Kacou 80 (Kc.80) : ஒரு தீர்க்கதரிசி இன்னொரு தீர்க்கதரிசிக்காக பேசுவாரா?
( வியாழக்கிழமை மாலை, அக்டோபர் 9, 2008 அன்று அன்யாமா, ஆபிட்ஜானுக்கு அருகில், ஐவரிகோஸ்ட் இல் பிரசங்கிக்கப்பட்டது)
1மிக நல்லது, நான் பதிலளிக்க விரும்பும் சில கேள்விகள் இங்கே உள்ளன. முதல் கேள்வி என்னவென்றால்: "சகோதரர் பிலிப்பு, ஏப்ரல் 24, 1993 இன் தூதன் இறங்கி வந்த போது சாயங்கால வேலை முடிந்தது, மேலும் 2002 முதல் வாழ்ந்த அனைவரும் மத்தேயு 25: 6 இன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். இப்போது 1965 மற்றும் 2002 க்கு இடையில் மரித்தவர்களுக்கு என்ன நடக்கும்?
2பதில் என்னவென்றால், வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை விசுவாசித்து உண்மையாக இருந்து, நடுராத்திரி சத்தத்தின் எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் மரித்த அனைவரும் இரட்சிக்கப்படுகிறார்கள்! ஜூனியர் ஜாக்சனின் சொப்பனத்தில் வில்லியம் பிரன்ஹாமின் பரிந்துரையின் படி சபினோ கனியன் அல்லது வெள்ளை கல்லின் அறியாத மொழியின் விளக்கத்திற்காக அவர்கள் காத்திருந்தனர்!
3இது "ஐயா, இது தான் முடிவின் அடையாளமா?" என்ற புத்தகத்தில் உள்ளது. நான் அதை சிறிது வாசிக்கப் போகிறேன் ... "... மேலும் தண்ணீர் எங்கே பாய்ந்து ஒடினதோ, இந்த கற்களில் ஒருவித எழுத்துக்களை அது பொறித்தது, நீர் அங்கே நின்றுகொண்டு இந்த கற்களில் எழுதப்பட்டதை வியாக்கியானித்து கொண்டிருந்தீர்... பின்னர் நாம் எல்லாரும் ஒன்றாக நின்றுகொண்டு, நீர் அந்த மலைமேல் இருந்த கற்களில் உள்ள எழுத்துக்களை வியாக்கியானிப்பதை கேட்டுக் கொண்டிருந்தோம். நீர் காற்றில் இருந்த ஒன்றை, ஒரு நெம்புகோல் போன்ற ஒன்றை எடுத்தீர்கள் ... நீர் அதை எப்படி செய்தீர் எனக்கு தெரியவில்லை. நீர் அந்த மலையின் உச்சியைத் தாக்கி, அதைச் சுற்றிலும் வெட்டி, அதினுடைய மூடியை உயர்த்தினீர். அது ஒரு பிரமீடு வடிவத்தில் இருந்தது. நீர் அதினுடைய உச்சியை முற்றிலுமாக பிரித்துவிட்டீர்கள் ... அதன் கீழே வெள்ளை கல், கிரானைட் இருந்தது; மேலும் நீர் : ... இதைக் கவனியுங்கள் என்று சொன்னீர்! ".
4மேலும் ஜூனியர் ஜாக்சன் கூறுகையில், போதகர்கள் இந்த வெள்ளைக் கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வில்லியம் பிரன்ஹாம் ஒரு பக்கம் நழுவி மேற்கு நோக்கிச் சென்றார். போதகர்கள் ஒவ்வொருவரும் அவரவர் திசையில் செல்ல ஆரம்பித்தார்கள்; சிலர் இந்த திசையிலும், மற்றவர்கள் அந்த திசையிலும், மற்றவர்கள் மற்றொரு திசையிலும் செல்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். வில்லியம் பிரன்ஹாமின் மரணத்திற்குப் பிறகு உண்மையில் அதுதான் நடந்தது.
5இந்த அறியாத மொழியின் வியாக்கியானமானது தங்களுக்கு வில்லியம் பிரன்ஹாம் கூறப்படாததை கூறும் என்பதற்கு காத்திருப்பதற்குப் பதிலாக, உதாரணமாக ஜேம்ஸ் மன்னன் வேதாகமங்கள் , லூயிஸ் செகாண்ட் மற்றும் மற்றவைகள். அவர்கள் விட்டுச் சென்றார்கள். இப்போது நீங்கள் காண்பதைப் போல அவர்கள் நிறைய "கொள்கைகளை" (Isms) உருவாக்கியிருக்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
6முந்தைய கேள்வியைப் போலவே இரண்டாவது கேள்வி உள்ளது: "சகோதரர் பிலிப்பு, நடுராத்திரி சத்தத்தை பற்றி கேள்விப்படாமல் இன்று மரணிக்கும் ஒருவரைப் பற்றி என்ன? இந்த நபர் எடுத்துக்கொள்ள படுதலுக்கு செல்ல முடியாது என்பதுதான் பதில். அவர் தெரிந்துக்கொள்ளப்பட்டவராக இருந்தால், அவர் இறப்பதற்கு முன் நடுராத்திரி சத்தத்தை கேட்டு ஏற்றுக்கொள்வார்.
7நோவாவின் நாளில், எல்லோரும் நோவா பிரசங்கித்ததைக் கண்டதில்லை, கேட்டதில்லை, அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், முடவர்கள், குருடர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், தூரத்தில் இருந்தவர்கள் மற்றும் பேழைக்கு வர சாத்தியமில்லாத அனைவரையும் அவர் கொன்றபோது தேவன் அநீதியாக இல்லை! ஒருவன் கத்தோலிக்கம், புராட்டஸ்டன்ட், சுவிஷேசக அல்லது பிரன்ஹாமிஸ்ட் சபைகளில் , ஊழிய இயக்கங்கள் மற்றும் ஊழிய நிறுவனங்களில் கலி கூறுகிற காரியமே அவன் பிசாசின் புத்திரனுக்கான அடையாளம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
8மூன்றாவது கேள்வி: "சகோதரர் பிலிப்பு, ஆவிகளின் இடமாற்றம் தொடர்பாக, ஒரு கிறிஸ்தவர் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்கப்படுவதை தான் அணிந்துக் கொள்ள முடியுமா? இதைப் பற்றிய என்னுடைய வெளிப்பாடு: இல்லை! இந்த உடைகள் யாரிடமிருந்து வந்தன என்று எனக்குத் தெரியவில்லை, அதைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு கிறிஸ்தவர் அவற்றை அணிய முடியாது என்பது வெளிப்பாடு! பைகள் மற்றும் பிற பொருள்களைப் பற்றி, எனக்குத் தெரியாது, ஆனால் உடலுடன் நிரந்தர தொடர்பில் இருக்கும் ஆடைகளை குறித்து மட்டுமே வெளிப்பாடு தொடர்புடையது! உங்களால் அவற்றை அணியாமல் இருக்க கூடும் என்றால், அவற்றை அணிய வேண்டாம்! ஆனால் ஒரு சகோதரர் அல்லது சகோதரி அவர்கள் ஏற்கனவே அணிந்திருந்த ஆடைகளை உங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம், அவற்றை நீங்கள் அணியலாம்! ஆனால் இரண்டாம் பட்ச உடைகளில் ஒருபோதும் அணியாத உடைகள் மற்றும் பொருட்களும் உள்ளன, விற்க முடியாத ஆடைகள் இருக்கின்றது. நீங்கள் அவற்றை அணியலாம், அதைப் பற்றி நான் பேசவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
9நல்லது! கடந்த ஞாயிற்றுக்கிழமை, சகோதரர் பெகோ மற்றும் சகோதரி மாய் ஆகியோரின் திருமணத்தை ஆசீர்வதித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்! அவள் ஒரு அருமையான சகோதரி! இருபத்தி மூன்று வயதில், எந்த ஆணும் அவளை அறிந்ததில்லை. இந்த ஆண்டு, பாஸ்டர் அக்கோப் மற்றும் அப்போஸ்தலன் பிட்டி ஆகியோரின் திருமணங்களையும் நான் ஆசீர்வதித்தேன்; பாஸ்டர் அக்கோபின் மனைவி சகோதரி ரேச்சல், தந்தை இல்லாதவர் மற்றும் தாய் இல்லாதவர் என்றாலும், இருபத்தைந்து வயதில் கன்னியாக இருந்தார், அப்போஸ்தலன் பிட்டியின் மனைவி சகோதரி பமீலா இருபத்தி ஆறு வயதில் கன்னியாக இருந்தார்! கன்னித்தன்மை என்பது பள்ளி டிப்ளோமாக்களுக்கும், பிரன்ஹாமிஸ்டுகளின் நீண்ட கூந்தலுக்கும் அப்பாற்பட்ட ஒரு மகிமை, அது தொடர்பாக, ஒவ்வொரு தாயும் தன் மகளுக்காக, கடவுளுக்கு முன்பாக பொறுப்பானவள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
10நல்லது! நான் இப்போது என்னுடைய பிரசங்கத்திற்கு வருகிறேன்! ... நான் இந்த பொருளை பற்றி பேச விரும்புகிறேன்: ஒரு தீர்க்கதரிசி இன்னோரு தீர்க்கதரிசிக்காக பேசுவாரா? ஒரு தீர்க்கதரிசி இன்னோரு தீர்க்கதரிசியைப் பற்றி பேசுவார் அல்லது மற்றொரு தீர்க்கதரிசி சொன்னதை சொல்வார் என்று நாம் அறிவோம், ஆனால் ஒரு தீர்க்கதரிசி மற்றொரு தீர்க்கதரிசிக்காக பேசுவாரா? ஒரு தீர்க்கதரிசி இன்னோரு தீர்க்கதரிசிக்கு விதிகள் அல்லது கட்டளைகளை கொடுப்பாரா? அதைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.
11நல்லது! கூடாரத்தின் கூட்டத்தில் உள்ள சேவை, ஆசாரியத்துவம், தசமபாகம், எல்லாம் தேவனுடைய வேலைக்கு பொருத்தப்பட்டது என்பது லேவியின் குமாரர்களின் காரியம் என்பதை கவனியுங்கள். தேவன் இதை ஒரு நிரந்தர அந்தஸ்தாக மோசேயால் நிறுவியிருந்தார். தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு இது லேவியின் குமாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது! இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில், தேவன் இந்த சேவைக்காக லேவி கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்! உடன்படிக்கைப் பெட்டியை தேவனுக்கு முன்பாக சுமந்த லேவியின் குமாரர்கள் இவர்கள்! மற்ற பதினொரு கோத்திரங்களில் இருந்து எந்த மனிதனும் அனுமதிக்கப்படவில்லை!
12அவர் எவ்வளவு பக்தியுள்ளவராக இருந்தாலும், அவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், ஆசாரியத்துவத்தை அணுக அவருக்கு உரிமை இல்லை! 2 நாளாகமம் 26-ல், யெகோவாவிற்கு தூபம் போட விரும்பிய உசியா ராஜாவுக்கு தான் லேவியின் குமாரன் இல்லை என்பதை ஆசாரியர்கள் நினைவு கூர்ந்தனர். மோசேக்கு கொடுத்த தேவனுடைய கட்டளையின்படி ஒருவன் முதலாவதாக லேவியின் குமாரனாக இல்லாவிட்டால் யாரும் ஆசாரியனாக இருக்க முடியாது!.
13ஆயினும் தீர்க்கதரிசி செய்தியாளரின் ஊழியம் ஒரு ஆசாரியத்துவமாக இருக்கின்றது, ஆனால் ஒருவன் ஆசாரியத்துவத்தில் இருக்க லேவியின் மகனாக இருக்க வேண்டும் என்பது ஒருபோதும் தீர்க்கதரிசி செய்தியாளர்களுக்கு பொருட்படுத்த பட்டதில்லை! மேலும் மோசேக்குப் பிறகு, தேவன் எபிராயீமியராகிய யோசுவாவை ஒரு தீர்க்கதரிசியாக எழுப்பினார்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, பிரதான ஆசாரியரான மெல்கிசேதேக், யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்! நீங்கள் பார்க்கிறீர்களா?
14ஒரு ஆசாரியன் இன்ன இன்ன விதமாக இடைக்கச்சைகள், மார்ப்பதக்கம், தலைப்பாகை, உரிம் தும்மிம், ஏபோத்து, மணிகள் மற்றும் மற்றவைகள் உடுத்து விக்கப்பட வேண்டும் என்று மோசே கூறின போது... அதை அவர் தனது தலைமுறைக்காகவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்காக கூறினான், ஆனால் ஏசாயா, ஆமோஸ், எரேமியா, மீகா, அல்லது ஆகாய் ஆகிய தீர்க்கதரிசி செய்தியாளர்களுக்காக அவர் சொல்லவில்லை!
15அது மட்டுமல்லாமல், தீர்க்கதரிசி செய்தியாளர்களாக அவர்கள் தங்கள் தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பேசக்கூடிய காரியங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கும்! அந்த செயல்பாடுகள் தெரிந்துகொள்ள பட்டவர்களுக்கு தவிர அர்த்தமுள்ளதாக இருக்காது! அவர்களுடைய மணி வேலளயில் உள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மூலமாக அவர்கள் தீர்க்கதரிசி செய்தியாளர்களாக அறிந்து கொள்ளப்படுவார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: நீ கொலை செய்யாதிருப்பாயாக, ஆனால் எலியா தேசங்களின் நானூறு தீர்க்கதரிசிகளை அமைதியாகக் கொல்ல முடியும்! ஏன்? ஏனென்றால், அவனைக் குறித்து யாத்திராகமம் 20 ஆம் அதிகாரம் பேசவில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
16ஒரு தீர்க்கதரிசியாக, ஜான் வெஸ்லி ஒரு விதவையை மணக்கும்போது, தேவன் ஓசியாவிடம் போய் ஒரு வேசியை மனைவியாக கொள்ளும்படி சொல்லும்போது, ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளனாக, பரலோகத்திலோ பூமியிலோ எந்த சட்டமும் அதைத் தடை செய்யவில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
17ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வேதாகமத்தில் எந்த வசனமும் சொல்லவில்லை! மத்தேயு 25: 6-ன் தீர்க்கதரிசி வரும்போது, அவர் அதைச் செய்வார் என்று குறிப்பிட்டு சொல்லி இருந்தால், அவர் அதை செய்வார்.
18திருமணம் ஒரு தெய்வீக நிறுவனமாக இருக்கும்போது எத்தியோப்பிய ஸ்திரீயாகிய சிப்போரி வை மோசே அழைத்துச் செல்ல மறுக்கும்போது, பரலோகத்திலோ பூமியிலோ எந்த சட்டமும் அவரைக் கண்டிக்கவில்லை அல்லது மத்தேயு 19:4 முதல் 6 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இனி ஒரு போதும் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
19வேதாகமம் இவ்விதமாக : ஒரு ஆசாரியன் இவ்விதமாக அல்லது அவ்விதமாக இருக்க வேண்டும்! ஒரு கண்காணியானவன் இவ்விதமாக அல்லது அவ்விதமாக இருக்க வேண்டும்! ஒரு முப்பர் இவ்விதமாக அல்லது அவ்விதமாக இருக்க வேண்டும்! ஒரு பேராயர் இவ்விதமாக அல்லது அவ்விதமாக இருக்க வேண்டும்!! ஆனால் வேதாகமம் ஒருபோதும் தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு ஒருபோதும் விதிகள், கட்டளைகள் அல்லது அறிவுறுத்தல்களை வழங்கியதில்லை மேலும் வழங்கவும் முடியாது! வேதாகமம் அவர்களை அறிவிக்க முடியும், அவர்களுடைய ஊழியம் என்னவாக இருக்கும் என்று சொல்லலாம், ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வேதாகமத்தினால் ஒருபோதும் சொல்ல முடியாது!
20மோசேயின் நியாயப்பிரமாணமும் கட்டளைகளும் இருக்கிறதை கூட தீர்க்கதரிசிகள் புறக்கணிப்பார்கள் என்பதைக் கவனியுங்கள்! ஏன்? மோசே அதை அவர்களுக்காக எழுதவில்லை! தீர்க்கதரிசிகளை வாசிக்கும்போது அவர்கள் மோசேக்கு முன்பாக எழுதியிருக்கிறார்கள் அல்லது இஸ்ரவேலுக்கு வெளியே எழுதியிருக்கிறார்கள் என்ற என்னத்தை நீங்கள் கொண்டு இருக்கிறீர்கள்! ஏன்? ஒரு தீர்க்கதரிசியாக மோசே அவர்களுக்கு எழுதவில்லை! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
21ஏனோக்கு எழுதியபோது, அது அவனுடைய தலைமுறையினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், நோவாவின் தலைமுறை, நோவாவின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் உள்ளடக்கி இருந்தது, ஆனால் அது ஒரு தீர்க்கதரிசியாகிய நோவாவுக்கு இல்லை! நோவா மது அருந்தியதை நீங்கள் கண்டு, அவனிடத்தில் 1 தீமோத்தேயு 3 இல் கூறுகிறதாவது என்று நீங்கள் சென்றால் : "ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும்... அவன் மதுபானப்பிரியனும்... என்று கூறினால் நீங்கள் ஒரு பிசாசாக இருக்கிறீர்கள், ஏனெனில் 1 தீமோத்தேயு 3 ஐ அவருடைய தலைமுறையின் எல்லா மனிதர்களையும் விட நோவா நன்றாக புரிந்துகொள்கிறார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் என்ன பிரசங்கம் செய்கிறார் என்பதே உங்களுக்கு புரியவில்லை என்றால், அவருடைய வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வீர்கள்?
22நோவாவின் நாளில் ஜனங்கள் தங்களை மிகவும் ஆவிக்குரியவர்கள் என நினைத்தார்கள்! அவர்கள் இப்பொழுது இழக்கின்ற அளவிற்கு அவ்வளவு ஆவிக்குரியவர்களா? நீங்கள் பார்க்கிறீர்களா? ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ள பிறக்காதவர்களுக்கு நான் இதைச் சொல்கிறேன்: யூதர்களைப் போலவே, தீர்க்கதரிசிகள் மரித்த பின்பு நீங்கள் அவர்களை விசுவாசிக்கிறீர்கள் ஆனால் உயிருள்ள தீர்க்கதரிசிகளை நாங்கள் விசுவாசிக்கிறோம்! காலம் மிகவும் மோசமானது, எல்லா இடங்களிலும் வஞ்சனை இருக்கிறது, இந்த நேரத்தில்தான் நீங்கள் உயிருள்ள தீர்க்கதரிசியை நம்ப வேண்டாம் என்று தேர்வு செய்தீர்களா? தீர்க்கதரிசியை நம்பாத நிலையில், தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகமான வேதாகமத்தை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள்.
231993 ஆம் ஆண்டில் நான் பாப்டிஸ்ட் சபையில் இருந்தபோது, எபிரெயர் 1:1 ஆனது இதைச் சொல்ல அடையாள முத்திரையாக கொண்டார்கள் ..."பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிக்குள்ளிருந்து பிதாக்களிடம் பேசின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரனாகிய நபருக்குள்ளிருந்து ... "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு, மத்தேயு 24:24-ஐத் தவிர இனி ஒரு போதும் தீர்க்கதரிசி செய்தியாளர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இருந்த போதும் நம்மை நம்ப வைப்பதற்காக எடுத்துக்கொண்ட எபிரெயர் 1:1 ஆனது கிறிஸ்துவுக்குப் பின் வந்த ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனால் எழுதப்பட்டது! அது என்ன ? அது அழிந்து போகிறவர்களுக்கு பைத்தியமாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
24பரலோகத்தின் கதவானது புத்தகங்களின் சுருள் அல்ல, ஆனால் எப்போதும் நோவா, மோசே, ஏசாயா போன்ற பூமியில் வாழும் ஒரு மனிதர் என்பதையாவது உணர்ந்து கொள்ளுங்கள் ... ஒரு தலைமுறையில் உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் தான் பரலோகத்தின் கதவாக இருக்கின்றான்! அவனை விசுவாசிக்கின்ற அனைவருக்குமான வெகுமதியானது நித்திய ஜீவன். நித்திய ஜீவன் என்பது தீர்க்கதரிசிகளின் வெகுமதி. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
25ஒரு தீர்க்கதரிசி என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, அவர் என்ன சொல்கிறார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்! ஒரு தீர்க்கதரிசியின் ஜீவியம் அழிந்துபோகிறவர்களுக்கு வீழ்ச்சியின் ஒரு சந்தர்ப்பமாக மட்டுமே இருக்க முடியும்! மனிதனின் மலத்தை சாப்பிடும்படி அல்லது குறிப்பிட்ட நாட்கள் ஒரு பக்கமாக படுத்துக் கொள்ளும்படி தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடம் கூறும்போது ..., அதைச் அவன் செய்யும்படியாக வேதாகமத்திலிருந்து ஒரு வசனமும் கூறவில்லை!
26ஒரு தீர்க்கதரிசி என்ற முறையில், நான் ஒரு கன்னியை எடுத்துக்கொள்ளலாம் மேலும் தேவன் என்னிடம்: இப்பொழுது அவளை விட்டுவிட்டு, ஏற்கனவே தீட்டுப்பட்ட ஒரு பெண்ணை எடுத்துக் கொள் என்று சொல்லலாம். அதனால்தான் தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை.
27தேவன் ஓசியாவை நோக்கி, "நீ போய், ஒரு சோரஸ்திரீயை சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் ஒரு தீர்க்கதரிசியிடம் சென்று ஒரு வேசியை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்! அதை ஒரு ஆசாரியரிடமோ அல்லது எபேசியர் 4:11 ஊழியத்துடனோ தேவன் சொல்ல முடியுமா? இல்லை ஐயா! நீங்கள் பார்க்கிறீர்களா?
28தேவன் வில்லியம் பிரன்ஹாமிடம், "மொன்டானா மாநிலத்தில் லிமாவுக்கு அருகிலுள்ள ஏழு சிகரங்களில் உள்ள மூன்று பெரிய சிகரங்கள் உன்னுடைய பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடையவை!" என்றார். அதை தேவன் ஒரு அப்போஸ்தலனிடத்திலோ, ஒரு சபை தீர்க்கதரிசியிடத்திலோ, சுவிசேஷகனிடத்திலோ அல்லது போதகரிடத்திலோ சொல்ல முடியுமா? அதை ஒரு மேய்ப்பனிடம் தேவன் சொல்ல முடியுமா? இல்லை ஐயா! அது சாத்தியமில்லை, ஆனால் அவர் அதை ஒரு தீர்க்கதரிசி செய்தியாளரிடம் சொல்ல முடியும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
29எவால்ட் ஃபிராங்க், பருட்டி கசோங்கோ, பில்லி பால் அல்லது ஜோசப் பிரன்ஹாம் அல்லது எபேசியர் 4:11 இன் மற்றொரு ஊழியத்திற்கு தேவன் ஒருபோதும் சொல்ல முடியாது. வெளிப்பாட்டின் மூலம், நான் 1993 முதல் இன்று வரை ஒவ்வொரு ஜனவரி 1 இல் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக உபவாசம் இருந்தேன், பாவனை செய்யக்கூடாது என்ற காரணத்திற்காக எவரும் அதை அறிந்து கொள்ளாதபடி நான் பார்த்துக் கொண்டேன்! நீங்கள் பார்க்கிறீர்களா? அதை, எபேசியர் 4:11-ன் ஊழியத்திடம் தேவன் சொல்ல முடியாது!
30இப்போது, ஒரு காரியத்தை கவனியுங்கள்! ஒரு சகோதரர் அல்லது சகோதரி உண்மையான பரிசுத்த ஆவியினால் சபையில் எழுந்து "கர்த்தர் உரைக்கிறதாவது: நீங்கள் போதுமான அளவு ஜெபிக்கவில்லை!" என்ற ஒரு அற்புதமான தீர்க்கதரிசனத்தை அளிக்க முடியும், ஆனால் இந்த வெளிப்பாடானது, இது தேவனிடமிருந்து வந்தாலும், மற்றொரு திருச்சபைக்கு அது தேவை என்பதை நீங்கள் கவனித்தாலும், மற்றொரு திருச்சபையில் ஒருபோதும் பிரச்சாரம் செய்ய முடியாது!
31எபேசியர் 4:11-ன் ஒரு போதகர் அல்லது அப்போஸ்தலன் திருச்சபையின் நிலை குறித்து ஒரு அற்புதமான போதனையை வழங்க முடியும்! இந்த போதனை எவ்வளவு உண்மையாக இருந்தாலும், அது வழங்கப்பட்ட நாட்டிற்கு நல்லது! கூட்டங்களில் தேவைப்படுவதாகத் தோன்றினாலும் எல்லா இடங்களிலும் விநியோகிக்கபடத்தக்கதான ஒரு புத்தகமோ அல்லது கேசட்டோ தயாரிக்க உங்களுக்கு உரிமை இல்லை.
32நீங்கள் எபேசியர் 4:11 ஊழியராக இருக்கும் தருணத்திலிருந்து, அதாவது, அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, சுவிசேஷகன், போதகன் அல்லது பிறர், தேவனுடைய உண்மையான வெளிப்பாடு உங்களிடம் இருந்தாலும் உங்களுக்கு ஒரு புத்தகம் எழுத உரிமை இல்லை! ஒரு போதகருக்கு அதைச் செய்ய உரிமை இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
33இந்த பாடலை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பாடப் போகிறோம் ... அது இவ்விதமாக கூறுகிறது... "இயேசு இல்லாமல் பூமியில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருந்தாலும், அனைத்தும் வீண்! "... மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காலம் காலமாக வரை, தலைமுறை தலைமுறையாக பூமியின் மேல் அனுப்பப்படும் தீர்க்கதரிசிகள் மூலம் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்துதல் 19 கூறுகிறதாவது தீர்க்கதரிசிகள் தங்களின் மணி வேளையின் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு என்றும், தேவனே தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவன் என்றும் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
34எதிர்பார்க்கப்பட்ட தரிசனத்தில் தூதன் வில்லியம் பிரன்ஹாமிடம் : "நீ பூமியில் உயிருடன் இருந்தபோது, நீ எப்போதும் நேசித்தவர்களும் உன்னை நேசித்தவர்களும், தேவன் உனக்கு கொடுத்திருக்கின்றார்!" என்ரார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசித்தவர்கள் அல்ல! வேதத்தை நேசித்தவர்கள் அல்ல! பெற்றோர்கள் அல்ல! அதிகமாய் ஜெபிப்பவர்கள் அல்ல! மரித்த தீர்க்கதரிசிகளை நேசித்தவர்கள் அல்ல! ... ஆனால் இந்த தலைமுறையின் தீர்க்கதரிசியாகிய உன்னை நேசித்தவர்கள் மற்றும் நீ நேசித்தவர்களும், தேவன் அவற்றை உனக்கு கொடுத்தார்!
35நோவாவின் நாளில், லட்ச்சக்கனக்கான மக்கள் கடவுளை நேசித்தார்கள், ஆனால் நோவாவை நேசித்தவர்களும் நோவா நேசித்தவர்களும் மட்டுமே இரட்சிக்கப்பட்டார்கள்! திஷ்பியரான எலியாவின் நாட்களில், லட்ச்சக்கனக்கான ஜனங்கள் கடவுளையும் மோசேயையும் நேசித்தார்கள், ஆனால் எலியாவை நேசித்தவர்களும், எலியா உயிரோடு இருக்கும் போது நேசித்தவர்களும் மட்டுமே இரட்சிக்கப்பட்டார்கள்! வில்லியம் பிரன்ஹாமின் காலத்தில், ஜனங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் வேதத்தையும் நேசித்தார்கள்! ஆனால் தேவதூதன் அவனை நோக்கி, "நீ பூமியில் உயிருடன் இருந்தபோது, உன்னை நேசித்தவர்களையும், நீ நேசித்தவர்களையும் தேவன் உங்களுக்குக் கொடுத்தார்!" என்றான்.
36இந்த தலைமுறையைப் பொறுத்தவரை, முழு உலகமும் தங்கள் பிள்ளைகளை ஒரு தீர்க்கதரிசிக்கு எதிராக எச்சரிக்கிறது, ஆனால் முழு உலகமும் அவருடைய குழந்தைகளுக்கு எச்சரிக்கை செய்யும் தனி தீர்க்கதரிசியை நாங்கள் தேடுகிறோம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. உலகம் முழுவதும் எதிர்த்துபோராடும் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை நாங்கள் தேடுகிறோம்.
37உலகம் முழுவதும் புத்தகங்களால் நிறைந்திருக்கிறது; அரச தலைவர்களும் அரசியல்வாதிகளும் புத்தகங்களை எழுதியுள்ளனர்! விக்டர் ஹ்யூகோ மற்றும் பல பிற எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்! போப்புகள் சிலவற்றை எழுதியுள்ளார், பில்லி கிரஹாம், டாமி ஆஸ்போர்ன் மற்றும் பல தீர்க்கதரிசிகள், மேய்ப்பர்கள், போதகர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் எழுதியுள்ளனர், கிறிஸ்தவ புத்தகக் கடைகள் நிரம்பியுள்ளன, ஆனால் இந்த தலைமுறையில் தங்களுடைய பிள்ளைகளை முழு உலகமும் எச்சரிக்கை செய்கின்ற ஒரு புத்தகத்தை நாம் பார்க்கின்றோம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].இந்த புத்தகம் தான் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் புத்தகம். தேவனுடைய கிருபையே நம்முடைய இரட்சிப்புக்காக இந்த புத்தகத்திற்கு நம்மை இட்டுச் சென்றது. இந்த தேவனுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என்றென்றும் சதாக்காலமும் கனமும், மகிமையும், மகத்துவமும் உண்டாவதாக! ஆமென்!