத்தில் இருப்பது போல் இது உள்ளது. நீங்கள் விரும்பும் வரை இந்த மனநிலையில் நீங்கள் இருக்கலாம். வேலையிலோ அல்லது பள்ளியிலோ கூட, நீங்கள் விரும்பினால், நீங்கள் அர்ப்பணிப்புடன் வாழலாம்.
8 அர்ப்பணிப்பு என்பது தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையாகும், ஆனால் அதற்காக அவர்கள் எல்லா வேளையிலும் உபவாசம் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.
9 காக்குவ்159:104-இன் படி, ஒரு பாஸ்டர் ஒரு சகோதரரிடம் சென்று வெளிப்படையான பாவ அறிக்கையை நடத்தச் சொன்னார். அந்த சகோதரர் நடத்தும்படியாக சென்றார். ஆனால் பிரசங்க பீடத்தில், அந்த சகோதரர் பைத்தியம் பிடித்தது போல் புத்தியற்ற வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தார். பின்னர் அவர் பிரசங்க பீடத்தின் பின்னால் சரிந்தார். மேலும் பயம் மேற்கொண்டதினால், யாரும் பிரசங்க பீடத்திற்கு செல்ல விரும்பவில்லை, சபையார் ஆராதனையை நிறுத்தினர். தலைமையேற்பது அல்லது பிரசங்க பீடத்திற்குச் செல்வதற்கான விருப்பம் அந்த நபரிடமிருந்து வர வேண்டும்.
10 மேலும், ஒரு நல்ல தலைவர் இல்லாத காரணத்தால், பிசாசு அதை சாதகமாக பயன்படுத்தி, வெளிப்படையான பாவ அறிக்கையை நீண்ட நேரம் நீடிக்கச் செய்து, மக்களை சோர்வடையச் செய்கிறது. சிலர் தங்கள் பாவ அறிக்கையை முடிக்க மூன்று முறை வரை தளத்தை கேட்கிறார்கள். இது சாியானதல்ல. ஆராதனைக்கு வரும்போது ஒருவர் தனது இதயத்தில் ஏற்கனவே உள்ளதை பாவ அறிக்கை செய்கிறார், மற்றவர்கள் பாவ அறிக்கை செய்வதை பார்த்து பாவ அறிக்கை செய்வதல்ல. காக்குவ் 71:37-ன் படி நேரமானது மதிக்கப்பட வேண்டும். மேலும், 25 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபைக்கு ஒரு ஜெபத்தலைவர் இல்லாததால் ஆராதனை தாமதப்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏழு மாதங்களுக்குள் இது மீண்டும் நடந்தால், பாஸ்டர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.
11 நல்லது, நாம் தானியேல் 8-ஐக் கருத்தில் கொள்வோம். நான் செம்மறி ஆட்டுக்கடா மற்றும் வெள்ளாட்டைப் பற்றி பேசுவேன். தீர்க்கதரிசி தானியேல் உலாய் நதிக்கரையில் இரண்டு விலங்குகளைப் பார்த்தார். முதலில், ஆற்றின் முன் ஒரு செம்மறி ஆட்டுக்கடா, பூமியின் நான்கு மூலைகளையும் நோக்கித் தள்ளுகிறது. மேலும் அந்த செம்மறி ஆட்டுக்கடாயின் முன் யாராலும் நிற்க முடியவில்லை. இது லூத்தரன், பாப்டிஸ்ட், மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் மற்றும் பிறவற்றின் மூலம் ஐரோப்பாவிலிருந்து வரும் புராட்டஸ்டன்டிசத்தின் பேரரசு ஆகும் .
12 அப்போது மேற்கில் இருந்து, அதாவது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வந்தது. வெள்ளாடு என்பது சுவிசேஷ சபைகளின் பேரரசு. மேலும் அந்த வெள்ளாட்டுக்கடா, செம்மறி ஆட்டுக்கடாவை அடித்தது, வெள்ளாட்டுக்கடாவின் நான்கு கொம்புகளும் பூமியின் நான்கு மூலைகளிலும் பரவின. மேலும் இந்த தரிசனம் இறுதிக்காலத்திற்கானது என்று தானியேலுக்குச் சொல்லப்பட்டது. மேலும் இந்த வெள்ளாட்டுக்கடாவின் ஆட்சிக்கு முடிவுகட்டவும், பரிசுத்த ஸ்தலத்தைத் தூய்மைப்படுத்தவும் ஒரு கூட்ட மக்கள் வருவார்கள்.
13 தற்போதைக்கு, வெள்ளாடு பல நாடுகளில் ஆராதனைகளைத் தடுக்கின்றன, ஆனால் உறுதியாக இருங்கள், எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. இந்த கட்டத்தினூடாக நாம் கடந்து செல்வோம். உங்களால் கூடும் மட்டும் 30 நிமிட ஜெபத்தைத் தொடருங்கள். நீங்கள் காணும் பொய்யான வெளிப்பாடுகள் கடந்துபோகும், ஆட்டுக்குட்டியுடன் உண்மையான காரியம் வரும். வெளிப்பாட்டின் மூலம் நாம் நம் வாழ்க்கையை வார்த்தைக்கு ஒத்திருக்க வேண்டும்.
14 இங்கே நாம் நிராகரிக்கும் இந்த குறிசொல்லும் ஆவிகள் தான் , சுவிசேஷகர்கள் தேடுவது, ஏனென்றால் அவர்கள் வெளிப்பாட்டின்படி நடப்பதில்லை. அவர்களின் ஆவிக்குரிய வெளிப்பாடுகள் அனைத்தும் சாத்தானின் நாடகங்கள் . நீங்கள் பார்க்கும் அனைத்து சுவிசேஷகர்களும் எல்லாவிதமான பிசாசுகளாலும் ஆட்கொள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு இரவு அசுத்தங்கள் உண்டு. மேலும் அவர்கள் தீட்டுகளுடன் எழுந்தவுடன், அவர்கள் கடற்கன்னியால் தாக்கப்பட்டதாக அபத்தமான பொய்களைச் சொல்கிறார்கள். கடற்கன்னி இருந்தது இல்லை.
15 தானியேல் 8-ல் என்ன நடந்தது? பூமியானது ஆட்டுக்குட்டிக்காகக் காத்திருந்தது. மேலும் இதோ, ஒரு மிருகம் வந்தது, அது ஆட்டுக்குட்டிக்குப் பதிலாக செம்மறி ஆட்டுக்கடாவாக இருந்தன. கர்த்தர் செம்மறி ஆட்டுக்கடாவில் இல்லை. பிறகு வேறொரு மிருகம் வந்தது, இதோ, அது ஒரு வெள்ளாட்டுக்கடா. கர்த்தர் வெள்ளாட்டுக்கடாவில் இல்லை. அதன் பிறகு, ஆட்டுக்குட்டி தானியேல் 10:4 முதல் 11 வரையில் இதெக்கேல் நதிக்கரையில் வந்தது. இது 1 இராஜாக்கள் 19-ல் தீர்க்கதரிசி எலியாவுடன் நடந்தது. ஒவ்வொரு முறையும், இந்த அபிஷேக காற்று சிலரை எடுத்துச் செல்கிறது. ஆனால் நாம் எடுத்துச் செல்லப்பட முடியாது ஏனெனில் நாம் ஆட்டுக்குட்டிக்காக காத்திருக்கிறோம்.
16 ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 3, 2023 அன்று, செய்தியில் வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டுக்கடாவின் பிரத்தியட்சங்களின் பல காணொளிகளைப் பெற்றேன். பிரேசிலில் உள்ள குவக்சுபே சபையில், ஒரு வெள்ளை சகோதரி கிளர்ந்தெழுந்து, குறிப்பாக பாஸ்டரைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார்.
17 காங்கோ-பிரஸ்ஸாவில்லியில் உள்ள மாடெண்டே சபையில் ஒரு சகோதரி, காக்குவ்158:74-ன் படி பல சந்தர்ப்பங்களில் அறிவை உணர்த்தும் வார்த்தையின் வரத்தை வெளிப்படுத்தினார். மேலும், “நான் சொன்னது கச்சிதமாக இல்லை என்று யாராவது நினைத்தால், அவர் கையை உயர்த்தட்டும்!” என்று சபையில் கூறுவதும் நடந்தது. ஆனால் யாரும் கையை உயர்த்தவில்லை.
18 மலாவியில் உள்ள சிக்வியோ சபையில், 30 நிமிட ஜெபம் சில நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தது. அப்போது தயினா விசிகேசி என்ற சகோதரி, முழங்காலிட்டு ஜெபத்தில் ஈடுபட்டு, தன் வாழ்நாளில் எந்த ஒரு ஆவிக்குரிய வரத்தையும் வெளிப்படுத்தாதவள், எழுந்து நின்று, தரிசனங்களால் ஆதரிக்கப்படும் சகோதர சகோதரிகளைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையும் அறிவை உணர்த்தும் வார்த்தைகளையும் கொடுக்க ஆரம்பித்தாள்.
19 அவள் ஒரு சகோதரனிடம், "நீங்கள், பாலியல் பாவம் செய்துவிட்டீர்கள், ஆனால் தண்டனைகள் காரணமாக அதை அறிக்கை செய்ய பயப்படுகிறீர்கள்" என்று கூறினாள். ஒரு பாஸ்டர் பாவ அறிக்கை செய்ய வந்து , பிறகு அவர் தனது சபையை வழிநடத்தச் சென்றார், அவள் அவரிடம் "நீங்கள் ஒரு பாஸ்டர், மற்றும் நீங்கள் ஒரு விதவைக்கு தவறான நோக்கத்துடன் உதவுகிறீர்கள். மனந்திரும்பு!" என்றாள். பாஸ்டர் உடனடியாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கிறார். அவள் ஒரு சகோதரனிடம், "நீ திருமணம் செய்து கொண்டாய், விபச்சாரம் செய்தாய். பாவ அறிக்கை செய்து மற்றும் மனந்திரும்பு!” என்றாள்.
20 அவள் மற்றொரு சகோதரனிடம், "நீங்கள், நீங்கள் சுயஇன்பத்தில் வாழ்கிறீர்கள்!" சகோதரர் ஆச்சரியப்பட்டு தயங்கி, "உண்மைதான்" என்று கூறுகிறார். அந்த அறையின் பின்புறம் அமர்ந்திருந்த ஒரு சகோதரியிடம், "நீ விபச்சாரம் செய்துவிட்டாய்" என்று கூறுகிறாள். சகோதரி, "இல்லை, அது உண்மையல்ல!" சகோதரி தயினா அவளிடம் விவரங்களைக் கூறத் தொடங்குகிறாள். அவள் ஒப்புக்கொண்டு, "அது உண்மை, ஆனால் அது கடந்த ஆண்டு" என்று கூறுகிறாள். அவள் இன்னொரு சகோதரனிடம், "நீ வியாபாரம் செய்கிறாய். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இதையும் அதையும் செய்கிறீர்கள், அது சரியல்ல. இந்த வாடிக்கையாளரின் பணத்தை நீங்கள் திருப்பிச் செலுத்தவில்லை". சகோதரர் கூறுகிறார், "அது உண்மைதான்".
21 அவள் வேறொரு சகோதரியிடம் திரும்பி அவளிடம், "நீ பொறாமை கொண்ட பெண்! நீ உன் பிள்ளைகளுக்கு கெட்ட அறிவுரை கூறுகிறாய். மனந்திரும்பு!" அந்த சகோதரி, "சரி, புரிந்துவிட்டது" என்று கூறுகிறாள். பிறகு, "இங்கே இல்லாத ஒரு சகோதரன், விபச்சார பாவத்தை மறைக்கிறான்" என்று கூறுகிறாள். அந்த சகோதரர் ஆராதனைக்குப் பிறகு தொடர்பு கொண்டு அதை ஒப்புக்கொண்டார். அவள் இன்ன இன்ன நபரிடம் திரும்பி தீர்க்கதரிசனம் சொல்கிறாள். மேலும் இறுதியில், அபிஷேகம் அவளை விட்டு வெளியேறும்போது, அவள் சொல்கிறாள், "என்னைப் பயன்படுத்தும் ஆவி உண்மையில் பரிசுத்த ஆவிதானா என்று சகோதரர் பிலிப்பிடம் கேளுங்கள். நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்".
22 ஒன்பது ஆவிக்குரிய வரங்களில் ஒவ்வொன்றும் பலவிதமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டிய ஒருவர் கேட்கக்கூடிய வார்த்தைகளைக் கேட்டு அவற்றை மறுபடியும் திரும்பச் சொல்லலாம் அல்லது பரிசுத்த ஆவியானவர் அவருடைய வாயைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு பேசுவார். பின்னர் அவர் தான் பேசுவதைக் கேட்க முடியும் மேலும் அவர் சொல்வதை மனதில் வைக்க முடியும் அல்லது அவர் பேசுவதை கேட்க முடியாது.
23 தங்களுடைய ஆவிக்குரிய வரங்களை இப்போதைக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டவர்களில் சகோதரி டயினாவும் ஒருவர். அவர்கள் அர்ப்பணிப்பில் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் தங்களின் கனவுகள் மற்றும் தரிசனங்களைப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும்.
24 அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கனவுகள் மற்றும் தரிசனங்களைப் புரிந்து கொள்ள இப்போது அர்ப்பணிப்பு மற்றும் தியானத்தின் நேரம். உதாரணமாக, எழுப்புதலில், மக்கள் தங்குவதற்கும், குணமடைவதற்காகக் காத்திருக்கவும், பின்னர் தங்கள் தேவாலயங்கள், அவர்களின் மதங்கள் அல்லது அவர்களின் மோசமான வாழ்க்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டிய சில வகையான ஜெப முகாமை அவர்கள் அமைக்கக்கூடாது. எதை நான் செய்து நீங்கள் பார்த்ததில்லையோ அதை ஒருபோதும் செய்யாதீர்கள்.
25 மேலும், சகோதரி டயினாவின் வெளிப்பாடுகளில், அவள் ஒரு சகோதரரிடம் கூறினார்: "நீங்கள், திருமணமானவர், நீங்கள் விபச்சாரம் செய்தீர்கள், ஆனால் நீங்கள் அதை பாவ அறிக்கை செய்ய பயப்படுகிறீர்கள்". ஆராதனையிலிருந்து அவர்களின் வீடு வரைக்கும் , அந்த சகோதரர் எதுவும் பேசவில்லை, ஆனால் அவரது மனைவி தான் அவருக்கு எதிராக கொந்தளித்தாள்.
26 ஆவிக்குரிய வரத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்ட பாவத்தைச் செய்த அவருடைய மனைவி அல்லது கணவனுக்கு எதிராக செல்வது எவருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியின் செயலுக்கு எந்த வாதங்களும் இருக்கக்கூடாது. உங்கள் வலியை நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் உங்கள் கோபம் நீங்கவில்லை என்றால், அதாவது, உங்கள் கணவர் அவர் தான் மறைத்து வைக்கபட்டுள்ள பாவத்துடன் இறந்து நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பியிருப்பீர்கள். ஆவிக்குரிய வரத்தின் மூலம் திரை நீக்கி காண்பிக்கப்பட்ட பாவத்தின் வேறு எந்த வடிவத்திற்காகவும் இதை நான் சொல்கிறேன்.
27 மேலும், ஒரு தீர்க்கதரிசனம் உங்கள் பாவம் அல்லது மோசமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் போது, அடுத்த ஆராதனையில் நீங்கள் அதை பாவ அறிக்கை செய்ய வேண்டும். ஆனால் எங்கே வெளிப்பாடு நிகழ்ந்ததோ அந்த ஆராதனையின் இறுதி வரை நீங்கள் வாதிட்டிருந்தால் அல்லது மறுத்திருந்தால், நீங்கள் அதை மற்றொரு ஆராதனையில் பாவ அறிக்கை செய்யலாம், ஆனால் உங்களுக்காக ஜெபிக்க சபையால் இயலாது.
28 அதே ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 3, 2023 அன்று காங்கோ-கின்ஷாசாவில், தன்னைப் பயன்படுத்திய ஆவி பிசாசு என்பதை ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு சகோதரி, பிரசங்க பீடத்தை கீழே தள்ளிவிட்டு, தீர்க்கதரிசனம் சொல்ல அதன் மீது ஏறினாள். அவளுடைய தீர்க்கதரிசனங்களில், செய்தியிலிருந்து காக்குவ் 9 அகற்றப்பட வேண்டும் என்று அவள் கூறியிருந்தாள்.
29 இன்னும் அபிஷேகத்தின் கீழ், ஆராதனையின் நடுவில், அவளுடைய பரிசுத்த ஆவியை பிசாசு என்று அழைத்த ஒரு சகோதரரை அவள் அடித்தாள். அங்கே ஒரு மூப்பர் கூட இல்லை. ஒரு சபையில் மூப்பரே இல்லை அல்லது போதிய மூப்பர்கள் இல்லை என்றால், தேவைப்பட்டால் பாஸ்டர் மூப்பர் பாத்திரத்தை வகிக்க வேண்டும்.
30 அபிஷேகத்தின் கீழ் உள்ள ஒருவர் பிசாசு என்று அழைக்கப்பட்டால், அவர் கோபமாக அல்லது ஆக்ரோஷமாகினால், அவருடைய பரிசுத்த ஆவி ஒரு பிசாசு. மேலும், உங்களில் பலருக்கு ஆவிக்குரிய பிரத்தியட்சங்களை பற்றி முற்றிலும் பரிச்சயம் இல்லை என்பதை நான் அறிவேன். இது உங்களுக்கு ஒரு புதிய உலகம் ஆனால் பகுத்தறிவுடன் செயல்படுங்கள். ஒரு ஆவி உண்மையான பரிசுத்த ஆவியாகத் தெரியவில்லை என்றால், அதற்குக் கீழ்ப்படியாதீர்கள். உதாரணமாக, அது ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தால், பாட வேண்டாம்.
31 நீங்கள் பார்க்கின்ற அனைத்து மதவாதிகளும் ஆட்டுக்கடாவின் சிறைகளில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். துரதிஷ்டவசமாக, அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியின் செயல்பாடுகளுக்காக ஆட்டுக்கடாவின் செயல்களை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சபையில் இருக்கும் அனைத்துவிதமான பிரத்தியட்ச்சங்களும் தேவனிடமிருந்து வருகிறது. அப்படித்தான் அவர்கள் டொராண்டோ எழுப்புதலையும் வாந்தியெடுத்தல் மற்றும் புனித சிரிப்புசத்தம் மற்றும் பிற சாத்தானிய காரியங்களின் இயக்கத்தை தேவனுடைய எழுப்புதல் என எடுத்துக் கொண்டனர்.
32 அதனால்தான், தூதனை விட வேகமாக செல்ல வேண்டாம். திருச்சபையின் வரலாற்றில், செய்தியே இல்லாமல் பல எழுப்புதல்கள் இருந்தன. பல பெரிய மதவாதிகள், வெளிப்பாடு இல்லாமல், அந்த பொய்யான எழுப்புதல்களால் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் நீங்களோ, வரிசையில் தரித்திருங்கள்! இப்படியாக: "அப்படிப்பட்டவர்களில் செயல்படும் ஆவி பரிசுத்த ஆவியே! அவருடைய வெளிப்பாடுகள் அனைத்தும் உண்மையே! அது பிசாசு என்று தீர்க்கதரிசி ஏன் கூறுகிறார்?" என்று சொல்லாதீர்கள். ஒரு தொலைபேசியானது அதன் உரிமையாளரின் கைகளில் கொண்டுள்ள அதே விளைவை திருடனின் கைகளிலும் கொண்டுள்ளது என்பதை அறியுங்கள்.
33 நீங்கள் எனக்கு முந்தி சென்றால், நீங்கள் வெல்ஷ் எழுப்புதலில் செயல்பட்ட இவான் ராபர்ட்ஸ் போலவும், உங்களோடு அநேகம் பேரையும் கொண்டிருப்பீர்கள், ஆனால் உங்கள் முடிவு நரகமாக இருக்கும். இவான் ராபர்ட்ஸ் இதே அணுகுமுறையை தொடர்ந்து செய்து வரிசையை விட்டு வெளியே சென்றபோது, சாத்தான் அவனுக்கு வெளிப்பாடுகளைக் கொடுக்கத் தொடங்கி அவை அவனுக்கு தேற்றினது, அவன் தொலைந்து போகும் வரை அவன் செய்த தவறில் அவனுக்கு நம்பிக்கை அளித்து கொண்டிருந்தது. பரிபூரண சித்தத்தின் துல்லியமான கனவுகளும், தரிசனங்களும் மற்றும் பிழையில் உள்ள கனவுகளும், தரிசனங்களும் ஏவப்படுதலின் ஒரே மூல ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
34 ஒரு எழுப்புதலில், உண்மையாக சபை நிரப்பப்படுதல், ஜீவிய மாற்றம் மற்றும் தேவனுடைய சித்தத்தின்படி நடப்பது ஆகியவை மூன்று வெவ்வேறு விஷயங்கள். ஜனங்கள் தங்களை முதல் இரண்டிற்கு மட்டுப்படுத்துகிறார்கள், ஆனால் நான் மெதுவாக வெளிப்பாட்டின் வேகத்தில் நகர்வது, அதற்கான காரணம் அதுதான். ஒரு அதிகாரமிக்க மற்றும் நீடித்த எழுப்புதலை நமது பக்குவத்துடன் சந்திப்பதே நிபந்தனைகளாகும், அதன் பின்னரே பரிசுத்த ஆவியானவர் வந்திறங்குவார்.
35 ஆவிக்குரிய வரங்களைப் பெற்றவர்களுக்காக அதிகமாய் ஜெபிக்கும்படி நான் உங்களிடம் கேட்கிறேன். உண்மையான பரிசுத்த ஆவியானவருக்காக தங்கள் குறிசொல்லுதலை எடுத்துக்கொள்பவர்களைப் பற்றியோ அல்லது எல்லா கிரயத்தையும் செலுத்தி தங்களைத் தாங்களே திணிக்க முயல்பவர்களைப் பற்றியோ நான் பேசவில்லை. உங்கள் நலனையோ அல்லது உங்கள் வீட்டின் நலனையோ மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு ஊழியத்தை அடையாளப்படுத்தும் வாகன வகை ஸ்கூட்டர் ஆகும். ஒரு ஸ்கூட்டரில் அதன் ஓட்டுநர் மட்டுமே பயணிக்க முடியும்.
36 தாழ்மையுள்ளவர்களுக்கும், தேவனுக்குப் பயந்தவர்களுக்காகவுமே, நான் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் தூய்மையான மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய எழுப்புதலே நமக்கு தேவை. திருச்சபையின் வரலாற்றில், அங்கே மூன்று ஆண்டுகள் நீடித்த எழுப்புதல்கள் இருந்தன, வேறுபிற எழுப்புதல்கள் ஆறு ஆண்டுகள் வரை நீடித்தன. அசுசா தெரு எழுப்புதல் மூன்று ஆண்டுகள் நீடித்தது. கர்த்தரின் வருகை வரை தொடர்ச்சியான எழுப்புதல்களை நமக்குத் தேவை. எழுப்புதல் மற்றும் ஆவிக்குரிய வரங்களில் நம் குழந்தைகள், மாணவர்கள் கூட கருதுகின்றது.
37 நமது தற்போதைய ஜெபமானது: "கர்த்தாவே, எங்களுக்கு ஆவிக்குரிய வரங்களைத் தாரும்" என்று இருக்கக்கூடாது. இல்லை! மாறாக நமது ஜெபமானது இப்படியாக: "தேவனே, நீடித்த எழுப்புதலுக்கான பகுத்தறிவையும் முதிர்ச்சியையும் எங்களுக்குத் தாரும்" என்று இருக்க வேண்டும்.
38 தேவன் சீனாய் மலையில் இறங்குவதற்கு முன்பு, இஸ்ரவேல் முதிர்ச்சி நிலையடைந்து, மோசே இல்லாமல் முன்னேற முடிந்தது. யாத்திராகமம் 19-இல், மோசே அவர்களிடம், "இப்போது மலையின் அருகில் வாருங்கள்" என்று கூறியிருந்தார். அதற்கு அவர்கள் மோசேயிடம், "இல்லை, நேற்று எங்களை மலையின் அருகில் வர வேண்டாம் என்று சொன்னீர்கள்" என்றார்கள். இன்றைக்கோ, "இல்லை, நேற்றிரவு நாங்கள் மலையின் அருகில் செல்லக்கூடாது என்று சொப்பனம் கண்டோம்" என்று சொல்வதும் அதே காரியம்தான்.
39 சகோதரர்களை சோதிக்கும் பொருட்டு, 2023, டிசம்பர் 7-ஆம் தேதி, எனது ஒப்புதலுடன், சகோதரர் யானிக் 2023-ல் 40 நாள் உபவாசம் இருந்த அனைவரையும் அவர்களின் மொழி குழுக்களில் உபவாசத்தின் சாட்சியங்களை வைக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் அவர்களின் சாட்சியங்களை குழுக்களில் வைத்த பிறகு, அவர்களில் பலரிடம் முந்தைய நாள் அவர்கள் கண்ட கனவுகளை எனக்கு அனுப்பும்படி கேட்டிருந்தேன். மேலும் அவர்களின் கனவுகள் அனைத்தும் அவர்கள் தங்கள் சாட்சியங்களை குழுக்களில் பதிவிடக்கூடாது என்பதைக் காட்டியது.
40 உதாரணமாக, ஒரு அப்போஸ்தலன் என்னிடம் கூறினார், "குழுவில் சாட்சியமளிப்பதற்கு முந்தைய இரவு, ஒரு சகோதரர் என் பிரசங்கங்களால் தனது இரவு அசுத்தங்களுக்குக் காரணம் என்று என்னைக் குற்றம் சாட்டுவதாக நான் கனவு கண்டேன். பின்னர் காட்சி மாறியது, இதோ, நான் ஒரு கால்பந்து மைதானத்தின் முன் ஒரு கட்டிடத்தின் பால்கனியில் ஒரு இளம் பெண்ணுடன் இருந்தேன். இரவு வரவிருந்தது. மேலும் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் முன்னிலையில் நான் அவளிடம் சில பாலியல் தூண்டுதல்களை பயிற்சி செய்யும்படி இருந்தேன், நான் எழுந்து விட்டேன்.”
41 ஒரு வியாக்கியானமாக, அரங்கம் என்பது மொழியின் குழுவாகும். கட்டிடத்தின் பால்கனியில் இருக்கும் பெண் உபவாசம் மேற்கொள்ளும் சபை. வீரர்கள் கருத்து தெரிவிப்பவர்கள், பார்வையாளர்கள் கருத்துகளைப் படிப்பவர்கள். தூண்டுதல் என்பது கருத்து சொல்லும் செயல். மேலும் இந்த ஆலோசனைகள், நோக்குநிலைகள் மற்றும் குழுக்கள் மற்றும் சபைகளில் உள்ள கருத்துக்கள் வெளிப்பாடற்ற அவர்களின் பிரசங்கங்கள் செய்ததைப் போலவே இருளையும் இரவு அசுத்தங்களையும் கொண்டு வருகின்றன. மேலும் ஆட்டுக்கடா மற்றும் வெள்ளாடு இதன் காரணமாக செய்தியில் செயல்படும்.
42 மேலும் குழுவில் தனது சாட்சியத்தை எழுதியிருந்த அவரது மனைவி என்னிடம், "சகோதரர் பிலிப்பு, நான் சொல்ல வருவதைக் தேவன் மன்னிக்கட்டும். நான் ஒரு கனவு கண்டேன், அப்போஸ்தலருக்கும் எனக்கும் இடையே ஏதோ தூண்டுதலை போல ஒரு விரைவான காட்சி". மற்றொரு அப்போஸ்தலரும் அதே கனவை என்னிடம் கூறினார். அவரும் ஒரு அரங்கத்தில் இருந்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? மற்றொரு சகோதரி, "சகோதரர் பிலிப்பு, எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, ஆனால் சாட்சியங்களுக்கு முந்தைய நாள், ஒரு பெரிய கூட்டம் இருப்பதாக நான் கனவு கண்டேன், மேலும் நான் மற்றொரு சகோதரருடன் புதிய திருமண பதிவேட்டில் கையெழுத்திட்டேன் பிறகு நான் விழித்துக் கொண்டேன்.
43 ஆனால் பலரும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர்களில், ஒரு சகோதரர் கூறினார், "சகோதரர் பிலிப்பு, நான் எனது சாட்சியத்தை எழுதியிருந்தேன், ஆனால் அதை குழுவில் பதிவிடும் நேரத்தில், நான் அவ்வாறு செய்வதிலிருந்து தடையாக உணர்ந்தேன்". கனவு காணாதவர்களுக்கு இது பரிசுத்த ஆவியின் செயலாக இருக்கலாம். சிலர், சிறந்த மனநிலையுடன், இந்த தடைக்கு கீழ்ப்படிந்தனர், மற்றவர்கள் கீழ்ப்படியவில்லை.
44 மேலும் கருத்து தெரிவிக்காத ஒரு சகோதரர் என்னிடம், "சகோதரர் பிலிப்பு, சாட்சியங்களுக்கு முந்தைய நாள், கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ எங்கள் இரத்தத்தை தானம் செய்ய வரிசையில் இருப்பதாக நான் கனவு கண்டேன். இரவு வரவிருந்தது. இரத்த தானம் சட்டவிரோதமானது என்று பார்த்தேன், வரிசையை விட்டு வெளியேறினேன், நான் எழுந்தேன். அதனால்தான் நான் கருத்து தெரிவிக்கவில்லை” என்றார்.
45 நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் அப்படித்தான் செயல்படுகிறீர்கள். சில சபைகளில், பலருக்கு இதுபோன்ற அல்லது அத்தகைய பிரத்தியட்ச்சம் பிசாசிடமிருந்து வருகிறது என்பதைக் காண்பிக்கும் சொப்பனங்கள் உள்ளன, ஆனால் அவர்கள் அந்த கனவுகளை புறக்கணித்துவிட்டு, இந்த வெளிப்பாடானது கடவுளிடமிருந்து வந்ததா அல்லது பிசாசிடமிருந்து வந்ததா என்பதை தீர்க்கதரிசி மட்டுமே சொல்ல வேண்டும் என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்கிறார்கள். இது நீங்கள் கைவிட வேண்டிய சாத்தானிய சிந்தனையாகும்.
46 ஒரு எழுப்புதலின் போது, ஒரே ஞாயிற்றுக்கிழமையில், ஒரு சபையில் 20 பிரத்தியட்ச்சங்கள் இருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு நாட்டில் 50 சபைகள் இருந்தால், அது 1,000 பிரத்தியட்ச்சங்களாக இருக்கும். எனவே, பத்து நாடுகளுக்கு, 10,000 பிரத்தியட்ச்சங்கள் இருக்கும். ஒரு மனிதன் ஒரே நாளில் 10,000 பிரத்தியட்ச்சங்களை எவ்வாறு நியாயம் தீர்க்க முடியும்? இன்றைய தினத்தை பொறுத்தவரை, கனவுகள் மற்றும் தரிசனங்களின் மொழியைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.
47 தேவன் நமது சரீரங்களுக்கு கண்களைக் கொடுத்திருக்கிறார் என்றால், தேவன் நம் ஆத்துமாக்களுக்கு கனவுகளையும் தரிசனங்களையும் கொடுத்திருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்வோம். வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நமக்கு வெளிப்பாடு தேவை. கர்த்தராகிய இயேசு கூறினார்: "மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் தாமாய் செய்ய மாட்டார்.”
48 மேலும் வெளிப்பாடானது முன்னேறுகிறதாய் இருக்கிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் இன்று பூமியில் இருந்திருந்தால், அவர் மட்டுமல்ல, ஆனால் ஒவ்வொரு சீஷரும் பிதாவானவர் முதலில் செய்ததை பார்த்தே அவர்கள் செய்ய வேண்டும். அதற்காகத்தான் இன்று தேவன் நம்மை அழைக்கிறார். உங்கள் மத்தியில் ஒரு பிரச்சனை இருக்கும்போது, உங்களை நேசிக்கும் எந்தத் தலைவரும் ஜெபித்து, அவர் தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாட்டின்படி பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை உங்களுக்கு வழங்குவார்.
49 இந்த தலைவர் உங்கள் குழுவிலும் இப்படியாக எழுதலாம், “சகோதர சகோதரிகளே, இங்கே ஒரு சிக்கல் உள்ளது. ஜெபம் செய்வோம், நாளை திரும்பி வந்து தேவன் நமக்கு என்ன வழிகாட்டுதலை வழங்குவார் என்பதை கூறுவோம். மேலும் அடுத்த நாள், இரண்டு முதல் ஏழு பேர் தங்கள் வெளிப்பாடுகளின்படி குழுவில் பேசுவார்கள், மேலும் மக்கள் தெளிவுபடுத்தப்படுவார்கள். யாரேனும் மோசமான நிலையில் பேசியிருந்தால் அவர் அறிக்கையிட வேண்டும். மேலும் மூன்று மாதங்களுக்குள் அவர் அதை மீண்டும் செய்தால், பன்னிரண்டு மாதங்களுக்கு இதே போன்ற வழக்குகளில் அவர் மீண்டும் தலையிடக்கூடாது. எந்தவொரு விவாதத்திலும், வெளிப்பாடில்லாமல் தொந்தரவு செய்யும் அல்லது தொடர்ந்து செயல்படும் எவரும் வெளியே விலக்கி வைக்கப்பட வேண்டும்.
50 நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகளில் உள்ள சகோதரர்களிடம் கேட்கத் தொடங்கும் ஒரு தலைவர் ஒரு இமாம். அவரை ஒதுக்கி வைக்கவும். அதேபோல், உங்கள் குழுவில் ஒரு முக்கியமான பிரச்சனையை விளக்கி , பழைய முறைப்படி, விருப்பம் உள்ளவர் வெளிப்பாடு இல்லாமல் தலையீடு செய்யலாம் என்று உங்களைத் தூண்டிவிட அவர் வந்தால்; அவரை ஒதுக்கி வைக்கவும் . வாக்களிப்பது அல்லது எமோடிகான்களைப் பற்றி உங்கள் தலைவர் பேசுகிற மாத்திரத்தில், அல்லது வெளிப்படுத்துதல்களில் தேர்ச்சி இல்லை என்றால், அவரை ஒதுக்கி வைக்கவும். அவர் சென்று கற்றுக் கொண்டு பிறகு வர வேண்டும்.
51 புதிதாக மனம் மாறியவர்கள் கூட அவர்களின் சொப்பனங்களை புரிந்துகொள்கிறார்கள். ரீயூனியன் தீவில் இருந்து ஒரு புதிய சகோதரர் இருக்கிறார், அவர் இணையத்தில் ஒரு அப்போஸ்தலரின் காணொளிகளை தேடிக்கொண்டிருந்தார். அவர் ஒரு கனவு கண்டார், அதில் இந்த அப்போஸ்தலன் அவருக்கு நேரிலும் கனவிலும் பிரசங்கித்தார், அவர் அப்போஸ்தலரிடம், "இல்லை, நான் செய்தி மற்றும் வேதாகமத்துடன் மட்டுமே தரித்திருக்க விரும்புகிறேன்" என்றார். அவர் விழித்தபோது, அவர் செய்தியை மட்டுமே தனியாகக் கேட்க வேண்டும் என்று புரிந்துகொண்டார் .
52 ஒரு மாதத்திற்குள் ஞானஸ்நானம் பெற்ற ஒரு புதிய சகோதரர் தனது கனவைப் புரிந்து கொள்கிறார் என்றால், பிரசங்கியான உங்களுக்கு தேவனுக்கு முன்பாக எந்த ஒரு சாக்குபோக்கும் இல்லை. வெளிப்பாட்டின் மூலம் மட்டுமே நாம் தேவனுடைய சித்தத்தில் இருக்க முடியும். இது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் நமது இயற்கையான வாழ்க்கைக்கும் பொருந்தும்.
53 இணையம் பூமியை மூழ்கடித்திருக்கும் நேரத்தில், வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இணையத்தை விட வெளிப்பாடு அதன் மேன்மை நிலையைக் காட்ட வேண்டும். உங்களிடம் பேசும் நான், என் அம்மாவின் குழந்தைகளில், என்னுடைய எட்டு மூத்த சகோதர சகோதரிகளில், உயர் இரத்த அழுத்தத்தால் ஒருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார். ஆனால், 50 வயதைத் தாண்டிய எனக்கு ஏன் உயர் இரத்த அழுத்தம் அல்லது வேறு எந்த நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை? வெளிப்பாடே இதற்கு காரணமாகும்.
54 மேலும், "தினை மற்றும் அத்தகைய உணவு மற்றும் பழங்களை சாப்பிடு, ஆனால் அன்னாசி மற்றும் அத்தகைய உணவு மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டாம்" என்று வெளிப்பாடு என்னிடம் கூறும்போது, நான் ஆச்சரியப்படுகிறேன். அது இணையத்தில் எங்கும் காணப்படவில்லை. உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், புரோஸ்டேட், நீரிழிவு நோய் அல்லது மருந்தை எதிர்க்கும் வேறு எந்த நோயாக இருந்தாலும், நான் அதே சாட்சியை கொண்டிருப்பேன். வெளிப்பாடுதான் மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு தவறிழைக்காத ஒரு தீர்வு ஆகும் .
55 தண்ணீர் ஞானஸ்நானம் மற்றும் வெளிப்படையான பாவ அறிக்கை மூலம், தேவன் அவரிடமிருந்து கனவுகளின் கிருபையை நமக்கு அளித்துள்ளார். இந்த வெளிப்பாட்டின் பரிமாணத்தில் பரிசுத்தத்திற்கான நமது தேடலுடன், நமது பரிசுத்த ஆவியும் நமது ஆவிக்குரிய வரங்களும் அவரிடமிருந்து வரும். பரிசுத்த ஆவியின் தன்மை என்பது ஒரு மனிதன் எதை நம்புகிறானோ அதைப் பொறுத்து இருக்கிறது.
56 மேலும் சொப்பனங்கள் மூலம், புத்தியில்லாத கன்னிகள் மற்றும் கலப்பினமக்கள் கூட தங்கள் கனவுகளில் இமாம்கள் தங்கள் பாஸ்டர்கள் மற்றும் பிரசங்கிகள் வெளிப்பாட்டின் பரிமாணத்தில் அவர்களுடன் நுழைய மறுப்பவர்கள் என்பதை அறிவார்கள். எனவே, நம்மிடையே வெளிப்பாட்டின் பரிமாணத்தில் இல்லாத அனைவரும் இஸ்லாமியர்கள் அல்லது கத்தோலிக்கர்கள் ஆவார்கள். அவர்களுடைய தீர்க்கதரிசியான பிரண்காம் அல்லது மொஹமத் காக்குவ் 154-க்கு பிறகு அவர் மலைக்கு ஏறினிதிலிருந்து மரித்துவிட்டார்.
57 பழைய அமைப்பு பழைய ஏற்பாடு அல்லது யூத மதம் போன்றது. மேலும் இப்போது நாம் இருக்கும் வெளிப்பாட்டின் பரிமாணம் புதிய ஏற்பாடு அல்லது கிறிஸ்தவம் போன்றது. மேலும் வெளிப்பாட்டின் தற்போதைய நிலையில், வாக்குகள், எமோடிகான்கள் அல்லது சீட்டு போடுதல் ஆகியவை வஹாபி (Wahhabi) அல்லது சலாபி இஸ்லாமியர்களின் சடங்கோடு கூடிய நீராடுதல் ஆகும். உங்களிடம் வெளிப்பாடு இல்லையென்றால், எதையும் சொல்ல வேண்டாம், எமோடிகான்களை வைக்க வேண்டாம்.
58 மேலும் ஏழு மாதங்களுக்கும் மேலாக செய்தியில் இருக்கும் ஒரு சகோதரர் அல்லது சகோதரி அத்தகைய விஷயத்தைப் பற்றி அல்லது மருத்துவமனையின் முடிவைப் பற்றி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்பது, அது சாதாரணமானது அல்ல. ஒரு சகோதரன் அல்லது சகோதரி தேவனிடம் நேரடியாக கேட்க முடியும்போது அவர்கள் ஏன் உங்களிடம் கேட்கப் போகிறார்கள்? தற்போதைய நிலையில், நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும் போது, என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பதை அறிய நீங்கள் ஜெபம் செய்ய வேண்டும்.
59 மேலும் யாரேனும் ஒருவரை வெளிப்பாடு இல்லாமல் வழிநடத்துகிறாரோ அல்லது ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் இடத்தில் வெளிப்பாட்டைத் தேடுகிறாரோ அவர் பாவம் செய்கிறார். சில சகோதர சகோதரிகள் கடவுளிடம் ஆலோசனை கேட்பதற்காக உங்களிடம் வரும்போது, நீங்கள் ஒரு ஊடகமாக மாறக்கூடும். உங்களைக் கலந்தாலோசிக்க வருபவர்கள் அனைவரும் தங்கள் காலணிகளை உங்கள் காலடியில் வைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது வெளிப்பாட்டின் மேல் அவர்களுக்கு உள்ள வைராக்கியமாகும், அதற்கு நீங்கள் கடவுளிடம் ஒரு கணக்குக் கொடுப்பீர்கள்.
60 இனி முதற்கொண்டு, சபையில் ஒரு பொறுப்பை வகிப்பதற்க்கு முன், உங்களுக்கு ஒரு அடையாளக்குறியீடு தேவை. இங்குள்ள அடையாளக்குறியீடு என்பது பொறுப்பில் இருப்பதற்க்கான உறுதிப்பாட்டுடன் ஒரு தீர்க்கதரிசனத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் யாரோ ஒருவருக்குக் கொடுக்கும் ஆணையின் சின்னமாகும். சபையில் உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கும்போது, அந்த பொறுப்பு தொடர்பான உங்கள் வெளிப்பாடுகளை ஜெபித்து பகுப்பாய்வு செய்யுங்கள்.
61 காக்குவ் 159-ன் படி நீங்கள் பிரசங்கிப்பதை நிறுத்துவதற்கு முன், தேவன் செய்தியின் சபைகளை பாழடைந்த தங்கும் விடுதிகளாக வழங்கினார். ஒவ்வொரு சபைகளும் சில நேரங்களில் ஒரு இளம் விபச்சாரியாக இருந்தது, சில சமயங்களில் ஒரு இளம் விபச்சாரி தனது வாடிக்கையாளர்களைப் பெற்ற ஒரு தங்கும் விடுதியின் அறை. மேலும் தன்னைத் தீட்டுப்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு அவள்தான் பணம் கொடுத்தாள்.
62 மேலும் காக்குவ் 159-க்குப் பிறகு, தேவன் புத்தியில்லாத கன்னிகைகளையும், கலப்பினக் கூட்டத்தையும் அதே இளம் விபச்சாரியாகக் காட்டினார், அவள் தன்னிடம் கவர்ந்திழுக்க முயற்சி செய்த போதிலும், எந்த வாடிக்கையாளரும் வெளிப்பாடு இல்லாமல் பிரசங்கித்து அவளுடன் விபச்சாரம் செய்ய விரும்பவில்லை என்று புகார் கூறினாள்.
63 வெளிப்பாடு இல்லாமல் இந்த விஷயங்களை நீங்கள் எப்படி அறிவீர்கள்? வெளிப்பாடு இல்லாமல் தேவனை பின்பற்ற முடியுமா? நீங்கள் கனவுகளையும் தரிசனங்களையும் புறக்கணித்தால், நீங்கள் கலந்துகொள்ளும் சபை தங்கும் விடுதியோ அல்லது மோசமான இடமோ அல்ல என்பதை எப்படி அறிவீர்கள்? உங்கள் தவறுகளை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்வீர்கள், அதனால் அவற்றை நீங்கள் சரிசெய்ய முடியும்? ஒரு குண்டான அல்லது வலுவான உடலமைப்பு என்பது வெளிப்பாடு இல்லாமல் நடக்கும் ஒரு நபரை அடையாளப்படுத்துகிறார் என்பதையும், உங்கள் தந்தை தீர்க்கதரிசியை அடையாளப்படுத்துகிறார் என்பதையும் நீங்கள் எப்படி அறிவீர்கள்? உங்கள் தலைமுடியின் நிலை உங்கள் மூளையில் உள்ளதை வெளிப்படுத்துகிறது என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?
64 தேவன் மனிதனுக்கு கனவுகளையும் தரிசனங்களையும், அவனுடைய சொந்த உருவத்திலும் சாயலிலும் நிச்சயம் செய்து கொடுக்கிறார். தேவன் மனிதனை கனவுகளுடனும் தரிசனங்களுடனும் படைத்தார், இதனால் மனிதன் ஆவிக்குரிய உலகத்தை நிரந்தரமாக இரவும் பகலும் பார்க்க முடியும். தேவன் மனிதனைப் படைத்தபோது ஒவ்வொரு மனிதனுக்கும் பட்டப்பகலில் தரிசனங்களைக் காணும் திறனைக் கொடுத்தார். ஆனால் ஏதேனில் இருந்த பாவம்தான் கனவுகளை தரிசனங்களுக்கு மேலாக வைத்தது.
65 மேலும், மனித வரலாற்றில் சில சமயங்களில், இந்த சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களின் திறன் மூலம் தான் தீர்க்கதரிசிகள் தங்கள் ஜனத்தாரை தேவனிடம் வழிநடத்திச் சென்றனர். வேதாகமம் மற்றும் தோராவும் அதற்கு சாட்சியளிக்கின்றன. நேர்மையுடன், எந்தவொரு மதத் தலைவரும் கனவுகள் மற்றும் தரிசனங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, கத்தோலிக்க மதம் ஒரு காலத்தில் மனிதகுலத்திடமிருந்து வேதாகமத்தை பறித்தது போல, அவை மனிதனிடமிருந்து பறித்துவிட்டன.
66 உங்களின் சில பிரத்யட்சங்களை நான் பார்த்தபோது, அவை மிகவும் அற்புதமாக இருந்தன, அந்த வெளிப்படுதல்கள் தேவனிடமிருந்து வந்தவை என்று நினைத்து மனதில் சில போராட்டங்கள் ஏற்பட்டன. நான் என்ன செய்தேன்? நான் ஜெபித்தேன், வெளிப்பாட்டின் மூலம் வரங்கள் உண்மையானவை என்பதை நான் அறிந்தேன், ஆனால் அவற்றின் பின்னால் உள்ள ஆவிகள் பிசாசு. அதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பாட்டின் படி உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்.
67 ஓ "நான் கண்ட கனவின் வியாக்கியானத்தை நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, மற்ற கனவுகளையும் காண்கிறேன்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். சரி, ஆனால் நீங்கள் பள்ளியில் படிக்கும் போது, நீங்கள் பாடங்களை நகலெடுப்பீர்கள். நீங்கள் அவற்றைப் படித்து முடிக்கவில்லை, மேலும் சிலவற்றை நகலெடுத்துள்ளீர்கள். கவலைப்பட வேண்டாம்! நீங்கள் கனவுகளில் காணும் தவறுகளை சரி செய்யும்போது கனவுகள் மறைந்துவிடும்.
68 மேலும், ஒரு குறுகிய காலத்தில், பரிசுத்த ஆவியானவர் உங்கள் முன் தீர்க்கதரிசனத்தின் மூலம் சொப்பனங்களையும் தரிசனங்களையும் தத்ரூபமாக வியாக்கியானிக்க முடியும். இந்த வரங்கள் ஏற்கனவே நம்மிடையே வேலை செய்கின்றன, மேலும் காபோனின் சகோதரி ஒரு சிறந்த உதாரணம்.
69 குறிப்பேடுகள் அல்லது வெளிப்பாட்டின் பதிவேடுகளைப் பொறுத்தவரை, இது உங்கள் தொலைபேசியில் உள்ள செயலியின் பயன்பாட்டில் உருவாக்கப்பட்ட இடம் ஆகும். மேலும், இது உங்கள் தனிப்பட்ட பதிவேடாக இருந்தால், இந்த இடத்தில் நீங்கள் தனியாக இருப்பீர்கள் அல்லது சபையின் பதிவேடாக இருந்தால் பதிவேட்டை வைத்திருக்கும் மற்றவர்களுடன் நீங்கள் இருப்பீர்கள்.
70 பாஸ்டர்கள்கள் மற்றும் பிரசங்கிகள் இருக்க முடியும். மேலும் ஒரு சகோதரன் அல்லது சகோதரி, அவ்வாறு விரும்பும் ஒருவர் ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு அதைக் கலந்தாலோசிக்க முடியும். குறிப்பாக அன்னிய பாஷைகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் பேசுவதற்கான விவரங்களுடன் கூடிய எழுத்து உரைகள் மற்றும் ஒளிநாடாவை பதிவேட்டில் பெறலாம், இவை அனைத்தும் எழுப்புதலுக்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாகும்.
71 நல்லது. 2022-ம் ஆண்டில், ஒரு சகோதரி ஒரு சொப்பனத்தில், ஒரு மனிதன் வானத்தில் ஒரு ஆட்டுக்கடா மீது அமர்ந்திருப்பதைக் கண்டாள், மேலும் ஆட்டுக்கடா பூமியை நோக்கி விரைகிறது. மேலும் அறியாத மொழியில் நான்கு வரிகளை எழுதிக் கடந்ததுச் சென்றது. முதல் வரி 2021-ல் முடிந்தது. இரண்டாவது வரி 2022-ல் முடிந்தது. மூன்றாவது வரி 2023-ல் முடிந்தது. நான்காவது வரி 2024-ல் முடியும்.
72 மேலும் டிசம்பர் 2, 2023 அன்று தூதனிடமிருந்து நான் பெற்ற அறிவுறுத்தலின் படி, பரிசுத்த ஆவியின் இறங்குதல் மற்றும் ஆவிக்குரிய வரங்களின் பிரத்தியட்சங்கள் இந்த ஆண்டு 2023-இன் இறுதி மற்றும் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் இருக்காது.
73 இருப்பினும், 30 நிமிட ஜெபத்தைத் தொடரவும். மேலும், ஆட்டுக்கடா அல்லது வெள்ளாடு எங்கு செயல்பட்டாலும், உங்கள் சபைகளில் அமைதி திரும்பும் வரை அதற்கான காரணங்களைக் கண்டறியவும் தீர்வுகளைக் கண்டறியவும் சபைகள் அமைதியாகக் கூட்டங்களை நடத்த வேண்டும். காங்கோ-கின்ஷாசாவில் உள்ள இடூரி மாகாணத்தில் சகோதரி அமினா ஆட்டுக்கடா மூலம் செயல்படும் போது, அதற்கான காரணம் அவரிடமிருந்து வர வேண்டிய அவசியமில்லை. காரணம் பாஸ்டர் அல்லது சபையில் இருந்து வரலாம்.
74 மேலும் முன்னெச்சரிக்கைக்காக, ஆட்டுக்கடா அல்லது வெள்ளாடு செயல்படாத இடங்களிலும் இந்த கூட்டங்களை நடத்தலாம். இது முக்கியம். கூட்டங்களில், இன்ன இன்ன நபர் எழுந்து நின்று தளத்தை எடுத்துக் கொண்டு, செய்தியில் உள்ள ஆட்டுக்கடா அல்லது வெள்ளாட்டின் பிரத்தியட்சங்கள் தொடர்பாக அவர் பெற்ற வெளிப்பாடுகளின் படி காரணம் அல்லது தீர்வைக் கூறுவார்.
75 ஒரு சுவிசேஷ அல்லது அஞ்ஞான ஆராதனை முறையின் சூழ்நிலையில் தியானம் அல்லது ஆராதனை பாடல்கள் நடைபெற்றால் ஆட்டுக்கடா அல்லது வெள்ளாடு செயல்பட முடியும்; அதுதான் நீங்கள் வெள்ளாட்டுக்கு நீடிக்க வைக்கிறதான அழைப்பு. உங்கள் தொலைபேசிகளில் பரிசுத்த ஆவியால் உந்தப்படாத ஆசாரியத்துவத்தின் சில பிரசங்கங்களை நீங்கள் வைத்திருந்தால், ஆட்டுக்கடா அல்லது வெள்ளாட்டை செய்தியில் செயல்படுவதற்கு நீங்கள் அழைக்கிறீர்கள்.
76 தேவன் மீதான உங்கள் அன்பை விட உங்கள் மனைவி அல்லது உங்கள் குழந்தைகள் மீதான உங்கள் அன்பு அதிகமாக இருந்தால் ஆட்டுக்கடா அல்லது வெள்ளாடு செயல்பட முடியும். மேலும், செய்தியை நம்பாத உங்கள் மகளுக்கு நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ, உங்களைப் போன்று செய்தியை உண்மையாக நம்பி வாழும் ஒரு ஏழை இளம் சகோதரிக்கு நீங்கள் கொடுப்பதற்கு மறுக்கக் கூடாது.
77 ஒரு சகோதரர் அல்லது சகோதரி மற்றவர்கள் மீது அல்லது ஒரு சபை, ஒரு குடும்பம், ஒரு ஜனக்கூட்டம் அல்லது வேறொரு நாடு மீது அவமதிப்பு அல்லது அவர்களை விட உயர்ந்தவர் என்ற உணர்வு இருந்தால் ஆட்டுக்கடா அல்லது வெள்ளாடு செயல்பட முடியும்.
78 சம்பளம் வாங்கும் ஒரு பாஸ்டர் அல்லது பிரசங்கி என்பவர் ஒரு தொலைபேசி மையத்தின் மேலாளர் ஆவார், அவர் செய்தியில் செயல்பட ஆட்டுக்கடா அல்லது வெள்ளாட்டை அழைக்கிறார். காரியதரிசிகளிடம் பணத்தை விட்டுவிட்டு உங்கள் தேவைக்கேற்ப கேளுங்கள்.
79 தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகள் தேவனுடைய பணம். மேலும் காரியதரிசிகள் இந்த பணத்தை வெளிப்பாட்டின் மூலம் நீதியுடன் நிர்வகிக்க வேண்டும், அதனால் ஆட்டுக்கடா உங்களிடமிருந்து விலகி இருக்கும். தேவனின் பணம் தேவனின் பணிக்காக இருக்க வேண்டும் மற்றும் சரீர காரியங்களுக்காக பணத்தை பயன்படுத்தக்கூடாது.
80 2002-ல், எனக்கு திருமணம் ஆகி இருந்தது மற்றும் வாடகை பாக்கியை செலுத்தவேண்டியிருந்தது. என்னிடம் உணவும் இல்லை மற்றும் விசுவாசியும் இல்லை. ஆனால் அவை இருந்த போதிலும், எனது முழு நேரத்தையும் தேவனுக்கு கொடுக்க முடிவு செய்தேன். நான் எனது நேரத்தை தேவனுக்கும், சீசருக்கும் இடையில் அல்லது தேவனுக்கும் தனிப்பட்ட வேலைக்கும் இடையில் வகுக்கவில்லை. எனவே, உங்கள் எல்லா சாக்குகளும் கடைசி நியாயத்தீர்ப்பின் போது தேவனின் முன் நிற்காது. நம்முடைய குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தேவன் பொறுப்பல்ல, மேலும் தேவன் நம்மீது உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை திணிக்கவில்லை.
81 அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் இப்போது உங்களைத் தேர்ந்தெடுத்தால், உங்களை முழுமையாக அவருக்குக் கொடுங்கள். யாரோ ஒருவர் தேவனின் பணிக்காக அர்ப்பணிக்கப்படாவிட்டால், தீர்க்கதரிசனத்தின் மூலம் அவர் ஒரு பிரசங்கியாக இருக்கலாம், ஆனால் அவர் காரியதரிசிகளை அணுகக்கூடாது. நீங்கள் தேவனால் பணம் செலுத்துப்படும் ஒப்பந்தக்காரராக இருந்தால், நீங்கள் எந்த பரலோகத்திற்கு செல்வீர்கள்? வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கடாவை செய்திக்கு அழைக்காதிருங்கள்!
82 ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி பணம் அல்லது பொருள் வசதிகளைக் கொண்டிருந்து மற்றும் தேவனின் பணியை ஆதரிக்காதவர் ஒரு சுயநலவாதி அல்லது அவர் வைத்திருப்பது அவருடைய தனிப்பட்ட சொத்து என்றாலும் பொதுவான சொத்துக்களை திருடுபவர். அவர் இவ்வாறு வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கடாவை செய்திக்குள் அழைக்க முடியும்.
83 ஆனால், யாரோ ஒருவரின் கனவு உங்களை தேவனுக்கு ஒரு நன்கொடை கொடுக்கும்படி சொன்னால், நீங்கள் செயல்படுவதற்கு முன் அவரது கனவை உறுதிப்படுத்தும் ஒரு கனவைப் பார்ப்பது உங்கள் உரிமையாகும். ஏனென்றால், வெளிப்பாடு இல்லாமல் தேவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புவதன் மூலம், உங்கள் உடைமைகளை செம்மறியாட்டுத்தோல் போர்த்திய திருடர்களின் கைகளில் நீங்கள் வைக்கக்கூடும்.
84 தேவனுடைய ஒவ்வொரு ஊழியக்காரரும் சம்பளத்திற்காக தேவனுக்கு ஊழியம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு அடிமைக்கு சம்பளம் இல்லை, ஒரு மகன் தன் தந்தைக்கு சம்பளத்திற்காக ஊழியம் செய்வதில்லை. கடாட்ஜியில் உள்ள தேவைகளுக்கு, ஏற்கனவே உள்ளதைப் பொறுத்து, சகோதரிகள் என்ன பற்றாக்குறை அல்லது என்ன தேவைகள் என்பதை மதிப்பிடுகிறார்கள். அதைத்தான் அவர்கள் பொருளாகவும், பணமாகவும் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் பெறுகிறார்கள். காரியதரிசிகள் ஒவ்வொரு பக்தியற்ற ஆசாரியரையும் மீண்டும் வார்த்தைக்கு கொண்டு வர வேண்டும்.
85 காரியதரிசிகள் பகுத்தறிவு மற்றும் வெளிப்பாட்டுடன் செயல்பட வேண்டும். மேலும், வெளிப்பாடு அவர்களுக்கு என்ன சொல்கிறதோ அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும் எனவே ஆட்டுக்கடா மற்றும் வெள்ளாடு செயல்படாதிருக்கும். மேலும் இது செய்தியில் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் பொருந்தும், இதனால் சபைகள் ஆட்டுக்கடா மற்றும் வெள்ளாடுகளை ஈர்க்கும் தொலைபேசி-மைய சபைகளாக ஆகாமல் இருக்கும்.
86 ஒரு தொலைபேசி-மைய சபை என்பது நேர்மையற்ற மக்கள் கடனில் சிக்குவதற்கு அல்லது மேலாளர் அல்லது சில வாடிக்கையாளர்களின் தாராள மனப்பான்மையை துஷ்பிரயோகம் செய்யச் செல்லும் இடமாகும். உங்கள் பாஸ்டர்கள் சபைகளை தங்கள் வணிகங்கள் அல்லது தொலைபேசி மையங்கள் போன்று நிர்வகித்தால், ஆட்டுக்கடா மற்றும் வெள்ளாடு உங்களை விட்டு ஒரு போதும் விலகாது.
87 இப்போது, உங்கள் காணிக்கை பெட்டியில் அதிக பணம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஜெபியுங்கள், தேவன் உங்களை வழிநடத்துவார். உங்கள் நாடுகளிலோ அல்லது பிற நாடுகளிலோ சுவிசேஷக் களத்தில் அயராது உழைக்கும் பெட்ரோ அலிக்சோ, ஜோயல் கஷாலா, பிளான்சார்ட் மொசிலி மற்றும் ஜோயல் பாசிலேபோ போன்ற தைரியமான சகோதரர்கள் உள்ளனர்.
88 இரண்டாவது சுவிசேஷம் தொடங்கும் போது, பணமானது தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மற்றும் பாஸ்டர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் மற்றும் அவர்களின் சுவிசேஷக் குழுக்களுக்குச் செல்லும். உங்களிடம் ஆவிக்குரிய வரங்கள் இல்லையென்றாலும், நீங்கள் இன்னுமாக வெளிப்பாட்டின் மூலமாக மட்டுமே நடக்க வேண்டும். மேலும், குழுக்களில் இருக்கும் சகோதர சகோதரிகள் தங்களைச் சுற்றியோ அல்லது அவர்களின் சுவிசேஷக் குழுக்களிலோ தவறான சகோதரர்கள் எவரும் இல்லை என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.
89 மேலும், பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வந்திறங்குவதற்கு முன்பு நீங்கள் 50 அல்லது 100 பேர் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஐந்து நபர்களிடமிருந்து ஒரு மாபெரும் ஆவிக்குரிய வரமானது வெளிப்படும். அசுசா தெரு எழுப்புதலானது வில்லியம் சீமோர் மற்றும் ஒரு சிலருடன் ஒரு வாழும் அறையில் தொடங்கியது. அவர்கள் அசுஷா தெருவின் கட்டிடத்திற்குள் போவதற்கு முன்பாகவே பரிசுத்த ஆவியானவர் அசுசா தெருவின் கட்டிடத்தில் வந்திறங்கத் தொடங்கினார் .
90 ஆவிக்குரிய வரங்களைப் பெறப்போகிற நீங்கள், பரிசுத்தத்தைத் தேடுவதில் அயராது இருங்கள், இதனால் உங்களின் வரங்கள் கூர்மையாக்கப்படும். அஞ்ஞான நண்பர்களை கொண்டிருக்காதீர்கள் அல்லது அஞ்ஞானிகளுடன் பேசாதீர்கள். மோசமான ஆடை அணிந்த பெண்களையோ, பாவத்தை காணக்கூடிய இடங்களையோ நீங்கள் கண்டால் அவற்றை தவிர்த்து விடுங்கள்.
91 வெளிப்பாட்டின் மூலம் மட்டுமே ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்பது அவசியம். உறுப்பினர்கள் குற்றமற்றவர்களாகவும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதில் ஆவிக்குரிய வரங்களை கொண்ட அநேகர் இருக்க வேண்டும். உங்கள் ஊழியத்தை செயல்படுத்துவதில், நீங்கள் அவசரப்பட்டு செயல்படக்கூடாது.
92 அது ஒரு தீர்க்கதரிசினியாக இருந்தால், இனி முதற்கொண்டு தேவன் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இருக்கிறார் என்பதை அவரது கணவர் அறிந்திருக்க வேண்டும். மேலும் அவர் தனது மனைவிக்கு உதவ வேண்டும், பாலியல் மற்றும் வாக்குவாதங்களால் அவளைத் தீட்டுப்படுத்த முயலக்கூடாது. அவர்கள் இருவரும் தங்கள் வரம்புகளை அறிய வெளிப்பாட்டின் மூலம் நடக்க வேண்டும்.
93 ஒரு எழுப்புதலானது வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மற்றும் போலிகளானது அதை எடுத்துக்கொண்டு அதன் தொடக்க வரியிலிருந்து திசை திருப்பும். மேலும் ஒரு முழு சபையும் நடத்தைகள் மற்றும் சத்தங்கள் மற்றும் விலங்குகளின் அழுகைகளுடன் மயக்கத்தில் இருக்கும்; பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்வதில்லை.
94 வன்முறையில் கிளர்ச்சி செய்யும் எந்த ஆவியும் தீய ஆவியாகும். நம்முடைய காலத்தின் மாதிரியானது காக்குவ் 153: 64 முதல் 66 வரையில் விவரிக்கப்பட்டுள்ளபடி அசுசா தெருவாகும், ஒரு ஒழுங்கீனமான உணர்ச்சி வசப்படுதல் அல்ல. மேலும் அந்த சாத்தானின் செயல்களை திரை நீக்கி காண்பிப்பது கனவுகள் மற்றும் தரிசனங்களாகும்.
95 ஒரு உண்மையான எழுப்புதலில், ஆவிக்குரிய வரங்கள் துல்லியமானவையாக, மற்றும் பரிசுத்தமாக்கப்படுதல் ஒரு உடனடி அனுபவமாகவும் மாறும், இது காலத்தின் சோதனைக்கு நிற்கும் மன மாறியவர்களை உருவாக்குகிறது. பின்னர் தேவன் தம்முடைய சித்தத்தைச் செய்ய நம்முடைய சிறிய சபைகளைப் பயன்படுத்துவார். இதனால்தான் வேதாகமத்திலும் திருச்சபையின் வரலாற்றிலும் விவரிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வரிசையிலிருந்து நாம் விலகக்கூடாது.
96 ஆனால் நாம் எதிரெழுகிறவர்களாக இருந்தால், செம்மறி ஆட்டுக்குட்டிக்குப் பதிலாக வெள்ளாட்டையும் ஆட்டுக்கடாவையும் பெறுவோம். மற்றும் அனைத்துவிதமான போலிகளும் அனுமதிக்கப்படக்கூடிய ஒரு எழுப்புதலையே நாம் கொண்டிருப்போம். மேலும் நாம் பார்க்கும் பிரத்தியட்சமானது உணர்ச்சியினால் உண்டானதா, பாசாங்குத்தனமானதா, பிசாசினால் உண்டானதா அல்லது தேவனால் உண்டானதா என்று நமக்கு தெரியாது. அதுவே சாத்தானின் வெற்றியாகவும் இருக்கும்.
97 அதனால்தான் நாம் சாத்தானின் அனைத்து சோதனைகளையும் தந்திரங்களையும் வென்று, செய்தியின் ஒவ்வொரு வார்த்தையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உதாரணமாக, உங்களிடம் பேசும் நான், யாராவது என்னிடம் பேசும்போது அல்லது எனக்கு ஆடியோ அல்லது குறுஞ்செய்தியை அனுப்பி அதில் நான் இப்படி, பார்த்த அல்லது கேட்ட மாத்திரத்தில்: "என் முழங்கால்களில், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...", நான் உடனடியாக கேட்பதை அல்லது படிப்பதை நிறுத்துகிறேன். மேலும் நான் பதில் சொல்வதில்லை. இது காக்குவ் 159:95-இல் தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் அதைச் சொல்பவர் நீங்கள் பாவம் செய்யும்படி விரும்புகிறவராகும்.
98 இப்போது எனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப் கணக்குகள் மற்றும் பிறவற்றை நீக்கிவிட்டேன். நான் இனி சமூக வலைதளங்களில் இல்லை. எனது ஆவிக்குரிய தரமானது அவைகளை இனியும் வைத்திருக்க அனுமதிக்காது. கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்திருந்தால் அவர் பேஸ்புக்கை கொண்டிருக்க மாட்டார். மேலும் நான் கைப்பேசியின் உபயோகத்தை மேலும் குறைக்க உள்ளேன்.
99 மேலும் இணையத்தில் எங்களின் தவறான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகள் மற்றும் எங்களுடைய அனைத்து அவமதிப்பு மற்றும் ஆணவ வார்த்தைகளுக்காக தேவனிடமும் மனுக்குலத்திடமும் மன்னிப்பு கேட்கிறோம்.
100 மேலும் எனது ஆடியோ பிரசங்கங்கள் பிரெஞ்ச் மொழி உட்பட அனைத்து மொழிகளிலும் பின்னணியில் மட்டுமே வைக்கப்படும் என்று முடிவு செய்துள்ளேன், இதனால் பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சிறப்புரிமையாகவும் மற்றும் தயவாகவும் இருக்கும்.
101 ஆடியோதான் அசல் மற்றும் என்னுடைய குரல்தான் கையெழுத்து. மோசேயிலிருந்து, பத்மு தீவில் இருந்த யோவானைப் போலவே, தீர்க்கதரிசிகள் தாங்கள் எழுதியவற்றுடன் சேர்க்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்கள். ஆனால் இன்று, ஒலிப்பதிவுடன், நான் கூறிய எல்லாவற்றிலும் ஆடியோதான் அசல் மற்றும் என் குரல்தான் என் கையெழுத்து.
102 சமூக வலைதளங்களில் இருந்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் விலகுவதைப் பார்க்கும் அஞ்ஞானிகளால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இது டிசம்பர் 26, 2004 அன்று தெற்காசியாவின் கடற்கரைகளில் இருந்து இந்தியப் பெருங்கடலின் நீரானது உள்வாங்கியதைப் போன்று இருக்கிறது.
103 இது இணையத்தில் சுத்தம் செய்யப்பட வேண்டும், ஆனாலும் நம்முடைய தொலைபேசிகள், கணினிகள், பேனா சேமிப்பகம் (Pendrive), வன் தட்டு (hard drives) மற்றும் பிற சேமிப்பக இடங்களிலும் இருக்க வேண்டும். உங்கள் வீடு, உங்கள் சாமான்கள் மற்றும் உங்கள் உடல் மற்றும் மெய்நிகர் ஆவணங்களை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். உங்கள் சரீரம் மற்றும் மெய்நிகர் நண்பர்களையும், உங்கள் வீட்டில் அல்லது உங்கள் பாதுகாப்பின் கீழ் இருப்பவர்களின் நடத்தையையும் நீங்கள் ஒழுங்கமைக்க வேண்டும். அவர்கள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக்கடாவுக்கு ஆதரவாளர்கள்.
104 இது பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு நம் ஜீவியத்தை கழுவுவதாகும். இந்த அழுக்கு மற்றும் அழுகிய, பாவம் நிறைந்த உலகில் பரிசுத்தம் சாத்தியமாகும். பரிசுத்த தூதர்கள் தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு, இரவும் பகலும் " கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!" என்று சத்தமிடுகிறவரைப் பெறுவதற்கு, நம் வாழ்க்கையைத் பெருக்கி துடைத்து சுத்தப்படுத்துவோம்.
105 பரிசுத்த ஆவியின் வருகை நிபந்தனைக்குட்பட்டது. முதலில் மணிவேளையின் வார்த்தை, பிறகு தண்ணீர் ஞானஸ்நானம், பிறகு பரிசுத்தமாக்குதல் மற்றும் இறுதியாக பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள வார்த்தை. பிறகு யோவான்ஸ்நானன் தண்ணீரால் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். பின்னர் பரிசுத்த ஆவியான புறா அவர் மீது இறங்குகிறது.
106 மனந்திரும்புதல் என்பது ஒருவருடைய நேரத்திற்கு கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்வதும், பரிசுத்தத்திற்காக இந்த செய்தியின்படி நடப்பதும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த பயத்துடனும் பரிசுத்தத்துடனும் தான் நாம் எழுப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
107 பத்து கன்னிகைகளின் இந்த எழுப்புதலுக்காக நாம் பயத்துடனும் நடுக்கத்துடனும் காத்திருக்கிறோம். நமக்குத் தேவையான ஆவிக்குரிய வரங்களை அறிந்தவர் தேவன் தான். எப்பொழுது, எந்த நோக்கத்திற்காக அவற்றை நமக்குத் தருவார் என்பதை அவர் அறிவார். பாலைவனத்தில் இருந்த யூதர்களைப் போல நாம் சோர்ந்து போகாமல் முணுமுணுக்க வேண்டாம்.
108 பத்து கன்னிகைகளின் எழுப்புதலின் நற்செய்தியை வல்லமையுடன் பிரசங்கிக்க நூற்றுக்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகள் மற்றும் தீர்க்கதரிசினிகளின் வெளிப்படுத்துதல் மற்றும் வல்லமையுள்ள வரங்களை எதிர்பார்க்கிறேன். யோசுவா மற்றும் காலேப்-ஐ போல சித்தமும் விசுவாசமும் உள்ள அனைவரும் கடவுளின் மகிமையைக் காண்பார்கள்.
109 மேலும் சில வெளிப்படுத்தல்களின்படி, இந்த எழுப்புதலில் தீர்க்கதரிசன நடபடிகள் இருக்கும். பகைவர்களும் கேலி செய்பவர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையால், யாரும் அவர்களைத் தொடாமலேயே நம் முன் பயங்கரமாக விழுவார்கள். மற்றவர்களோ அவர்கள் விழுகையில் 1 சாமுவேல் 5-ல் யெகோவாவின் உடன்படிக்கை பெட்டியை எதிர்கொண்ட தாகோனைப் போல முகங்குப்புற விழுவார்கள்.
110 தேவன் தெருக்களை சபைகளாக மாற்றுவார், தேவனுடைய அதிசயங்களைக் கேட்க திரளான மக்கள் கூடுவார்கள். தெருவின் நடுவில், மக்கள் இவ்விதமாக: "நீ இங்கே இருக்கிறாய், இன்ன இன்ன உன்னுடைய பெயர் ! உனக்கு இப்படிப்பட்ட நோய் இருக்கிறது; இன்று தேவன் உன்னைக் குணமாக்குகிறார், உன் குணமாகுதலைப் பெற்றுக் கொள்! நீ அங்கே இருக்கிறாய், நீ இப்படிப்பட்ட பாவங்களைச் செய்தாய்; இந்த மோசமான வாழ்க்கையை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றும் படியாக தேவன் இன்று உனக்கு சொல்லுகிறார்" என்பதை கேட்பார்கள். உலகமானது தேவனுடைய அற்புதங்களைக் காணும் அல்லது கேள்விப்படும், மேலும் அநேகர் இரட்சிக்கப்படுவார்கள்.
111 இவைகள் நடக்கும் போது, சகோதர சகோதரிகளே, எதுவும் பேசாதீர்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு அற்புதத்தைக் கண்டால், மக்களுடன் பேசத் தொடங்காதீர்கள். அற்புதத்தைச் செய்த பரிசுத்த ஆவியானவர் தாமே இதயங்களைத் தொடுவார். இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்கும்பொழுது, அவர்களைச் செய்திக்கு நேராக வழிநடத்தி, உடனடியாக அமைதியாக இருங்கள்.
112 விரைவில் நடுராத்திரி சத்தத்தின் அத்தியாயங்கள் நம் காலத்தில் பூமியில் தேவனுடைய அற்புத சாட்சியங்களின் அத்தியாயங்களாக இருக்கும். இன்று, டிசம்பர் 24, 2023 அன்று, கடவுளின் இந்த பிரித்தியட்சங்களை எந்த வகையிலும் எதிர்ப்பவர்களுக்காக நான் உரையாற்றுகிறேன். நீங்கள் ஒரு எளிய நபராக இருந்தாலும், ஒரு மதவாதியாக இருந்தாலும், ஒரு போலீஸ்காரராக இருந்தாலும், ஒரு நீதிமன்றத்தின் மனிதராக இருந்தாலும் அல்லது வேறு ஒருவராக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எதுவாக இருந்தாலும், கடவுளின் இந்த செயலை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், நீங்கள் ஒதுங்கி நிற்க வேண்டும்.
113 பூமி கடவுளின் படைப்பாக இருப்பதால், இந்த எழுப்புதலை எந்த மனிதனும், எந்த அரசும், எந்த அதிகார வரம்பும் எதிர்த்துப் போராடக்கூடாது, ஜனங்களை பிரியப்படுத்தும்படி அழுக்கு வாழ்க்கையிலேயே ஒருபோதும் அவர்களை விட்டுவிடக்கூடாது. தெருக்களில், சிலர் காக்குவ் பிலிப்புவின் சீடரைப் பார்க்க விரும்புவார்கள், மற்றவர்கள், அவர்களின் மோசமான வாழ்க்கையின் காரணமாக, அவர்கள் வழிகளில் தங்களை கண்டுபிடிக்க விரும்ப மாட்டார்கள்.
114 மேலும் என்னில் விசுவாசமாய் இருப்பவர்களே, தேவன் பொறுமையாக இருப்பது போல் பொறுமையாக இருங்கள். பத்து கன்னிகைளின் எழுப்புதலுக்கு நாம் செல்வோம். நமது சபைகளின் கதவுகள் நுண்ணாய்வு கருவிகளைப் (ஸ்கேனர்களை) போல இருக்கும். ஒருவர் வாசலின் ஊடாக நடந்த மாத்திரத்திலேயே அவருடைய வாழ்க்கை வெளிப்படுத்தப்படும். ஆவிக்குரிய வரங்கள் வெளிப்படையான பாவ அறிக்கையை கண்காணிக்கும்.
115 இன்னும் கொஞ்சம் காலத்திற்குள், நாம் எதிர்பார்க்காத இடத்திலிருந்து மாபெரும் ஆவிக்குரிய வரங்கள் வெளிவரும். சில வெளிப்பாடுகளின்படி, எழுப்புதலின் போது, தெருக்களிலும், பொது இடங்களிலும் கூட, ஆவிக்குரிய வரங்கள் பரிசுத்த ஆவியானவரால் செயல்படும் மற்றும் வாழ்க்கையானது வெளிப்படுத்தப்பட்டு மக்கள் குணமடைவார்கள்.
116 இந்த ஆவிக்குரிய வரங்களை கொண்டிருக்கிற நீங்கள், ஆண்களோ அல்லது பெண்களோ, உங்கள் ஊழியத்தை பயமின்றி சிறப்பாகச் செய்யுங்கள். இருபது வருடங்களாக நான் தெருக்களிலும் சபைகளிலும் பயமின்றி நியாயத்தீர்ப்பைப் பிரசங்கித்தேன். நீங்களும் பயமின்றி வீதிகளிலும் சபைகளிலும் நியாயத்தீர்ப்பைப் பிரசங்கித்தீர்கள். இதே ஆவியில்தான், பயமில்லாமல், உங்கள் ஆவிக்குரிய வரங்களை பிரத்தியட்ச படுத்த வேண்டும். தேவன் உங்களை ஜெபிக்க அல்லது தீர்க்கதரிசனம் சொல்ல எங்கு அனுப்பினாலும், பயப்பட வேண்டாம். தூதனும் ஆட்டுக்குட்டியுமான, சர்வவல்லமையுள்ள தேவன் உங்களோடு இருப்பார்.
117 பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குச் சொல்வதை, ஆராதனையில் அல்லது ஆராதனைக்கு வெளியே, அது எங்கிருந்தாலும், அச்சமின்றி சொல்லுங்கள். ஆராதனையிலும், வீட்டிலும், தெருக்களிலும், வேலையிலும், பள்ளியிலும், எல்லா இடங்களிலும் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவார். இந்த அற்புதங்களின் மூலம் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்படுவார்கள் அதே வேலையில், பிசாசின் புத்திரர்கள் அதற்கு எதிராக சண்டையிடுவர். சமூக வலைதளங்களும் ஊடகங்களும் ஜனங்களும் இதைப் பற்றி பேசுவார்கள்.
118 பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும்போது , ஒரு சகோதரர் அல்லது சகோதரி ஒரு சபைக்குள் நுழைந்து, சபை உறுப்பினர்களைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லவும் அறிவை உணர்த்தும் வார்த்தைகளை வழங்க தொடங்கும் போது என்ன நடக்கும்? இந்த சபை உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் கூடிவருவது தேவனுக்காக என்றால், வெளிப்பாட்டிற்கு பிறகு அவர்கள் எழுந்து நின்று அவர்கள் மத்தியில் வந்ததற்காக தேவனை மகிமைப்படுத்துவார்கள். மேலும் அந்த சபையில் எழுப்புதல் தொடங்கும். வெளிப்படுத்தல்களின்படி, ஒருமுறை நடுராத்திரி சத்தமானது பிசாசின் மயமாக்கப்பட்ட இடத்திலே நாம் பிரசங்கிப்போம்.