en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 99 (Kc.99) : தர்ஷீசின் படகு
(செப்டம்பர் 05, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை அபிட்ஜான்-ஐவரி கோஸ்டுக்கு அருகிலுள்ள அன்யாமாவில் பிரசங்கிக்கப்பட்டது)
1 "தேவனுடன் பழக்கப்படுத்திக் கொள்ளுதல்" என்ற கடைசி பிரசங்கத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக எனது தொலைபேசி அதிக முறை ஒலித்தது. உபாகமம் 32:48 முதல் 52-ல், அவருடைய ஊழியத்தின் முடிவில், தேவன் மோசேயை சபினோ கனியன் என்ற நெபோ மலைக்கு அழைத்துச் சென்று கானான் தேசம் முழுவதையும் ஒரு தரிசனத்தில் காண்பித்ததை நீங்கள் அனைவரும் கவனித்திருக்கிறீர்கள்! நெபோ மலைக்கும் எரிகோவிற்கும் இடையில், மற்றொரு தீர்க்கதரிசியாக நூனின் குமாரனான யோசுவாவும் மற்றொரு ஞானஸ்நானமும் இருந்தது, இது தான் யோர்தானின் ஞானஸ்நானம். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
2 நல்லது, யோனாவின் புத்தகத்திற்க்கு நம்முடைய வேதாகமங்களை எடுத்துக்கொள்வோம். இது பழைய ஏற்பாட்டின் 904 ஆம் பக்கத்தில் உள்ளது ...
3 காங்கோ-கின்ஷாசாவில் உள்ள பாஸ்டர் ஜான் மக்வோவை வாழ்த்துகிறேன். அவர் 1 பேதுரு 3:3 ஐ கூந்தல் பின்னலைப் பற்றி புரிந்து கொள்ள விரும்பினார். சகோதரரே, சம்பிரதாயமாக ஆடை அணிவது ஒரு பாவம் அல்ல எனில், முடியை பின்னுவதும் பாவம் இல்லை. இது உங்களின் இயற்கையான கூந்தலாக இருக்கும் வரை, அது ஒழுங்கில் இருக்கிறது. மேலும் நீங்கள் ஒரு முடி திருத்தகம், ஒரு கடை அல்லது ஒரு பல்பொருள் அங்காடியை சொந்தமாக கொண்டிருக்கலாம் [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
4 நல்லது, இப்போது நான் யோனா 1:1 முதல் 3 ஐ வாசிக்க போகிறேன்: "அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்கு யெகோவாவின் வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா யெகோவினுடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறினான்."
5 நல்லது, இன்று காலை நான் இந்த பொருளைப் பற்றி பேசப் போகிறேன்: "தர்ஷீசின் படகு". மீண்டுமாக இந்த காலையில் நான் பிரசங்கிக்கும் இது ஒரு அற்புதமான பிரசங்கம் ... பாபேல் கோபுரம், பாபிலோனில் உள்ள நேபுகாத்நேச்சரின் அரண்மனை மற்றும் பல சாதனைகளை உலகம் சாதித்தது. நான் இங்கு ஏழு அதிசயங்களை பற்றி பேசியது உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் இப்போது, ஏழு அதிசயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன மேலும் மனிதகுலத்திற்கான மற்ற ஏழு அதிசயங்களை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்? ஏனென்றால், அவர்கள் இப்போது இருக்கும்போது சரீர மட்டத்தில் அவர்களைத் தேடுகிறார்கள்: அதேவேளையில் அவைகள் இப்பொழுது : இணையம், ஐ.நா., யுனெஸ்கோ, உலக தேவாலயங்களின் சங்கம், வோல் ஸ்ட்ரீட் , ஆகியவைகளில் நம் காலத்தின் அதிசயங்களைத் தேட வேண்டும், மேலும் உலகம் அந்த காரியங்களுக்காக வரவேற்ப்பை உணர்கிறது ! இந்த ஆவியில் தான் தர்ஷீசின் படகு உருவாக்கப்பட்டது.
6 நினிவேயின் பெருமையை ஒரு படகு தான் ஏற்படுத்தியது , ஆனால் கர்த்தர் கடலில் ஒரு பெரிய காற்றை அனுப்பினார் என்றும், கடலில் ஒரு பெரிய சூறாவளி இருந்தது என்றும், அதனால் படகு உடைக்கப்படுவதாகவும் வேதாகமம் கூறுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? தேவனின் கையை எதிர்கொண்ட, பெரிய படகு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை!
7 மேலும், வேதாகமங்களில் தர்ஷீஷைப் பற்றி பேசும்போது, தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு கடத்தல்களைக் குறிக்கிறோம். தர்ஷீசின் படகு என்பது மத வியாபாரிகளின் படகை தவிர வேறில்லை! வழியில், ஒருவர் ஒரு வணிகக் கூட்டத்தை நடத்தலாம், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், முகவரிகளை பகிர்ந்து கொள்ளலாம், அவர்கள் இந்த தேவாலயத்தின் அடுத்த பெரிய குணப்படுத்தும் விழிப்புணர்வுக்கு ஒருவரையொருவர் அழைப்பார்கள், அந்த தேவாலயத்தின், அந்த பணியின், ...
8 சுவிசேஷ போதகர்கள் அரசியல் பற்றி பேசுவார்கள் , கால்பந்து, அவர்களின் அடுத்த கடற்கரை பயணம். அவற்றின் சிறந்த வாசனை திரவியங்கள் தேவனுக்கு முன்பாக ஆட்டின் வாசனை போன்றவை. நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் தர்ஷீஷ் படகில் அமர்ந்திருக்கும்போது உங்களுக்கு என்ன வெளிப்பாடு இருக்கும்? தர்ஷீஷ் படகில் நீங்கள் அமர்ந்திருக்கும்போது என்ன மதம், என்ன வேதாகமம், என்ன விசுவாசம், என்ன பரிசுத்த ஆவி?
9 தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பும்போது, அது ஒரு அழைப்பு, ஒரு பனிநியமனம் மற்றும் ஒரு தீர்க்கதரிசன செய்தியாக உள்ளது, ஆனால் தர்ஷீசின் படகில், அது "தேவன் எனக்கு பரதீசைக் காட்டினார், ... நான் நரகத்தைக் கண்டேன்! ... மற்றும் பல." தர்ஷீசின் படகில், ஒரு பாஸ்டர், ஒரு அப்போஸ்தலன், ஒரு போதகர், ஒரு சுவிசேஷகர் அல்லது ஒரு சபை தீர்க்கதரிசி எந்த செய்தியும் இல்லாதபோது தனது சபையை திறக்க முடியும். இருப்பினும், அப்போஸ்தலன், சபையின் தீர்க்கதரிசி, சுவிசேஷகர் மற்றும் போதகரின் ஊழியம் எபேசியர் 4:11-ன் நான்கு ஊழியங்கள் சிம்மாசனத்தைச் சுற்றியுள்ள நான்கு ஜீவன்களுக்கு தொடர்புடையது, தவறிழைக்காத தன்மை ஆசாரியத்துவத்தைப் பற்றியது அல்ல, ஏனெனில் ஆசாரியத்துவம் பலிபீடத்தின் கீழ் உள்ளது , அது ஆறாவது பரிமாணத்தில் உள்ளது. ஆனாலும், ஒரு செய்தியைக் கொண்டுவருவதற்கும், மக்களை நகர்த்துவதற்கும், ஒரு தீர்க்கதரிசன செய்தியுடன் அங்கே ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் இருக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. மேலும் இன்று, மனிதகுலம் அனைத்தும் தர்ஷீசின் படகில் தான் உள்ளது மற்றும் அவர்கள் கவலைப்படவில்லை.
10 இப்போது தர்ஷீசின் படகைக் கருத்தில் கொள்வோம், ஏதோ நடந்து கொண்டிருக்கிறது! யோனா என்ன செய்தான்? அவன் படகின் கீழ் பகுதிக்கு வந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தான், இது படகில் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்கோ அல்லது அறிவிப்பதற்காகவோ உள்ளது! அவன் எதோ ஒன்றை செய்ய முயன்றான், அவன் ஜெபம் செய்தான், அவன் தர்ஷீசின் படகில் இருந்த வேளையில் தேவனிடம் வேண்டிக் கொண்டிருந்தான். தர்ஷீசின் படகில் இருந்து வரும் அத்தகைய ஜெபத்தை தேவனால் ஏற்க முடியவில்லை, ஏனென்றால் அது ஒரு அருவருப்பானது. தர்ஷீசின் படகில் இருந்த அனைத்து அஞ்ஞானிகளுக்கும் யூதர்களின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கிக்க ஆரம்பித்தான். ஆனால் இவை அனைத்தும் அருவருப்பானது, ஏனென்றால் அவன் தேவனின் சித்தத்திற்கு புறம்பாக இருந்தான்.
11 நீங்கள் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபையில் இருந்து தேவனுடைய சித்தத்தைச் செய்ய முடியாது. நீங்கள் அங்கே இருக்கும் அதே வேளையில் உங்களுடைய பிரார்த்தனைகள், உங்களுடைய வேண்டுதல்கள், உபவாசம், உங்கள் காணிக்கைகள், தசமபாகங்கள் அனைத்தும் யெகோவாவுக்கு முன்பாக அருவருப்பானவை. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
12 யோனா அங்கே இருந்தபோது, அதே வேளையில், மற்றவர்களைப் பாருங்கள், அங்கே இருந்தவர்களைப் பாருங்கள்; அந்த கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் அங்கு இருந்தனர். அவர்கள் அந்நியபாஷைகளில் ஜெபிக்க ஆரம்பித்தார்கள், தீர்க்கதரிசனம் சொன்னார்கள், அதாவது ஒரு சூறாவளி இருக்கும் என்று யெகோவா ஏற்கனவே அவர்களுக்குக் காட்டியதாக சொல்லலாம், அவர்கள் எல்லா விதமான மந்திரங்களையும் செய்தார்கள், ஆனால் அவர்கள் எவ்வளவு அதிக பலத்துடன் ஜெபித்தார்களோ, கடல் அவர்களுக்கு எதிராக அதிக சலசலப்பை ஏற்படுத்தியது!
13 இப்போது கவனியுங்கள், அவர்கள் யோனாவை மேல் பகுதிக்கு வந்து ஜெபிக்கும்படி கேட்டார்கள், யோனாவும் ஜெபம் செய்தான் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அதன்பிறகு, வேறு சிலர், எந்த சபையில் இருந்து என்று எனக்குத் தெரியாது, அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள், அவர்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டார்கள், "இது நம்முடைய விலைமதிப்பற்ற கர்த்தரும் மற்றும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இருக்கும் வரை, நாம் அதைச் செய்யலாம் என்றனர்!" அவர்கள் அனைவரும் யெகோவா மீது விசுவாசம் வைத்திருந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்கள். அவர்கள் அமெரிக்க மீட்புப் பணியாளர்களுக்கோ அல்லது சர்வதேச உதவிக்காகவோ அழைக்கவில்லை, ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் அவருடைய தேவனிடம் நேரடியாகத் திரும்பினர் ...
14 மேலும் அவர்கள் அனைவரும் யெகோவாவுக்கு அஞ்சி, யெகோவாவுக்கு பலியிட்டு, அவருக்கு பொருத்தனை செய்ததாக வேதாகமம் கூறுகிறது! அவர்கள் யோனாவைக் கடலில் எறிந்ததும், கடல் கொந்தளிப்பு நின்றதும், அவர்கள் அனைவரும் இவ்விதமாக சொல்லத் தொடங்கினார்கள், " கடல் கொந்தளிப்பு ஆரம்பத்திலிருந்தே தேவன் அதை எனக்கு காண்பித்திருந்தார். நான் அதை ஒரு சொப்பனத்தில் பார்த்தேன். என் மனைவிக்கு அந்த வெளிப்பாடு இருந்தது! தேவன் அநேகமான காரியங்களை மனைவி மூலம் நிறைய பேசுகிறார்." இது என்ன? அவர்கள் அனைவரும் பிசாசின் புத்திரர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
15 இப்பொழுது கேளுங்கள் ... தேவன் படைத்த மனிதகுலம் எப்பொழுது தன்னுடைய சொந்த கண்களில் பலமாக ஆனதோ, அது ஒரு பெரிய மதப் படகைக் கட்டியது, அது அதன் மகத்துவத்துடன் பொருந்தக்கூடியது. பூமியிலுள்ள அனைத்து மத அமைப்புகளும் ஒரு மிகப்பெரிய மத அமைப்புக்கு ஏதோ ஒருவிதத்திலோ அல்லது மற்ற விதத்திலோ அதனுடைய பங்காக இருக்கிறது. கத்தோலிக்க பெட்டியை கொண்ட ஒரு படகு, மற்றொரு பெட்டி புராட்டஸ்டன்ட், மற்றொரு பெட்டி சுவிசேஷக கூட்டம் மற்றும் மற்றொரு பெயரிடப்படாத பெட்டி மற்றும் ஒவ்வொரு பெட்டியிலும் துணை பெட்டிகள் இருந்தன.
16 இவ்வாறு தர்ஷீசின் படகு கட்டப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் இந்த படகில் தனது தேவனைக் கொண்டிருந்தார்கள்! பாப்டிஸ்டுகள் தங்கள் தேவர்களை கொண்டிருந்தனர், மெதடிஸ்டுகள் தங்கள் தேவர்களை கொண்டிருந்தனர், சுவிசேஷகர்கள் தங்கள் தேவர்களை கொண்டிருந்தனர், பெந்தேகோஸ்தேக்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் கூட தங்கள் தேவர்களுடன் இருந்தனர், தங்கள் நாற்பது ஆண்டுகால வரலாற்றுடன் தங்களை பலப்படுத்திக் கொண்டிருந்தனர்.
17 மேலும் கடல் கொந்தளித்து எழுந்து படகு இடமிருந்து வலமாக நகர்ந்து கொண்டிருந்தபோது, ஒவ்வொருவரும் தனது தெய்வத்தை தூண்டிக் கொண்டிருந்தார்கள். மேலும் பக்தியுள்ள பழைய கத்தோலிக்க பாட்டி தனது பழைய சொரூபத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, அவரது பழைய சிலுவைகள் அவரது மார்பகத்திற்கு வைத்துக்கொண்டாள், தன்னுடைய பழைய சிலுவை உருவங்களை அன்பான பிரன்காமிஸ்டு கலப்பின ஸ்திரியுடன் சேர்த்து அக்னி ஸ்தம்பம் மற்றும் மேகத்தின் புகைப்படத்தை அடித்துக் கொண்டிருந்தாள், அவர்கள் அனைவரும் ஓசியா 12:13 மற்றும் 2 நாளாகமம் 20:20ஐ தியாகம் செய்தனர்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. எகிப்தின் அந்த வணக்கங்கள் யாவும் மந்திரவாதிகளின் சகோதரத்துவத்தை "தேவாலயம்" அல்லது "கிறிஸ்துவிற்குள் சகோதர சகோதரிகள்" என்று அழைக்கக்கூடிய வகையில் நவீன வடிவங்களை எடுத்தன. நீங்கள் பார்க்கிறீர்களா?
18 தர்ஷீசின் படகு அந்தகாரத்தில், மகத்தான பெருங்கடலில் அப்படியும் இப்படியுமாய் அசைந்தாடியது! கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு எங்கே என்று யோனாவுக்கு அறிய வழி ஏதும் இல்லை! அங்கே சூரிய வெளிச்சம் இல்லை. அவர்கள் அனைவரும் வலதுபுறம் அசைந்து பின்புறமும் பிறகு இடதுபுறம் அசைந்து பின்பாகவும் பிறகு அதே வழியில் திசைதிருப்ப பட்டார்கள்!
19 படகு எங்கே போகிறது என்பது நமக்கு தெரியாது! மதவாத மனிதர்கள் பாடினார்கள், சில விசித்திரமான அபிஷேகங்களை உணர்ந்தார்கள், அது தர்ஷீசின் படகின் தாளத்திற்கு அவர்களைத் தூண்டியது, ஆனால் அவர்கள் வார்த்தை மற்றும் தியானத்திற்கு வந்தபோது, முதலில் ஆழ்ந்த உறுதியைக் கொண்டிருந்தனர், ஏனெனில் அவர்களுடைய தலைமையில் அவர்கள் டாமி ஆஸ்போர்ன், மோரிஸ் செருல்லோ, யோங்கி சோ, பில்லி கிரஹாம், பென்னி ஹின், ரெய்ன்ஹார்ட் பொன்கே மற்றும் பல புகழ்பெற்ற ஆண்களும் பெண்களும் மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் பூமியின் இளவரசர்கள் உள்ளிட்ட மனிதர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்!
20 பிசாசின் குமாரர்களையும் குமாரத்திகளையும் நரகத்திற்கு செல்லும் அவர்களுடைய பாதையில் பலப்படுத்துவதற்காக சர்வவல்லமையுள்ள தேவன் தாமே அந்த நாளுக்கும் அந்த மணி வேளைக்கும் ஆயத்தம் பண்ணின மனிதர்கள்! அங்கே அவர்களுடைய தலைமையில் இன்ன இன்ன மனுஷன் பாடல் குழு தலைவராக இருப்பான். இன்ன இன்ன ஆண் தாளாளர் இருப்பான், இன்ன இன்ன பெண் தாளாளர் இருப்பாள், மற்றும் இன்ன இன்ன குழுக்களும் அதன் தலைவர்களும் இருப்பார்கள். யாவும் மிக அழகாக இருந்தது, ஆனால் அதுதான் தர்ஷீசின் படகு. அதுவே ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பிசாசாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
21 நோவாவின் காலத்தைப் போலவே தேவன் அவர்களுக்கு அநேக தீர்க்கதரிசிகளையும், அநேக செய்தியாளர்களையும் அனுப்பியிருந்தார், ஆனால் அவர்கள் ஒருபோதும் அதற்கு கவனத்தை செலுத்தவில்லை! மக்கள் மிகவும் அலுவலாக இருந்ததால் அவர்கள் தேவனுடைய உண்மையான வார்த்தைக்கு கவனம் செலுத்தவில்லை! கடைசி எச்சரிக்கையாக யோனா அனுப்பப்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று வரை தலைமுறை தலைமுறையாக அதே காரியமாகத்தான் இருக்கிறது.
22 நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் உலகத்தை மிகவும் அன்பு கூர்ந்தபோது, அந்த உலகத்தின் மீது தீர்க்கதரிசனம் உரைக்கும் படி அவர் நோவாவுக்குக் கட்டளையிட்டார். நோவா தர்ஷீசின் படகை எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் தேவன் அவனை நோக்கி, நோவா, நீ பார்க்கும் அனைவரையும் நியாயந்தீர்க்க வேண்டும்! இங்கே பூமியின் மேலும் பரலோகத்திலும் அவர்களுக்கு நியாயாதிபதியாக நான் உன்னை ஆக்குவேன். நீ பூமியில் நியாயந்தீர்க்கும் அனைவரையும் பரலோகத்திலும் நியாயந்தீர்ப்பாய் என்றார். பூமியில் நீ கண்டனம் செய்கிற அனைவரையும் கடைசி நியாயத்தீர்ப்பில் நீ அவர்களை பரலோகத்தில் கண்டணம் செய்வாய். நோவா தனது சந்ததியினரைக் கண்டனம் செய்வான், மோசே அவருடைய சந்ததியினரைக் கண்டனம் செய்வான். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனுடைய சந்ததியினரைக் கண்டனம் செய்வான். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
23 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் கண்டனம் செய்ய பன்னிரண்டு சிம்மாசனங்கள் வைக்கப்படும் என்றும், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் அதன் மீது அமர்வார்கள் என்றும் கூறினார். ஆனால் புறஜாதி தேசங்களைப் பொருத்தவரை, பழைய ஏற்பாட்டில் உள்ளதைப் போலவே தேவன் மீண்டும் தீர்க்கதரிசிகளை பூமியில் அனுப்புவார் என்று மத்தேயு 23:34 முதல் 35 கூறுகிறது. அந்த தீர்க்கதரிசிகள் பூமியிலும் பரலோகத்திலும் உள்ள தேசங்களை நியாயந்தீர்ப்பார்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நித்திய இரட்சிப்பில் பங்கெடுப்பதற்காக பூமியில் அவர்களை விசுவாசிப்பார்கள். ஏன்? ஏனென்றால் நேற்று அவர் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளுடன் ஒரே விதமாகவும், இன்று இஸ்ரவேலில் அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார் மேலும் அவர் வரும் வரை அவரே என்றென்றும் தீர்க்கதரிசிகளுடன் வெளிப்படுவார். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
24 வேதாகமம் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகம் ஏனென்றால் தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பேசுகிறார் மேலும் ஒவ்வொரு தலைமுறையிலும் பூமியின்மேல் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியுள்ளார். இந்த தீர்க்கதரிசிக்கு வெளியே நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. இந்த தீர்க்கதரிசியை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் தர்ஷீசின் படகில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்கிறதெல்லாம் தேவனின் சித்தத்திற்கு புறம்பானது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
25 தேவன் நோவாவை நோக்கி: நீ வானத்திலிருந்து அக்கினியை அழைக்கப் போவதில்லை, ஏனோக்கைப் போல மழையை பெய்யாமல் வானங்களை மூடப் போவதில்லை, ஆனால் பரலோக ராஜ்யத்தின் சாவியை உடையவனாக பூமியின் மேல் ஒரு தலைவராக நான் உன்னை அனுப்பியுள்ளேன். ஆகையால் நீ காணும் அனைவரும் உன்னை அல்லாமல் இரட்சிப்பு அடைய முடியாது! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய என்னை அவர்கள் ஆராதிப்பதாக அவர்கள் உரிமை கோருகிறார்கள், அவர்களுக்கு நேராக நானே உன்னை அனுப்புகிறேன்! நீ பார்ப்பதற்கு ஈர்க்கக்கூடியவனாக தெரியவில்லை, நீ எளிமையாகவும் குடிபோதையிலும் இருக்கிறாய் ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் உன் மூலம் என் சத்தத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள். உன்னை அல்லாமல் எவரும் இரட்சிப்பு அடைய முடியாது! மேலும் நோவா தேவனுடைய வார்த்தையின்படி செயல்பட்டான் மற்றும் தேவனின் அன்பு மனித குலத்திற்க்கு பிரத்யட்சமானது.
26 காக்குவ் பிலிப்புவாகிய நீயே, இன்றைக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறாய். கிறிஸ் ஓயாகிலோம், டேவிட் ஓவூர், இம்மானுவேல் மக்காண்டிவா, யூபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோசுவா, டேவிட் ஓயெடெபோ மற்றும் அவர்களைப் பின்பற்றுகிற அனைவரும் உன்னை அல்லாமல் இரட்சிப்பை அடைய முடியாது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
27 இன்று, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நீயே, வழியும், சத்தியமும் மற்றும் ஜீவனுமாக இருக்கிறாய். ஜோயல் ஓஸ்டீன், டி.டி.ஜேக்ஸ், டக் பாட்செ சாலர், பில்லி கிரஹாம், எடிர் மாசிடோ, வால்டெமிரோ சாண்டியாகோ, சிலாஸ் மலாஃபியா, பவுலா வைட், ஜாய்ஸ் மேயர், ஆல்பர்டோ மொட்டேசி, கிளாடியோ ஃப்ரீட்ஜோன், டான்டே கெபல் மற்றும் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் நீ இல்லாமல் அனைவரும் இரட்சிக்கப்பட முடியாது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
28 இன்று, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நீயே, வழியும், சத்தியமும் மற்றும் ஜீவனுமாக இருக்கிறாய். பென்னி ஹின், மனாசே ஜோர்டான், ஜெஸ்ஸி ஜாக்சன், ஜான் ஹாகி, பாட் ராபர்ட்சன், ஜோக்விம் கோன்வால்ஸ், டொனால்ட் பார்னெல், அலெஜான்ட்ரோ புல்லன், கில்லர்மோ மால்டோனாடோ மற்றும் அவர்களைப் பின்பற்றுகிற அனைவரும் நீ இல்லாமல் இரட்சிப்பு அடைய முடியாது. [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
29 ஆதியாகமம் 6:12-ன் படி பூமியில் இரட்சிப்பின் எல்லா வழிகளையும் சிதைத்தவர்கள் அவர்களே. ஆனால் நோவாவைப் போலவே, தேவனுடைய வார்த்தையினாலும், ஏப்ரல் 24,1993 அன்று நான் பெற்ற பணியின் படி செய்தேன். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
30 நீங்கள் பார்க்கும் அந்த கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் அனைவரும் தங்கள் சபைகளிலும் தங்கள் வேலைகளிலும் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்வார்கள் மற்றும் அவர்களுடைய வயிற்றின் காரணமாக அதை எதிர்த்துப் போராட முடியாது. அவர்களில் யார் பிசாசுக்கு ஊழியம் செய்வது இல்லை? "தேவன் என்னிடம் சொன்னார் ..." என்று அவர்களில் யார் சொல்வதில்லை? மேலும் தேவன் அவனுடன் பேசவில்லை! அவர்களுடைய சூனியத்தில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காகவே யோனா பின்வாங்கி படகின் கீழ் பகுதிக்கு இறங்கினான்!
31 நீங்கள் இவ்வாறு "ஆனால் எனக்கு உண்மையில் ஒரு வெளிப்பாடு இருந்தது மற்றும் நான் சொன்னது அது உண்மையில் நிறைவேறியது!" என்று கூறுகிறீர்கள். ஆம், ஆனால் நீங்கள் வேறொரு தெய்வத்தின் கைகளில் இருக்கிறீர்கள் அது உங்களுக்குத் தெரியவில்லை! எகிப்தியர்கள் எப்போதும் உண்மையான தேவனை ஆராதிக்கிறார்கள் என்று நினைத்தார்கள்! பாகாலின் தீர்க்கதரிசிகள் தாங்கள் உண்மையான தேவனைச் சேவித்ததாக நினைத்தார்கள்! எரேமியாவுக்கு முன்பாக, தான் உண்மையான தேவனை சேவிப்பதாக அனனியா நினைத்தான்! நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் நரகத்தின் ஆழத்தில் இருக்கிறீர்கள் மேலும் அதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்!
32 "இயேசுவோடு நான் நரகத்தை சந்தித்தேன்" என்று நீங்கள் சொல்கிறீர்கள், அதேவேளையில் நீங்கள் இழக்கப்பட்டவர்களின் பகுதியான ஐந்தாவது பரிமாணத்தில் இருக்கிறீர்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? உங்களோடு பேசுகிற, உங்களுக்கு வெளிப்பாடுகளைத் தருகிற இயேசு, உங்களுக்கு நரகத்தையும் பரதீசையும் சந்திக்க செய்து, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்ட் சபைகளில் மரிக்க அனுமதிக்கிற இயேசு ஒரு பொல்லாத இயேசு, அது சாத்தான்! [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
33 கொர்னேலியு தேவனை நேசித்தபோது, தேவன் கொர்னேலியுவை நேசித்தபோது, பூமியின் மேல் இராஜ்யத்தின் சாவியை வைத்திருந்தவருக்கு கொர்னேலியுவை வழிநடத்த தேவன் ஒரு தூதனை அனுப்பினார். மேலும் தேவன் உங்களை நேசித்தால், நீங்கள் உண்மையிலேயே தேவனை நேசித்தால், தேவன் ஒரு தூதனை அனுப்புவார், தேவன் தம்முடைய ஆவியை அனுப்புவார், பூமியில் உங்களின் காலத்தில் இராஜ்யத்தின் சாவியை வைத்திருப்பவரிடம் அதாவது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவிடம் உங்களை வழி நடத்த ஒரு வெளிப்பாட்டை கொடுப்பார். நீங்கள் ஒருபோதும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டாக மரிக்க மாட்டீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
34 நீங்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரைக் கொண்ட ஒரு பிசாசை அழைக்கிறீர்கள் மேலும் அதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்! முழு படகும் பிசாசின் சக்தியின் கீழ் இருந்தது, நீங்கள் பிசாசின் சக்தியின் கீழ் பிறந்தீர்கள் மற்றும் நீங்கள் பிசாசின் சக்தியின் கீழ் வளர்ந்தீர்கள் மற்றும் நீங்கள் பிசாசின் சக்தியின் கீழ் அதிகமாக வாழ்கிறீர்கள் அதனால் தான் அவ்வளவாக பொய் உங்களுக்கு உண்மையாகிவிட்டது, மேலும் நீங்களே பூமிக்கு ஒரு சாபமாகிவிட்டீர்கள்!
35 "இயேசு எனக்குத் தோன்றினார், அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார்! ..." என்று நீங்கள் சொல்கிறீர்கள். நல்லது, ஆனால் அந்த இயேசு எந்த தீர்க்கதரிசியிடம் உங்களை வழி நடத்தினார்? நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் கத்தோலிக்கர்களாக, புராட்டஸ்டன்ட்டுகளாக, சுவிசேஷகர்களாக அல்லது பிரன்ஹாமிஸ்டுகளாக அல்லது இஸ்லாம் அல்லது யூத மதத்தின் உறுப்பினர்களாக நீங்கள் விரும்புகிறபடி இருங்கள், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு தோன்றும் நாளிலே நீங்கள் ஒருபோதும் அங்கு திரும்ப மாட்டீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
36 யாக்கோபைப் போலவே, உங்கள் நடக்கும் பாணி மாறும், நீங்கள் வெறுக்கப்படுவீர்கள், உங்களுடைய இடமாக இனி ஒருபோதும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரன்ஹாமிஸ்ட் சபைகள் இருக்காது. உங்களுடைய இடமாக இனி தர்ஷீசின் படகு இருக்காது, ஆனால் ஓசியா12:14 மற்றும் 2நாளாகமம்20:20 படி ஒரு தீர்க்கதரிசியுடன் இருக்கும். நீங்கள் ஒருபோதும் இறையியலில், மீண்டுமாக எல்லா வகையான மத புத்தகங்களில் நடக்க மாட்டீர்கள். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
37 இப்போது, இங்கே நீங்கள் தர்ஷீசின் ஆவியால் அமர்ந்து இருக்கலாம்! செய்தி தான் விளக்கு என்றும் மேலும் அது வேதாகமத்தின் மீது ஒளி வீசும் விளக்கு என்றும், வேதாகமம் உங்களுக்கு முற்றிலுமானது என்றும் நீங்கள் விசுவாசிக்கின்ற வரை, நீங்கள் தர்ஷீசின் படகில் இருக்கிறீர்கள். செய்தி மற்றும் வேதாகமத்தை இரண்டு வெவ்வேறு விஷயங்களை நீங்கள் கருதுகிற வரை நீங்கள் தர்ஷீசின் படகில் இருக்கிறீர்கள்.
38 நீங்கள் செய்தியைப் பின்தொடர்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒருபோதும் அறிக்கையிடாத ஒன்று இருந்தால், நீங்கள் தர்ஷீசின் படகில் அமர்ந்திருப்பதை அறிந்து கொள்ளுங்கள், மரணம் ஒரு நாள் நீங்கள் நரகத்திற்குச் செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்து ஆச்சரியப்படுத்தும்! ஏன்? ஏனென்றால் நீங்கள் ஒரு துரோகி, நயவஞ்சகர் மற்றும் தேவனின் எதிரி. மேலும் உங்களுடைய இடம் நரகமே!
39 உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியின் புத்தகமே உங்கள் தலைமுறைக்கான ஜீவ புத்தகம். எரேமியாவின் புத்தகம் ஏசாயா, எசேக்கியேல் அல்லது மோசேயின் புத்தகத்தில் ஒளி வீசும் விளக்கு அல்ல. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு தீர்க்கதரிசியின் செய்தியானது வேதாகமத்தின் விளக்கமோ அல்லது அவருக்கு முன் இருந்த மற்றொரு தீர்க்கதரிசி கூறியதற்கானது அல்ல. உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியின் புத்தகம் வேதாகமத்தின் அதே மதிப்பைக் கொண்டுள்ளது.
40 ஏசாயா பிரசங்கிக்கும்போது, ஏசாயாவின் புத்தகத்தையும் தீர்க்கதரிசிகளின் மற்ற புத்தகங்களையும் யாராவது இரண்டு வெவ்வேறு விஷயங்களாகக் கருதினால், அவர் இன்னும் தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளவில்லை. எரேமியா பிரசங்கிக்கும்போது, எரேமியா புத்தகத்திற்கும் அவருக்கு முன் வந்த தீர்க்கதரிசிகளின் மற்ற புத்தகங்களுக்கும் இடையில் யாராவது வேறுபாடு காட்டினால், அவர் தேவனுடைய வார்த்தையை புரிந்து கொள்ளவில்லை. நம்முடைய காலத்திற்கு, அதாவது, கிறிஸ்துவுக்குப் பிறகு, பவுல் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, யாராவது அவருடைய புத்தகங்களுக்கும் அவருக்கு முன்பிருந்த புத்தகங்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் காட்டினால், அதாவது தீர்க்கதரிசிகளின் புத்தகங்களைச் சொல்வது என்றால், அவர் தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளவில்லை.
41 ஒரு புத்தகம், அது எவ்வளவு ஆழமாக இருந்தாலும், வேதாகமத்தின் புத்தகங்களின் நிலைக்கு உயர்த்த முடியாவிட்டால், அதிலிருந்து விலகி இருங்கள்! ஏசாயா, எரேமியா, தானியேல், ஆமோஸ் மற்றும் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகள் ஆகியோரின் வார்த்தைகளுடன் அவருடைய வார்த்தை அதே மதிப்புடையது இல்லை என்று ஒரு தீர்க்கதரிசி சொன்னால், அத்தகைய நபரிடமிருந்து விலகி இருங்கள். அது, ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் கொண்டு வந்த வார்த்தை மட்டுமே, அவனுடைய தலைமுறையை இரட்சிக்கும். [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்].
42 தேவனுடைய வார்த்தை புனிதமானது மற்றும் எந்த புத்தகமும், எந்த வார்த்தையும், எந்த மனித கற்பனையும் , அது எவ்வளவு அருமையாக தேவனுடைய வார்த்தைக்கு ஒட்டு போட்டு (Grafted)இருந்தாலும், தர்ஷீசின் படகை நிரப்பிய அந்த அனைத்து புத்தகங்களிலிருந்தும் விலகி இருங்கள். ஒரு மனிதன் தேவனின் உண்மையான தீர்க்கதரிசியின் எதிரொலியாக இல்லாவிட்டால், அதாவது வேதாகமத்தின் வார்த்தைகளை போலவே மதிப்புள்ள ஒரு தீர்க்கதரிசியின், அவனிடமிருந்து விலகி இருங்கள்! நீங்கள் பின்பற்றும் அவரிடம் தவறிழைக்காத தன்மையைக் காணாவிட்டால் நீங்கள் இரட்சிப்பைப் பற்றி பேச முடியாது. எங்கு தவறிழைக்காத தன்மை இல்லையோ, அங்கு இரட்சிப்பு இல்லை [ஆசிரியர் குறிப்பு : சபையார் “ஆமென்!” என்கிறார்கள்]. கேட்கிறதற்க்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.
--:--
--:--