(செப்டம்பர் 04, 2008 வியாழக்கிழமை மாலை, அன்று அபிட்ஜன் ஐவரி கோஸ்ட்டு அருகில் உள்ள அன்யமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1 என் விசா விண்ணப்ப ஆவணங்களை பெல்ஜிய அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்ய பெல்ஜியத்திற்கு மாற்றப்பட்டதாக நான் கேள்விப்பட்டபோது, நான் எல்லாவற்றையும் எதிர்பார்த்தேன் மேலும் அது அதிக நேரம் எடுத்தது என்று அறிந்து கொண்ட பொழுது, நான் புரிந்து கொள்ள துவங்கினேன்! நான் ஒரு அரசியல்வாதி அல்ல, நான் ஒரு போதும் யாருடனும் சண்டையிட்டுக் கொண்டதில்லை மேலும் என் விசா விண்ணப்ப ஆவணங்கள் ஐரோப்பாவிற்கு எதனால் இடமாற்றப்பட்டது? ஆயினும், ஒரு போதகனுக்கு எப்போதும் விசாவை மறுத்தார்கள் என்று நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை.
2 அதன் பிறகு, எனக்கு வீசா மறுக்கப்பட்டது என்று சொல்லி பெல்ஜியத்திலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது! மேலும் அபிட்ஜான் தான் எனக்கு அந்த காரணத்தைச் சொல்ல கூடியதாக இருந்தது! நான் என் மனதிலே, அது இருக்கட்டும், ஆனால் நான் ஒரு உண்மையான அல்லது கள்ள தீர்க்கதரிசி என்று சொல்வதற்கு இது சிகரெட் புகைப்பாளர்களை சார்ந்தவையானது அல்ல என்று சொல்லிக்கொண்டேன்.
3 உங்களை நியமித்தவர்கள் நான் ஒரு தவறான தீர்க்கதரிசியென்று ஏற்கனவே சொன்னார்கள் மேலும் நீங்கள் மாற்றாக சொல்ல முடியாது என்று எனக்கு தெரியும்! ஆனால் ஐவரி கோஸ்ட், அவளுடைய தேவாலயங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து மக்களும் என்னைக் கொன்றுவிடுவதற்கு முன் என்னை நேசிக்கட்டும்! எனக்கு ஆயிரம் முறை விசா மறுக்கப்படட்டும், அது நான் என்னவாக இருக்கிறேன் அல்லது நான் என்ன சொல்ல வேண்டியதற்க்கு புறம்பே எதுவும் அது எடுத்துக்கொள்ள முடியாது. மாறாக பரலோக இராஜ்யத்தின் திறவுகோளைக் கொண்டிருப்பவனுக்கும், பரலோகத்திற்க்கு விசாவை வழங்கக்கூடியவனுக்கும் நான் பயப்படுவேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
4 தரிசனமானது அதைக் கூறியது அங்கே ஆண்கள் மற்றும் பெண்கள், சிறிய மற்றும் பெரிய, வெள்ளை, கருப்பு, பூமியின் அனைத்து இனங்களின் மனிதர்களும் சத்தமாக கத்தினார்கள்: "நம்முடைய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. நம்முடைய தேவனுக்கு மகிமை உண்டாவதாக.!" ஜனக் கூட்டத்தினர் எல்லா இடங்களிலும் இருந்தும் வந்தார்கள். குதிரை வீரன் நகர்ந்துக்கொண்டே இருந்தான், மற்றும் திரளான ஜனக்கூட்டம் அவனைப் பின்தொடர்ந்து சென்றது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. உலக அஸ்திவாரத்திற்கு முன்பே, பூமியில் அதை நான் ஆரம்பிப்பதற்கு முன்பே, தேவனுடைய சிந்தையில் ஒரு ஜெயம்கொண்டவனாக என் பணியை நிறைவு செய்தேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. எனவே நான் திசைதிருப்பப்பட்டிருக்கவில்லை! அவர்கள் மறுக்கும் பொருப்பை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கெள்ள விரும்புகிறார்கள். ஆனால் உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பே, நீ அதை செய்யப்போவதாக தேவன் அறிந்திருந்தார்!
5 ஏரோது மற்றும் பிலாத்துவின் இந்த விளையாட்டை நாம் அறிவோம்! அவர்கள் இங்கேயும் அங்கேயும் ஆவணங்களை மாற்றுவதன் மூலம் தங்கள் கைகளை கழுவ முயன்றனர்! நான் உண்மையாக இருந்தபோதிலும் பெல்ஜியத்திலிருந்து ஏற்கனவே ரகசியமாக தகவல் கொடுத்திருந்தும், ஐவரி கோஸ்ட்டில் இருந்தவர்கள் என்னை அழைக்கவில்லை, மேலும் நான் அங்கே சென்ற பொழுது அவர்கள் தயாராக இல்லை என்பதை போன்று மற்றொரு நாள் திரும்பி வர சொன்னார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? பரிசோதிக்கப்படுவதற்காக ஆசாரியர்கள் மற்றும் பாதிரியார்களின் ஆவணங்களை அவர்கள் பெல்ஜியத்திற்க்கு இடமாற்றிக் கொள்கிறார்களா? ஐவரி கோஸ்ட்டின் புராட்டஸ்டன்ட் கவுன்சிலின் தலைவரும், ஐவரி கோஸ்ட்டின் சுவிசேஷ சபைகளும் பெல்ஜியத்தினிடமாக ஆவணங்களை நீங்கள் இடமாற்றிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த கனம்வரை, எந்த நீதிமன்றத்திலும் நான் ஒருபோதும் தோன்றினதில்லை! நான் சிறைக்கு சென்றதில்லை! அதற்கும் மேல், நான் தேவனுடைய மனிதனாக இருக்கிறேன், என் ஆவணங்களை இங்கேயும் அங்கேயும் நீங்கள் மாற்றுகிறீர்கள்!
6 நான் எந்த விசாவும் ஒரு போதும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிக்கை காட்டுகிறது! நீங்கள் பார்க்கிறீர்களா? நான் சொன்னதைப் போல் பெல்ஜியத்திற்கு ஒரு பார்வையாளராக போகிறேன், என்றுச் சொன்னால், நான் அவர்களுக்கு ஆபத்தான பார்வையாளனாக இருப்பேன்! நான் சொன்னது போல சுவிட்சர்லாந்தில் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் அது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு பற்றிதான்!
7 நான் ஒரு சுற்றுலா பயணி போல செல்கிறேன் என்று சொன்னால், அவர்கள் ஏற்க மாட்டார்கள்! நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்! அவர்களுக்கு ஒரு முன்னறிந்த யோசனை உண்டு; அவர்கள் எதையும் கேட்க விரும்பவில்லை! அவர்கள் அதை செய்யப்போவதாக தேவன் அறிந்திருந்தார்! அவர்கள் தேவனுக்குமுன் என் உரிமையின் கண்டனங்களை அவர்கள்மீது அதிகரிக்க அவர்கள் அதை செய்ய வேண்டும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 என் ஆவணங்கள், என் விசா மறுப்புக் காரணங்களைப் பார்த்து வியப்படைந்தேன். "நீங்கள் விசா பெற தகுதி இல்லை என அறிக்கையில்" அது எழுதப்பட்டிருந்தது, மற்றும் மீண்டும், "பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒப்பந்தத் துறையின் ஒரு சர்வதேச உறவுகளுக்கு நீங்கள் ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறீர்கள்"! என்று எழுதியிருந்தது, நீங்கள் பார்க்கிறீர்களா? நான் அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மேலும் பெல்ஜியத்தில் ஒரு வழக்கறிஞரைக் எடுத்துக்கொள்ள அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
9 ஒரு தேவனுடைய மனிதனை பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சில நாடுகளுக்கு இடையேயான சர்வதேச உறவுகளுக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக கருதமுடியும், அதே நேரத்தில் பாதிரியார் கும்பல், தீர்க்கதரிசிகள், ஆலய வியாபாரிகள் ஆகியோர் சுதந்திரமாக அங்கு செல்ல முடியுமா? அவர்களில் அனேகர் தூதரக பாஸ்போர்ட்டுக்களை உடையவர்கள்!
10 அவர்கள் என்னிடமாக, நீங்கள் உங்கள் நாட்டில் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறீர் என்றுச் சொன்னார்கள். இது போலவே ஆகாபும் யேசபேலும் அதை எலியாவுக்கும் சொல்லியிருக்க வேண்டும்! இது போலவே ஏரோதும் ஏரோதியாளும் யோவான் ஸ்நானகனிடமும் சொல்லியிருக்க வேண்டும்! இது ஏரோதுவும் பிலாத்துவும் இயேசுவிடம் சொன்னது போல! அவர்கள் வேதாகமத்தின் ஒவ்வொரு தீர்க்கதரிசிகளுக்கும் இதை சொல்லியிருந்தால், அதை பவுலுக்கும் சொல்லியிருப்பார்கள். அது என்ன? இது வரலாறு தன்னில் மீண்டும் நிகழ்த்துகிறது . [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11 திஸ்பியனாகிய தீர்க்கதரிசி எலியா பிரான்சிற்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால், பிரான்சிற்கான விசாவைப் பெறுவதற்கு எலியா என்ற பெயர் கொண்ட நபர் தகுதிவாய்ந்தவர்தானா என்று பிரான்ஸ்சானது இஸ்ரேலுக்கும் யூத சனகரிப் சங்கத்திடமும் கேட்டு? அவருடைய ஆவணங்கள் பிரான்சிற்கு அனுப்பி பரிசோதிக்கப்படும்.
12 மேலும் இஸ்ரேல் தன்னுடைய கைகளைத் கழுவி: "நல்லது நீ இங்கே இருக்கிறாய், நாங்கள் உன்னைக் கொண்டுள்ளோம்" பிரான்சும் எலியாவிடமாக, "சரி மதிப்புக்குரிய தீர்க்கதரிசி ஐயா, நீங்கள் விசா வழங்கபவரால், பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் ஐவரி கோஸ்ட்டிற்கும் இடையிலான சர்வதேச உறவுகளுக்கும் அச்சுறுத்தலாக உங்கள் நாட்டினால் நீங்கள் கருதப்படுவதால் உங்கள் நாட்டில் விசா பெற தகுதியற்றவர் என அறிவிக்கப்படுகிறீர்கள்!" என்றுச் சொல்லிற்று. உங்களால் காண முடிகிறதா? கிட்டத்தட்ட எல்லா பிரதான ஆசாரியர்களும் பாகாலின் தீர்க்கதரிசிகளும் தூதரக பாஸ்போர்ட்டுகளைக் கொண்டிருந்தார்கள்!
13 ஒரு இரகசிய வழியில், என் வாழ்நாள் முழுவதும், உலகத்தின் எந்தவொரு நாட்டிற்க்கும் பயணிக்கவும் செல்லவும் ஒரு விசாவைக் கொண்டிருக்க மாட்டேன் நான் கேள்விப்பட்டேன், இது ஐவரி கோஸ்டின் தேவாலயங்கள் மற்றும் அரசாங்கத்தின் முடிவு இது ஒருபோதும் மாறாது. என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு விசாவைப் பெறமுடியாது. ஆனால் நான் தேவனிடமிருந்து வந்த ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்றால், தேவன் எனக்கு தந்த செய்தி பூமியின் கடையாந்தரங்களுக்கு செல்லும். அது எப்படி என்று எனக்கு தெரியாது ஆனால் தேவனுக்கு அது தெரியும் காரியங்கள் அவ்விதமாக செய்யப்பட்டு, இந்த செய்தி பூமியின் கடையாந்தரங்களை அடையும். [ஆசிரியர் குறிப்பு : சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]..
14 ஆபேல் முதற்கொண்டு, வேதாகமத்தின் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் எப்போதும் கிறிஸ்துவுடன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர்! மேலும் தேவன் பூமியில் அனுப்பும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கிறிஸ்துவுடன் அடையாளம் கண்டுகொள்ளப்படுவர்! வேதாகமத்தை எடுத்து, விசா வழங்குவதற்கு தகுதியில்லாதவர் என்று அறிக்கை கொடுக்கப்படாத ஒரே ஒரு தீர்க்கதரிசியை எனக்கு காண்பியுங்கள்! பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரு நபராக கருதப்படும் ஒரு தீர்க்கதரிசியை எனக்கு காண்பியுங்கள்!
15 எரேமியா, ஆகாய், சகரியா, செப்பனியா மற்றும் ஆபகூக் ஆகியோருக்கு இஸ்ரவேலர் எவ்வாறு நல்ல சாட்சியம் அளிக்க முடியும்? பாபிலோன் தானியேலைப் பற்றிய ஒரு நல்ல சாட்சியத்தை தேவன் அதன் மீது சுமத்தவில்லை என்றால் அதை எவ்வாறு தாங்க முடியும்? ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் நல்ல சாட்சியத்தை இஸ்ரவேலர் எவ்வாறு தாங்க முடியும்? இயேசு இவ்விதமாக சத்தமிட்டு : எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொன்ற நகரமே! இஸ்ரேலின் தீர்க்கதரிசிகளில் யாரேனும் ஒருவர் உயிருடன் இருந்தபோது கௌரவிக்கப்பட்டிருந்தார்களா? ஒரு உண்மையான உயிருள்ள தீர்க்கதரிசியை தன்னுடைய நாட்டின் மூலமாக கௌரவிக்கப்படுவதற்க்கு சாத்தியமுன்டா?
16 மேலும் இஸ்ரேல் அப்படி செய்திருந்தால், ஒரு அஞ்ஞானி நாடு அதற்கு முரணானதை செய்யுமா? இல்லை! ஆனால் மாறாக, கள்ள தீர்க்கதரிசிகள் எப்பொழுதும் மிகவும் நன்றாக நடத்தப்பட்டார்கள், அதனால்தான் யேசபேலும், ஆகாபும், எலியாவுக்கு முன்பாக அவர்களை பழிவாங்க விரும்பினார்கள்!
17 நல்லது, இப்போது எரேமியா 26:23 ல் வாசிக்கப் போகிறேன்: "கீரியாத்யாரீமின் ஊரானாகிய செமாயாவின் குமாரனான உரியா யெகோவாவின் நாமத்திலே தீர்க்கதரிசனம் உரைக்கும் ஒரு மனுஷன் இருந்தான்; எரேமியாவின் வார்த்தைகளின்படியே இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்; ராஜாவாகிய யோயாக்கீமும், அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும், சகல பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோட முயன்றான்; உரியா அதைக் கேள்விப்பட்டு, பயந்து, எகிப்துக்குப் போனான்.... அப்பொழுது யோயாக்கீம் ராஜா ஆகாபின் குமாரனாகிய எல்நாத்தானையும், அவனோடே எகிப்தியரையும் கொண்டு, எகிப்திற்கு மனுஷரை அனுப்பி: அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தினால் அவனைக் கொன்று, அவன் சரீரத்தை ஜனங்களின் பிள்ளைகளின் கல்லறையிலே எறிந்தான். "ஆமென், இது ஏழை எளிய தீர்க்கதரிசி உரியாவுக்கு நடந்தது.
18 நல்லது, அத்தகைய மனிதன் எகிப்திற்க்குச் செல்ல விசாவைக் கொண்டிருப்பானா? இல்லை! இஸ்ரேல் மற்றும் அதன் பல தேவாலயங்கள் அவன் விசா பெற தகுதி இல்லை என தெரிவிக்கும். ஆசாரியன் அங்கே வந்தபோது, அவர்கள் எகிப்திய அதிகாரிகளிடம் சொன்னார்கள்: அன்புள்ள எகிப்திய சகாக்களே, நாங்கள் ராஜாவின் சார்பாக வருகிறோம். நம் இரு தேசங்களையும் இனைக்கும் நீண்ட கால நல்லுறவுகளை ஒரே ஒரு மனிதனால் கெடுத்துப்போட நாங்கள் விரும்பவில்லை! இது ஒரு கருப்பு ஆடு! ஆனால் அவன் நம்முடைய மகனாக இருப்பதினால் அதை பற்றி எதுவும் செய்ய முடியாது! நாம் அதை செய்வோம்! அவனை எடுத்துக்கொள்வதற்கு நாங்கள் ராஜாவிடம் வந்தோம் "என்றார். எகிப்தியர் உரியாவை ஆசாரியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவனை சிறைபிடித்துக்கொண்டு, அவனோடே இஸ்ரவேலுக்குப் போனார்கள்.
19 ஒரு நாளில், பிரான்சில் செய்தியைப் படித்த அல்லது கேட்ட ஒருவர் என்னிடம் இவ்வாறு எழுதினார்: மன்னிக்கவும், நான் அதில் இவைகளோடு செய்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் ஐவரி கோஸ்ட்டில் அரசியல் அமைதியின்மையின் போது நீங்கள் சில துப்பாக்கி முனையால் தலையில் அடிக்கப்பட்டீர்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன்? அவர்களுக்கு, அகிரிப்பாவிற்கும் ஃபெஸ்டியுக்கும் முன்பு பவுலை போல, நான் சொல்வது ஒரு மனநல பிரச்சினை உடையவர்களிடமிருந்து வர முடியாது. நான் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்றால் எப்படி என் வார்த்தைகள் உங்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்? [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
20 சமீபத்தில் நான் ஒரு வானொலி நிலையத்தில் பேசினேன், நான் சொன்னேன்: "ஐயா, நீங்கள் எபேசியர் 4:11 இன் பழைய ஏற்பாட்டின் ஒரு ஆசாரியன் போன்ற ஊழியத்தை கொண்டுள்ளீர்கள், நீங்கள் பேசுகிற காரியம் உங்களுடைய சபைக்கு நல்லது! வேதாகமம் உங்களை அறிவிக்கவில்லை, எனவே ஒரு புத்தகத்தை எழுதவோ அல்லது உங்கள் வெளிப்பாடுகளை பரவச் செய்யவோ உரிமை இல்லை... ஆனால், ஏசாயா அல்லது மோசே சொன்னதைப் போலவே நான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு சொல்கிறதும் வேதாகமத்தில் சேர்க்கப்படும். ஏசாயா அல்லது மோசே சொன்னதைக் காட்டிலும் நம்முடைய நேரத்தில் மிக முக்கியமானது! ... "[ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்! " என்கிறார்கள்].
21 நான் பேசிக்கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர் அல்லது ஒருவர் இவ்வாறு சொன்னார்: "இனிமேல் சில உளவியலாளர்கள் இந்த மேசையைச் சுற்றி இருப்பார்கள், ஏனெனில் சில பைத்தியக்காரர்கள் மனநல மையங்களில் இருந்து தப்பித்து சில தீர்க்கதரிசிகள் ஆகிறார்கள்!" எனவே, இன்ன-போதகர் என்று அழைக்கப்படுபவனின் வார்த்தை அதைச் சொல்கிறது என்றால், ஐவரி கோஸ்ட் அல்லது பெல்ஜியம் இதற்கு மாறாக கூறுமா? மேலும் எனக்கு விசா வழங்கப்பட்டிருந்தால், பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச உறவுகளுக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கலாம்! என்று அவர்கள் அதை சொல்கிறார்கள். கடவுளின் எளிய மனிதரான நான் எப்படி சர்வதேச உறவுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியும்?
22 நல்லது, மத்தேயு 8 ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி இன்னொரு பத்தியை வாசிக்கிறேன் ... இதோ, முழு நகரமும் இயேசுவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அவரைக் கண்டபோது, தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் படவில் ஏறி, கடந்து, தன் ஊருக்கு வந்தார்". நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார்! ஜனங்கள் அவரை ஒரு உண்மையான தேவனுடைய மனிதர் அவர் மேசியா என்று சொன்னார்கள் ஆனால் ஏன் அவரை மக்கள் எளிதாக வெளியேற்ற முடிகிறது?
23 சீடர்களில் சிலர் அவரை எலியாவைப் போல அக்கினியை கீழே வரவழைப்பார் என எதிர்பார்த்தனர். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனாலும், அவர் அனைத்து தீர்க்கதரிசிகளாலும் அடையாளம் காணப்படும்படி அவர் தள்ளப்பட்டார்! அவர் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்பட்டார், ஆனால் இன்றைய தினம், அவர் உங்களுக்கு மத்தேயு 23: 34-35-ல் அவருடைய வாக்குறுதியின்படி உங்களிடத்திற்க்கு அனுப்பியவரை நிராகரித்து நீங்கள் அவரை ஏற்றுக் கொள்கிறீர்கள் எனக் கூறுகிறீர்கள்!
24 தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசி ஒவ்வொருவரும் கிறிஸ்துவுடன் அடையாளம் காணப்படுவார் மற்றும் அவருடைய தீர்க்கதரிசன நாட்கள் கிறிஸ்துவின் நாட்களோடு அடையாளம் காணப்படுகின்றன மற்றும் ராஜாவோ அதிபதியோ, அவன் தீர்க்கதரிசனம் உரைக்கிற தேசம் இஸ்ரவேலுக்கும் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும் அடையாளமாயிருக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].. அதனால்தான் வில்லியம் பிரன்ஹாமுக்கு எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் எழுச்சியை நாம் பார்க்க முடிந்தது, அதேசமயம் வில்லியம் பிரான்ஹாம் கத்தோலிக்கர்கள் உட்பட அவருடைய அனைத்து சபைகளிலும் ஐக்கியம் கொண்டிருந்தார். வேதவாக்கியங்கள் குழப்பப்படாமல் இருக்க வேண்டியதால் அது அவ்விதமாக இருக்க வேண்டும்.
25 அவர்கள் மோசேக்கும் எரேமியாவுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பவுலுக்கும் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிற இடத்தை எனக்கும் கொடுத்தார்கள். இந்தச் செயல் மூலம், அவர்கள் இஸ்ரேலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் நடுராத்திரியின் முகத்தில், பூமியின் ஒவ்வொரு தேசமும் இஸ்ரேலுடன் அடையாளம் காணப்படுவார்கள்! அவர்களுடைய தேவாலயங்கள் பரிசேயர்கள், சதுசேயர்கள், எஸினெஸ் ( துறவிகள்), ஹெலனிஸ்டுகள் (கிரேக்கர்கள்) ... அவர்களுடைய தொழிற்சங்கங்கள், மன்றங்கள் மற்றும் சபைகளின் கூட்டமைப்புகளும் யூத நியாயசீத்திகளுடன் (சனகரிப்) அடையாளம் காணப்பட வேண்டும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26 நீதிமன்றங்களுக்கு முன்பாக இழுத்து வந்த பவுலை நாம் நினைத்துப் பார்க்கிறோம். யூதர்களால் மூன்று முறை வாரினால் அடிக்கப்பட்டார். ஒன்று குறைய நாற்பது அடிகளை ஐந்து முறைகள் பெற்றுக் கொண்டார்... வேதாகமத்தின் ஒரே ஒரு தீர்க்கதரிசி கூட வித்தியாசமாக நடத்தப்பட்டதாக இல்லை! தேவன் பூமியில் தீர்க்கதரிசிகளை அனுப்பிவைக்கும் வரையில் அது அவ்வாறே இருக்கும்.
27 ஆனால் இந்த வழியாக இருக்க வேண்டுமென்று வேதாகமத்தில் அப்படிச் சொல்லவில்லையா? பூமியில் குறைந்தது ஒரு தீர்க்கதரிசியாவது விசாவைப் பெற தகுதியற்றவர் என அறிவிக்கப்பட வேண்டியவர் யார்? குறைந்த பட்சம் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படாத அதேசமயம் சில அரசியல்வாதிகள், அரசியல் எதிரிகள் மற்றும் கலகக்காரர்கள் சில தற்போதைய ஆட்சிகள் ஒரு நபர் இருக்கக்கூடாது, வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளால் அடையாளம் காட்டப்படாத ஒரு தீர்க்கதரிசியும் இருக்கவில்லையா? ஆனால் எல்லாம் இருந்தபோதிலும், இந்த தீர்க்கதரிசி அவருடைய நாட்டிலும் அவருடைய கண்டத்திலும் மற்றும் பூமி முழுவதிலும் அவரது தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமான ஒருவனாவான்! [ ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]
28 இது எலியாவின் காலம், தேவன் இங்கே இருக்கிறார். இஸ்ரவேலின் பக்கம் செல்வதற்கு முன்பு, ஆதியாகமம் 18 ல் உள்ளபடி ஏப்ரல் 24, 1993 ன் தேவதூதனுடன் இரண்டு புறாக்கள் இறங்கிச் சென்றதை நாம் பார்த்தோம். அவர்களில் இருவர் சோதோம் கொமோராவை நோக்கி செல்கின்றனர், இது எருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகும், இது உலகின் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களின் தலைநகரமாக உள்ளது!
29 இப்போது, எனக்கு பிற்பாடு, எலியாவும் மோசேயும் இஸ்ரவேலில் எழும்போது, அவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல விசா வேண்டுமா? இல்லை! பொய்யர்கள் அதைப் பெறுவார்கள் ஆனால் உண்மையானவர்கள் - எலியாவும் மோசேயும் - அதைப் பெறமாட்டார்கள் ஆணைப்படி ஆபேல் தொடங்கி இன்றுவரை பூமியில் தேவன் அனுப்பிய எல்லா தீர்க்கதரிசிகளுடனும் அடையாளம் காணப்பட வேண்டும்!
30 நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் உதவியை அல்லது உங்கள் மானியத்தை விரும்பவில்லை, ஆனால் நீங்கள் எனக்கு எதிராக தீய விஷயங்கள் மீது சூழ்ச்சிசெய்கிறீர்கள். ஒரு நாள், எங்காவது பூமியில், நீங்கள் இப்படி அல்லது அப்படி என்று உங்களை கூறுவீர்கள்; மேலும் அவர்கள் உங்களிடம் கூறுவார்கள்: "ஆஹா, தேவன் உங்கள் நாட்டில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய தீர்க்கதரிசியை எழுப்பிருந்தார்!" உங்களது முகம் கீழே விழுந்துவிடும்! நீங்கள் செய்கிற எல்லாத் தீங்கும் என்னிடமாக அல்ல என்னை அனுப்பிய சர்வவல்லவரிடமாக என்பதை நினைவுக்கூறுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபை "ஆமென்!" என்கிறார்கள்].
31 ஒரு நாள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த இஸ்ரவேலுக்கு ஆதாயமாக இருந்தது போல நான் உங்களுக்கு ஒரு ஆதாயமாக இருப்பேன்! அது மிகவும் தாமதமாகி இருக்கும் போது இன்னுமும் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாக இருப்பேன்! பெல்ஜியமும் சுவிட்சர்லாந்தும் தங்கள் பேரப்பிள்ளைகளிடம் இந்த முடிவை எடுப்பதில் அவர்கள் மென்மையாக இருந்தனர் என்று கூறுவார்கள்! ஆனால் இது வேறு வழியில் நடக்க சாத்தியமா? இல்லை, அது சாத்தியமில்லை. என் முன்னோர்களால் அடையாளம் காணப்பட்டதின் வழியாகவே நான் அடையாளம் காணப்படுவேன்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்" என்கின்றனர் !]. சில சகோதரர்கள் ஒரு வழக்கறிஞரை எடுத்துக் கொள்ளலாமா அல்லது அதைப் பற்றி பத்திரிகைகளுக்கு தெரிவிக்கலாமா என்று தெரிந்துகொள்ள விரும்பினர். நான் இல்லை என்றேன்! ஒருபோதும் இல்லை! எலியா, எலிசா, எரேமியா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரும் ஒரு வழக்கறிஞரை எடுத்ததில்லை! [ஆசிரியர் குறிப்பு : சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]..
32 இப்போது ஆமோஸ் 7:10 ஐ முடிப்பதற்க்காக வாசிப்போம். "அப்பொழுது பெத்தேலின் ஆசாரியனாகிய அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி சொன்னது என்னவென்றால்: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவிலே உனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினார்கள்: தேசம் அவனுடைய எல்லா வார்த்தைகளையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆமோஸ் உரைக்கிறது என்னவென்றால்: யெரொபெயாம் பட்டயத்தால் மரித்து, இஸ்ரவேல் தன் தேசத்திலே சிறைப்பட்டுப்போகும். அமத்சியா ஆமோஸை நோக்கி: நீ காண்கிற யூதாவின் தேசத்துக்கு ஓடிப்போ, அங்கே சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலில் மறுபடியும் மீண்டும் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமாயிருக்கிறது, அது ராஜ்யத்தின் வீட்டாரே என்றான். நீங்கள் பார்க்கிறீர்களா?
33 கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்கள், கள்ள போதகர்கள் மற்றும் கள்ள ஆசாரியர்கள் போன்றோர் அமட்சியாவைப் போலவே தங்களை காட்சியமைத்துக்கொண்டு ஆமோஸை நகரத்திற்கு வெளியே கொண்டுபோகப்பட்டார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, மோசேயின் சுருள்களோடு ஆமோஸ் புத்தகம் பினைக்கப்பட்டிருந்தது! ஏசாயா பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கு அச்சுறுத்தல் என்று தனது நாட்டில் கருத்தி கொண்டு சவாலுக்கு உட்பட்டார், இறுதியாக துண்டு துண்டுதுண்டாக்கினார்கள்; ஆனால் எட்டு நூறு ஆண்டுகள் கழித்து, அவருடைய புத்தகம் மோசேயின் சுருள்களுக்கு அருகில் பிணைக்கப்பட்டுள்ளது. கேட்கிறதற்க்கு காதுள்ளவனெவனோ அவன் கேட்க்கக்கடவன்!