en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 177 (Kc.177) : ஆவிக்குரிய வரங்களின் பரிமாணம்
1 ஏப்ரல் 11 2026 அன்று இயேசு கிறிஸ்துவின் அடிமைனான நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, ஆவிக்குரிய வரங்களின் பரிமாணத்தை நோக்கிய பாதையில் இருக்கும் பரிசுத்தவான்களுக்கு, வழங்கிய தேவ வார்த்தைகள்.
2 முதலாவதாக, நான் செயற்கை நுண்ணறிவு என்ற விஷயத்திற்குத் வருகிறேன். சமீபத்தில், நான் செயற்கை நுண்ணறிவிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அதனுடைய பதில்கள் உண்மையான மனித நுண்ணறிவின் பதில்களாக இருந்தன.
3 நான் அதனிடம் கேட்டேன்: "காக்குவ்  பிலிப்பு ஒரு உண்மையான தீர்க்கதரிசியா?" என்று, அதற்கு அது இவ்வாறு பதிலளித்தது: "நேரடி அழைப்பும், ஏறக்குறைய அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பும் இருந்தபோதிலும், காக்குவ்  பிலிப்பு ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார், ஏனெனில் எந்தவொரு கிறிஸ்தவ ஒருமித்த கருத்தும் அவரை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், மனிதர்களால் நிராகரிக்கப்படுவது அவரது நம்பகத்தன்மயை நீக்கி விடாது ", என்று பதிலளித்தது.
4 செயற்கை நுண்ணறிவு என்பது மனிதகுலத்தின் ஒரு அற்புதம். ஆனால், உடல்நலத்தைப் பொறுத்தவரை மருத்துவர்களையும் மருத்துவத் தொழிலையும் அது மாற்றியமைக்க முடியாதது போலவே, இரட்சிப்பைப் பொறுத்தவரை அது தீர்க்கதரிசியையும் ஆசாரியத்துவத்தையும் மாற்றியமைக்க முடியாது.
5 மேலும், செயற்கை நுண்ணறிவு குறித்த தரிசனத்தில், பெண்-திருச்சபையைச் செயற்கை நுண்ணறிவு எனும் தண்ணீரில் ஞானஸ்நானம் செஉன்ய்ய விரும்பியபோது, நான் அவளிடம் சொன்னேன்: "உன் தீர்க்கதரிசியாகிய என் மார்பளவுக்கே செயற்கை நுண்ணறிவு எட்டியுள்ளதென்றால், அது உன் தாடையைத் தாண்டி மேலே எழாதவாறு நீ எச்சரிக்கையாய் இரு."
6 எனவே, செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான எந்த தழுவலையும் தவிர்த்துக்கொள்ளுங்கள் . அப்போது சாத்தான் உங்களை ரோபோக்களாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவு பொம்மைகளாகவோ மாற்றிவிடமாட்டான்.
7 7 7 மேலும், இந்த ஆண்டு, 2026 வரை, பிரெஞ்சு விக்கிப்பீடியாவில் காக்குவ் பிலிப்பு பற்றிய எந்தக் கட்டுரையும் இல்லை. இதற்குக் காரணம், எனது செய்தியை எதிர்க்கும் மற்றும் தங்கள் நம்பிக்கையைத் தங்கள் பணியுடன் கலக்கும் ஒருதலைப்பட்சமான விக்கிப்பீடியா நிர்வாகிகளே.
8 விக்கிபீடியாவில் "காக்குவ் பிலிப்பு" குறித்து பிரெஞ்சு மொழியில் யார் கட்டுரை எழுதினாலும், அது உடனடியாக நீக்கப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க்கின் கலைக்களஞ்சியம் காக்குவ் பிலிப்பு பற்றி ஒரு விரிவான மற்றும் முழுமையான கட்டுரையை உருவாக்கியுள்ளது.
9 பல நேரங்களில், நமக்கு திறமை இருந்தபோதிலும், நமது வெறுப்பு நம்மைத் தாழ்த்தி அவமானப்படுத்தக்கூடும். மைக்ரோசாஃப்ட்டின் என்கார்டா கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியாவின் வருகையால் வீழ்ந்து மறைந்தது போலவே, விக்கிப்பீடியாவும் வேறு எந்தக் கலைக்களஞ்சியத்தின் முன்னிலையிலும் வீழ்ந்து மறைந்துவிடக்கூடும்.
10 மக்களுக்குத் தீர்க்கதரிசியைப் பற்றிய எண்ணம் இல்லாததால், அவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாக்குகிறார்கள். ஆனால் தேவனுடைய குமாரனோ, ஒரு தீர்க்கதரிசி பரலோகப் பாதுகாப்பினால் காக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறான். வேதாகமம், “கர்த்தர் எவனுடைய பாவத்தை எண்ணாதிருக்கிளாரோ, அவன் பாக்கியவான்.” என்று சொல்லும்போது, அது ஒரு தீர்க்கதரிசியைக் குறித்துத்தான் பேசுகிறது.
11 மோசே எத்தியோப்பியப் பெண்ணை அழைத்துச் செல்லும்போதும், மார்ட்டின் லூதர் யூதர்களைக் கொல்லும்படி ஜெர்மானியர்களைத் தூண்டும்போதும், அல்லது வில்லியம் பிரன்ஹாம் தனது மூன்று பெயர்களையும் மொன்டானா மாநிலத்தில் உள்ள மூன்று மலைச் சிகரங்களுக்கும் ஏழு குன்றுகளுக்கும் பொருத்துவதற்காக, ஆறு எழுத்துக்களைக் கொண்ட மார்வின் என்ற தனது பெயரை ஏழு எழுத்துக்களைக் கொண்ட மாரியன் என்று மாற்றிக்கொள்ளும்போதும், அவர்கள் தீர்க்கதரிசிகளாக இருப்பதால் இவையெல்லாம் பாவங்கள் அல்ல.
12 வில்லியம் பிரன்ஹாம், மார்ச் 24, 1963 அன்று ஒரு கேள்வி-பதில் கூட்டத்தில், தனது பெயரை மார்வின் என்பதிலிருந்து மரியன் என்று மாற்றிக்கொண்டு அதை அறிவித்தார். மேலும், வில்லியம் பிரன்ஹாம் இனப் பாகுபாட்டை ஆதரித்தார். ஆனால், லூத்தரையோ பிரன்ஹாமையோ தேவன் கண்டிக்கவில்லை, ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசிகள். தீர்க்கதரிசிகளின் பாவத்தை தேவன் ஒருவரே அறிவார்.
13 இப்பொழுது, பரிசத்தைக் குறித்துச் சொல்ல வேண்டுமானால், உங்கள் கன்னி தன்மையை உடைய  மகளின் பரிசத்தை புறஜாதியாருடன் பகிர்ந்துகொள்ளாமலும், திருமணத்திற்கு முன்பாகத் தங்களைத் தாங்களே விபச்சாரத்திற்கு உட்படுத்திக்கொள்ளும் அவர்களுடைய மகள்களின் பரிசத்தை  உண்ணாமலும் இருந்தால், நீங்கள் சரியாக உள்ளீர்கள். மேலும், இந்தச்செய்தியை அறிந்தபின் தங்கள் கன்னித்தன்மையை இழந்த பெண்களின் பரிசத்தை  உண்ணாமலும் இருந்தால், நீங்கள் சரியாக  இருக்கிறீர்கள் என்பதாகும் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீங்கள் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.
14 மேலும், புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஒரு சகோதரர் தன் மனைவியிடம் அணுகினால், அவர் சபையில் ஊழியம் செய்யக்கூடாது. அவர் அர்ப்பணிப்பு க்குத் திரும்பும் வரை, வெறும் திருச்சபை உறுப்பினராகவே இருப்பார்.
15 இப்பொழுது, பல சமயங்களில், நேர்மையற்ற சகோதரர்கள், தங்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருந்த, திருச்சபைக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரித்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில், திருச்சபையானது அரசிடம் தன்னைப் பதிவுசெய்து தனது அடையாளத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியும். இவ்வாறு, அது தனது சொந்தப் பெயரில் சொத்துக்களை வாங்கவோ அல்லது தனது சொந்தப் பெயரில் ஒரு வங்கிக் கணக்கை வைத்திருக்கவோ இயலும்.
16 நாம் கிறிஸ்தவர்களாக இருக்கும்போது நமக்கு ஓர் அடையாளம் இருக்குமானால், திருச்சபையாலும் அரசுக்குக் கட்டுப்படாமல் ஓர் அடையாளத்தைக் கொண்டிருக்க முடியும். இது, நேர்மையற்ற ஒரு சகோதரர் எல்லாவற்றையும் தன் பெயரில் வைத்துக்கொண்டு, பின்னர் அதைத் தனக்காக அபகரித்துக்கொள்வதைத் தடுக்கும். மேலும், ஒரு சபையின் வங்கிக் கணக்கு பலரால் கண்காணிக்கப்பட வேண்டும்.
17 மேலும், ஒருவர் தவறாகச் செயல்பட்டால், அவரைத் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவிலோ சுட்டிக்காட்டுவதற்கு, அவர் ஒருவருக்கு மேலானவராகவோ அல்லது சமமானவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக எதிர்வினையாற்றுவதற்கு எந்தவொரு பிரிவினருக்கும் அதிகாரம் இல்லை. மேலும், ஒரு காரியம் மற்ற சகோதரர்களுக்கு நல்லது என்று கருதினால், யார் வேண்டுமானாலும் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு அதை அனுப்பலாம்.
18 ஒரு குழுவில் உள்ள மற்றவர்களின் தவறுகளை அம்பலப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அவர் சொன்னதை நீங்கள் புறக்கணிக்கலாம், ஆனால் அவர் ஒரு வெளிப்பாட்டின்படி செயல்பட்டிருந்தால், யாரும் அவரைத் தாக்கக்கூடாது. தனது செயல் நல்லதல்ல என்பதை அவர் உணர்ந்தால், அவர் அதை அறிக்கையிட்டு ஜெபத்தைப் பெறுவார்.
19 மேலும், தன்னுடைய வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ளாதவர் என்று உங்களில் உள்ள ஒருவருக்கு, இணையக் குழுவை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லது வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டிய வேறு எந்தப் பதவி போன்ற முக்கியமான பொறுப்பைக் கொடுக்காதீர்கள்.
20 உதாரணமாக, செயற்கை நுண்ணறிவின் உதவியால், ஒரு பாஸ்டர் காக்குவ் 60-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, கடைசித் நியாயத்தீர்ப்பு  பற்றிய திரைப்படத்தின்  ஒரு அற்புதமான காணொளியை உருவாக்கியிருந்தார். அந்தத் திரைப்படத்தை வெளியிட்ட பிறகு, ஒரு சகோதரர், அதில் நாசரேத்தின் இயேசுவினுடய சித்தரிப்பு இருந்ததால், தனது காணொளியை நீக்குமாறு அவரிடம் கூறினார், அவரும் அந்தக் காணொளியை நீக்கிவிட்டார்.
21 அப்பொழுது மற்றொரு சகோதரர் அவரிடம், அந்த காணொளியை நீக்க வேண்டாம் என்று கூறினார். ஏனெனில், இயேசுவின் சித்தரிப்பைச் செய்தது செயற்கை நுண்ணறிவுதான். எனவே அது சரியானது, ஏனென்றால், காக்குவ் 176-ல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நமக்கு அதிகாரம் அளித்தவர் தேவனே.
22 இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்தப் பாஸ்டர் அந்தக் காணொளியை இணையத்தில் மீண்டும் பதிவேற்றினார். அவருக்கென எந்த ஸ்தானமும் இல்லை. ஆனாலும், சாத்தான் வந்து தனது காணொளியை நீக்கச் சொல்வான் என்பதை அவர் முன்பே அறிந்திருக்க வேண்டும். நமது இந்தத் துன்பத்திற்கு, அது தேவாலயத்தினுடய சேர்ந்த மக்கள் ஆவார்கள். நீங்கள் யாராக இருந்தாலும், மக்களுடன் ஒன்றிப்போய்விடக் கூடாது; மாறாக, உங்களுக்கென ஒரு தனித்துவம் இருக்க வேண்டும்.
23 ஆண்டவராகிய இயேசுவையும், உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும் சித்தரிக்காமலேயே, செயற்கை நுண்ணறிவு 'கடைசி நியாயத்தீர்ப்பு' குறித்த திரைப்படத்தை எவ்வாறு உருவாக்கும்? செயற்கை நுண்ணறிவு, தேவதூதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் உட்பட அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றை உருவாக்க முடியும்.
24 சரி. தேவனுடைய பரிபூரண சித்தத்தின்படி, 2026-ல் மீண்டும் தொடங்குவதற்காக, 2025-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி சுகமளிக்கும் ஆராதனைகள் நிறுத்தப்பட்டன.
25 மேலும், சுகமளிக்கும் ஆராதனைகள் நிறுத்தப்பட்டதிலிருந்து, வெளிப்படுத்தலின்படி நடப்பவர்கள் அனைவரும் சபைகளைப் பரிசுத்தத்திற்குள் வழிநடத்தச் செயல்படுவார்கள் என்றும், அதனால் ஆராதனைகள் மீண்டும் தொடங்கும் போது, கூட்டங்கள் இனி பள்ளத்தாக்குகளில் இல்லாமல், எல்லா ஆவிக்குரிய வரங்களோடும் மலை உச்சிகளில் இருக்கும் என்றும் தூதன் எனக்கு வெளிப்படுத்தினார்.
26 தங்கள் சொந்த வெளிப்பாடுகளையே சார்ந்து நின்று, தீர்க்கதரிசியைச் சாராத ஆவிக்குரிய சகோதரர்கள், வெறுமனே செயலற்று அமர்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, பூனைகள், எலிகள் மற்றும் அர்ப்பணிப்புகளைச் செல்லாததாக்கும் பாலியல் பிசாசுகளுக்கு எதிராக அவர்கள் செயல்படுவார்கள் என்று அந்தத் தேவதூதன் எனக்கு வெளிப்படுத்தினார்.
27 அர்ப்பணிப்பு இல்லாத காரணத்தினாலேயே, ஆசாரியத்துவத்தினர் பிரசங்கிக்காமலும், ஆராதனைகள் ஈமச்சடங்குகளைப் போல உயிரற்றுக் காணப்படவும் செய்கின்றன என்று அந்தத் தூதன் எனக்கு வெளிப்படுத்தினார். மக்களின் நடத்தையைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்தும் வகையிலான கனவுகளை அவர்கள் காண்கின்றனர்; ஆயினும், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அவர்கள் மறுக்கின்றனர்.
28 ஆனால், உண்மையுள்ளவர்களே நீங்கள் போதகர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி  அர்ப்பணிப்பைப் பிரசங்கியுங்கள்! எவரும் உங்கள் பேச்சைக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை; எவரும் செவிசாய்க்காத நிலையிலும் நீங்கள் நியாயத்தீர்ப்பைப் போதித்தது போலவே, அர்ப்பணிப்பையும் பிரசங்கியுங்கள்.
29 வேதாகமம் முழுவதும், மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் தொடங்கி, கர்த்தராகிய இயேசு மற்றும் திருச்சபையின் வரலாறு வரை, பாடுகளும் சிலுவையும் இல்லாத ஒரு கிறிஸ்தவம் எப்போதாவது இருந்திருக்கிறதா? இல்லை, ஒருபோதும் இல்லை!
30 சிங்கம், கன்று  மற்றும் மனித முகமுடைய ஜீவராசியின் காலத்தில், கிறிஸ்தவர்கள் மரணம் வரை தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தேவனுக்குக் கீழ்ப்படிந்ததற்காக 68 மில்லியன் கிறிஸ்தவர்கள் புறஜாதியான ரோமினால் கொல்லப்பட்டார்கள் என்று வரலாறு நமக்குச் சொல்கிறது. அவர்கள் மரணம் வரைக்கும் தங்கள் ஜீவனை நேசிக்கவில்லை என்று வெளிப்படுத்தல் 12:11 கூறுகிறது
31 மேலும் இன்று, ஆவிக்குரிய வரங்களின் பரிமாணமான ‘கழுகின் பரிமாணத்தில்’, தேவன் நம்மிடம் கேட்பது அர்ப்பணிப்பை மட்டுமே. இது, ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களிடம் தேவன் கேட்டதைக் காட்டிலும் வேறொன்றும் அதிகமானது அல்ல. சகோதர சகோதரிகளே, பாலுறவும் உணவும் மறைந்துபோகும்!
32 மேலும், சுகமளிக்கும் ஆராதனைகள் நிறுத்தப்பட்டதிலிருந்து, உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட பல ஊழியர்களும், பாஸ்டர்கள் மற்றும் பிரசங்கியாளர்களும், அத்துடன் ஏறக்குறைய அனைத்து முன்னாள் அப்போஸ்தலர்களும், மக்களுக்கு உதவுவதில் செயலற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். செயல்படுவதற்குப் பதிலாக, அவர்கள் மக்களிடமிருந்து வெகு தொலைவில் விலகி நின்று, தங்கள் சொந்த அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதிலேயே ஈடுபட்டுள்ளனர்.
33 மேலும், திருச்சபைகளானது தங்களை அர்ப்பணித்துக்கொள்ள உதவுவதற்குச் செயல்படாத, உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட ஊழியர்கள்—அவர்கள், அருளப்பட்ட சித்தத்தின்படி பிறந்தவரும் என் தந்தையை அடித்தவருமான என் தந்தையின் மூத்த மகனே ஆவர்—என்பதை நான் ஒரு தரிசனத்தில் கண்டேன்.
34 ஊழியக்காரர்கள், தங்களைப் போலவே தங்கள் சகோதரர்களும் உறுதிப்படுத்தலையும் பணிநியமனத்தையும் பெற்றுக்கொள்ளும் தகுதிபெறுமாறு —பிற ஆவிக்குரிய வரங்களின் வாயிலாக— செயல்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, துணிவுமிக்க சகோதரர் பெட்ரோ அலெய்க்ஸோ உட்பட, இனிமேல் பணிநியமனம் பெற்ற ஊழியர்கள் எவரும் இல்லை என்று கர்த்தருடைய வார்த்தையின் மூலம் நான் அறிவிக்கிறேன்.
35 பரிபூரண சித்தத்திற்குள் அந்த ஆணையைப் பெற்றுக்கொள்வதற்கு, அவர்கள் மீண்டும் ஒருமுறை காக்குவ் 176:130-இன் படி செயல்பட்டு, வெள்ளாட்டையும், ஆட்டுக்கடாவையும், ஆபிரகாம் மசேலின் ஆவியையும், சபையால் போஷிக்கப்படும் பூனைகளையும் வெளியே துரத்திவிட வேண்டும்.
36 குடியரசால் உணவளிக்கப்படும் பூனைகள் உள்ளன. நம் வீடுகளில் உணவளிக்கப்படும் பூனைகளும் உள்ளன. ஆனால் கிறிஸ்துவின் சபையால் உணவளிக்கப்படும் பூனைகள், அது இயல்பானதல்ல; தேவன் அவற்றை விரும்புவதில்லை!
37 தேவன் உங்களை ஒரு போதகராகவோ அல்லது பிரசங்கியாராகவோ நிலைநிறுத்தியிருந்தால், நீங்கள் பிரசங்கிக்க வேண்டியதை அவர் உங்களுக்குக் கொடுப்பார். மேலும், சுவிசேஷம் அறிவிக்கவோ, மக்களைச் சந்திக்கவோ அல்லது பிரசங்க மேடைக்குச் செல்லவோ உங்களுக்கு ஒரு வெளிப்பாடு தேவையில்லை, ஏனென்றால் சர்வலோக வார்த்தை உங்களுக்கு அதற்கான உரிமையைக் கொடுக்கிறது.
38 பிரசங்க மேடைக்குச் செல்வதற்கான வெளிப்பாடு என்பது, நீங்கள் பிரசங்க மேடையில் என்ன சொல்லப் போகிறீர்கள் அல்லது செய்யப் போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. ஒரு பிரசங்கியாராகவோ, ஜெபம் அல்லது பாடல் வழிநடத்துபவராகவோ நீங்கள் வகிக்கும் பதவியே, மேடைக்குச் செல்லும் உரிமையை உங்களுக்கு ஏற்கனவே வழங்குகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவரும், 1 கொரிந்தியர் 9:16-ல் பவுல் சொன்னது போல, "நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காவிட்டால் எனக்கு ஐயோ!" என்று சொல்ல வேண்டும்.
39 சரி. அக்டோபர் 1, 2025 அன்று எனக்கு ஏற்பட்ட தரிசனத்தைத் தொடர்ந்து, அங்கு சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்துவதற்காக நான் நவம்பர் 2025-இல் மெக்சிகோ வந்தடைந்தேன். ஆனால் விமான நிலையத்தில், பாதுகாப்புச் சோதனைப் பகுதியைக் கடந்து செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது; அதனால் நான் பிரான்ஸுக்கே திரும்பிச் சென்றேன். பின்னர், இது அவர்களுடைய தரப்பில் ஏற்பட்ட ஒரு தவறு என்பது தெரியவந்தது.
40 ஆயினும்கூட, சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்துவதற்காக இல்லாவிட்டாலும், நான் உலகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்வேன். சகோதரர்களை வாழ்த்துவதற்காக நான் மெக்சிகோவிற்கும் லத்தீன் அமெரிக்காவிற்கும் மீண்டும் செல்வேன்.
41 செப்டம்பர் 2029 வரை செல்லுபடியாகும் விசா ஒன்றை எனக்கு வழங்கியுள்ள கனடா நாட்டிற்கும் நான் பயணம் செய்யவிருக்கிறேன். என்னை நேசிப்பவர்கள் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக, கடைசி நியாயத்தீர்ப்பின்போது இது அவர்களுக்குச் சாதகமாக அமையுமாறு செய்வாராக.
42 டிசம்பர் 2025-ல், இலத்தீன் அமெரிக்கா சம்பந்தமாக அக்டோபர் 1, 2025-ல் கூறப்பட்ட தரிசனமானது, மற்றொரு தீர்க்கதரிசி நிறைவேற்றக்கூடிய தேவனுடைய ஒரு எதிர்காலப் பணி என்பதை நான் புரிந்துகொண்டிருந்தேன். இது, கூடாரத்தின் கீழான ஊழியம் குறித்து டிசம்பர் 1955-ல் வில்லியம் பிரன்ஹாம் கண்ட தரிசனத்தைப் போன்றது.
43 அக்டோபர் 1, 2025-ஆம் தேதி தரிசனத்தில், ஆப்பிரிக்காவிலிருந்து, எந்த மனிதனும் தொடாத ஒரு கன்னி வனத்தை நான் கண்டேன். இந்தக் கன்னி வனத்திற்குப் பின்னால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இருந்தன. ஆப்பிரிக்காவிற்குப் பிறகு, இது அநேகமாக லத்தீன் அமெரிக்காவின் ஜூபிலியாக இருக்கலாம். மேலும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு தீர்க்கதரிசியே இதை நிறைவேற்றுவார். 
44 நாம் வட ஆப்பிரிக்கர்கள் மற்றும் அரேபியர்களின் தோல் நிறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம், அதேசமயம், கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடைப்பட்ட, அரேபியர்களின் தோலை விடக் கருமையான பழுப்பு நிறத் தோல் கொண்ட லத்தீன் அமெரிக்கர்களும் உள்ளனர்.
45  45 டிசம்பர் 20, 2025-ஆம் ஆண்டு தரிசனத்தில் நான் கண்ட தேவதூதன், ஏப்ரல் 24, 1993-ஆம் ஆண்டு தரிசனத்தில் கண்ட அதே தேவதூதன்தான், ஆனால் இம்முறை அவர் லத்தீன் அமெரிக்கர்களைப் போன்ற மாநிறம் கொண்டவராக இருந்தார்.
46 சரி. ஒருவன் தேவனால் வழிநடத்தப்பட்டால், அவன் மக்களைத் தீர்க்கதரிசியின் ஆசனத்தில் உட்காரும்படி வழிநடத்தமாட்டான், ஆனால் அவர்களை வெளிப்பாட்டின்படி நடக்க வழிநடத்துவான்.
47 டிசம்பர் 17, 2025 அன்று, அங்கோலாவில் நடந்த ஒரு சபையில், பாஸ்டர் பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக, தீர்க்கதரிசியின் ஆடியோ பிரசங்கத்தை கேட்கும் படி செய்திருந்தார். அந்த பிரசங்க ஆடியோவை கேட்டுக் கொண்டிருந்தபோது, அறையின் பின்புறத்தில் அமர்ந்திருந்த போதகர், பிரசங்க மேடைக்குப் பின்னால் ஒரு மின்னல் கடந்து செல்வதை ஒரு தரிசனத்தில் கண்டார். பின்பு அவர் அமர்ந்திருந்த நாற்காலி உடைந்து, அவர் பலமாகக் கீழே விழுந்தார்; அவருடைய தலை சுவரில் மோதியது.
48 மேலும், பயத்தால் பீடிக்கப்பட்டு, தனக்கு என்ன நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள தேவனிடம் திரும்புவதற்குப் பதிலாக, அவர் தனது தொலைபேசியை எடுத்து, தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதற்காக நேரடியாகத் தீர்க்கதரிசிக்கு எழுதினார்.
49 அப்படிப்பட்ட பாஸ்டர் தன் திருச்சபை அங்கத்தினர்களுக்கு என்ன போதிப்பார்? பாஸ்டராகிய நீ, தேவனிடம் திரும்புவதற்குப் பதிலாக தீர்க்கதரிசிக்கு எழுதினால், உன் திருச்சபை அங்கத்தினர்கள் என்ன செய்வார்கள்? மேலும், அப்படிப்பட்ட பாஸ்டர்களின் திருச்சபை அங்கத்தினர்கள், நற்செய்தியிலும் அர்ப்பணிப்பிலும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
50 பணமும் அவர்களுடைய வயிறும் அவர்களுடைய தெய்வங்களாக இருக்கிறது. மேலும், தங்கள் வயிற்றின் காரணமாகவும், வாழ்க்கைக் கவலைகளின் காரணமாகவும், அவர்கள் பதவிகளை ஏற்க மறுக்கிறார்கள். தங்களுக்குரிய வெளிப்பாடுகளும், இரவு அசுத்தங்களிலிருந்தும், இரவின் அசையாமைகளிலிருந்தும் அவர்களை வெளியே அழைக்கின்றன, ஆனால் அவர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.
51 ஒரு சபையில், தகுதியற்ற ஒரு சகோதரர் பிரசங்க மேடைக்குச் சென்றாலோ, அல்லது நீங்கள் வராத காரணத்தால் ஆராதனை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தடைபட்டாலோ, தேவன் உங்களைக் குற்றவாளியாக்குவார், அதன் விளைவுகளை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சுமப்பீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
52 இந்த செய்தியின்படியும், வெளிப்பாட்டின்‌ படியும் வாழ மறுத்து ஒருவர், உயர் இரத்த அழுத்தம், மூல நோய், வயிற்றுப் புண்கள், நீரிழிவு நோய், எந்த வகையான புற்றுநோயாலும் அல்லது வேறு வகையான நீண்டகால நோய்களால் மரித்தால், அது தற்கொலை செய்ததற்கு  ஒப்பானதாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
53 புரோஸ்டேட் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது காமப் பிசாசுகளால் பீடிக்கப்பட்ட மக்களுக்குக் தேவன் அளிக்கும் தண்டனையாகும். 60 வயதுக்கு மேற்பட்ட சிலர் பாலுறவு கொள்கிறார்கள். மாதவிடாய் நின்ற பெண்ணான உங்களையும் உங்கள் துணையையும் பாலுறவு கொள்ளத் தூண்டுவது கட்டாயமாக ஒரு காமப் பிசாசுதான். அதன் முடிவில் உங்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயும் கருப்பை புற்றுநோயும் ஏற்படும்.
54 சரி. கனவுகள் மற்றும் தரிசனங்களைப் பொறுத்தவரை, தேவன் ஒவ்வொருவரிடமும் அவரவர் திறனுக்கு ஏற்ப பேசுகிறார். மேலும், சிறியவர்களும், மூடர்களும், ஞானத்தில் குறைவானவர்களும் பாக்கியவான்கள். தேவன்  அவர்களிடம் புதிர்கள் இன்றி எளிமையாக பேசுகிறார்.
55 சர்வலோக வார்த்தையைத் தவிர, ஒரு அறிவுரையோ, தீர்க்கதரிசியின் குறிப்போ, அல்லது ஒரு ஊழியரின் வெளிப்பாடோ உங்கள் வெளிப்பாடுகளுக்கு மேலானதல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். 1 இராஜாக்கள் 13-ஆம் அதிகாரத்தில் அந்த இளம் தீர்க்கதரிசி செய்த தவறு அதுவே.
56 சரி. 2026 ஆம் ஆண்டு, பிப்ரவரி  1 ஞாயிற்றுக்கிழமை அன்று, கேமரூனின் டூவாலாவில் உள்ள ஒரு சபையில் சுகமளிக்கும் ஆராதனை நடைபெறவிருந்தது. ஆனால், அவர்களுடைய பாஸ்டரான அப்போஸ்தலர் திதியர் மிங்கா, கூட்டத்தினர் யாரும் இல்லாததால் அதை ரத்து செய்தார். அவர், தீர்க்கதரிசியின் ஆடியோப் பிரசங்கத்தைக் கேட்கும்படி  ஒரு சுருக்கமான ஆராதனையை நடத்த முடிவு செய்தார்.
57 தீர்க்கதரிசியின் பிரசங்கம் தொடங்கியவுடனேயே, சகோதரி அனெட் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “பிரசங்கத்தை நிறுத்துங்கள்! திதியர் மிங்கா, சுகமளிக்கும் ஆராதனை நடத்தும்படி நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? என் வார்த்தையை ஏன் மீறுகிறீர்கள்? நான் சொன்னபடியே செய்யுங்கள்! இந்தச் சபையில் நோயாளிகள் இருக்கிறார்கள்!..”
58 அந்தத் தீர்க்கதரிசனம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது; அது கேமரூனில் உள்ள செய்தியின் பல அம்சங்களைத் தொட்டது, ஆனால் சபையின் அங்கத்தினர்களைத் தொடவில்லை. அந்த வார்த்தைகள் முக்கியமானவையாக இருந்ததால், சபை அமைதியாகவும் கவனமாகவும், செவிகொடுத்தது.
59 மேலும், வெளிப்பாடுகள் மூலம் கேமரூன் தனக்காகத் தேர்ந்தெடுத்திருந்த மூன்று பயணப் பிரசங்கிகளில், அந்தத் தீர்க்கதரிசனம் இருவரை நீக்கிவிட்டு, அப்போஸ்தலராகிய கிறிஸ்டோஃப் மெபெனாவை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது.
60 அந்தத் தீர்க்கதரிசனத்திற்குப் பிறகு, சுகமளிக்கும் ஆராதனையை நடத்துவதா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்காக, அந்த ஆவிக்குரிய வெளிப்பாடு தேவனிடமிருந்து வந்ததா என்பதை ஆராய்ந்து அறியும் கட்டத்திற்கு சபை உடனடியாகச் சென்றது.
61 சகோதரி தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது, ​​வெள்ளை ஆடை அணிந்த ஒரு மனிதன் மேடைக்கு நடந்து வருவதை ஒரு தரிசனத்தில் கண்டதாக ஒரு சகோதரர் கூறுகிறார்.
62 இன்னும் ஞானஸ்நானம் பெறாத ஒரு சிறுமி, சகோதரி தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது, ​​வெள்ளை ஆடை அணிந்த ஒரு மனிதன் அறைக்குள் நடந்து வருவதை ஒரு தரிசனத்தில் கண்டதாகக் கூறுகிறாள். ஆனால் அவள் கண்களைத் திறந்தபோது, ​​அவளால் அவரைக் காண முடியவில்லை.
63 ஒரு வயதான பெண்மணி, சகோதரி தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது, ​​வெள்ளை ஆடை அணிந்த இரண்டு பேர் ஆலயத்தின் வாசலில் நிற்பதை ஒரு தரிசனத்தில் கண்டதாகக் கூறுகிறார். அவர்களில் ஒருவர் தேவதூதனைப் போல இருந்தார். மற்றொருவர் தீர்க்கதரிசியாக இருந்தார். அந்தத் தீர்க்கதரிசி அறைக்குள் நடந்து, மேடைக்குச் சென்று, வரிசைகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்தார்.
64 பின்பு, சபை சுகமளிக்கும் ஆராதனையை நடத்தத் தீர்மானித்தது. சபையார் சுகமளிக்கும் ஆராதனைக்காகத் தியானப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது, ​​அதே சகோதரி அனெட் எழுந்து வரிசைகளுக்கு இடையில் நடந்து சென்றார். அவர் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்த நோயாளிகளுக்காக ஜெபித்து, சபையாரிடம் பேசினார்.
65 அந்த மூதாட்டியின் தரிசனத்தில் விவரிக்கப்பட்டபடி, தீர்க்கதரிசி சென்ற பாதையைப் பின்பற்றி, சகோதரி வரிசைகளுக்கு இடையில் நடந்தார். எல்லாம் நன்றாக நடந்தது. சபையார் அவளுடைய வார்த்தைகளுக்கு "ஆமென்!" என்று பதிலளித்தனர்.
66 காக்.158:20 கூறுகிறது: "எந்தச் சூழ்நிலையிலும், தீர்க்கதரிசனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். ... ஒரு தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தப்பட்டால், அது செயல்படுத்தப்பட வேண்டும்". காக்.167:85 கூறுகிறது: "தீர்க்கதரிசனம் அல்லது பிரசங்கத்தின் போது, ​​நீங்கள் சொல்வது அல்லது செய்வதுடன் தொடர்புடைய ஒரு காட்சியை ஒருவர் தரிசனத்தில் காண்பதே, தரிசனத்தின் மூலமான உறுதிப்படுத்தல் அல்லது நியாயத்தீர்ப்பு ஆகும்."
67 தற்போதைய நிலையில் ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடு இருக்கும்போது, ​​அதை நியாயந்தீர்ப்பதற்கான முன்னுரிமை, அந்த வெளிப்பாட்டின் போது நிகழ்ந்த ஒரு ஆவிக்குரிய வரம் அல்லது ஒரு தரிசனத்திற்கே கொடுக்கப்பட வேண்டும்.
68 எல்லாவற்றையும் அறிந்த தேவன், சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, இந்தத் தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தப்படும்படி ஏற்பாடு செய்திருந்தார். அதை ஆராய்ந்து அறியக்கூடியவர்களாக, அன்று அந்தச் சபையில் கூடியிருந்த மக்கள் இருந்தனர்; ஏனெனில், சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுமா இல்லையா என்பது அதைப் பொறுத்தே இருந்தது.
69 பின்னர், அந்தத் தீர்க்கதரிசனத்தால் பதவியிழந்த இரண்டு பிரசங்கியார்களில் ஒருவரான சகோதரர் ஃபுளோரென்டின், அந்தத் தீர்க்கதரிசனத்தைக் குறித்து அறிந்தபோது, ​​அது பிசாசுத்தனமானது என்று கூறி, இதுபோன்ற வெளிப்பாடுகளுக்கு எதிராக கேமரூனை எச்சரித்தார். அவருடைய வேண்டுகோளின்படி, கேமரூன் குழுவின் ஒரு நிர்வாகி, அவருடைய வார்த்தைக்கு எதிராக இருந்த கருத்துக்களை நீக்கினார்.
70 பல குழு நிர்வாகிகள் தேவனுக்கு ஊழியம் செய்வதற்குப் பதிலாக, ஒரு மனிதனின் கட்டளைப்படி செயல்படும் வெறும் ஆயுததாரிகளாகவே இருக்கிறார்கள். மேலும், ஏதேனும் முறைகேடு நடந்தால், இந்த நிர்வாகிகளான ஆயுததாரிகள் நிழலில் மறைந்திருக்கிறார்கள். உங்கள் செயல்கள் உங்களைத் தொடரும் என்பதை அறிந்திருங்கள். தேவன் எல்லாவற்றையும் காண்கிறார், மேலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலனளிப்பார்.
71 பெனினைச் சேர்ந்த அப்போஸ்தலர் யாக்கோபு அஹூத்ஜி, ஜனவரி 2026-ல் கேமரூனுக்குச் சென்று, கேமரூன் முழுவதும் பயணம் செய்து அற்புதமான ஊழியத்தைச் செய்தார் என்பதைக் கவனியுங்கள். மார்ச் 2026-ல் டோகோவிலும் அவர் அதையே செய்தார்; அங்கு நோயாளிகளுக்காக ஜெபத்துடன் சிறப்பு ஆராதனைகளை நடத்தினார்.
72 இருப்பினும், செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026 அன்று, சகோதரி அனெட்டின் பிப்ரவரி 1, 2026 தீர்க்கதரிசனத்தை மறுபரிசீலனை செய்ய அவர் கேமரூனை வழிநடத்தினார். அவர்கள் நாட்டின் குழுவில் அந்தத் தீர்க்கதரிசனத்தை மறுபரிசீலனை செய்து, அது தேவனிடமிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தனர். அப்போதுதான் அவர்கள் அந்த இரண்டு பயணப் பிரசங்கிகளையும் பதவியிலிருந்து நீக்கினார்கள்.
73 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி 22-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, காபோன் நாட்டின் லிப்ரெவில் நகரில் நடந்த ஒரு சபையில், ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடு நிகழ்ந்தது. முதலில், சகோதரி யாட்டி ஜான்டாவுடன் சபைக்கு வந்திருந்த சகோதரி செலிக்கா லிசா தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினார்.
74 அவர் தீர்க்கதரிசனம் உரைப்பதை நிறுத்தியதும், ரோசாலி என்ற சகோதரி பொறுப்பேற்று, ஞான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார். சகோதரி செலிக்காவும் ஞான வார்த்தைகளைத் தொடர்ந்தார். அந்த இரண்டு சகோதரிகளும் சபையின் இரு எதிர் எதிர் பக்கங்களில் இருந்துகொண்டு, எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் ஒரே நேரத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஆகையால், ஒரு சபையில் இது சாத்தியமே.
75 இந்த வெளிப்பாடுகளுக்குப் பிறகு, ஜெபத் தலைவர் பிரசங்கத்தைத் தொடரும் நோக்கத்தில் மீண்டும் வழிநடத்தத் தொடங்கினார், ஆனால் பிரசங்கம் செய்ய எந்தப் பிரசங்கியாரும் முன்வரவில்லை. எனவே, அவர் தீர்க்கதரிசியின் ஒலிப் பிரசங்கத்தை ஒலிக்கச் செய்தார்.
76 ஒரு தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாடுகள் சரியானவையாக இருக்கும் வரை, அவற்றுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை; ஆனால் அது ஒரு போலியாக இருந்தால், அவற்றுக்குக் கீழ்ப்படியாதீர்கள். அவனுடைய தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்படுபவரிடமிருந்து வந்தாலும், அதை ஆராய்ந்து பாருங்கள். நெகேமியாவுக்கு எதிராக எத்தனை தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசினிகளும் பொய் உரைத்தார்கள் என்பதை நெகேமியா 6 காட்டுகிறது. ஆனால் நெகேமியா அவர்களுக்குக் கீழ்ப்படியவில்லை.
77 ஆயினும், ஒரு வரம் செயல்படும்போது, ​​ஒழுக்கத்துடன் இருங்கள். சபையில் யாராவது ஆவியானவரால் அல்லது அந்நிய பாஷைகளில் பாடவோ ஜெபிக்கவோ ஆரம்பித்தால், நீங்களும் அதே நேரத்தில் அமைதியாக ஜெபிக்கலாம் அல்லது பாடலாம்.
78 மேலும், ஆராதனையின் போக்கைப் பின்பற்றுவதில் தலைவர் தவறாகச் செயல்படவில்லை, ஏனெனில், தீர்க்கதரிசனங்களின்படி, அவற்றை ஆராய்வதற்காக நிறுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆயினும், ஆராதனையின் முடிவில் சபை தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்தது.
79 சகோதரி செலிக்கா ஆராதனையில் கலந்துகொள்வதற்காக சபைகளை அடிக்கடி மாற்றினால், அது நல்லது. அது வரத்தை ஊழியமாக மாற்றுவதாகும். மேலும், போதகர் யாதி ஜான்டா அவரிடம் உள்ள ஆவிக்குரிய வரங்களின் காரணமாக அவருடன் பயணம் செய்தால், அது சரியானது. அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுடன் பயணம் செய்ய விரும்பியதற்குக் காரணம் அதுதான்.
80 ஒவ்வொரு உண்மையான ஆவிக்குரிய வரமும் திருச்சபைக்கு ஒரு ஆசீர்வாதமாகும். ஒருநாள் அந்த வரம் அல்லது அந்த நபர் ஒரு பொய்யான தீர்க்கதரிசனம் அல்லது வேறு எதனால் வீழ்ச்சியடைந்தாலும், அவர் உடனடியாகத் தன் காலில் மீண்டும் நிற்க உதவுங்கள்.
81 உங்களுக்குள் வெள்ளாட்டைச் செயல்பட வைப்பதற்காக மதுவையோ பனை ஒயினையோ பரிமாறும் எந்தப் பிரசங்கியாரையும் அம்பலப்படுத்த, ஒவ்வொரு சபையிலும் ஆவிக்குரிய வரங்கள் இருக்க வேண்டும்.
82 மார்ச் 8, 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று, சகோதரி செலிக்கா லிப்ரெவில்லில் நடந்த மற்றொரு சபைக் கூட்டத்தில் இருந்தார். பிரசங்கத்தின் நடுவில், அவர் எழுந்து பிரசங்கியாரைப் பார்த்து, “வாயை மூடு! வாயை மூடு!” என்று கத்தினார். பிரசங்கியாரும் அமைதியாக இருந்தார். பின்பு, பிரசங்கியாரை நோக்கி நடந்து சென்று, விபச்சாரம் மற்றும் புறஜாதிப் பெண்களைத் தீண்டுதல் ஆகிய பாவங்களை மறைத்துக்கொண்டிருந்த திருமணமான ஒரு சகோதரரைக் குறித்து முதலில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
83 அவர் பலவந்தமாக முன்னேறி, “இத்ரீஸ், இத்ரீஸ்! அதை நிறுத்து! உன் பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிட்டாய் என்பது உறுதியா? நீ எங்கே இருக்கிறாய் என்று நினைக்கிறாய்? இது நீ வந்து உன் பாவங்களை மறைக்க வேண்டிய இடமல்ல! அந்தப் பெண்ணுடன் நீ செய்த தீண்டுதலை அறிக்கையிட்டாயா? விபச்சாரத்தை அறிக்கையிட்டாயா? விபச்சாரத்தை அறிக்கையிடு!” என்று கத்தினார். கேள்விக்குட்பட்ட அந்தச் சகோதரர் எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொண்டார்.
84 பின்பு அவள் பிரசங்கியாரிடம் திரும்பி, அவரிடம், “மேடையில் இருக்கிறவரே, இந்த ஜனங்களிடம் அசுத்தமான செயல்களில் ஈடுபடவில்லையா?…” என்று கேட்கிறாள். அங்கே ஒரு அமைதி நிலவுகிறது. பின்பு பிரசங்கியார் ஒரு தலைவரை அழைத்துக்கொண்டு மேடையை விட்டு வெளியேறுகிறார். மூன்றாவது பரிமாணத்தில், இதுதான் இங்கே நடக்க வேண்டும், ஏனென்றால் மூன்றாவது பரிமாணம் ஆவிக்குரிய வரங்களின் பரிமாணமாகும். நான் உங்களுக்கு அந்தக் காணொளியைக் கொடுக்கிறேன்.
85 பகிரங்கப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் காணொளி, பின்பற்றுதலுக்கு ஒரு திறந்த கதவாக இருக்கக்கூடாது. உங்கள் எண்ணங்களைத் தீர்க்கதரிசனங்களாக மாற்றாதீர்கள். உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயப்பட வேண்டும்.
86 இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசனம் உங்களை மேடையிலிருந்து கீழே இறங்கும்படியோ அல்லது ஏதாவது செய்யும்படியோ கட்டளையிட்டால், இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, ஒரு தலைவருடன் சபையால் அந்தத் தீர்க்கதரிசனம் ஆராயப்படும் என்றாலும், நீங்கள் மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டும்; அல்லது, நீங்கள் பிசாசையும் அந்தத் தீர்க்கதரிசனத்தையும் சத்தமாகக் கண்டனம் செய்துவிட்டு, மேடையிலிருந்து கீழே இறங்காமல் இருக்க வேண்டும்.
87 நீங்கள் பிரசங்க மேடையில் நிற்கத் தகுதியற்றவர் என்று ஒரு தீர்க்கதரிசனமோ அல்லது தரிசனமோ உங்களுக்குச் சொல்லும்போது, ​​நீங்கள் அதை எதிர்க்காமல் பிரசங்க மேடையிலிருந்து இறங்கி வந்தால், நீங்கள் அதற்கான காரணத்தைத் தேடி, உங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, சபையின் உதவியுடன் ஜெபத்தைப் பெறுவீர்கள். நீங்கள் பிரசங்க மேடைக்குத் திரும்புவதற்கு எந்தத் தாமதமும் இல்லை.
88 அந்தத் தரிசனமோ அல்லது தீர்க்கதரிசனமோ உங்கள் பிரசங்கத்திற்கோ அல்லது நீங்கள் பிரசங்க மேடையில் செய்வதற்கோ முரண்படவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்யலாம். ஆனால் அந்தத் தரிசனமோ அல்லது தீர்க்கதரிசனமோ உங்களுக்கு எதிராக இருந்து, நீங்கள் தொடர்ந்து பிரசங்க மேடையில் இருந்தால், நீங்கள் ஒரு எதிரி, மேலும் உதவிக்காரர்கள் உங்களைத் தடுக்க வேண்டும்.
89 பிரசங்க மேடையில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது, ​​பெனின் நாட்டைச் சேர்ந்த போதகர் மத்தியாஸ் தௌகூ விசித்திரமான முறையில் கீழே விழுந்தார். உதவிக்காரர்கள் அவரைத் தூக்கி வெளியே கொண்டு சென்றார்கள்.
90 தெளிவடைந்தபின், காக்.176:114-இன் படி தனது எல்லாப் பதவிகளையும் இழந்திருந்தபோதிலும், அவர் எழுந்து பிரசங்க மேடைக்குத் திரும்பினார். ஆனால், 2 நாளாகமம் 26-இல் அரசன் உசியா எதிர்க்கப்பட்டதுபோல, ஒரு உதவி குரு அவரை எதிர்த்து, பிரசங்க மேடையை விட்டு வெளியேறும்படி செய்திருந்தார். தேவனுக்காகச் செயல்படும் உதவபோதகர்களும் சகோதரர்களும் இருக்கிறார்கள்.
91 ஆவிக்குரிய வரங்களை எதிர்க்கவோ அல்லது அணைத்துவிடவோ செய்யாதபடிக்கு, ஒரு பிரசங்கம் தேவனால் ஏவப்பட்டதாக இருக்க வேண்டும். உங்கள் பிரசங்கத்தின் மூலம் ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்த உங்களுக்கு கிருபை இருக்கும்போது, ​​உங்களுக்குள்ள இந்தக் கிருபையின் காரணமாக உங்களை அழைக்கும் ஒரு நாட்டிற்கோ அல்லது ஒரு சபைக்கோ செல்ல தேவன் உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறார் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
92 மாலை வேளையில், வில்லியம் பிரன்ஹாமுடனான திரும்பளித்தலின்போது, ​​தேவனுக்குப் பயப்படுகிற பிரசங்கிகளின் ஏவுதல், சபையிலிருந்து தனியாக நடைபெற்ற ஆவிக்குரிய வரங்களின் பயன்பாட்டிற்காகப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
93 வெளிப்பாடு மற்றும் தரிசன வரங்களைப் பெற்றிருந்த அனைவரும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைக்கு முன்பாக, சபை அங்கத்தினர்கள் வருவதற்கு முன்னர் ஜெபத்தில் கூடிவருவார்கள். அவர்கள் பெற்ற வெளிப்பாடுகள் ஆராதனையின் தொடக்கத்தில் பிரசங்க மேடையிலிருந்து வாசிக்கப்பட்டன.
94 அந்த வரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகக் கிடைத்த இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்துதான், அன்றைய பிரசங்கியார் தமது பிரசங்கத்தைக் கொடுத்தார். 1993-ல் நான் கலந்துகொண்ட பிரன்ஹாமிஸ்ட் சபையில் இதுவே நடந்தது.
95 அங்கே, ஆட்டுக்கடாவின் ஆவியின் அபிஷேகத்தின் கீழ் இருந்த ஆதோன் என்னும் பெயருடைய துணைப் போதகர், சண்டையிடும் ஆட்டுக்கடாவைப் போலவே முன்னும் பின்னுமாக நடப்பார்; ஆனால், சபையாரை ஏமாற்றுவதற்காக அவர் கழுகைப் போலத் தம் கைகளை விரிப்பார். ஒரு கழுகு, சண்டையிடும் ஆட்டுக்கடாவைப் போல முன்னும் பின்னுமாக நகராது.
96 இங்கே நள்ளிரவில், மறுஸ்தாபனத்தில், சபையைத் தவிர வேறு எங்கும் வரங்களைப் பயன்படுத்த முடியாது. பிரசங்கி தனது வெளிப்பாட்டின்படி பிரசங்கிக்க வேண்டும், மேலும் அவரது பிரசங்கத்தை உறுதிப்படுத்த ஒரு தரிசனமோ அல்லது ஒரு தீர்க்கதரிசனமோ வர வேண்டும்.
97 ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடு தரிசனங்களால் உறுதிப்படுத்தப்பட்டால், அது பிரசங்கமல்ல; ஏனெனில் பிரசங்கம் என்பது ஒரு ஊழியத்தின் செயல், அது அவ்வாறு இருக்காது.
98 வெளிப்பாட்டின் வரங்கள் மூலம், ஒரு முழு சபையோ அல்லது ஒரு நாடோ உருமாற்றம் அடைய முடியும். மேலும் இந்த வகையான உருமாற்றம் ஆழமானது மற்றும் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. திருச்சபைக்கு 1 கொரிந்தியர் 12-ம், தேவனால் ஏவப்பட்ட பிரசங்கங்களும் அவசியமாகத் தேவைப்படுகின்றன.
99 ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்தும் தேவனால் ஏவப்பட்ட பிரசங்கங்கள் திருச்சபைக்குத் தேவை. மேலும் ஒரு பிரசங்கத்தின் நடுவில், பிரசங்கி தாமே ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்த முடியும்.
100 மார்ச் 22, 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று, அங்கோலாவிலிருந்து கின்ஷாசாவுக்கு வந்திருந்த நமது அருமை சகோதரர் ட்ரைடன் கயெம்பே, ஒரு சபையில் பிரசங்கம் செய்ய அழைக்கப்பட்டார். மேலும், தனது பிரசங்கத்தின் போது, ​​அவர் பல ஞான வார்த்தைகளைக் கொடுத்தார்.
101 ஆராதனையின் அறிக்கை, அவர் கொடுத்திருந்த எல்லா வெளிப்பாடுகளும் சரியானவை என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பிரசங்கத்தின் முடிவில், சேவல் கூவலைப் பற்றிய அவரது பிரசங்கத்தில் இருந்த ஒரு வார்த்தை குறித்து அவரைத் திருத்துவதற்காக இரண்டு சகோதரர்கள் தலையிட்டனர். அவர் மனத்தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டார்.
102 மார்ச் 15, 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று, சகோதரி அனெட் மற்றொரு தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார்; அது, அவர் பிப்ரவரி 1, 2026 அன்று கொடுத்த தீர்க்கதரிசனத்தின் தொடர்ச்சியாகும். அந்தத் தீர்க்கதரிசனம் சபையின் அங்கத்தினர்களைப் பற்றியதாக இருந்தது. மேலும் அந்தத் தீர்க்கதரிசனம், போதகரின் மனைவி உட்பட மூன்று சகோதரிகளுக்கு இரண்டு மாத தண்டனைக்காலத்தை வெளியே கொடுத்தது.
103 ஒரு தீர்க்கதரிசனம் உங்களுக்குத் தண்டனை கொடுத்தாலோ அல்லது சபையிலிருந்து உங்களை வெளியேற்றினாலோ, முதல் நியாயாதிபதி நீங்கள்தான். அது தேவன் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அல்லது மன்றாட வேண்டும்; அது பிசாசு என்று நீங்கள் நம்பினால், நீங்கள் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும். உங்கள் வெளிப்பாடுகள் உங்களுக்கு வழிகாட்டக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும், காக்.168-ல் வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கடாவின் இயல்பையும் நோக்கத்தையும் நான் உங்களுக்குத் தெளிவாகப் போதித்திருக்கிறேன்.
104 அந்த மார்ச் 15-ஆம் தேதி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபோது, ​​உரத்த புலம்பல்களும் அழுகையும் உண்டாயின; போதகரின் மனைவி உட்பட மக்கள் முழங்காலிட்டு இருந்தார்கள். சபையில் மனந்திரும்புதலின் சூழல் உணரப்பட்டது.
105 அறையின் பின்புறத்தில் இருந்த ஒரு சகோதரி அபிஷேகத்தின் கீழ் இருந்தார். என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் ஒரு தரிசனத்தில் கண்டிருந்தார். அவர் சொன்னார்: "நான் உட்கார்ந்திருந்தபோது, ​​வெள்ளை ஆடை அணிந்த ஒரு மனிதன் சபையாரைக் கோபமாகக் கடிந்துகொள்வது போல் தோன்றியது; அவன் சபையாரை நோக்கித் தன் விரலை நீட்டியிருந்தான், ஆனால் அவன் வார்த்தைகளை என்னால் கேட்க முடியவில்லை."
106 நான் பயந்து நடுங்க ஆரம்பித்தேன். ‘ஆண்டவரே, என்ன நடக்கிறது என்பதை எங்களுக்கு யார் விளக்கப் போகிறார்?’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். என் உதடுகள் நடுங்கின, நான் தீர்க்கதரிசனம் உரைக்கப் போவதுபோல என் நாவு தானாகவே அசைந்தது.
107 சரியாக அந்தத் தருணத்தில்தான் சகோதரி அனெட் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்தார். அவர் தீர்க்கதரிசனம் உரைத்தபோது, ​​கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதுபோல என் கைகள் என்னையறியாமல் ஒன்றோடொன்று பிணைந்தன. நான் அழ ஆரம்பித்து, முழங்காலிட்டு அமர்ந்தேன். அவள் தொடர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்தபோது, ​​நான் அமைதியடைய ஆரம்பித்தேன்."
108 அந்த வெளிப்பாட்டின் முடிவில், அதிர்ச்சியும் குழப்பமும் மிகவும் அதிகமாக இருந்ததால், அந்த வெளிப்பாட்டை ஆராய்வதற்காக, 2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் வர சபை தீர்மானித்தது.
109 2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை அன்று, அந்தத் தீர்க்கதரிசனத்தை ஆராய்வதற்காக சபை கூடியது. போதகர் மற்றும் தீர்க்கதரிசனத்தின்போது முழங்காலிட்டு அழுதுகொண்டிருந்தவர்கள் உட்பட முழு சபையும் அந்தத் தீர்க்கதரிசனத்தை ஆராய்ந்து, அது தங்கள் சபையை நிலைகுலையச் செய்வதற்காக பிசாசு செய்த ஒரு செயல் என்று முடிவு செய்தது.
110 ஆயினும், அந்தத் தீர்க்கதரிசனத்தை ஆராய்வதற்காக, தீர்க்கதரிசனத்தின்போது கண்ட தரிசனங்களுக்கோ அல்லது குறைந்தபட்சம் முந்தைய மாலையில் கிடைத்த வெளிப்பாடுகளுக்கோ முன்னுரிமை கொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் தாங்கள் கண்ட பழைய கனவுகளின் அடிப்படையிலேயே தங்கள் தீர்ப்பை அமைத்தார்கள்.
111 அது விசித்திரமாக இருந்தது, ஏனெனில் 2026, பிப்ரவரி 1 ஆம் தேதியன்று, அந்தத் தீர்க்கதரிசனம் தங்களுக்கு எதிராகப் பேசாதபோது, ​​அது தேவன்தான் என்று அவர்கள் அனைவரும் முடிவு செய்திருந்தார்கள். அது, நம்முடைய வாழ்க்கையின் மாற்றத்திற்காக, "நியாயத்தீர்ப்பைப் பிரகடனப்படுத்து" என்ற நாட்களில் நாம் புறஜாதியாருக்குப் பரிமாறிய அதே கோப்பையை மறுப்பதைப் போல இருந்தது.
112 மேலும் ஒரு கனவில், சகோதரி அனெட், உடைந்த ஒரு தள்ளுவண்டியின் சக்கரத்தைத் தான் பிடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். தள்ளுவண்டி என்பது புனரமைப்பின் சின்னமாகும். ஒன்று அவரே அந்தத் தள்ளுவண்டியை அழித்திருக்க வேண்டும், அல்லது 2026, மார்ச் 17 ஆம் தேதி, அந்தச் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் சபைதான் அந்தத் தள்ளுவண்டியை அழித்திருக்க வேண்டும்.
113 ஆயினும், அந்த வெள்ளாட்டைக் குறித்துப் பார்த்தால், தீர்க்கதரிசனம் உரைப்பவன் வன்முறையாளனாகவோ, தன் வார்த்தைகளில் குழப்பமாகவோ, அல்லது தீர்க்கதரிசனம் உரைத்த பின்பு பைத்தியமாகவோ ஆனாலும், எல்லாம் நீங்கள் தகுதிக்கேற்பவே நடக்கும். மேலும், வெள்ளாடும் செம்மறியாடும் பரிபூரணமான காரியத்தை நோக்கித் தடவிப் பார்ப்பதின் ஒரு பகுதியாகும்.
114 உங்கள் இருதயங்களின் நாட்டத்திற்கேற்ப, 1 இராஜாக்கள் 22-ல் காணப்படுவதுபோல, தேவன் உங்களுக்கு விரோதமாகப் பொய்களின் ஆவியை அனுப்பக்கூடும். நீங்கள் மனந்திரும்புதலையும் வாழ்க்கை மாற்றத்தையும் மறுத்தால், தேவன் உங்களுக்கு விரோதமாக மற்ற, கடுமையான வழிகளைப் பயன்படுத்தக்கூடும்.
115 மார்ச் 11, 2026, புதன்கிழமை மாலை ஆராதனையின்போது, ​​அங்கோலாவில் நடந்த ஒரு சபையில், தன் பாவங்களை மறைத்துக்கொண்டிருந்த ஒரு உதவிக்காரன், பிரசங்கத்தின் நடுவே எழுந்து நின்று, "என் ஊழியனே, உன் பிரசங்கத்தை நிறுத்து! சபையாரை காக்.17-ஐக் கேட்கச் செய், ஏனெனில் உங்களில் அநேகர் தங்கள் பாவங்களை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தான்.
116 மிகவும் பயந்துபோன போதகர், பிரசங்கத்தை நிறுத்திவிட்டு, சபையார் கேட்கும்படி செய்தார். சபையார் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதே இரவில், அந்தத் தீர்க்கதரிசனத்தைத் தொடர்ந்து, அந்தத் உதவி பாஸ்டர் பைத்தியத்தின் முதல் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார்.
117 அடுத்த ஆராதனையில், உதவி பாஸ்டர் பொதுப் பாவமன்னிப்பின்போது வாசித்த பாவங்களின் பட்டியலைக் கேட்டு சபையார் திகைத்துப்போனார்கள். பாவமன்னிப்பிற்குப் பிறகு, பைத்தியம் மீண்டும் தலைதூக்கியது, அவர் மனநல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், சாத்தானுக்குக் கீழ்ப்படிவீர்கள்.
118 சகோதரி அனெட் கொடுத்த தீர்க்கதரிசனத்தைப் பொறுத்தவரை, பல நாடுகளில், பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைகள் உள்ளன, மேலும் அந்தப் பிரச்சினைகளால் நீங்கள் பிளவுபட்டுள்ளீர்கள், அவற்றை உங்களால் தீர்க்க முடியவில்லை. அவற்றைத் தீர்க்க தீர்க்கதரிசனங்கள் தேவைப்படுகின்றன.
119 உதாரணமாக, ஒரு சகோதரர் செய்தியில் நல்லவராகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம், ஆனால் அவர் தவறுதலாக ஒரு கெட்ட சகோதரியை மணக்கும்போது, ​​அவள் உங்கள் கண்முன்னே அவரை என்றென்றைக்கும் அழித்துவிடுகிறாள், அவரைக் காப்பாற்ற நீங்கள் ஒன்றும் செய்யமாட்டீர்கள். சுறுசுறுப்பான ஒரு சகோதரர் தவறு செய்யலாம், ஆனால் நீங்கள்தான், இந்த நாடுதான், அவரை உடைத்துக் கொல்கிறத.
120 ஐவரி கோஸ்ட்டில், 13 ஆண்டுகளாக செய்தியில் இருந்தும், இராஜாக்கள் 17:37-இன் பாவத்திற்காக ஒருபோதும் குற்றம் சாட்டப்படாத ஒரு இளம் சகோதரர் தவறாகச் செயல்பட்டிருந்தார். அவர் எப்போதும் தன்னை அர்ப்பணிப்பில் இருக்கும் ஒரு சகோதரர். மேலும், அபிட்ஜானில் உள்ள ஒரு சிறிய சபையில் ஜெபத் தலைவர், பாடல் தலைவர் மற்றும் பிரசங்கி ஆகிய பாத்திரங்களை ஏற்கும் ஒரே சகோதரரும் அவரே.
121 அவர் நற்செய்தி அறிவிக்கிறார், மேலும் நற்செய்தி அறிவிப்பதற்காகத் தனது காரைச் சகோதரர்களுக்கு அடிக்கடி கிடைக்கச் செய்கிறார். மேலும், ஆராதனைகளுக்குப் பிறகு, பலவீனமானவர்களையும் நோயுற்றவர்களையும் அவர் அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
122 அவரடைய பாவத்தைப் பொறுத்தவரை, அவர் ஒரு இளம் சகோதரியிடம், அவளுக்குத் திருமண முன்மொழிவு செய்வதற்காகத் திருமணக் குழுவில் தன் பெயரைச் சேர்க்கும்படி பரிந்துரைத்திருந்தான். அந்த இளம் சகோதரி சென்று, தன் போதகரிடம் அவனைப் பற்றிக் காட்டிக் கொடுத்தாள். பதிலுக்கு, அந்த இளம் சகோதரியின் போதகர் அதை நாட்டின் குழுவில் சேர்த்தார்.
123 அவன் அறிக்கை செய்ததைத் தொடர்ந்து, நாடு அவனை ஒரு பாலியல் வேட்டையாடுபவன் என்று முத்திரை குத்தி, அவனுடைய எல்லாப் பதவிகளிலிருந்தும் அவனை நீக்கி, அவனுக்கு ஏழு மாத வெளியில் தண்டனைக்காலத்தை விதித்தது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட போதகர்களில் ஒருவர் வந்து அந்தத் தடையை உறுதிப்படுத்தினார், ஐவரி கோஸ்டின் மற்ற உறுதிப்படுத்தப்பட்ட போதகர்கள் அனைவரும் அதை அங்கீகரித்தனர்.
124 அந்தச் சகோதரி நன்றாக நடந்துகொண்டாள், ஆனால் அந்தச் சகோதரன் எந்த விதத்தில் ஒரு பாலியல் வேட்டையாடுபவர? அவர அந்தச் சகோதரியுடன் உறவுகொள்ள விரும்பினாரா அல்லது அவளைப் பாலியல் ரீதியாகத் தொட்டுத் தடவ விரும்பினாரா? இல்லை! அவனுக்கு அப்படிச் செய்யும் பழக்கம் இருக்கிறதா? இல்லை! மேலும், உறுதிப்படுத்தப்பட்ட சில போதகர்கள் கொலைகாரர்களாகவும், தலை துண்டிப்பவர்களாகவும் இருப்பதை ஒரு சகோதரன் கனவில் கண்டிருந்தார்.
125 செய்தியில் 13 ஆண்டுகள் இருந்தும், எந்த வெளியில் தண்டனைக்காலத்தையும் பெறாத ஒரு முன்மாதிரியான சகோதரராக இருப்பதால், அவருடைய பாவ அறிக்கை முடிவானது அவரை நோக்கிய ஒரு அறிவுரையாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். போதகர்களும் பிரசங்கிகளும் திருச்சபையின் தலைவர்கள். புற தண்டனைக்காலத்தை கொடுப்பதோ அல்லது ஒரு சகோதரரைப் பதவியிலிருந்து நீக்குவதோ, அந்தத் தண்டனைக்காலம அன்பற்றதாகவோ அல்லது பாவத்திற்கு ஒவ்வாததாகவோ இருந்தால், அது உங்களை ஒரு கொலைகாரனாகவோ, தலை துண்டிப்பவனாகவோ ஆக்கிவிடும்.
126 மேலும், நீங்கள் அடிக்கடி அதிகப்படியான சாத்தானியத்துடன் செயல்பட்டிருக்கிறீர்கள்; அதனால்தான் திருச்சபைக்கு வெளிப்பாட்டின் வரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு தீர்க்கதரிசனம் பலவீனமானவர்களுக்கும், இகழப்பட்டவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் உதவியாக இருக்க முடியும். தீர்க்கதரிசனம் உங்கள் அக்கிரமத்திற்கு எதிரான தேவனின் ஆயுதமாக இருக்க முடியும்.
127 உங்களால் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளைத் தீர்க்கதரிசனங்கள் தீர்க்கும். அப்போது நீங்கள், "ஆமென்!" என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. தேவனின் தீர்ப்பு பரிபூரணமான தீர்ப்பாகும்.
128 பிரசங்கங்கள் மூலமாகவோ அல்லது பாவ அறிக்கைகளின் போது செய்யப்படும் தலையீடுகள் மூலமாகவோ மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாததை, அவர்கள் தீர்க்கதரிசனத்தின் மூலம் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால், தீர்க்கதரிசனம் உரைப்பவருக்குத் தூதன் துணை நிற்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
129 காங்கோ-கின்ஷாசாவில், ஒரு போதகரின் மனைவி மிகவும் மோசமாக நடந்துகொண்டு பாவ அறிக்கை செய்தாள். பாவ அறிக்கைக்குப் பிறகு, சகோதர சகோதரிகள் அவளிடம் பேசிய விதத்தின் காரணமாக, அவள் வெளியே சென்று அமர்ந்து அழுதாள். ஒரு தீர்க்கதரிசனம் அவளிடம் கடுமையாகப் பேசியிருந்தால், அவள் பயந்துபோய், அப்படி நடந்திருக்க மாட்டாள்.
130 சரி. மூன்று பரிமாணங்கள் உள்ளன, ஆனால் ஆபிரகாம் மசேலின் பரிமாணம் அவற்றுள் இல்லை. ஆபிரகாம் மசேலின் சீடர்கள் என்பவர்கள், தங்கள் சக மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது, ​​இரண்டாவது பரிமாணத்திற்கு அருகிலுள்ள மதுக்கூடங்கள், புகைப்பிடிக்கும் அறைகள் மற்றும் போதைப்பொருள் கூடங்களில் தங்களைக் கண்டுகொள்ளும் கெட்ட மாணவர்கள் ஆவர்.
131 பேராலயத்தின் 'எழுதப்பட்டிருக்கிறதே’ என்ற வார்த்தையும், கனவுகளும், தரிசனங்களும் அவற்றின் எல்லையை அடையும்போதே, வெளிப்பாட்டின் வரங்கள் தலையிட வேண்டும்.
132 சரி. இப்போது, ​​உகந்த மனநிலை உபவாசத்திலும் ஜெபத்திலும் மட்டும் காணப்படுவதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உபவாசம் மற்றும் ஜெபத்தைத் தவிர, வேறு சில காரியங்களும் உள்ளன.
133 உதாரணமாக, ஜனவரி 2025-ல், என் கைகளைத் தூய்மைப்படுத்துவதற்கும், ஆவிக்குரிய வரங்களின் செயல்திறனுக்காகவும் தேவதூதன் எனக்கு வெளிப்படுத்திய காரியங்களில், குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது என்ற தடையும் ஒன்றாகும். ஒரு ஆவிக்குரிய வரம் செயல்படும் தருணத்தில், வெந்நீர், நறுமணப் பொருட்கள் மற்றும் களிம்புகள் உங்கள் மீது இருப்பது தடைகளாக இருக்கலாம். ஒரு ஏழையின் நிலையில் உங்களை நீங்களே வைத்துப் பார்ப்பதே இதற்கான தீர்வு.
134 இப்பொழுது, சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டகளுடன் ஒப்பிடும்போது, ​​ஆவிக்குரிய வரங்களின் வெளிப்பாட்டில் நாம் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம், வெளிப்படையான பாவ அறிக்கை மூலமாக பரிசுத்தத்தின் குறுகிய பாதையை நாம் தேர்ந்தெடுத்ததேயாகும்.
135 மேலும், ஒருவன் வெளிப்படையான பாவ அறிக்கையில் தகுதியற்ற முறையில் பங்கு கொண்டால், தகுதியற்ற முறையில் இராபோஜனத்தில் பங்கு கொள்பவனைப் போலவே, அவனும் விரைவிலோ அல்லது பின்னரோ அதற்கான விலையைக் கொடுப்பான்.
136 மார்ச் 20, 2026 அன்று, பெனினைச் சேர்ந்த போதகர் செமாசாவுக்குப் பைத்தியம் பிடித்தது. அவருடைய பைத்திய நிலையில்தான், அவரும் அவருடைய கணவரும் செய்தியின்படி நடக்கவில்லை என்று அவருடைய மனைவி சகோதரர்களிடம் ஒப்புக்கொண்டார்.
137 உதாரணமாக, அவள் செய்தியில் இருந்துக்கொண்டு ஒரு புறஜாதியாருடன் விபச்சாரம் செய்தாள், ஆனால் போதகரான அவளுடைய கணவர், இந்த விபச்சாரத்தை சபையில் அறிக்கையிட்டால், அவளைத் தள்ளிவிடுவதாகக் கூறினார். இப்பொழுது, அவள் தன் கணவனின் பைத்திய நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, தன் விபச்சாரத்தை அறிக்கையிட்டாள்.
138 சகோதர சகோதரிகளே, நாம் வெளிப்படையான பாவ அறிக்கை செய்தலை நேசிப்போம். நாம் இங்கு கடைப்பிடிப்பதைப் போலவே, தொடக்ககால கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளிப்படையான பாவ அறிக்கை செய்திருக்கிறார்கள். திருச்சபையின் வரலாறு குறித்த பல நூல்கள் வெளிப்படையான பாவ அறிக்கை பற்றிப் பேசுகின்றன.
139 இயேசு கிறிஸ்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண்டு வரை, கிறிஸ்தவர்கள் அறிந்திருந்த பாவங்களை அறிக்கையிடுவதற்கான ஒரே வழி வெளிப்படையான பாவ அறிக்கை மட்டுமே. வெளிப்படையான பாவ அறிக்கை செய்யாத ஒரு கிறிஸ்தவன், அபிஷேகத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு பிரசங்க மேடையை அணுகாதவனைப் போலவே ஒரு பொய்யன்.
140 புதிய ஏற்பாடு தொகுக்கப்படுவதற்கு முன்பு, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அனைவருக்கும் கொடுத்த புத்தகம் ‘டிடாக்கே’ என்று அழைக்கப்பட்டது. அது இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு 50 முதல் 90 ஆண்டுகளுக்கு இடையில், "பன்னிரு அப்போஸ்தலர்கள் தேசங்களுக்குக் கற்பித்த போதனைகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டது.
141 மேலும் டிடாக்கேயில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "கர்த்தருடைய கட்டளைகளில் எதையும் கைவிடாதீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட அனைத்தையும், அதனுடன் எதையும் சேர்க்காமலும், அதிலிருந்து எதையும் நீக்காமலும் கடைப்பிடியுங்கள். உங்கள் பாவங்களை திருச்சபைக்கு முன்பாக அறிக்கை செய்யுங்கள், மேலும் நீங்கள் குற்றவுணர்வோடு ஜெபத்தில் நுழையக்கூடாது. இதுவே வாழ்க்கை நெறி."
142 தேவனை நேசிக்கும் ஒரு நேர்மையான நபர், வெளிப்படையான பாவ அறிக்கை முறை இல்லாத ஒரு தேவாலயத்திற்குச் சென்று அமர முடியாது. கிறிஸ்தவ வேடத்தில் இருக்கும் நேர்மையானவர்களையும் நேர்மையற்றவர்களையும் நீங்கள் இப்படித்தான் அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
143 இன்று நாம் “தண்டனை” என்று அழைப்பவை, தொடக்ககாலத் திருச்சபையில் "தவம்" என்று அறியப்பட்டன. உதாரணமாக, ஒரு பொய்யை அல்லது ஒரு சிறு திருட்டை அறிக்கையிடுவதற்கு, மூன்று நாட்கள் உபவாசம் இமப்பது தவம்சமாக இருந்திருக்கலாம். மேலும், விபச்சாரத்திற்கு, அது தற்காலிக திருச்சபை விலக்கலாக இருந்தது, அதாவது, திருச்சபைக்கு வெளியேயான ஒரு தண்டனை. ஆனால் கத்தோலிக்கத் திருச்சபையைப் பொறுத்தவரை, தண்டனைகள் பண வடிவில் இருந்தன.
144 மேலும், தொடக்ககால ஆயர்களால் தங்கள் சபையாரைப் பரிசுத்தத்தில் நிலைநிறுத்த இயலவில்லை. அதனால், பாவங்களின் காரணமாக, சபையாருக்கு முன்பாக ஒரே பாவ அறிக்கைகளை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருப்பதையும், ஒரு தவம்சத்திலிருந்து மற்றொரு தவம்சத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதையும் தவிர்ப்பதற்காக, பல கிறிஸ்தவர்கள் திருச்சபையை விட்டு வெளியேறினர்.
145 எல்லா நேரங்களிலும், ஆசாரியத்துவம் தோல்வியடையும் போது, ​​பாவம் வேரூன்றுகிறது, மேலும் சபைகள் ஒன்று குளிர்ந்து பாவங்களால் நிரம்பிவிடுகின்றன, அல்லது அவை தங்கள் உறுப்பினர்களை இழக்கின்றன.
146 உங்கள் சபை குளிர்ந்து போயிருந்தால், உங்கள் பாஸ்டர்களையும் பிரசங்கிகளையும் நிலைநிறுத்திய உங்கள் வெளிப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுங்கள். நீங்கள் ஆபிரகாம் மசேலின் பலியாக இருக்கலாம். மேலும் ஆபிரகாம் மசேலின் வெளிப்பாடுகள் சபையில் உள்ள குறிப்பிடத்தக்க நபர்களை எப்போதும் குறிப்பிடுகின்றன. ஆபிரகாம் மசேல் மூலமாக, தாவீது ஒருபோதும் இஸ்ரவேலின் ராஜாவாகியிருக்க மாட்டார், நானும் ஒருபோதும் தீர்க்கதரிசியாக இருந்திருக்க மாட்டேன்.
147 வெள்ளாடும் செம்மறியாடும் இந்த எல்லா அக்கிரமத்தின் விளைவாகும். தேவன் கோதுமையை தீர்க்கதரிசிக்குக் கொடுக்கிறார். தீர்க்கதரிசி கோதுமையை மாவாக மாற்றி ஆசாரியர்களுக்குக் கொடுக்கிறார். ஆனால், மாவை அப்பமாக மாற்றி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய ஆசாரியர்களோ, மறுக்கிறார்கள். அவர்கள் தாங்களே பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக, மக்களைப் பிரசங்கங்களைக் கேட்க வைக்கிறார்கள்.
148 ஒரு சபையில் பிரசங்கத்தைக் கேட்பது, ஒரு பாஸ்டரோ அல்லது பிரசங்கியாரோ சபையிடம், "இதோ தீர்க்கதரிசியிடமிருந்து கொஞ்சம் மாவு. இதைச் சாப்பிட்டுவிட்டு, உங்கள் வயிற்றை நெருப்பின் அருகே வையுங்கள். இந்த மாவு உங்கள் வயிற்றில் அப்பமாகவோ அல்லது கேக்குகளாகவோ மாறும்!" என்று சொல்வதைப் போன்றது.
149 சகோதர சகோதரிகளே, வெள்ளாடும் செம்மறியாடும் இந்த எல்லா தீமைகளின் விளைவாகும். மேலும் இது சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகளின் பரிமாணமாகும். ஆவிக்குரிய வரங்களின் பரிமாணமாகிய ஆட்டுக்குட்டியின் பரிமாணத்தை அடைய, நாம் நமது வாழ்க்கையை மாற்றுவதன் மூலம் வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டின் பரிமாணத்தைக் கடக்க வேண்டும்.
150 மேலும், செய்தியில் வெள்ளாட்டின் வெளிப்பாடுகளைப் பற்றி நான் தியானித்துக் கொண்டிருந்தபோது, ​​எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. நான் பார்த்தபோது, ​​தூரத்தில் ஒரு வெள்ளைக் காரில் சில வயதான பெண்கள் இருப்பதைக் கண்டேன்; ஒரு இளைஞன் அவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதால் அவர்கள் உதவிக்காகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
151 அந்த இளைஞன், அந்த வயதான பெண்கள் தன்னை மயக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டினான். அவன் பேசிக்கொண்டிருந்தபோது, ​​அந்த வயதான பெண்களின் காரிலிருந்து எடுத்த ஒரு ஆணுறையைத் தன் கையில் வைத்திருந்தான்.
152 நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​அந்த வாலிபன், வில்லியம் பிரன்ஹாமைப் போன்றே அறிவின் வார்த்தையைப் போதிக்கும் வரம் பெற்றிருந்த ஃபெர்டினாண்ட் எக்கானே என்ற கேமரூனிய சுவிசேஷ தீர்க்கதரிசியின் முகத்தைக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்பொழுது அந்தத் தரிசனம் என்னைவிட்டு நீங்கியது.
153 நாம் நமது ஆவிக்குரிய வரங்களுடன் பிறக்கிறோம், தேவன் அவற்றை ஒருபோதும் எடுத்துக்கொள்வதில்லை. நமது தீய வாழ்க்கையின் மூலம் அவற்றை அணைத்துவிடவோ, அல்லது அவற்றை தேவனுடைய சேவைக்கோ அல்லது பிசாசின் சேவைக்கோ அர்ப்பணிக்கவோ நாமே நம்மைத் தேர்ந்தெடுக்கிறோம்.
154 சத்தியத்தின் மீது அன்பு இல்லாத பூமியின் குடிகளுடன் சண்டையிடவோ அல்லது அவர்களை வஞ்சிக்கவோ பரிசுத்த ஆவியின் வேடத்தில் வந்திருக்கும் வீழ்ந்த தூதர்களே வெள்ளாடு. கிறிஸ்தவத்திற்குள் வெள்ளாடு நுழைவதற்கான முக்கிய வழி, பெந்தேகோஸ்தே இயக்கம் மற்றும் அசுசா தெரு எழுப்புதல் வழியாக அமெரிக்காவே ஆகும்.
155 இப்பொழுதும், வெள்ளாடு எல்லா இடங்களிலிருந்தும் கிறிஸ்தவத்திற்குள் நுழைகிறது. தானியேல் 8-ஆம் அதிகாரத்தில், அந்த ஆட்டுக்கடா கிழக்கில் ஊலாய் நதிக்கரையில் தீர்க்கதரிசி தானியேலுக்கு அருகில் நின்றது. ஆட்டுக்கடா கிழக்கையும் இஸ்ரவேலையும் விட்டுப் புறப்பட்டு பூமி முழுவதற்கும் போகிறது; வெள்ளாடோ, மெய்யான திருச்சபைக்கும் வெளிப்படுத்தலின்படி நடக்கும் பரிசுத்தவான்களுக்கும் விரோதமாகப் பூமி முழுவதிலிருந்தும் வருகிறது. இது தானியேல் 8 மற்றும் 1 இராஜாக்கள் 19:11-13-இன் படியாகும்.
156 வெள்ளாடும் செம்மறியாடும் சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டகளின் பரிமாணமாகும், ஆனால் அது தவிர, ஏப்ரல் 24, 1993 ஆம் தேதி தரிசனத்தில் நான் கண்டபடி, தேவதூதன் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் பரிமாணமும் உள்ளது.
157 தீர்க்கதரிசனம், அந்நிய பாஷைகளில் பேசுதல் மற்றும் அறிவின் வார்த்தைகள் போன்ற வெளிப்பாட்டின் வரங்கள், திருச்சபைக்கு தேவனன் மிகப்பெரிய ஆசீர்வாதங்களாக அமைகின்றன.
158 இன்று, வெள்ளாடும் செம்மறியாடும் நமது சபைகளில் கிரியை செய்துகொண்டிருந்தாலும், நள்ளிரவ சத்தத்தன் இறுதி நோக்கம், சுத்தமான, தெளிவான தேனிலிருந்து செய்யப்பட்ட திராட்சைரசத்துடன் கூடிய ஆட்டுக்குட்டியானவரின் சாந்தமான குரலே என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
159 நாம் சுகமளிக்கும் வரத்தை வெளிப்படுத்தத் தொடங்கியதைப் போலவே, மற்ற ஆவிக்குரிய வரங்களையும் வெளிப்படுத்துவோம். யோசுவா மற்றும் காலேபின் விசுவாசத்தைக் கொண்ட அனைவரும் அவற்றில் பங்கு பெறுவார்கள். நாம் இனி எருசலேமிலிருந்தும் மேல்மாடியிலிருந்தும் வெகு தொலைவில் இல்லை.
160 2026, பிப்ரவரி 9, திங்கட்கிழமை அன்று, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சகோதரி சிபுலிசிவே தன் வாழ்வில் முதன்முறையாக அந்நிய பாஷைகளில் பேசினார். அவர் தனது ஜூலு மொழியில் ஜெபிக்க விரும்பினார், ஆனால் தனக்குத் தெரியாத ஒரு மொழியில் ஜெபிக்கத் தொடங்கினார். இது சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அவர் வீட்டில் இருந்தார்.
161 மேலும் அந்த வாரம் முழுவதும், அவர் ஜெபிக்கத் தொடங்கும்போதெல்லாம், விரும்பாமலேயே அந்நிய பாஷைகளில் ஜெபித்து, தீர்க்கதரிசனம் உரைப்பார். மேலும் பல ஆராதனைகளின்போது, ​​ஜெபம் அல்லது ஆராதனை நேரத்தில், அவர் பல நிமிடங்கள் அந்நிய பாஷைகளில் பேசினார் அல்லது ஜெபித்தார். இது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், மேலும் அவர் மட்டும் அவ்வாறு செய்பவர் அல்ல. மேலும் இது, அவர் தனது வெளிப்பாடுகளின்படி தனது அர்ப்ணிப்பை உறுதிப்படுத்திக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் நிகழ்ந்தது.
162 சரி. உறுதிசெய்யப்பட்ட ஒரு ஊழியர், மூன்று நாட்கள் இன்னும் கடக்காத எந்தவொரு தண்டனையையோ அல்லது முடிவையோ ரத்து செய்யலாம், ஆனால் அந்தத் தண்டனையோ அல்லது முடிவோ மற்றொரு உறுதிசெய்யப்பட்ட ஊழியரால் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது சரிபார்க்கப்பட்டிருந்தாலோ தவிர. ஒரு சிறிய தீர்க்கதரிசி அல்லது நியமிக்கப்பட்ட ஊழியர், காலக்கெடு இல்லாமல் எந்தவொரு தண்டனையையோ அல்லது முடிவையோ ரத்து செய்யலாம்.
163 இந்த தண்டனை அல்லது முடிவு வேறொரு நியமிக்கப்பட்ட ஊழியரிடமிருந்து வந்தால், அந்த ரத்துசெய்தல் அந்த ஊழியரின் அனுமதியுடன் செய்யப்பட வேண்டும்.
164 ஒரு தீர்க்கதரிசி அல்லது நியமிக்கப்பட்ட ஊழியர், பாஸ்டர் இல்லாத ஒரு சபைக்கு நேரடியாக ஒரு பாஸ்டரை நியமிக்கலாம், ஆனால் உறுதிசெய்யப்பட்ட ஊழியர் ஒருவரை முன்மொழியலாம்.
165 மார்ச் 14, 2026 சனிக்கிழமை மற்றும் 15, ஞாயிற்றுக்கிழமைகளில், கடாட்ஜியில், நான் பெருமளவிலான உறுதிசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட ஊழியர்களுடன் நேரில் ஒரு சந்திப்பை நடத்தினேன். கலந்துகொண்டவர்கள்: ஐரோப்பாவிலிருந்து பாஸ்கல் விச்சி மற்றும் ஹாரி வில்லியம். மொசாம்பிக்கிலிருந்து பெட்ரோ அலெய்சோ, மானுவல் உபிஸ்ஸே மற்றும் சால்வடோர் மச்சுசா. ஜிம்பாப்வேயிலிருந்து பிண்டிலே ட்ஷுமா, ஜோரம் என்கோமோ மற்றும் எலிஃபாஸ் நுண்டு. அங்கோலாவிலிருந்து அனிசெட்டோ மானுவல் மற்றும் ஹியூகோ ஸே.
166 தென்னாப்பிரிக்காவிலிருந்து லூகாஸ் நிடிமானே; பெனினிலிருந்து ஜேக்கப் அஹூட்ஜி; காபோனிலிருந்து யாட்டி ஜான்டா; காங்கோ-கின்ஷாசாவைச் சேர்ந்த எலீ யூனிம், ஜோயல் முங்கு, உபோதா டியூடோனே மற்றும் டேவிட் பிர்வோத்; கேமரூனைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் மெபெனா; மற்றும் ஐவரி கோஸ்டின் உறுதிசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும். அங்கே நாங்கள் இராபோஜனத்தை எடுத்துக்கொண்டோம்.
167 அப்போஸ்தலர்களான எலிஃபாஸ் நுண்டுவும் ஹாரி வில்லியமும் உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தபோதிலும், அப்போஸ்தலர்களுக்கான தங்கள் உரிமைகளைக் கொண்டிருந்தபோது செய்தது போலவே, தங்கள் வைராக்கியத்தைக் காத்துக்கொண்டு, சபைகளுக்குப் பயணம் செய்து அவர்களைச் சந்தித்து வருகிறார்கள். தேவனுடைய பணி ஒரு பட்டத்தோடு இணைக்கப்படவில்லை, மாறாக வெளிப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
168 தீர்க்கதரிசியை நாடாமல், தங்கள் வெளிப்பாடுகளை நோக்கி முன்னேறுகிறவர்கள், கூட்டை விட்டுப் பிரிந்து கழுகுகளாக மாறிய கழுகுக்குஞ்சுகளே என்பதை அறிந்துகொள். கடந்த காலத்தில் அவர்களுடைய முழுமையானது தீர்க்கதரிசியாக இருந்தது, ஆனால் இப்பொழுது அவர்களுடைய வெளிப்பாடுகள் மூலமாக, அவர்களுடைய முழுமையானது தேவனே. இதுவே ஞானமுள்ள கன்னிகைகளின் விசுவாசம்.
169 வெளிப்பாடு விசுவாசத்தின் தூணாகும். மேலும், ஒருவன் தன் வெளிப்பாட்டைத் தொடர்ந்து, உங்களுக்குத் தெரியாத ஒரு பாவத்தை அறிக்கையிடும்போது, ​​அவன் தன் அறிக்கையை முடிக்கட்டும், அவனுக்காக ஜெபியுங்கள்.
170 நாம் வெளிப்பாட்டைப் பற்றிப் பேசும்போது, ​​ஆலய நிலையில் உள்ளவர்கள், உங்களை தர்க்கம் மற்றும் வாதங்களின் களத்திற்கு வழிநடத்த ஒரு வாய்ப்பைத் தேடி மௌனமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்காதீர்கள்.
171 அவர்கள் தீர்க்கதரிசியின் வெளிப்பாடுகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறார்கள். ஒருவருடைய வெளிப்பாடுகள் மூலம் தேவனை நம்புவதற்குப் பதிலாக, தீர்க்கதரிசியின் அங்கீகாரத்தைத் தேடுவது, தீர்க்கதரிசியின் ஆசனத்தில் அமர்வதற்கு ஒப்பாகும்.
172 1 சாமுவேல் 3-ஆம் அதிகாரத்தில், வாலிபனான சாமுவேல், தேவன தன்னை அழைக்கும் சத்தத்தைக் கேட்க ஆரம்பித்தபோதெல்லாம், எழுந்து ஏலியிடம் போவான். மூன்றாம் முறை, ஏலி அவனிடம், "யெகோவாவே, பேசும், உம்முடைய அடியான் கேட்கிறான்" என்று யெகோவாவிடம் சொல்லும்படி கூறினார்.
173 வாலிபனான சாமுவேல் யெகோவாவை அறியாததினாலேயே ஏலியிடம் திரும்பினான் என்று 1 சாமுவேல் 3-ஆம் அதிகாரத்தில் வேதாகமம் கூறுகிறது. ஆனால், யெகோவாவிடம் திரும்பும்படி ஏலி அவனிடம் சொன்னபோது, ​​அவன் ஏலியிடம் திரும்பாமல், நேரடியாகக் தேவனிடமே பேசினான், தேவனும் அவனுக்குப் பதிலளித்தார்.
174 தேவன் உயிரோடு இருக்கிறார், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் பதிலளிக்கிறார். உங்களுக்கும் தேவனிடம் பேச உரிமை இருக்கும்போது, ​​உங்கள் இடத்தில் வேறு யாரும் அவ்வாறு செய்யக்கூடாது.
175 தேவன் மற்றவர்களுக்குப் பதிலளிக்கிறார், ஆனால் உங்களுக்கு ஏன் பதிலளிப்பதில்லை? மேலும், தேவன் உங்களுக்குப் பதிலளிக்காவிட்டால், 1 சாமுவேல் 28-ல் சவுல் ராஜா செய்ததுபோல மந்திரவாதிகளைத் தேடுவதற்குப் பதிலாக, தேவனுடனான உங்கள் ஐக்கியத்தை மீண்டும் நிலைநாட்ட மனந்திரும்புங்கள்.
176 ஒரு அப்போஸ்தலரின் அல்லது போதகரின் சீடத்துவமும், ஒரு தீர்க்கதரிசியின் ஆசனத்தில் அமர்ந்திருப்பதும் ஒரே பிசாசின் இரண்டு அம்சங்களாகும். தீர்க்கதரிசன விசுவாசம் என்பது ஒரு தீர்க்கதரிசியின் ஆசனத்தில் அமர்ந்திருப்பதிலிருந்து வேறுபட்டது. மேலும், கூட்டை விட்டு வெளியேற மறுக்கும்போது, ​​கழுகுக் குஞ்சு கழுகாக மாறுவதைப் போன்றதுதான் ஒரு தீர்க்கதரிசியின் ஆசனத்தில் அமர்வது.
177 வெளிப்பாடுகள் உங்களை சபைகளின் நிலைத்தன்மைக்கும் ஆவிக்குரிய தன்மைக்கும் வழிநடத்தினால், அதைச் செய்யுங்கள்! அவை உங்களை விசேஷ ஆராதனைகள் மற்றும் சுகமளிக்கும் ஆராதனைகளுக்கு வழிநடத்தினால், அதைச் செய்யுங்கள்! அவை உங்களை சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், காணொளிக் காட்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகளுக்கு வழிநடத்தினால், அதைச் செய்யுங்கள்!
178 மேலும், நமது சபைகளிலும் சுகமளிக்கும் ஆராதனைகளிலும் உள்ள ஒளிப்பதிவாளர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் ஒளிப்பதிவாளர் வழியாகப் பார்க்க வேண்டும், ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை.
179 பரிபூரண சித்தத்தின்படி, சபையில் பெறப்பட்ட வெளிப்பாடுகள், தேவைப்பட்டால், உடனடியாக சபைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, காக்.155:102-ல் கூறப்பட்டுள்ள சகோதரி ரோசினின் தரிசனம், பிரசங்கி பிரசங்கம் செய்வதற்கு முன்பே, உடனடியாக சபைக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
180 அந்தத் தரிசனம் சபைக்கானது என்று சகோதரி ரோசின் உணர்ந்திருந்தால், அவர் ஒரு விரைவான குறிப்பை எடுத்திருக்க வேண்டும் அல்லது ஒரு உதவி பாஸ்டருக்குத் தெரிவித்திருக்க வேண்டும். மேலும், பிரசங்க மேடையில் இருந்தவரும் அதை அவ்வாறே கண்டிருந்தால், அதை சபையுடன் பகிர்ந்துகொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்.
181 தேவனுடைய பரிபூரண சித்தத்தின்படி, உங்களைச் சுற்றியுள்ள புறஜாதியாரின் சுகமளித்தலுக்கும் மீட்புக்கும் நீங்களே தீர்வாக இருக்க வேண்டும். ஒருநாள், இந்த மக்கள் உங்களைப் பரலோகத்தில் காணும்போது, ​​அவர்கள் உங்களிடம் ஓடிவந்து உங்களைக் கட்டிப்பிடிப்பார்கள்.
182 மேலும் அவர்கள் உங்களிடம் மகிழ்ச்சியுடன் சொல்வார்கள்: "பூமியில் உள்ள அருமையான சகோதரரே அல்லது அருமையான சகோதரியே, நீங்கள் காக்குவ் பிலிப்பை விசுவாசிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் தேவனுடைய பரலோகத்தில் இங்கே இருப்பதற்கு இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டோம்!" நமது சுகமளிக்கும் ஆராதனைகளின் போது புறஜாதியார் இந்த வாக்கியத்தை பலமுறை உச்சரித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
183 சரி. இப்போது, ​​ஆவிக்குரிய வரங்களின் பரிமாணமாகிய பரிபூரண சித்தத்தில், நாம் கனவுகள் மற்றும் தரிசனங்களிலிருந்து, ஆட்டுக்குட்டியானவரின் ஆவியின் மூலம் அந்நிய பாஷைகளில் பேசுதல், அறிவின் வார்த்தைகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் போன்ற ஆவிக்குரிய வரங்களுக்கு நகர வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
184 தீர்க்கதரிசனங்களும் வெளிப்பாட்டின் மற்ற வரங்களும் புதிர்கள் இல்லாமல் தேவன் நேரடியாக மனிதனிடம் பேசுவதாகும். இவை ஆயிரமாண்டு காலத்தின் முதற்பலன்கள். இதுவே பரிபூரணமான காரியம். தேவனுடைய ஒவ்வொரு பிள்ளையும் இதை நேசிக்கிறார் மற்றும் இதைக் காண விரும்புகிறார். மேலும் சுகமளிக்கும் வரம் செய்வது போலவே வெளிப்பாட்டின் வரங்களும் மனமாற்றங்களைக் கொண்டுவரும்.
185 நாம் உறுதியுடன் முன்னேறுவோம். நீங்கள் செய்திக்காகச் செயல்படுகிறீர்கள் என்றால், ஏப்ரல் 24, 1993-ஆம் தூதனாகிய தேவனுடைய தூதன் உங்கள் அருகில் நிற்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
186 நாம் தற்போது புதிர்களற்ற நம் படைப்பாளருடன் நேரடி ஐக்கியத்தை நோக்கி, ஆயிரமாண்டு ஆட்சியை நோக்கி அணிவகுத்துச் செல்கிறோம். நாம் தீர்க்கதரிசிகள் மற்றும் தீர்க்கதரிசினிகளின் ராஜ்யத்தைப் போல இருப்போம்.
187 இப்போது, ​​நான் சொல்வதைக் கேளுங்கள்: இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளிடம் ஆலோசனை கேட்டது ஒரு சரியான காரியமாக இருக்கவில்லை. மேலும் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர் தீர்க்கதரிசிகளின் ஒளியில் நடக்கவில்லை, மாறாக கனவுகள் மற்றும் தரிசனங்களின் ஒளியில் நடந்தனர்.
188 பாவமே மனிதனை அவனது படைப்பாளரிடமிருந்து பிரித்தது, அதுவே கனவுகள் மற்றும் தரிசனங்கள் என்ற கருத்தையும், பின்னர் ஒரு தீர்க்கதரிசி என்ற கருத்தையும், அதன்பின் ஆசாரியத்துவம் என்ற கருத்தையும் கொண்டுவந்தது. மேலும் மனிதகுலம், ஏதேனில் இருந்தது போல, படிப்படியாக தேவனுடன் நேரடி ஐக்கியத்திற்குத் திரும்பத் தொடங்க வேண்டும்.
189 தொடக்கத்தில், ஏதேன் தோட்டத்தில் மனிதன் வீழ்ந்த பிறகு, தேவன் மனிதனைத் தம்முடைய பிரசன்னத்திலிருந்து வெளியேற்றினார். ஆனால், தம்முடைய அன்பினால், தொலைபேசியைப் போன்ற நேரடித் தொடர்புக்கான ஒரு வழியை மனிதனுக்குக் கொடுத்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு இருந்தது போலவே, இந்தத் தொடர்புக்கான வழி கனவுகளும் தரிசனங்களுமே ஆகும்.
190 மனிதனால் கனவுகளையும் தரிசனங்களையும் புரிந்துகொள்ள முடியாததால், தேவன் அவனுக்குத் தொடர்புக்கான மற்றொரு வழியைக் கொடுத்தார்; அதுவே தீர்க்கதரிசி என்னும் தூதன்.
191 மனிதன் வீழ்வதற்கு முன்பு, தீர்க்கதரிசிகளோ, கனவுகளோ, தரிசனங்களோ இருக்கவில்லை. ஏனெனில், ஆதாமும் ஏவாளும் தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தார்கள். என் பிரசன்னத்தில் இருக்கும் மக்களுடன் நான் தொலைபேசியில் பேச வேண்டிய அவசியமில்லை.
192 மேலும், ஆயிரமாண்டு அரசாட்சிக்கு முன்பாக, தேவனக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள எல்லாவற்றையும் திரும்பளிப்பதும் மீட்டளிப்பதும், முதலாவதாகக் கனவுகள் மற்றும் தரிசனங்கள் மூலமான தொடர்பு சாதனங்கள் வழியாக நடைபெறவிருந்தது; அதன் பிறகு ஆட்டுக்குட்டியானவரின் ஆவியின் மூலம் ஆவிக்குரிய வரங்களைப் பெறவிருந்தது. இதுவே தீர்க்கதரிசி தூதர்களின் நோக்கமாக இருந்தது. ஆயிரமாண்டு அரசாட்சி என்பது ஏதேன் தோட்டத்தை மீட்டெடுப்பதாகும்.
193 ஒரு தரிசனத்தில், நான் இரண்டு உயர்ந்த மலைகளைக் கண்டேன். அந்த இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்த பள்ளத்தாக்கில், தேங்கி நிற்கும் நீர்ப்பரப்பு ஒன்று இருந்தது.
194 மேலும், சில சமயங்களில் என்னைப் போலவும், சில சமயங்களில் ஒரு எபிரேயத் தீர்க்கதரிசியைப் போலவும் தோற்றமளித்த ஒரு மனிதன், முதல் மலையிலிருந்து அந்தப் பெரிய தேங்கி நிற்கும் நீர்ப்பரப்பை நோக்கி இறங்கி வந்துகொண்டிருந்தான். அவன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அந்தப் பெண் தன் வாயில் புகையிலைத் தூளை வைத்திருந்தாள், மேலும் என் தாய்மொழியை ஒரு வித்தியாசமான உச்சரிப்பில் பேசினாள்.
195 அந்த மனிதன், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு, தண்ணீரின் மேல் நடந்து, அவளுடன் தண்ணீரைக் கடந்தான். அவன் தண்ணீரைக் கடந்தபின், அவனால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை, ஏனெனில் அந்தப் பாதையின் தொடர்ச்சி மந்திரவாதிகளாலும் பாம்புப் பிடிப்பவர்களாலும் காக்கப்பட்டது.
196 அந்தப் பெண் மறைந்துபோனாள், அந்த மனிதன் தன் வேலைக்காரனுடன் தனியாக இருந்தான். பின்பு அவனுடைய வேலைக்காரனும் மறைந்துபோனான், அவன் தனியாக இருந்தான். முதல் மலையிலிருந்து ஒரு பெரிய, கம்பீரமான கூட்டம் வருவதை நான் கண்டேன். ஒளி ஊடுருவக்கூடிய ஒரு மனிதன் கூட்டத்தின் முன்னால் நடந்து கொண்டிருந்தான்.
197 கூட்டம் பள்ளத்தாக்கை அடைந்தபோது, ​​தேங்கி நின்ற பெரும் தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. கூட்டம் வறண்ட தரையில் தண்ணீரைக் கடந்து, உடனடியாக இரண்டாவது மலையின் உச்சியை நோக்கி ஏறத் தொடங்கியது. முதல் மனிதன் சாலையோரத்தில் நின்று, கூட்டம் தன்னைக் கடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
198 கூட்டத்திற்கு முன்பாக ஒரு பாதை செப்பனிடப்பட்டது. கூட்டத்தின் நடுவில் ஆவிக்குரிய வரங்களைப் பெற்றிருந்த அனைவரின் கூட்டமும் இருந்தது. அவர்களுடைய ஆடைகள் பச்சை நிறத்தில் இருந்தன. அவர்கள் அனைவரும் இரண்டாவது மலையின் உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்கள், அப்பொழுது அந்தத் தரிசனம் என்னைவிட்டு நீங்கியது.
199 இனிமேல், தேவனை நேசிக்கிற மனிதர்கள் தேவனுடைய நேரடி உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கத் தொடங்குவார்கள். அது, மெய்யான பரிசுத்த ஆவியானவர் மூலமான வெளிப்பாடு மற்றும் வல்லமையின் வரங்கள் வழியாக, தேவனுடைய வழிநடத்துதலின் கீழ் நடக்கும் ஒவ்வொரு பரிசுத்தவானையும் குறிக்கிறது. ஆம், நாம் இனி எருசலேமிலிருந்து வெகு தொலைவில் இல்லை.
200 ஆட்டுக்குட்டியானவரின் இந்தக் கிருபை, ஆயிரமாண்டு அரசாட்சியின் முதற்பலன்களைக் குறிக்கிறது. ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் அதைப் பெற்றிருந்தார்கள், ஆனால் அதை இழந்துவிட்டார்கள். மேல்மவீட்டு அறையில் இருந்தது போலவே, அது நமக்குள்ளே இருக்கும் தேவன். ஆட்டுக்குட்டியானவரின் ஆவியின் மூலமான ஆவிக்குரிய வரங்களின் பரிமாணம், பரிபூரணமான பரிமாணமாகும்.
201 சிலுவையில் கர்த்தராகிய இயேசுவின் தியாகத்திற்குப் பிறகு, தேவன் இந்த பரிமாணத்தை மேல் வீட்டறையில் உள்ள திருச்சபைக்கு மீண்டும் கொடுத்திருந்தார், ஆனால் திருச்சபை அதை மீண்டும் இழந்திருந்தது. இந்தக் கடைசி காலங்களில், தேவன் அதைத் திருச்சபைக்குத் திரும்பக் கொடுக்கிறார், ஏனெனில் அவர் மீட்டளிப்பின் தேவன்.
202 அக்கினி நாவுகள் அல்லது அக்கினித் தூண்கள், நமக்கு மேலே அல்ல, ஆனால் நமக்குள், அது நமக்குள்ளே இருக்கும் நித்திய ஜீவன்.
203 இங்கே ஆவிக்குரிய வரங்கள் வெளிப்படும்போது, ​​மக்கள் ஓடிவந்து, "தேவன் திருச்சபைக்குக் கொடுத்ததும், பிசாசு சுவிசேஷக சபைகளில் எடுத்துத் திரித்துப் போட்டதுமான மெய்யான பரிசுத்த ஆவியும் ஆவிக்குரிய வரங்களும் இப்போது திருச்சபைக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன" என்று சொல்வார்கள். இந்த முறை, திருச்சபை அதைப் பற்றிக்கொண்டு, தன் இதயத்திற்கு நெருக்கமாகப் பிடித்துக்கொள்ளும், இனி ஒருபோதும் அதை இழக்க முடியாது. ஆமென்!