(ஆகஸ்ட் 23,2009 ஞாயிற்றுக்கிழமை அபிட்ஜானுக்கு அருகிலுள்ள அன்யாமா -ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்கு இங்கே ஒரு கேள்வி உள்ளது … சகோதரர் பிலிப்பு, ஒரு சகோதரர் தனது மனைவியின் அருகில் வந்தால், அவர்கள் இன்னும் குளியல் செய்யாத போது, எந்த சார்பு நிலையை அவர்கள் கொண்டு இருக்க வேண்டும்? முதலாவதாக, அவர்கள் அசுத்தமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும் மற்றும் முதலாவது செய்ய வேண்டிய காரியமாவது இவ்வாறு, ஜெபிப்பதற்கு அல்லது யாரையாவது வாழ்த்துவதற்கு முன் கழுவ வேண்டும். இருப்பினும், அவர்கள் வாழ்த்துக்கள் அல்லது தொலைபேசிக்கு பதிலளிக்கலாம். நீங்கள் இரவுக்குறிய அசூசிகளுக்கும் அது அதே காரியமாக இருக்கின்றது. இவை யாவும் லேவியராகமம் 15:16 முதல் 18 யின்படி ஆகும்.
2நல்லது, நான் இன்று காலை இந்த பொருளைப் பற்றி பேசப் போகிறேன்: ஒரு புதிய சுவிசேஷம். பவுல் 1 கொரிந்தியர் 4: 14 முதல் 15-ல் தன்னுடையவர்களிடம் இதை கூறினார், "உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். "
3தேவன் கொடுத்த சுவிசேஷத்தைப் பற்றி பவுல் இங்கே பேசுகிறார்! ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளரும் ஒரு புதிய சுவிசேஷத்துடன் வருகிறார். மற்றொரு தீர்க்கதரிசி தனக்கு முன் சொன்னதை நினைவுபடுத்தும்படியாக ஒரு தீர்க்கதரிசி வருவதில்லை, ஆனால் அவர் ஒரு புதிய சுவிசேஷத்துடன் வருகிறார், அதை நாம் வெளிப்படுத்துதல் 14:6 முதல் 10 மற்றும் வெளிப்படுத்துதல் 2 இல் ஆசியாவின் ஏழு சபைகளுக்கு வெவ்வேறு கடிதங்களில் காணலாம். ஒரு தீர்க்கதரிசி வேதாகமத்தை பிரபலமாக்கவோ அல்லது மற்றொரு தீர்க்கதரிசியின் சுருள்களை சுமப்பதற்காக வருவதில்லை! இவ்வாறு, வேதபாடசாலைகளும் வேதாகம படிப்புகளும் விசுவாசத்திற்கு எதையும் கொண்டு வருவதில்லை!
4மோசேக்குப் பிறகு, யோசுவா ஒரு புதிய சுவிசேஷத்துடன் வந்தார், ஏனெனில் அவர் ஒரு தீர்க்கதரிசி! சாமுவேல் ஒரு புதிய சுவிசேஷத்துடன் வந்தார்! ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரு புதிய சுவிசேஷத்துடன் வருகிறார்கள்! நடுராத்திரி சத்தம் என்பது நம்முடைய காலத்திற்கான இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆகும், அதாவது இது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் காலம் என்று பொருள். எரேமியாவின் புஸ்தகம் எரேமியாவின் காலத்திற்கான இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்! செப்பனியாவின் புத்தகமானது செப்பனியாவின் காலத்திற்கான இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
5நான் வேதாகமத்தினூடாக பார்க்கும்போது, இன்னும் பல புத்தகங்கள் இருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அதன் தீர்க்கதரிசியும் மற்றும் அவருடைய புத்தகமும் இருந்தது. உதாரணமாக, நம்மிடம்: யாசேரின் புஸ்தகம்: யோசுவா 10:13, சாலொமோன் நடபடிகளின் புஸ்தகம் அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். 1 இராஜாக்கள் 11:41, நாத்தான் தீர்க்கதரிசியின் புஸ்தகம்: 1 நாளாகமம் 29:29 மற்றும் 2 நாளாகமம் 9:29, ஏனோக்கின் புஸ்தகம்: யூதா வசனம் 14, காத் தீர்க்கதரிசியின் புஸ்தகம்: 1 நாளாகமம் 29 : 29.
6அகியா தீர்க்கதரிசியின் புஸ்தகம்: 2 நாளாகமம் 9:29, அதே வசனத்தில், ஜெதோ தீர்க்கதரிசியின் புஸ்தகம். தீர்க்கதரிசி செமாயாவின் புஸ்தகம்: 2 நாளாகமம் 12:15 மற்றும் இந்த வசனத்தில் மீண்டும் வருவோம்: இத்தோ தீர்க்கதரிசியின் புஸ்தகம். யெகூ தீர்க்கதரிசியின் புஸ்தகம் நம்மிடம் உள்ளது: 2 நாளாகமம் 20:34, ஓசாய் தீர்க்கதரிசியின் புஸ்தகம் 2 நாளாகமம் 33:19… நீங்கள் பார்க்கிறீர்களா? அவைகள் வேதாகமங்களில் இல்லை, ஆனால் அவைகள் தங்கள் தலைமுறையின் இரட்சிப்பிற்கான தீர்க்கதரிசிகள் மற்றும் சுவிசேஷங்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
7நீங்கள் இப்படியாக, "எல்லாம் சரி! ஆனால் தீர்க்கதரிசியே, என்னைப் பொறுத்தவரை, நான் இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், அது நல்லது தான், ஆனால் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் தேவனாகிய இயேசு கிறிஸ்து, ஆபிரகாமின் தேவன், மோசே மற்றும் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகள் இங்கே இருக்கின்றார், நான் பேசும் இந்த வார்த்தைகளை என் மூலமாக அவர் பேசுவது, இந்த வார்த்தைகள் தான் கடைசி நாளில் உங்களை நியாயந்தீர்க்கும். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆபிரகாம், மோசே மற்றும் பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தேவன் தாமே என்னை மத்தேயு 23:34 முதல் 35 ன் படி அனுப்பினார் மற்றும் நான் அவருடைய அடிமை! நீங்கள் என்னை நிராகரித்து அவரை விசுவாசிப்பதாக உரிமை கூற முடியாது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
8"நான் கடவுளின் ஊழியக்காரன், என்று தேவன் என்னிடம் கேட்கக்கூடிய குரலில் கூறினார் ..." என்று நீங்கள் சொல்கிறீர்கள் ... "இது மிகவும் நல்லது, ஆனால் என்ன சுவிசேஷம், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள், பிரன்ஹாமிஸ்டுகள் மற்றும் நான் உட்பட, இந்த முழு உலகமும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் அறியாத நற்செய்தி என்ன? வேதாகமத்தை ஒரமாக வைத்துவிட்டு எனக்கு சொல்லுங்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. 1 கொரிந்தியர் 4: 15-இல் பவுல் தனக்கு சொந்தமானவர்களை பெறப்பட்டவர்களுடைய சுவிசேஷத்தைப் பற்றி பேசும்போது, அவர் மத்தேயு, மாற்கு, லூக்கா அல்லது யோவானை பற்றி பேசியதாக அர்த்தமில்லை ஆனால் அவருடைய சொந்த நிருபங்களையே அர்த்தம் கொள்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா?
9உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிற தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய, நான் வேதாகமத்தின் தீர்க்கதரிசியின் சீடன் அல்ல. நான் சொன்ன ஏதாவது ஒரு காரியம், அது பவுல் சொன்னதற்கு இசைவானதாக இருந்தால், அது அவ்வளவு சிறந்ததாக இருக்கின்றது. ஆனால் வேதாகமம் ஒரு நினைவுச்சின்னம் என்பதை மனிதகுலம் ஒப்புக் கொள்ள வேண்டும், அது ஒரு பண்டைய கால வரலாறு மற்றும், நான் எனது வாகனத்தை பின்புறக் கண்ணாடியால் ஓட்டுவதுமில்லை, என் ஜனங்களை வேதாகமத்தினால் வழிநடத்துவதுமில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமம் திருச்சபையின் பின்புறக் கண்ணாடி மற்றும் உயிருள்ள தீர்க்கதரிசி தான் முகப்பு கண்ணாடியாக இருக்கின்றார் . உயிருள்ள தீர்க்கதரிசி தான் முழு குழுவினரையும் முன்னேற அனுமதிக்கின்றார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
10நான் பள்ளியில் இருந்தபோது, அகராதியில் உள்ள சொற்களைத் தாண்டி செல்ல எனக்கு அனுமதி இல்லை, அது சரிதான், ஏனென்றால் நான் ஒரு கல்வியாளன் அல்ல. ஆனால் ஒரு முறை சபையில், வேதாகமத்தில் எழுதப்படாத எதையும் பேச எனக்கு உரிமை இல்லை என்று நம்பச் செய்யும் இந்த ஆவி ஒரு அந்திக்கிறிஸ்துவின் ஆவியாகும் ! அது ஒரு பிசாசு. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
11"வேதாகமம்" என்ற சொல் புத்தக அறை என்ற பிப்லியோதெக்கிலிருந்து (Bibliothèque) வந்தது! வேதாகமம் ஒரு புத்தகம் மட்டுமல்ல, பல புத்தகங்கள் ஆகும்! வேதாகமம் அறுபத்தாறு புத்தகங்களின் தொகுப்பாகும் ! தீர்க்கதரிசிகளின் புத்தகங்களை ஒரே ஒரு புத்தகத்தில் சேகரிக்க தேவன் ஒருபோதும் யாரையும் ஊக்கப்படுத்தவில்லை! இந்த எண்ணமானது பிசாசின் பிள்ளையிடம் இருந்து வந்தது! மற்றும் நீயாயத்தீர்ப்பின் போது, அத்தகைய செயலைச் செய்தவனை தேவன் ஒருபோதும் மெச்சிக் கொள்ள மாட்டார்!
12வெவ்வேறு விதைகளைக் கொண்ட வயல்களுக்கு எதிராகவும், வெவ்வேறு நூலை கொண்ட அறைக்கட்சை எதிராகவும் தேவன் இஸ்ரவேலை எச்சரித்தார்! தீர்க்கதரிசிகளின் அனைத்து புத்தகங்களும் வேதாகமம் என்று அழைக்கப்படும் ஒரே ஒரு புத்தகத்தில் உள்ளன, அது நல்லது தான் ஆனால் காயீனின் பேரன் அதைச் செய்தான். இது ஒரு தெய்வீக முயற்சி அல்ல ஆனால் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேரரசர்களின் முன்முயற்சி. நீங்கள் பார்க்கிறீர்களா?
13சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு பாறைகள், கருங்கற்களை வெடிக்க செய்வதற்காக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது… அந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் என்று தெரியாது.
14"வேதாகமம் கூறுகிறது, வேதாகமம் கூறுகிறது ..." என்று ஒரு பிரசங்கம் துவங்கி மேலும் அது, வேதாகமம் கூறுகிறது ....", என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, இது ஒரு வரலாறு வகுப்பு. இது ஒரு பண்டையகால வரலாறு. இது கிறிஸ்துவம் அல்ல. ஏற்கனவே மரித்த ஒரு தீர்க்கதரிசி அல்லது வேதாகமம் அல்லது குர்ஆன் மீது உங்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் இரசிக்கப்படலாம் என்று விசுவாசிப்பது, அது சாத்தானியம்.
15மேலும் ஒருவனை நாசரேத்தூரின் இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டு வேதாகமத்தை விசுவாசித்து, வேதாகமத்தின் மீது தன் நம்பிக்கையை நிலைகொண்டால் அவன் இரட்சிக்கப்படுவான் என்று நம்பச் செய்வது, அது ஒரு மோசடியாகும்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. மற்றும் நம்முடைய நாட்டின் சட்டங்கள் அதைத் தண்டிக்க வேண்டும்! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அந்த போதகர்களை நாடுகடத்த வேண்டும்! குருடனின் தட்டிலில் உள்ளதைக் கொள்ளையடிப்பவனைப் போன்று அவை மோசமானவை! நீங்கள் பார்க்கிறீர்களா? வரலாற்று வகுப்புகள் மற்றும் ஒழுக்கங்களைக் கேட்பதன் மூலம் அவர் ஒரு நல்ல வாழ்க்கையை ஜீவித்தால் அவர் இரட்சிக்கப்படுவார் என்று யாரையாவது நம்ப வைப்பது. அது ஒரு குற்றமாகும்.
16தேவன் ஒருபோதும் வரலாற்றையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க திருச்சபையை அழைக்கவில்லை, ஆனால் அதன் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி கூறியவற்றின் எதிரொலியாக இருக்க வேண்டும். நோவாவின் காலத்தில், ஒருவன் நோவாவின் பேழைக்குள் வர முழு மனிதகுலத்தையும் அழைக்க வேண்டியிருந்தது. ஒருவன் நோவாவின் எதிரொலியாக இருக்க வேண்டும்! நோவாவின் காலத்தில் அதுவே சுவிசேஷமாக இருந்தது. ஆகையால் தலைமுறை தலைமுறையாக அது அப்படி இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் வரை அது எப்போதுமே அப்படித்தான் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
17வரலாற்று வகுப்புகள், அதன் ஆசிரியர்கள் மூலம் அதன் குடிமக்களுக்கு வரலாறு மற்றும் ஒழுக்கங்களை கற்பிப்பதென்பது அரசுக்கு சொந்தமானது மற்றும் அதற்கான பள்ளிகள் நம்மிடம் உள்ளன. நாசரேத்தூரின் இயேசு , மஹோமெத் மற்றும் மதங்கள் என்ன செய்தார்கள், அவை பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டும். திருச்சபை, அது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி மூலம் தேவனிடமிருந்து வருகின்ற இரட்சிப்புக்காக இருக்கின்றது! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
18உலகம் முழுவதும் சாத்தானின் மோசடியில் உள்ளது. கடவுளுடைய கள்ள வார்த்தைகளின் மோசடியில், கள்ள சபைகளின் மோசடியில், கள்ள பரிசுத்த ஆவிகள், இரட்சிப்பின் பொய்யான நம்பிக்கை. அவர்கள் அனைவரும் குடித்து பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் பழைய பொய்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று நமக்கு தெரியாத அளவிற்கு அவர்கள் தூரத்தில் உள்ளனர்…
19கத்தோலிக்க தேவாலயம் ஒரு புத்தகத்தில் உள்ளது! புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் கத்தோலிக்க தேவாலயத்தை போலவே ஒரு புத்தகத்தில் உள்ளன! சுவிசேஷக தேவாலயங்கள் கத்தோலிக்க தேவாலயத்தை போலவே ஒரு புத்தகத்தில் உள்ளன! பிரன்ஹாமிஸ்ட் தேவாலயங்கள் கத்தோலிக்க தேவாலயத்தை போல ஒரு புத்தகத்தில் உள்ளன! அவை கத்தோலிக்க மதத்தின் உருமாற்றங்கள், ஆனால் கிறிஸ்தவம் ஒரு புத்தகத்தில் இல்லை! உண்மையான திருச்சபை ஒரு புத்தகத்தில் இல்லை!
20வேதாகமத்தை பாருங்கள்: இது முதலில் "பழைய ஏற்பாடு" என்ற எபிரேய நியதிகளின் யோசனையாக இருந்தது, ஆனால் முதல் நூற்றாண்டில் யோப்பாவுக்கு அருகிலுள்ள யெப்னாவின் குருமன்றத்தில் தான் பழைய ஏற்பாட்டின் நியதி முடிந்தது. எனவே கிறித்துவத்தில் "புனித புத்தகம்" என்று அழைக்கப்படும் ஒரு புஸ்தகம் கூட இல்லை.
21பின்னர், யூசேபியஸால் சேகரிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டின் நியதி, ராபர்ட் எஸ்டியென் என்பவரால் 1551 ஆம் ஆண்டில் விளிம்புகளில் உள்ள புள்ளிவிவரங்களுடன் வசனங்களில் வெட்டல்களை அடைய கார்தேஜ் சபையில் (Council Of Carthage) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை பிரான்சின் கத்தோலிக்க மதகுருமார்கள் அங்கீகரித்தனர்! நீங்கள் பார்க்கிறீர்களா?
22நியதி, குரு மன்றம், ஆலோசனை சங்கம், மதகுருமார்கள்… அவை கத்தோலிக்க சொற்கள்! புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் தேவாலயங்கள் உட்பட அனைத்து நவீன தேவாலயங்களும் கத்தோலிக்க மதத்தின் வழித்தோன்றல்கள்! வெளிப்படுத்துதல் 17:5-ல் இந்த தேவாலயங்கள் அனைத்தும் கத்தோலிக்க மதத்திலிருந்து வந்தவை, அவைகள் அதனுடைய குமாரத்திகள். என்று கூறுகிறது. அவைகள் வேதாகமம் தவிற வேறு எதின் மீதும் சத்தியம் செய்வதில்லை, அவை கத்தோலிக்க மதத்தின் வழித்தோன்றல்கள்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
23உங்களுடைய வேதாகமத்தை எடுத்து ஒரு தீர்க்கதரிசி தனது தலைமுறையை வேதாகமத்திற்கு அல்லது தனக்கு முன்னிருந்த மற்றொரு தீர்க்கதரிசி கூறியதற்கு திரும்ப கொண்டு சென்றதைக்காட்டுங்கள்! அது எந்த இடத்திலும் இருந்ததாக இல்லை! அது உண்மையாக இருந்து மேலும் தலைமுறை தலைமுறைக்கு முன்பு நம்முடைய விசுவாசத்தை தீர்க்கதரிசியின் மேல் அடிப்படையாக கொண்டிருப்போமானால் அங்கே ஏசாயா, எரேமியா, ஆமோஸ், தானியேல் ஆகியோரின் எந்த புத்தகமும் இருக்காது… நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் உங்களிடம் எதுவுமே கூறவில்லை என்றால், அமைதியாக இருங்கள்!
24ஒரு போதகர் எழும்பி யோவேல் 2:28 இவ்வாறு கூறுகிறது என்று சொன்னால்... பிறகு நாம் இதற்காக ஜெபிப்போம் அல்லது இன்ன இன்ன நபர் வேதாகமத்தில் இதைச் செய்தார் பிறகு அவருடைய ஆவியை பெற்றுக் கொள்ளும்படி அல்லது எலிசாவை போல் அதன் இரட்டைப் பகுதியைப் பெற ஜெபிப்போம், என்று கூறும் போது… அது பிசாசு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
25இரண்டாவது தேவாலயத்தின் மகிமையைப் பெற அவர் உங்களிடம் சொன்னால், பின்மாரி மழைக்காக நாம் ஜெபிப்போம், நாம் இதற்காக அல்லது அதற்காக ஜெபிப்போம், இத்தகைய அல்லது அத்தகைய நபரைப் போல இருக்க பிரார்த்தனை செய்வோம், அத்தகைய எழுப்புதலை ஏற்படுத்த பிரார்த்தனை செய்வோம்! நாம் ஒரு எஸ்தர் உபவாசம், யோசபாத் உபவாசம், தானியேல் உபவாசத்தை மேற்கொள்ளலாம்… நாம் இதைச் செய்வோம் அல்லது அதைச் செய்யலாம் என்று சொல்வான், அது ஏனெனில் உங்களுக்கு என்ன கூறுவது என்று அவனுக்குத் தெரியாது. தேவன் அவனை வழிநடத்தவில்லை! இறுதியில், அது நரகமாகும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
26மேலும் அதைச் செய்யும் போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளே, கடவுளுக்கு பயப்படுங்கள். நீங்கள் தேவனுடைய உண்மையான ஊழியகாரர்களாக இருந்தால், உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியாகிய நோவாவிற்கு நேராக பூமியை வழிநடத்துவீர்கள். அந்த காரியங்களை விட்டு விடுங்கள். உங்களுடைய இரட்சிப்புக்கும் உங்களை பின்பற்றுகிறவர்களுடைய இரட்சிப்பிற்க்கும் தேவையானது உங்களுடைய தலைமுறையின் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
27இளங்கலைப் பட்டத்தின் பழைய பரீட்சைகள் அனைத்தையும் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக முடித்திருந்தாலும், உங்களுடைய பதவி உயர்வுக்கென்று நோக்கம் கொண்ட இளங்கலைப் பட்டத்தின் பரீட்சைதாளை வெற்றிகரமாக நிறைவேற்றும்போது தான் நீங்கள் இளங்கலைப் பட்டத்தை பெறுவீர்கள்!
28நீங்கள் பரீட்சைகள் மற்றும் போட்டித் தேர்வு அலுவலகத்திற்கு அல்லது ஆய்வு அலுவலகத்திற்கு சென்று, "எனது இளங்கலைப் பட்டத்தின் சான்றிதழைப் பெற நான் இங்கே இருக்கிறேன்!" என்று நீங்கள் சொன்னால், அவர்கள் உங்களை அமர வைத்து, அவர்கள் அனைத்து இளங்கலை பட்டதாரிகளின் பதிவுகளையும் வருடாந்திரங்களையும் வைப்பார்கள், பின்னர் அவர்கள் உங்களிடம், "ஐயா, நீங்கள் எந்த ஆண்டு இளங்கலைப் பட்டத்தை பெற்றீர்கள், எந்த குறிப்பு எண்ணுடன்?" என்று கேட்பார்கள். மேல் ஆறாவது படிவத்தின் ஒவ்வொரு பாடத்தையும் நீங்கள் எவ்வாறு தேர்ச்சி பெற்றீர்கள் என்பதையும், இளங்கலை பட்டத் தேர்வின் பழைய பரீட்சைகள் அனைத்தையும் எவ்வாறு வெற்றிகரமாக முடித்தீர்கள் என்பதையும் காட்டத் தொடங்கும் போது… நீங்கள் முடிக்க மாட்டீர்கள் ஆனால் அவர்கள் உங்களை வலுக்கட்டாயமாக மிக நெருக்கமான மனநல மையத்திற்கு அழைத்துச் செல்வார்கள்!
29நீங்கள் எவ்வளவு நன்றாக ஆடை அணிந்திருந்தாலும், உங்கள் நல்ல உணர்வை காண்பிக்க எவ்வளவு கூச்சலிட்டு எதிர்த்தாலும், மக்கள் அதிலிருந்து திசைதிருப்ப மாட்டார்கள்! இரட்சிக்கப்பட வேண்டும் என்று வேதாகமத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் அனைவரின் நிலை இதுதான்! நீங்கள் பார்க்கிறீர்களா?
30மோசேயின் காலத்தில் ஒருவன் எகிப்திலிருந்து வெளியேற மறுத்து நோவா மீது நம்பிக்கை வைத்து எவ்வாறு இரட்சிக்கப்பட முடியும்? இன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் காலத்தில் ஒருவன் எகிப்திலிருந்து வெளியேற மறுத்து அதாவது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் தேவாலயங்களுக்கு வெளியேற மறுத்து ஏற்கனவே மரித்த, புதைக்கப்பட்ட மற்றும் அழுகிய தீர்க்கதரிசிகள் மீது தனது நம்பிக்கையை வைத்து எவ்வாறு நித்திய ஜீவனை பெற முடியும்? பிரன்ஹாம் மரிக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்! ஆமாம், ஐயா, உங்களுடைய முன்னோர்களான பிசாசின் புத்திரர்கள் பாலைவனத்தில் அப்படித்தான் சொன்னார்கள்! அவர்கள்: "மோசே மரிக்கவில்லை! மோசேயின் கல்லறை எங்கே? தேவன் அவரை மறைத்தார், மோசே இப்பொழுதும் இருக்கின்றார்!" அதன்பிறகு, எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதே பிசாசின் புத்திரர்கள் அவரைத் தங்கள் தீர்க்கதரிசியாகக் கருதிக் கொண்டிருந்தார்கள், ஆனால் தேவன் இப்போது எலிசாவுடன் இருக்கிறார் [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. அவர்கள் தங்களை போன்ற ஒரு உயிருள்ள நபரை நம்ப மறுக்கிறார்கள்.
31நான் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்! ஆனால் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறீர்கள் என்பதற்கான சான்று என்னவென்றால், இன்று இயேசு கிறிஸ்து அனுப்பிய தீர்க்கதரிசியை நீங்கள் பின்பற்றுவதாகும். அதை அவர் மத்தேயு 23: 34-35-ல் பூமியில் தீர்க்கதரிசிகளை அனுப்புவேன் என்று கூறினார். உங்களோடு பேசிக் கொண்டு இருக்கின்ற நானே அவர்களில் ஒருவன். நீங்கள் என்னுடைய வார்த்தையை பெறவில்லை ஏனெனில் நீங்கள் தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவினுடையவர்கள் அல்ல. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. இரட்சிக்கப்பட வேண்டும் என்று வேதாகமத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் இன்று இதுதான் நிலை. நீங்கள் பார்க்கிறீர்களா?
32இயேசு கிறிஸ்துதான் இரட்சிக்கிறார் என்பது உண்மைதான், ஆனால் மத்தேயு 23:34 முதல் 35 யின்படி அவர் அனுப்பிய தீர்க்கதரிசி மூலம் நீங்கள் அவரை அடையாளம் காணவில்லை என்றால், இதுதான் உங்களுடைய நிலை. இன்று, இந்த 21 ஆம் நூற்றாண்டில் உங்களுடைய காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு இல்லாமல் உங்களால் இரட்சிப்படைய முடியாது. நீங்கள் நோவா, மோசே, ஏசாயா, எரேமியா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய அப்போஸ்தலரை அறிந்திருக்கவில்லை, ஆனால் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். மேலும் புரிந்து கொள்ளக்கூடியவன் எவனோ அவன் புரிந்து கொள்ளட்டும்.