( 24 டிசம்பர் 2009, வியாழக்கிழமை மாலை அபிட்ஜானுக்கு அருகிலுள்ள அன்யாமா - ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 கடைசி பிரசங்கத்தில், ஜேம்ஸ் மன்னன், லூயிஸ் செகண்ட் மற்றும் டார்பி வேதாகமங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று பிரசங்கிக்கும் ஒரு தீர்க்கதரிசி பற்றி நான் பேசியிருந்தேன். அவன் நடுராத்திரி சத்தத்தை வாசித்து அறிந்திருக்கின்றான். அவனுடன் நான் ஒரு முறை பேசியிருந்தேன். அவன் பெருமையாகவும் கோபமாகவும் என்னிடம்: "காக்குவ் பிலிப்பு! உன்னுடைய மீட்டளிப்பின் ஞானஸ்நானம் பொய்யானது, வேதாகமத்திற்கு திரும்பி வா! நான் உனக்கு சவால் விடுகிறேன்..." என்றான். நாங்கள் நடத்திய உரையாடலை, அவன் அதை பரப்பி பல சகோதரர்களுக்கு அனுப்பினான்.
2 நேற்றுமுன்தினம், நான் அவனுடைய இணையதளத்தைப் பார்க்கச் சென்றேன், அவன் பரிந்துரைத்த வேதாகமங்களின் பட்டியலிலிருந்து லூயிஸ் செகாண்டை நீக்கியிருப்பதைக் கண்டேன். பின்னர் நான் அவனுடன் பேசத் தொடங்கினேன் அதற்கு அவன் அப்போஸ்தலர் 19 இல் கடுமையான பிழை இருப்பதாக கூறினான்.
3 நான் அவனிடம்: "ஆனால் இந்த லூயிஸ் செகாண்ட் வேதாகமத்தை நீங்கள் பரிந்துரைக்கும் நேரத்தில், அப்போஸ்தலர் 19 இருக்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவன்: "அது உண்மைதான்!" என்றான் நான் அவனிடம்: "ஆனால் டார்பி எப்படி பிரெஞ்சு மொழியில் நல்லதாகவும், ஆங்கிலத்தில் மோசமாகவும் இருக்க முடியும்?" என்றேன். அதற்கு: "அங்கே, எனக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதால், யாராவது அதை ஆங்கிலப் பக்கத்திலிருந்து சரிபார்க்க வேண்டும்!" என்றான் நான் சொன்னேன்: "சரிபார்க்கவா? நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்பதினால்!" ஆனால் சரி பார்ப்பதற்கு பதிலாக, வெளிப்பாடு சிறந்தது என்று நீங்கள் நினைக்கவில்லையா? என்று கேட்டேன். அவன் இடைநிறுத்தப்பட்டு அவன் மிகவும் மென்மையானவரானான்! நான் அவனுக்கு சில ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தேன். நீங்கள் பார்க்கிறீர்களா? உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பு தேவன் பரலோகத்திலிருந்து அவனுக்குக் கொடுக்காத ஒன்றைச் செய்ய முயற்சிக்க விரும்புகிறான்.
4 வசனங்களின் ஒப்பீடுகளில் நாம் விசுவாசம் கொள்வதில்லை ஆனால் வெளிப்பாட்டினில்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கின்றனர்]. சிறந்த வேதாகமத்தைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் பிழைகளை அடிப்படையாகக் கொள்ள விரும்பினால், நான்கு ஜீவன்களில் மனிதனின் முகத்தின் காரணமாக எல்லா இடங்களிலும் பிழைகளைக் காண்பீர்கள். நீங்கள் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தை தேடுகிறீர்கள் என்றால் சாத்தான் 6000 ஆண்டுகளாக எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளை பேசுகிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்…
5 நாம் ஒருபோதும் புரிந்து கொள்ளாத இரகசியங்கள் உள்ளன ஆனால் அவற்றை நாம் விசுவாசிக்கிறோம்! உங்கள் தலைமுறையின் உயிருள்ள தீர்க்கதரிசி சொல்வதை எளிமையாக விசுவாசிப்பதே மிக முக்கியமான காரியம்! தேவன் அங்கீகரிக்கும் ஒரே காரியம் அதுதான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
6 நான் எதையும் பிரசங்கிப்பதற்கு முன்பாகவே திரளான கூட்டத்தினர் தரிசனத்தில் சொன்னது: "நாங்கள் பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை, ஆனால் நாங்கள் அதை முழுமையாக விசுவாசிக்கிறோம்!" ஆனால் கூட்டத்தினரோ இப்படி சொல்லவில்லை. "நாங்கள் கேள்விப்பட்டதும், நாங்கள் எங்களுடைய கண்களால் கண்டதும்; நாங்கள் கவனித்து பார்த்ததும், எங்களுடைய கைகளால் தொட்டதையும் ... நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம், ஆகையால் *நீங்களும்* எங்களுடன் ஐக்கியம் கொள்ளலாம்" என்று 1 யோவான் 1 சொல்கிறது, ஆனால் மகத்தான கூட்டம் ஒன்று வலது பக்கத்தில் இருந்து வந்தது, அவர்களில் ஒருவர்: ""நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பார்க்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்;..." என்று சொன்னார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்]. அதுதான் தீர்க்கதரிசன விசுவாசம்! அவர்கள் பார்த்திராத அல்லது கேட்டிராதவைகளை விசுவாசிப்பதாகும்!
7 புத்தியுள்ள கன்னிகைகள் எந்தக் காற்றாலும் அசைக்கப்படுவதில்லை! அவர்களுடைய விசுவாசமானது கிரியைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல ஆனால் அது பரலோகத்திலிருந்து வரும் நம்பிக்கை மற்றும் வார்த்தையின் அடிப்படையாகக் கொண்டதான தீர்க்கதரிசன விசுவாசமாகும்.
8 ஒரு தீர்க்கதரிசியின் தருணங்களில்தான் தீர்க்கதரிசன கிரியைகளும் அடையாளங்களும் வெளிப்படுகின்றன! தீர்க்கதரிசன கிரியைகள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ளன. தெய்வீக தன்மையின் மூன்று மகத்தான பரிமாணங்கள் உள்ளன: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி! வார்த்தையின் மூன்று மகத்தான பரிமாணங்கள் அல்லது நிலைகள் உள்ளன! முதலாவதாக ஏற்கனவே இருக்கின்ற தீர்க்கதரிசன கிரியைகளும் மற்றும் வார்த்தைகளும் நிறைந்த நினைவகம் (Memorial) ஆக உள்ளது, அதாவது "இது எழுதப்பட்டுள்ளது" என்று சொல்வது, பின்னர் உரைக்கப்பட்ட வார்த்தை (Spoken Word) வருகிறது இறுதியாக தீர்க்கதரிசன கிரியைகள்! (Prophetic Acts) மேலும் இவை மூன்றும் மூல வித்தாகும்.
9 உரைக்கப்பட்ட வார்த்தையே மூல வித்து. தீர்க்கதரிசன கிரியைகளே மூல வித்தாகும்! ஆனால் தேவன் உபயோகப்படுத்தும் நபரைப் அல்லது காலத்தை பொருத்து இரண்டாவது அல்லது மூன்றாவது பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
10 ஒரு பெண் பிரசங்க பீடத்தில் ஏறக்கூடாது என்பதையும் தேவன் எவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்ததினால் அவருடைய ஒரேபேறான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கொடுத்தார் என்பதையும் இன்று காட்ட முயற்சிக்கும்போது… இது ஒரு வெளிப்பாட்டின் மூலம் அல்ல, ஆனால் அது ஏற்கனவே எழுதப்பட்டாயிற்று! அதை கூற உங்களுக்கு எந்த ஒரு ஊழியமும் தேவையில்லை. இது தேவன் ஏற்கனவே செய்ததை நினைவுகூருவது மட்டுமே! நீங்கள் வார்த்தையின் நினைவகத்திலிருந்து எடுத்துள்ளீர்கள்! இது ஒரு வரலாற்றுப் பாடம். ஆனால் தேவனுடைய ஜீவிக்கின்ற வார்த்தை என்பது, அதுதானே ஜனங்கள் அறியாத காரியத்தை தேவனிடத்திலிருந்து வருவதை நீங்கள் பேசுவதாகும்.
11 வில்லியம் பிரன்ஹாம் ஏற்கனவே வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளதை தீர்க்கதரிசனம் சொல்ல பரிசுத்த ஆவியானவர் யாரையும் கைப்பற்ற முடியாது என்று கூறினார்! இது அவரது காலத்தில் ஒரு வெளிப்பாடு. ஆனால் இன்று அது மீண்டுமாக ஒரு வரலாற்றுப் பாடமாகும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்]. தேவன் இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிமாணத்தில் செயல்படுகிறார் மேலும் காலம் செல்லும்போது, அது ஒரு நினைவகத்தைப் போன்று முதல் பரிமாணத்திற்குள் செல்கின்றது மற்றும் இது ஞாயிறு பள்ளி குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும்.
12 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் பெற்று இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறும்போது, நீங்கள் 2000 ஆண்டுகள் பழமையான உண்மையை மட்டுமே கொண்டு வருகிறீர்கள். அதைச் சொல்ல உங்களுக்கு ஒரு ஊழியம் தேவையில்லை. அது உங்களை சத்தியத்தில் நிலை நிறுத்தாது! ஆனால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் என்பது மனந்திரும்புதலுக்காகவோ அல்லது பாவமன்னிப்பிற்க்காகவோ கொடுக்கப்படுவது தவறானது என்று நீங்கள் கூறும்போது, நீங்கள் உங்கள் காலத்தின் தீர்க்கதரிசன வெளிப்பாட்டில் இருக்கிறீர்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா?
13 சபைகளில் உள்ள பொய்யான பரிசுத்த ஆவிகள், பயன்படுத்தப்பட வேண்டிய உண்மையான வேதாகமம் மற்றும் இதே போன்ற காரியங்கள் உங்களுடைய மணி வேளையின் உரைக்கப்பட்ட வார்த்தையின் வரிசையில் செல்கின்றன. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
14 மேலும் தீர்க்கதரிசன கிரியைகள் தீர்க்கதரிசி செய்தியாளரையும், ஜனங்களையும் மற்றும் இயற்கை முழுவதையும் குறிக்கக்கூடும், ஏனென்றால் அவைகள் வார்த்தையால் சிருஷ்டிக்கப்பட்டவை, மேலும் வார்த்தையால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் கடவுளுடைய வார்த்தையை வெளிப்படுத்துகின்றன. தேவன் ஆசியர்களை மஞ்சளாகவும், ஐரோப்பியர்களை வெள்ளையாகவும், அமெரிக்கர்களை சிவப்பாகவும் மற்றும் ஆப்பிரிக்கர்களை கருப்பாகவும் உருவாக்கியபோது, அவை தீர்க்கதரிசன கிரியைகளாக இருந்தன.
15 சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பருவங்கள், நில வடிவங்கள் தீர்க்கதரிசன கிரியைகளாக இருந்தன. மோசேயுடனான பாலைவனத்தில், இஸ்ரவேல் மாராவை விட்டு வெளியேறி ஏலிமுக்கு வந்ததாக யாத்திராகமம் 15:27இல் கூறப்பட்டுள்ளது, அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பனை மரங்களும் இருந்தன! இந்த பன்னிரண்டு நீரூற்றுகள் மற்றும் எழுபது பனை மரங்களும் தீர்க்கதரிசன கிரியைகளாகும் அவை பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் எழுபது சீடர்களையும் பூமியில் அறிவித்தன. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
16 அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில், வில்லியம் பிரன்ஹாமின் பெயருக்கு தொடர்புடைய லிமாவுக்கு அருகிலுள்ள ஏழு மலைகள் பற்றி நான் இங்கு பேசினேன்: அவை பூமியை உருவாக்கும் போது தேவன் உருவாக்கிய ஏழு மலைகள்! ஆனால் வில்லியம் மரியன் பிரன்ஹாம் என்ற ஒரு மனிதனோடு தொடர்புடையதாக அவர் அதைச் உருவாக்கினார் அவருடைய மூன்று பெயர்களிலும் தலா ஏழு எழுத்துக்கள் உள்ளன! இது அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் லிமாவுக்கு அருகிலுள்ள இந்த அரை மலைப்பகுதியில் குறிப்பிடப்படுகிறது! இது வருகின்ற ஊழியத்தை அணுகக்கூடியதாக உள்ளது!
17 இப்போது மத்தேயு 25: 6-ன் இந்த செய்தியாளன் அவருடைய காலத்தில் ஒரு மகிமை வாய்ந்த நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது. நெருக்கமாகப் பாருங்கள், வில்லியம் பிரன்ஹாமிற்குப் பிறகு வருபவர் வார்த்தைகளிலும் கிரியைகளிலும் தன்னை வெளிப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்!
18 இப்போது, கடைசி பிரசங்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு, வானத்தின் கீழ் மூன்று ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! முதலாவதாக யூதர்கள், இரண்டாவதாக புத்திர சுவிகாரத்தின் மூலம் யூதர்களாக இருக்கும் சமாரியர்கள் மற்றும் இறுதியாக புறஜாதியார், அவை தான் தேசங்கள்! சேம், காம் மற்றும் யாபேத்! மூன்று ஜனங்கள், மூன்று பரிமாணங்கள்! ஒரு கலகக்கார யூதன் பின்னர் தேவபக்தியற்ற ஜீவியத்தோடு ஒரு சமாரியன், ஆனால் ஆவிக்குரியவன், பின்னர் கறையும் சுருக்கமும் இல்லாத தேசங்களின் மணவாட்டி பின்னர் தேவன் எலியா மற்றும் மோசேயுடன் இரண்டு புறாக்களின் தரிசனத்தில் நாம் காண்கிற படி இஸ்ரேலுக்குதிரும்புகிறார்!
19 மத்தேயு 10:5ல் இயேசு தம்முடைய சீஷர்களிடம் சமாரியர்களையும் தேசத்தார்களையும் நோக்கிப் போக வேண்டாம் என்று சொல்லியிருந்தார்! இயேசு அந்த பன்னிரண்டு பேரையும் அனுப்பி: "நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்கு போகாமலும் சமாரியர்கள் பட்டணங்களில் பிரவேசியாமலும் இருங்கள்" என்று கட்டளையிட்டார். மேலும் அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.
20 ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஏழு சபைக் காலங்கள் முடிவடைகின்றன. பின்னர் தானியேல் 12:10இன் படி தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய இரட்சிப்பின் அனைத்து திட்டத்தையும் பின்தொடர்ந்து, புத்தகத்தின் பின்புறத்தில் உள்ள நியமத்தின் வகைகளான, ஒரு புதிய நியமம் வருகிறது,! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
21 ஒரு பிரன்ஹாமிஸ்ட், எல்லா பிரசங்கங்களையும் படித்த பிறகு இவ்வாறு: "நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன், நீங்கள் ஒரு உண்மையான அல்லது பொய்யான தீர்க்கதரிசியா என்பதை நான் அறிந்து கொள்வேன்"! என்றான். நான் என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன்: நீ ஒரு பொய்யன்! உரைக்கப்பட்ட வார்த்தையினால், ஏழு ஆண்டுகளில் நான் பிரசங்கித்து வந்த வார்த்தை உன்னை விசுவாசிக்க செய்யவில்லை என்றால், என் மனித பக்கமானது எவ்வளவு தான் தீர்க்கதரிசனமாக இருந்தாலும், உன்னை சமாதானப்படுத்துவது சாத்தியமில்லை, ஏனென்றால் நாங்கள் அவருடையவர்கள் என்று உரிமை கோரும் வில்லியம் பிரன்ஹாமிற்கே தேவன் கொடுத்தது உரைக்கப்பட்ட வார்த்தை தான்!
22 பிரன்ஹாமிஸ்டுகளே நீங்கள் ஒரு தீர்க்கதரிசன கிரியை புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது! நீங்கள் அப்போஸ்தல விசுவாசத்துடன் உள்ள பெந்தேகோஸ்தேக்கள்; நீங்கள் ஒரு தீர்க்கதரிசன கிரியையை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பது வெளிப்படையானது. வெளிப்படுத்துதல் 6: 9 முதல் 10 கூறுவது போல் நியாயப்பிரமாணத்திலிருந்து பிறந்தவன் கிருபையை புரிந்து கொள்ளமாட்டான்!
23 தீர்க்கதரிசன அடையாளங்களின் மூலம் தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார்! நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் ஏவாளை ஆதாமின் பக்கத்திலிருந்து வெளியே எடுத்தபோது, அது ஒரு தீர்க்கதரிசன கிரியையாக இருக்கிறது! ஆபிரகாம் தனது ஒரேபேறான குமாரனை காணிக்கையாக்கினார், இது ஒரு தீர்க்கதரிசன கிரியையாக இருக்கிறது. யாக்கோபின் மகனாகிய யோசேப்புக்கு சில காரியங்கள் நடந்தபோது, அவை தீர்க்கதரிசன கிரியையாக இருக்கிறது! மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தியது, தாவீது ஒலிவ மலையில் அழுதது, அவைகள் தீர்க்கதரிசன கிரியைகளாக இருந்தன!
24 அந்த காரியங்களை கண்ட யூதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் இன்று அந்தச் கிரியைகள் அர்த்தமுள்ளவை என்று நாம் சொல்கிறோம். இன்று தேவன் என்ன செய்கிறார் என்பதை விசுவாசிப்பதற்கு முன்பு அதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது! அது நல்லது தான் ஆனால் மிக முக்கியமான காரியம், இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று விசுவாசிப்பது தான்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
25 பாலைவனத்தில் மோசேயுடன், கலப்பின கூட்டத்தினரை தவிர, எகிப்திலிருந்து வெளியேறியவர்களும், கானானை நோக்கிய அணிவகுப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்ந்தவர்களும் ஒரு பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடன் எல்லா காற்றுகளினுடாகவும் சென்றனர்; மேரிபாவின் தண்ணீரில் ஏற்பட்ட கலகம், சீன் வனாந்தரத்தில் நடந்த கலகம், மோசே மனைவியாக எடுத்துக்கொண்ட எத்தியோப்பிய பெண்ணுக்கு எதிரான முறுமுறுப்பு, ஆரோனின் தங்கக் கன்று மற்றும் வேதாகமத்தில் எழுதப்படாத பல நிகழ்வுகள் உள்ளன. மோசேயின் புத்தகத்தில் ஏறக்குறைய எல்லா பிரசங்கங்களும் ஒன்று திரட்டப்பட்ட நேரத்தில், பாலைவனத்தில் பிறந்தவர்கள் மறுபுறம் இருந்தார்கள். அவர்கள் பதினொன்றாம் மணிநேர வேலையாட்களைப் போல பாலைவனத்தில் தோன்றுகிறார்கள்.
26 எரியும் முட்செடி அல்லது ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தின் அடிப்படையில்தான், முதலாமவர்கள் எப்போதும் தவறிப்போகாமல் ஒரு பரிபூரண விசுவாசத்தில், நம்பிக்கை கொள்ளவும் செயல்படவும் வேண்டும், அதே சமயம் இரண்டாமவர்களும் அதே விசுவாசத்தையும் அதே நடத்தையையும் எழுதப்பட்ட எல்லாவற்றையும், முதலாமவர்கள் வாழ்ந்த அனைத்து அனுபவங்களையும் தரிசனத்தின் அடிப்படையில் கொண்டிருக்க வேண்டும். ஆறாம் மணி நேரத்தில் தொடங்கிய வேலையாட்களும், பதினோராம் மணிநேரத்தில் தொடங்கி மத்தியான வேளையில் முடித்த அனைவரும், ஒரே கூலியை பெறுகிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது! நீங்கள் பார்க்கிறீர்களா?
27 ஒரு நாள், யாராவது உங்களிடம்: "ஓ! நான் முழுமையாக விசுவாசிக்கிறேன்! படிக்கும்போது, மோசேயின் ஒவ்வொரு பிரசங்கத்திற்கும்" ஆமென் "என்று சொன்னேன்! என்றும், எத்தியோப்பிய பெண்ணுக்கு எதிராக யூதர்களால் எப்படி முறுமுறுக்க முடிந்தது?" "நீங்கள் அங்கு இல்லாததால் தான்!" என்றும் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், அதே சோதனை உங்கள் காலத்திலும் உங்களுக்கும் இருக்கும், ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும் என்றென்றும் மாறாதவறாக இருக்கிறார். கடந்த தலைமுறையினருக்காக அவர் என்ன செய்தாரோ, அவர் இந்த தலைமுறையினருக்கும் அதை செய்கிறார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].
28 சிலருக்கு, தேவன் நிறைய விஷயங்களைக் கேட்கிறார், மற்றவர்களிடம் தேவன் கொஞ்சத்தை கேட்கிறார். சிலுவையின் மேல் உள்ள கள்ளனை பாருங்கள், வெறுமனே ஒரு பதில் தான், அவன் இரட்சிக்கப்பட்டான். அவனிடத்திலிருந்து தேவனுக்கு தேவையானது அது மட்டும் தான்!
29 இரட்சிப்பு இவ்வாறு நடக்காமல் இருக்க சாத்தியமில்லை. மேல்நிலை ஆறாவது வடிவத்தில் இல்லாமல் ஒரு இளங்கலை அளவிலான சோதனை உள்ளது. இந்த வேறு பிரித்தலை தேவதூதர்கள் செய்கிறார்கள் என்று மத்தேயு 13இல் கூறின பிரகாரமாக, உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பு நித்திய ஜீவனுக்காக நியமிக்கப்பட்டவர்கள் மாத்திரமே விசுவாசிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது!
30 சிங்காசனத்தில் வீற்றிருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கு, ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும், வல்லமையும், சதாகாலங்களும் உண்டாவதாக! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கின்றனர்].